kambar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kambar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 மே, 2011

dinamani article by indira parthasarathy: சொல் குறுக நிமிர் கீர்த்தி!

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்குப் பிடித்த தொடர் "சொல் குறுக நிமிர் கீர்த்தி'  என்பது. சேக்சுபியரைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதுகூட இத் தொடரைக் கையாள்வார். சொற்களால் விளக்க இயலா மிகுதியான புகழை உடையவர் என்பதைக் குறிப்பதற்காகப் - புகழைக் குறிக்கப் போதுமான சொற்கள்  இல்லை என்பதற்காகக் - கவியரசர் கம்பர்
"உரை குறுக நிமிர் கீர்த்தி  " என்கிறார். இதனை உள்வாங்கிய இ.பா. அவர்கள் சொல் குறுக எனக் குறிப்பிடுகிறாரா? அல்லது சொல் குறுக என்றும் கம்பர் கூறியுள்ளாரா? இ.பா. அவர்கள் விளக்கினால் நன்று. உரை என்பதே சரி என்னும் முடிவிற்கு வந்தால் இனித் திருத்திக் கொள்வார் அல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சொல் குறுக நிமிர் கீர்த்தி!

First Published : 05 May 2011 12:16:21 AM IST


நான் தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தபோது, ஒரு நாள் நளினி என்கிற மாணவி என்னிடம், என் அக்காவின் கணவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறினாள். நான் எதற்காக என்பது போல் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவருக்குத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. குறிப்பாக, அவரே ஒரு கவிஞர். புதுக் கவிதை எழுதுகிறார். சி.சு.செல்லப்பா வெளியிட்டிருக்கும் புதுக் குரல்களில் அவருடைய இரண்டு கவிதைகள் இருக்கின்றன என்றாள்.அவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன்.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறப்பு நிருபர். அவர் கடந்த ஆறு மாதங்களாகக் "கணையாழி' என்ற தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்றாள்.பிரபல அமெரிக்க தினசரியின் சிறப்பு நிருபர், தமிழ்க் கவிஞர் என்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்ற செய்தியின் கலாசார அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள எனக்குச் சிறிது நேரமாயிற்று.அழைத்துவா, நானும் அவரைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றேன்.அடுத்தவாரம் இருவரும் சந்தித்தோம். அந்த அதிசய மனிதர்தாம் கி.கஸ்தூரிரங்கன். ஆங்கிலப் பத்திரிகையின் சிறப்பு நிருபர் என்பதைக் காட்டிலும், ஒரு தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வருவதுதான் அவருக்குப் பெருமை தரும் விஷயமாக இருந்தது என்பது எனக்குப் புரிந்தது. இதே ஆர்வம்தான், போன நூற்றாண்டின் பின் எழுபதுகளில், தில்லியில் அவர் பார்த்து வந்த ஆங்கிலப் பத்திரிகை வேலையை ராஜிநாமா செய்து, அதைவிடக் குறைவான சம்பளத்தில் சென்னையில், தமிழ்ப் பத்திரிகையில் பணி புரிவதற்கும் காரணமாயிற்று. அவர் நியூயார்க் டைம்ஸில் இருந்தபோதே, அப்பொழுது பிரசுரமாகிக் கொண்டிருந்த "சுதேசமித்திர'னில் அரசியல் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பெருந்தலைவர் காமராசர் அப்பத்தியின் தீவிர வாசகரென்று அவரே கஸ்தூரிரங்கனிடம் ஒரு சமயம் சொன்னபோது, அவருக்குப் புலிட்ஸர் பரிசு பெற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.கஸ்தூரிரங்கன் இயல்பாகவே அடக்கமும் அமைதியும் நிறைந்தவர். ஆனால், அவர் காமராசர் இவ்வாறு கூறியதைப் பல தடவைகள் நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம் என்றால், தமிழ்ப் பத்திரிகையாளராக இருப்பதுதான் தமக்குப் பெருமை என்பதற்கு அவர் அடிமன உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன்.1962-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நிகழ்ந்த போரைப் பற்றி "நியூயார்க் டைம்ஸ்'க்கு அனுப்பிய களச் செய்திகள்தாம் (ச்ண்ங்ப்க் ழ்ங்ல்ர்ழ்ற்ண்ய்ஞ்) அவரை ஒரு நல்ல நிருபராக அடையாளம் காட்டியது. இதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மேல்நாட்டு வாசகர்களுக்குச் சுவாரஸ்யம் தரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.வாரணாசியில் படகுகளில் வசித்த அமெரிக்க ஹிப்பிகளை நேர்காணல்கள் நிகழ்த்தி அவர் எழுதியவை அமெரிக்க வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பழ்ஹய்ள்ஸ்ரீங்ய்க்ங்ய்ற்ஹப் ஙங்க்ண்ற்ஹற்ண்ர்ய் பற்றியும், மகேஷ் யோகியைப் பற்றியும் நியூயார்க் டைம்ஸில் வந்த முதல் குறிப்பு கஸ்தூரிரங்கன் எழுதியதுதான்.முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கேரள ஆயுர்வேத வைத்தியசாலையில் இளமைக்காகச் சிகிச்சை பெற்றார் என்ற செய்தி கேட்டு, நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் இந்த வைத்திய சாலைகளைப் பற்றி விவரமான குறிப்பு அனுப்பும்படிக் கஸ்தூரிரங்கனைப் பணித்தார். அவை பிரபலமாவதற்கு, நியூயார்க் டைம்ஸில் இதைப் பற்றிய செய்தி வந்தது என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அவர் "தினமணி கதிர்' ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற "வானம் வசப்படும்' என்ற நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.1988-ல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றபோது, "தினமணி'யில் மாதம் இருமுறை இரண்டு ஆண்டுகள் தவறாமல் கட்டுரைகள் எழுதியது அவர் தந்த ஊக்கத்தினால்தான். என்னுடைய ஐந்தாண்டு போலந்து அனுபவத்தைப் பயணக் கட்டுரைகளாக எழுத நினைத்தபோது, அதை நாவலாக எழுத யோசனை சொன்னவரும் அவர்தாம். அது "ஏசுவின் தோழர்கள்' என்ற தலைப்பில், கதிரில் வந்தபோது அவருடைய யோசனையின் அருமை எனக்குப் புலப்பட்டது.அவர் நடத்திய "கணையாழி' அருமையான இளம் புதுக்கவிஞர்களை இனம் கண்டது. இன்று பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் "கணையாழி'யில் எழுதத் தொடங்கியவர்கள்தாம். குறு நாவல் வளர்ச்சிக்காக அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது. "கணையாழி'யில், அமரர் தி.ஜானகிராமன் பேரில் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடந்து வந்தது. முழு நாடகங்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் வராத காலத்தில், "கணையாழி' அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கவில்லை. ஜெயந்தன் நாடகங்களை "கணையாழி' பிரசுரித்தது. என்னுடைய நந்தன் கதையும் அப்பத்திரிகையில் பிரசுரமாயிற்று."கணையாழி' மூலம் கஸ்தூரிரங்கன் ஆற்றிய இலக்கியப் பணியில், அசோகமித்திரன் பங்கும் கணிசமானது. பல இளம் நல்ல எழுத்தாளர்களைக் கண்டறிவதற்கு, இப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் என்ற முறையில் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், கவிஞர், கட்டுரையாளர், பல நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர், எழுத்துச் சாதனையாளர் சுஜாதாவைக் கண்டெடுத்தவர் (இருவரும் பள்ளி நண்பர்கள்) ஆக பன் முகங்களை உடைய நண்பர் கி.கஸ்தூரிரங்கன், இறுதி மூச்சு இருந்த வரை பழுத்த காந்தியவாதியாகவும், ஆன்மிக நாட்டமுடையாராகவும் இருந்து வாழ்ந்ததுதான் மாபெரும் சாதனை."சொல் குறுக நிமிர் கீர்த்தி' என்பான் கம்பன். இது கஸ்தூரிரங்கனுக்கு மிகவும் பொருந்தும்.

செவ்வாய், 30 மார்ச், 2010

செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி



மதுரை,மார்ச் 29:​கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ள தமிழக முதல்வருக்கு காரைக்குடி கம்பன் கழகம் நன்றியும்,​​ பாராட்டும் தெரிவித்துள்ளது.​ காரைக்குடியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 72-வது ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழாவில்,​​ கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ​ கம்பனுக்கு தனி அரங்கு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்த வேண்டுகோளை தமிழக முதல்வர் ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு என தனி அரங்கம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.இந்தச் செய்தியை காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் ​(மார்ச் 29) கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் தெரிவித்தார்.அத்துடன்,​​ மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம் அமைக்க உறுதியளித்த தமிழக முதல்வருக்கு பழ.​ பழனியப்பன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.இத்தகவலைக் கேட்டவுடன்,​​ விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறிஞர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கருத்துக்கள்

அப்படிப்போடு அரிவாளை! கம்பரின் அன்பர்கள் கோரிக்கை கருத்தரங்க அமர்வுப் பொருண்மைகளில் கம்பர் சேர்க்க வேண்டும் என்பது. பூம்புகார்கள் படைத்த கம்பர் தமிழ்மானச் செம்மல் இளங்கோ அடிகளுக்குத் தனி அமர்வு வைக்காமல் தன் புலமைச் சிறப்பை ஆரிய விதைப்பிற்குப் பயன்படுத்திய கம்பருக்குத் தனி அமர்வு வைத்தால் முறையாகுமா? எனவே, கலைஞ்ர் தனக்கே உரிய சூழ்வினை அறிவுடன் கருத்தரங்கங்கள் நடைபெறும் கூடங்களில் ஒன்றிற்குக் கம்பர் பெயரைச் சூட்டி விட்டார். கம்பர் அன்பர்கள் இதிலேயே நிறைவுகாண வேண்டும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் எனச் செயல்பட்டுள்ள முதலவர் முத்தமிழறிஞருக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 28 மார்ச், 2010

காரைக்குடி என்று சொன்னால் கம்பனும் எழுந்து வருவான்



காரைக்குடி, மார்ச் 27: சங்க இலக்கியங்கள் ஒரு பக்கம் தமிழின் புகழ் பரப்பிக் கொண்டிருந்தாலும், தமிழை இன்றையநாள் வரை வாழும் மொழியாக வைத்திருப்பது பக்தி இலக்கியங்கள்தான். இவற்றில் தேவாரப் பாடல்களும், நாலாயிரத் திவ்ய பிரபந்தமும், கம்பராமாயணமும் மிக முக்கியமானவை.கவித்துவம், தத்துவம், கருத்துகள், வர்ணனைகள், சொல்லாடல் அனைத்தையும் கொண்ட இராமகாவியம், ஏதோ கடினமானது என்பதுபோன்ற கருத்தாக்கம் ஏற்பட்டபோது, கம்பராமாயணக் கவிதைகள் எவ்வளவு எளிமையானவை என்று எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இராவணன் திராவிடன் என்றும், இராமன் ஆரியன் என்றும் பேசப்பட்ட நாளில், இராமன்தான் தென்னிந்திய பழங்குடிகளின் நண்பன் என்றும், குகனையும் சுக்ரீவனையும் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டவன் என்றும் மக்களிடம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கம்பராமாயணம் வெறும் காமரசம் அல்ல, "இந்த இப் பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்று ஆணுக்கும் கற்பு நெறி சொன்ன காவியம் என்று சொல்லவேண்டிய அவசியம் நேர்ந்தது.1939-ஆம் ஆண்டு கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்து கம்பனையும் கம்ப ராமாயணத்தையும் புகழ்ந்து மக்களிடம் அதைக் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கினார், கம்பன் அடிப்பொடி என்றே தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர் சா. கணேசன். ரசிகமணி டி.கே.சி. தலைமை ஏற்ற முதல் திருநாளில் அறிஞர் பலர் பங்கேற்றனர். அன்று தொடங்கி, கடந்த 71 ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்காத தமிழ் அறிஞர்களே இல்லை. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், வெ. சாமிநாத சர்மா, விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, க.கு. கோதண்டராமக் கவுண்டர், நீதிபதி மு.மு. இஸ்மாயில், நீதிபதி எஸ். மகராஜன், தனிநாயக அடிகள், கா. நயினார் முகமது, அ.ச.ஞா., கி.வா.ஜ., தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், சே.ச., ஏ.சி. பால் நாடார், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வ., கண்ணதாசன், மு. ராகவ அய்யங்கார், கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், ஏ.என். சிவராமன், வே.மி. சம்மனசு, சாரணபாஸ்கரன், வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ராய.சொ., அ.சீ.ரா., சொ. முருகப்பா, வாலி, மு. கருணாநிதி என்று பெரும் அறிஞர் பட்டாளமே கம்பன் புகழ் பாடியிருக்கிறார்கள். கம்பன் பிறந்த நாள் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் கவிச்சக்கரவர்த்தி யாகப் பூவுலகில் அரங்கேறிய நாளான பங்குனி அத்தத்தை தனிப் பாடல் ஒன்றின் துணையால் நிறுவி, அத்திருநாளில் நாட்டரசன்கோட்டையில் விழா எடுத்து, அதற்கு முந்தைய மூன்று நாள்களும் காரைக்குடியில் விழா எடுத்து வருகிறது கம்பன் கழகம்.1939 முதல் 1982 வரை 43 ஆண்டுகள் கம்பன் திருநாளைக் கொண்டாடிய பெருமைக்குரியவர் கம்பன் அடிப்பொடி ஒருவரே. அவருக்குப் பிறகும் தொடர்ந்து இவ்விழா நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களது சேவை விரிந்துள்ளது.தமிழ்நாட்டில் எங்கே எந்த ஊரில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டாலும், தாய்வீட்டுச் சீராட்டுகளாக கம்பன், தமிழ்த்தாய் படங்களுடன் கம்பராமாயணப் புத்தகமும் அடையாள அன்பளிப்பாக ரூ.101 பணமும் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் உள்ள கம்பன் கழக நிர்வாகிகளும் உலகெங்கிலும் உள்ள கம்பனின் ரசிகர்களும் தாய்க் கழகமாம் காரைக்குடி கம்பன் விழாவுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வந்து விடுகிறார்கள்.காரைக்குடி கம்பன் விழாவுக்கு வரும் அன்பர்களையும் பிற கம்பன் கழக நிர்வாகிகளை உறவுகளை அழைத்துவருவதைப் போல, ரயில்நிலையம் பஸ் நிலையங்களிலிருந்து தனி வாகனத்தில் அழைத்து வந்து, இங்கே நான்கு நாள்களும் இலவசமாக தங்குதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். கம்பனின் புகழோடு, செட்டிநாட்டு விருந்தோம்பல் என்றால் என்ன என்பதையும் புரிய வைத்துவிடுகிறார்கள். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. கம்பன் விழாவில் நிகழ்ச்சிகளின் இடையே ஓய்வு கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களுக்கும் அன்பர்களை அழைத்துச் செல்கிறார்கள்.மொத்தச் செலவுகளில் ஒரு பகுதியை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை ஏற்கிறது. மீதிச் செலவுகளை கம்பன் அறநிலை ஏற்றுக்கொள்கிறது என்கிறார் கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன்.இந்த நான்கு நாள் விழாவில் கம்பனின் முழு ஆளுமையையும் உணரச் செய்து விடுகிறார்கள். கம்பனின் கவியைப் பருக நினைப்பவர் அனைவரும் வரும் இடம் காரைக்குடி கம்பன் கழகம் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றனர்.
கருத்துக்கள்

கம்பரைப் போற்றுபவர்கள் ஒற்றுமை இலக்கியம் படைத்த இளங்கோவடிகளையும் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிட்ட வகுப்பாரும் ஆரியரும் போற்றும் கம்பரை அனைவரும் போற்றுவார்கள். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்! இளங்கோ அடிகளார் புகழ் பாடித் தமிழ் மானம் காப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கம்பன் ஏமாற்றப்படமாட்டார்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்



காரைக்குடி, மார்ச் 27: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கும் இடமிருக்கும் என்றும், கம்பன் ஏமாற்றப்படமாட்டார் என்றும் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார். காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெறும் 72வது கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், "தினமணி' முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தமிழக அரசும் முதல்வரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதில்லை என்றார். ""பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் காரைக்குடி கம்பன் விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அந்த நாள்களை இன்று கம்பன் கழக மண்டபத்தில் நுழையும் போது நான் நினைவுகூர்ந்தேன். அப்போதெல்லாம் கம்பன் விழாவில் அன்றைய "தினமணி' ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமனை பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். ஒருநாள் நான் "தினமணி' ஆசிரியராகப் பொறுப்பேற்பேன் என்றோ, காரைக்குடி கம்பன் விழா மேடையில் தொடக்க உரையாற்றுவேன் என்றோ அப்போது கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை. "கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை' என்பார் கவியரசர் கண்ணதாசன். கம்பன் ஏன் காந்தம் போல் நம்மை இழுக்கிறான்? அவனது ராம காவியம் வெறும் கவிதை தொகுப்பல்ல. கற்பனைச் சுரங்கம் உவமைகளின் சமுத்திரம். எல்லாவற்றுக்கும் மேலாக கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் கம்பனது தனித்துவம்.÷நான் எழுதியதாலோ என்னவோ எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு இடமுண்டா இல்லையா என்று. நான் போகுமிடமெல்லாம் இந்தச் சர்ச்சை எழுப்பப்படுகிறது.÷தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பி மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அழைத்துச் சென்ற மதுரை வைத்தியநாத அய்யர் சிலை பராமரிப்பில்லாமல் இருக்கிறது என்று "தினமணி' நாளிதழில் செய்தி வெளிவந்தது. காலையில் "தினமணி' வெளிவந்த சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் அந்தச் சிலை அருகில் குவிந்துவிட்டனர். அடுத்த சில மணித் துளிகளில் சிலை புதுப்பொலிவு பெற்றுவிட்டது. காரணம், முதல்வரிடமிருந்து வந்த தொலைபேசி ஆணை.÷போலி காலாவதியான மருந்துகளைப் பற்றிய "தினமணி' தலையங்கம் வந்தவுடன், முதல்வர் அதிகாரிகளைக் கூட்டி நடவடிக்கையை முடுக்கிவிட்டதை நாடறியும்.÷காரைக்குடி மாநகரில் தமிழ்த்தாய் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய, அந்தத் தமிழ்த்தாய் கோயிலைத் திறந்து வைத்த, கம்பன் அடிப்பொடியின் மீது அளப்பரிய மரியாதையுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை நேசிக்கும் தமிழக முதல்வர், கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு செம்மொழி மாநாட்டில் இடமளிக்காமல் இருக்கமாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவர் சொன்னதைச் செய்வதுபோல சொல்லாமலும் செய்வார் என்பதற்கு செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு அளிக்கப்படும் இடம் எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் கருதுகிறேன். வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகிய மூவரையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பது இயலாது என்பதை அறியாதவர் அல்லர் அவர். கம்பன் ஏமாறவும் மாட்டான். நாம் ஏமாற்றப்படவும் மாட்டோம். ஏனென்றால் கம்பனின் தமிழ் காலத்தையும் வரைமுறைகளையும் கடந்த தேன்பாகு என்பதில் சந்தேகம் என்ன? என்றார் அவர்.
கருத்துக்கள்

தினமணயில் வரும் செய்திகளுக்கு உடனே எதிரொலி கேட்பது உண்மைதான். உரிய பயன் விளைவதும் உண்மைதான். ஆனால், இதே தினமணி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது முழக்கமாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றும் தமிழுக்காகக் குரல் கொடுப்பதற்கான எதிர்விளைவு ஏதும் இல்லையே! இவை தினமணியின் போலிக் குரல்கள் என எண்ணுகிறாரா? அல்லது கேட்பதிலும் பார்ப்பதிலும் பாதி மறைப்பு வந்து இவை அவருக்குத் தெரிவதில்லையா? கம்பரைப் பிற அமர்வுகள் மூலம் காணலாம். ஆனால், மொழிப்பாடமாக, பயிற்று மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்ற இதுவே நல்ல வாய்ப்பான காலம். தினமணி அதற்குக் குரல் கொடுக்க வேண்டும். மொழிப்பற்றும் இனப்பற்றும் இலக்கியப் பற்றும் உள்ள ஆசிரியர் அதில் கருத்து செலுத்தி வெற்றி காண வேண்டும்.தமிழ்த்தாய ஏமாற்றப்படாமல் இருந்தால் கம்பன் ஏமாற்றம் அடையாமல் மகிழ்வார்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:53:00 AM

I am not sure our CM will encourage hindu relegious Schalers rather he always criticise them. Without Kambar, Elango, Sambandar, Appar, Barathiyar how can on tamil conference can be conducted without them. We cannot think of Tamil without any Bakthi and relegious thougts from great schalers. Thanks to Periyar, he is not tamil schalar otherwise entire conference will be dedicated to Periyar only.

By Chandra
3/28/2010 4:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2009

வட்டத்தொட்டி நாயகர் ரசிகமணி டி.கே.சி.



தமிழகத்தில் ஒரே ஆண்டில் பிறந்த இருவரில் ஒருவர் உணர்ச்சிக் கவிதைகளை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மற்றொருவர் கலைகளை ரசிப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் சிறந்தவராக விளங்கினார். ஆம், 1882-ம் ஆண்டில் பிறந்த அவர்களில் ஒருவர் எட்டையபுரம் தந்த சுப்பிரமணிய பாரதி. மற்றொருவர் ரசிகமணி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியார். பாரதியைவிட 4 மாதங்கள் வயதில் மூத்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் தீத்தாரப்ப முதலியார்-மீனம்மாள் அண்ணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் டி.கே.சி. தென்காசியில் திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1905-ம் ஆண்டில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் மேல் பற்றுக்கொண்டு திருக்குறள், பெரியபுராணம், காஞ்சிப்புராணம் உள்ளிட்ட நூல்களைக் கற்று அதுகுறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கும் பழக்கத்தையும் டி.கே.சி. வைத்திருந்தார். 1908-ம் ஆண்டு பிச்சம்மாள் அண்ணியைத் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தாலும், அப் பணியைத் தொடராமல் தமிழுக்காகவே வாழ்ந்த டி.கே.சி. திருநெல்வேலியில் 1924-ம் ஆண்டு "இலக்கியச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புத்தான் பிற்காலத்தில் "வட்டத்தொட்டி' எனப் பெயர் பெற்றது. இந்த வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பு 1924-ல் இருந்து 1927 வரையும், பின்னர் 1935-ல் இருந்து சில ஆண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், வித்வான் அருணாசலக் கவுண்டர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, மீ.ப. சோமு, தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான், ஆ. சீனிவாசராகவன் உள்ளிட்ட அறிஞர்கள் நிரந்தரமாக வரும் பழக்கம் உடையோராக இருந்திருக்கின்றனர். ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, அப்புசாமி ஐயர், பாலசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்டோர் வட்டத்தொட்டிக்கு அவ்வப்போது வந்து கலந்துகொள்வோரில் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழால் அறிவியல் மட்டுமன்றி அனைத்துக் கலைகளையும், இயல்களையும் கற்க முடியும் என முழக்கமிட்ட டி.கே.சி. தமிழ்க் கவிதையில் மறைந்து கிடந்த கருத்துகளை எல்லாம் வெளிக்கொணர்ந்த காரணத்தால் "ரசிகமணி' என பெயர் சூட்டி அவரைத் தமிழுலகம் பாராட்டியது. இலக்கியம் கூறுவதை நயம்பட விளக்கும் தன்மையுடைய டி.கே.சி.யால் தமிழின் சுவையை உணர்ந்தவர்கள் ஏராளம். உரைநடை மட்டுமல்லாது, கடிதங்கள் மூலமும் தமிழை உணர வைத்தவர் டி.கே.சி. கடிதத்தின் வாயிலாக தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழிசை உள்ளிட்டவற்றை வளர்த்தவர் அவர். "கடித இலக்கியம்' என்ற புதிய இலக்கியச் சுவையை அறிமுகப்படுத்தியவர். தமிழை முழுமையாக அனுபவித்த டி.கே.சி. தேவகோட்டையில் 1941-ம் ஆண்டு நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமையேற்று தமிழிசையின் மேன்மையை எடுத்துரைத்தார். இவ்வாறு அனைத்துக் கலைக்கும் தொண்டாற்றிய டி.கே.சி. 1927-ம் ஆண்டு சென்னை மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் அவர் சங்கத்தமிழ் குறித்து முழக்கமிட்டார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையப் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அவர், கோயில்களில் தமிழ்நாட்டு பழங்கலைகளை நிகழ்த்தி அக் கலைகளைச் செழிக்கச் செய்தார். இதய ஒலி, கம்பர் யார் உள்ளிட்ட அவரின் நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகிய பதிப்புகளும் டி.கே.சி.யின் சிறப்பைத் தெளிவுபடுத்தும். வட்டத்தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர், ரசிகமணி, குற்றால முனிவர் எனப் பல்வேறு பெயர் பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியார் 1954-ம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பணியை மறக்காது இன்றளவும் திருநெல்வேலி பகுதியில் ரசிகமணிக்கு விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவ்வாண்டும் (வெள்ளிக்கிழமை செப். 11) திருநெல்வேலி மாவட்டம், மேலகரத்தில் இவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------

போற்றதலுக்குரியவர்தான் இரசிகமணி. என்றாலும் கம்பரின் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்து இவை மட்டுமே கம்பரின் இராமாயணம் என இருந்தால் போதும் என்பது போல் பரப்புரை செய்ததால் தமிழறிஞர்களின் கண்டனத்துக்கு ஆளானார். அதுபோல் வட்ட தொட்டிக் கூட்டம் ஒன்றில், கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை வங்கக் கடலில் எறிவோம் என ஒருவர் பேசியதாலேயே பேராசிரியர் சி.இலக்குவனார் கிளர்ந்தெழுந்து சங்கத் தமிழ் புகழ் பேசித் தங்கத் தமிழ் வளர்ப்போம் என முழங்கிச் சஙக்கத்தமிழைப் பாமரரும் அறியச் செய்தார். -- இலக்குவனார் திருவள்ளுவன்