"உரை குறுக நிமிர் கீர்த்தி " என்கிறார். இதனை உள்வாங்கிய இ.பா. அவர்கள் சொல் குறுக எனக் குறிப்பிடுகிறாரா? அல்லது சொல் குறுக என்றும் கம்பர் கூறியுள்ளாரா? இ.பா. அவர்கள் விளக்கினால் நன்று. உரை என்பதே சரி என்னும் முடிவிற்கு வந்தால் இனித் திருத்திக் கொள்வார் அல்லவா?
வியாழன், 5 மே, 2011
dinamani article by indira parthasarathy: சொல் குறுக நிமிர் கீர்த்தி!
"உரை குறுக நிமிர் கீர்த்தி " என்கிறார். இதனை உள்வாங்கிய இ.பா. அவர்கள் சொல் குறுக எனக் குறிப்பிடுகிறாரா? அல்லது சொல் குறுக என்றும் கம்பர் கூறியுள்ளாரா? இ.பா. அவர்கள் விளக்கினால் நன்று. உரை என்பதே சரி என்னும் முடிவிற்கு வந்தால் இனித் திருத்திக் கொள்வார் அல்லவா?
செவ்வாய், 30 மார்ச், 2010
அப்படிப்போடு அரிவாளை! கம்பரின் அன்பர்கள் கோரிக்கை கருத்தரங்க அமர்வுப் பொருண்மைகளில் கம்பர் சேர்க்க வேண்டும் என்பது. பூம்புகார்கள் படைத்த கம்பர் தமிழ்மானச் செம்மல் இளங்கோ அடிகளுக்குத் தனி அமர்வு வைக்காமல் தன் புலமைச் சிறப்பை ஆரிய விதைப்பிற்குப் பயன்படுத்திய கம்பருக்குத் தனி அமர்வு வைத்தால் முறையாகுமா? எனவே, கலைஞ்ர் தனக்கே உரிய சூழ்வினை அறிவுடன் கருத்தரங்கங்கள் நடைபெறும் கூடங்களில் ஒன்றிற்குக் கம்பர் பெயரைச் சூட்டி விட்டார். கம்பர் அன்பர்கள் இதிலேயே நிறைவுகாண வேண்டும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் எனச் செயல்பட்டுள்ள முதலவர் முத்தமிழறிஞருக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/30/2010 2:33:00 AM
ஞாயிறு, 28 மார்ச், 2010
கம்பரைப் போற்றுபவர்கள் ஒற்றுமை இலக்கியம் படைத்த இளங்கோவடிகளையும் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிட்ட வகுப்பாரும் ஆரியரும் போற்றும் கம்பரை அனைவரும் போற்றுவார்கள். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்! இளங்கோ அடிகளார் புகழ் பாடித் தமிழ் மானம் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/28/2010 5:07:00 AM
தினமணயில் வரும் செய்திகளுக்கு உடனே எதிரொலி கேட்பது உண்மைதான். உரிய பயன் விளைவதும் உண்மைதான். ஆனால், இதே தினமணி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது முழக்கமாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றும் தமிழுக்காகக் குரல் கொடுப்பதற்கான எதிர்விளைவு ஏதும் இல்லையே! இவை தினமணியின் போலிக் குரல்கள் என எண்ணுகிறாரா? அல்லது கேட்பதிலும் பார்ப்பதிலும் பாதி மறைப்பு வந்து இவை அவருக்குத் தெரிவதில்லையா? கம்பரைப் பிற அமர்வுகள் மூலம் காணலாம். ஆனால், மொழிப்பாடமாக, பயிற்று மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்ற இதுவே நல்ல வாய்ப்பான காலம். தினமணி அதற்குக் குரல் கொடுக்க வேண்டும். மொழிப்பற்றும் இனப்பற்றும் இலக்கியப் பற்றும் உள்ள ஆசிரியர் அதில் கருத்து செலுத்தி வெற்றி காண வேண்டும்.தமிழ்த்தாய ஏமாற்றப்படாமல் இருந்தால் கம்பன் ஏமாற்றம் அடையாமல் மகிழ்வார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/28/2010 4:53:00 AM
I am not sure our CM will encourage hindu relegious Schalers rather he always criticise them. Without Kambar, Elango, Sambandar, Appar, Barathiyar how can on tamil conference can be conducted without them. We cannot think of Tamil without any Bakthi and relegious thougts from great schalers. Thanks to Periyar, he is not tamil schalar otherwise entire conference will be dedicated to Periyar only.
3/28/2010 4:41:00 AM
வியாழன், 10 செப்டம்பர், 2009
-------------------------------------------------------------------------------------------------
போற்றதலுக்குரியவர்தான் இரசிகமணி. என்றாலும் கம்பரின் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்து இவை மட்டுமே கம்பரின் இராமாயணம் என இருந்தால் போதும் என்பது போல் பரப்புரை செய்ததால் தமிழறிஞர்களின் கண்டனத்துக்கு ஆளானார். அதுபோல் வட்ட தொட்டிக் கூட்டம் ஒன்றில், கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை வங்கக் கடலில் எறிவோம் என ஒருவர் பேசியதாலேயே பேராசிரியர் சி.இலக்குவனார் கிளர்ந்தெழுந்து சங்கத் தமிழ் புகழ் பேசித் தங்கத் தமிழ் வளர்ப்போம் என முழங்கிச் சஙக்கத்தமிழைப் பாமரரும் அறியச் செய்தார். -- இலக்குவனார் திருவள்ளுவன்