புதன், 26 ஜனவரி, 2011

பயணம் மேற்கோள்வோருக்குப் பாராட்டுகள். பயணத்தின் வெற்றி ஈழ மலர்ச்சி! விரைவில் வெற்றி உண்டாகட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


முத்துக்குமாரின் ஈகச்சுடர் ஊர்தி பயணம்

கன்னியாகுமரி, ஜன. 25: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு ஈகச்சுடர் ஊர்திப் பயணம் கன்னியாகுமரியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, மள்ளர் மீட்புக்கழகத் தலைவர் கு. செந்தில் தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடக்கிவைத்தார்.இந்த ஊர்திப் பயணம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை கொளத்தூரில் இம்மாதம் 29-ம் தேதி நிறைவுபெறுகிறது.அங்கு சுடரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பெற்றுக்கொள்கிறார். தொடக்க விழாவில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் ஞானசம்பந்தம், பங்குத் தந்தைகள் லியோன் எஸ். கென்சன், கிளாரட், டங்ஸ்டன் உள்ளிட்டோர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக