திங்கள், 9 ஜூலை, 2012
நாள்தோறும் வியக்க வைக்கிறது திருக்குறள்: "தினமணி' ஆசிரியர்
புதன், 23 நவம்பர், 2011
Social activist A C Nadarajah passes away in Jaffna
Social activist A C Nadarajah
passes away in Jaffna
Former principal of Vasaavi'laan Central College and former General Manager of Jaffna edition of the Tamil daily Thinakkural passed away in Jaffna on Monday night at the age of 70. He was ailing from cancer and was anticipating death at any time. Yet, even in his last days he was engaged in social work in full swing, especially in reviving educational, social and cultural institutions of his native village Kurumpasiddi, where people are permitted to resettle in parts of the village. But, his more impactful and extensive contributions were in doing charity in Vanni after the war.
When it became known that he would survive only for a few months, Nadarajah concentrated on a number of activities related to the revival of his village, a part of which was then just permitted for resettlement.
Uprooted from Kurumpasiddi by the occupying SL military 20 years ago, Mr. Nadarajah was spearheading the movement of uprooted people in Jaffna. He led one of the welfare organisations for the uprooted people of Valikaamam North and was voicing for their rights. The tragedy was that, to the end of his life, he could not see his own land and house. That part of Kurumpasiddi is still under SL military occupation.
As a committed educationalist, even after retirement he was involved in a number of educational development activities in the peninsula and was always looked upon with respect in getting advice on educational matters. The educationalist in him reflected in every writings of him in Thinakkural as he touched on a variety of topics ranging from heritage to development. He was writing under the pen names, Yaazh Arasan, Uruththiran, Aasinan and Pulikeasi.
He started his social life as a Leftist, and in his later years turned to society oriented spiritualism.
He was also a theaterist and a sportsman in his younger days.
He was managing Jaffna Thinakkural for 8 years, from 2002 to 2010.
Mr. Nadarajah's life was an illustrated example of his generation that has never lost its spirit and was committed to the society to the very end, despite going through decades of tragedies overshadowing major part of the lifetime.
He leaves behind his wife and two daughters.
A video feature in Tamil, which he gave to TamilNet in 2005 on the story of his village, will be produced herewith in the 2nd lead.
Related Articles:
19.01.11 Rajapaksa skips 're-reopening' of Vasaavi'laan Central Colle..
15.05.10 Resettlement of uprooted civilians remains rejected in Jaffn..
வியாழன், 16 டிசம்பர், 2010
Dinamani editor about Bharathiyar articles : பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்
12/15/2010 2:07:00 PM
12/15/2010 12:05:00 PM
12/15/2010 7:25:00 AM
சனி, 16 அக்டோபர், 2010
10/16/2010 2:43:00 PM
10/16/2010 2:40:00 PM
10/16/2010 1:41:00 PM
10/16/2010 1:37:00 PM
10/16/2010 1:35:00 PM
10/16/2010 1:28:00 PM
10/16/2010 11:29:00 AM
10/16/2010 8:59:00 AM
10/16/2010 8:25:00 AM
10/16/2010 8:24:00 AM
10/16/2010 6:34:00 AM
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/31/2010 3:24:00 AM
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/10/2010 4:55:00 AM
திங்கள், 5 ஏப்ரல், 2010
சென்னை, ஏப். 4: கணியன் பூங்குன்றனார் இயற்றிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற புறநானூற்றுப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தமிழின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கோரிக்கை விடுத்தார்.
÷"ஆஸ்கர்' விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பயணத்தைப் பாராட்டி அவரது சகோதரி ரெஹானா தொகுத்து வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சென்ற மார்ச் 31-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பத்மபூஷண் விருது பெற்றார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தில்லியில் "தினமணி' சார்பில் நடைபெற்ற பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் எந்த வித தயக்கமும் இல்லாமல் பங்கேற்றார்.
÷இந்த விழாவில் "ஆஸ்கர்' விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானையும், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனையும் அருகருகே அமரவைத்த பெருமையை "தினமணி' பெற்றது.
÷விழாவில் முதலில் வந்து அமர்ந்த "நோபல்' பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், "நான் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன். எனவே, அவருடன் இணைந்து எடுக்கப்படும் படத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.
÷சிறிது நேரத்தில் வந்த ஏ.ஆர்.ரஹ்மானும், "நானும், அவரும் (வெங்கட்ராமன்) இப்படி அருகருகே அமர்ந்திருக்க இனியும் ஒரு வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகம்தான். எனவே கிடைத்தற்கரிய இந்தப் படத்தை எனக்கு அனுப்புங்கள்' என்று என்னிடம் கேட்டார்.
÷சிறிதாவது கர்வமோ, நான் பெரியவன் என்கிற அகம்பாவமோ, உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற அவர்கள் இருவரிடமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.
÷"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற தமிழ் முழக்கத்தை உலகத்துக்கு அளித்தவர் கணியன் பூங்குன்றனார் என்ற சங்க காலத்துப் புறநானூற்றுப் புலவர்.
÷எல்லாமே எனது நாடுதான். எல்லோரும் என் உறவினர்களே என்கிற அந்த அற்புதமான சங்க இலக்கியப் பாடலை வாழ்ந்து காட்டிய பெருமைக்கு உரியவர் ஏ.ஆர். ரஹ்மான்.
÷தில்லியில் நடைபெற்ற தினமணியின் பாராட்டு விழாவில் பேசும்போது, "ஜெய்ஹோ' போன்று ஒரு தமிழ்ப் பாடலை, தான் இசை அமைத்து ஆஸ்கர் விருது வாங்க விரும்புவதாக கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
÷நான் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். "வந்தே மாதரம்' பாடலுக்கு இசையமைத்தது போல, கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற புறநானூற்றுப் பாடலுக்கும் இசையமைத்து தம் இனிய இசையால், தமிழகத்தின் இசைத் தூதுவர் ஏ.ஆர்.ரஹ்மான் பண்டைத் தமிழனின் தொலைநோக்குச் சிந்தனையை உலகறியச் செய்ய வேண்டும்.
÷இந்த மெல்லிசை நிகழ்ச்சி மூலம் நான் தினமணியின் சார்பிலும், உங்கள் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது என்றார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
÷இந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் ரவிசங்கர், "டைம்ஸ் ஆப் இந்தியா' நிர்வாகி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெஹானா மற்றும் நடிகர் விஜய் ஆதிராஜ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
÷முன்னதாக "அருவி' தொண்டு நிறுவனம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்துக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஒருங்கிணைப்பாளர் சைமனிடம் நன்கொடையை தொழிலதிபர் ரவிசங்கர் வழங்கினார்.
கருத்துக்கள்
அருமையான வேண்டுகோளை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இவ் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் இரகுமான் பெருமை பெறுவார். தமிழர் மகிழ்ச்சி கொள்வார். ஒரு பாடலுடன் நிறுத்திக் கொள்ளாமல் சங்கப் பாடல்கள் பலவற்றையும் பாட வேண்டும். பாடல் பேழையில் அப்பாடல்களின் பல் வேறு மொழிபெயர்ப்புளும் இடம் பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/5/2010 3:13:00 AM
அக் இம்சையைக் காட்டி கிந்தியாவாக்கி இனச்சிதைப்பை செய்தாயிற்று. இனிக் கணியன் பூங்குன்றனாரைக் காட்டிக் கோவணத்தையும் உருவும் திட்டத்தை அரங்கேற்றித் தமிழகத்தை அம்மணமாக்காது ஓயமாட்டார்கள் போலிருக்கிறதே. எல்லாமே எனது நாடுதான். எல்லோரும் என் உறவினர்களே என்றுபோய் கர்நாடகாவில் பாட முடியுமா? மாராட்டியாவில் பாடமுடியுமா? சும்மா மக்களை என் மாயைக்குள் வீழ்தி வைத்திருக்க முயல்கிறீர்கள்.
4/5/2010 3:12:00 AM
அற்பமான இளைஞர்களைக்கூட என்னிடம் கொடுங்கள். அவர்களை சிற்பம் ஆக்கிக் காட்டுகிறேன் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தா. சிற்பமாக இருக்கும் பெண்களை என்னிடம் கொடுங்கள். அவர்களை கர்ப்ப மாக்கிக் காட்டுகிறேன்' என்று சொல்வது நம்ப நித்யானந்தா!!!
4/5/2010 2:12:00 AM
வியாழன், 1 ஏப்ரல், 2010
புதுதில்லி, மார்ச் 31: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வீடுகளில் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து, பத்ம விருதுகள் பெற்ற நோபல் நாயகர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் மற்றும் சித்த மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகிய தமிழர்களைப் பாராட்டி புதன்கிழமை நடத்திய விழாவில் பேசியபோது இதனை அவர் வலியுறுத்தினார்.
மேலும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
பேசியது: திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கித் தந்த அறிஞர்கள் இவர்கள். தமிழ்நாட்டின் பெருமையை இந்தியத் தலைநகரில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பட்டொளிவீசிப் பறக்கச் செய்தவர்கள். இவர்களைப் பாராட்டுவது தமிழர்களாகிய நம்மை நாமே பாராட்டிக் கொள்வதற்குச் சமம்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்பான் பாரதி. இசைமேதை ஏ.ஆர். ரஹமான் பேசும்போது "ஜெய் ஹோ' பாடலைத் தமிழில் இசையமைக்க வேண்டும் என்கிற ஏக்கமும் தாகமும் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். அவர் வெளிப்படுத்திய அந்தத் தமிழ் உணர்வு நம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். அதற்கு முதலில் நாம் தமிழில் பேச வேண்டும் என்கிற வைராக்கியம் நமக்கு ஏற்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் வாழும் மலையாளிகளைப் பார்க்கிறேன். அவர்கள் வீடுகளில் மலையாளத்தில் பேசிக்கொள்கிறார்கள். குஜாராத்திகள் குஜராத்தி மொழியில் பேசுகிறார்கள். கன்னடத்தவர் கன்னடத்திலும், வங்காளிகள் வங்க மொழியிலும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயேகூடத் தமிழன் மட்டுமே, தன் வீட்டில் தமிழ் பேசுவது குறைந்து வருகிறது. தமிழில் பேசுவது கெüரவக் குறைச்சலாகக் கருதுவதும் ஆங்கிலத்தில் பேசுவதுதான் பெருமை என்று நினைப்பதும் வேதனை அளிக்கிறது. இந்த மேடையில் ஜெய் ஹோ பாடலை குழந்தைகள் ஹிந்தியில் பாடியதைக் கேட்ட ரஹ்மான், இப்பாடலை தமிழல் கொண்டுவரப்போவதாகச் சொன்ன அதே தமிழ் உணர்வை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நாமும் வீடுகளில் தமிழில்தான் பேசுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நாம் நமக்குள்ளே பேசும் மொழி நம் இனிய தமிழ் மொழியாக இருக்கட்டும் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன்.
நோபல் நாயகர் வெங்கட் ராமகிருஷ்ணன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், "நான் இங்கே உள்ள இசை மேதை ரஹ்மான் போல அனைவரும் தெரிந்த நபர் அல்ல, ஆனால் எனக்கு ஒரு நோக்கம் இருந்தது, அதை நான் ஈடுபாட்டுடன் பின் தொடர்ந்தேன். நான் எப்படி பி.எச்டி. படிக்க நேர்ந்தது என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயம். இருப்பினும் என்னைப் போன்றவர்களுக்கு விருது கிடைக்குமபோது அது மிகப்பெரிய நல்லெண்ணத்தைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதும், உழைப்பவருக்கு பாராட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதும் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இது ஒரு பாடம். பணம், நல்ல வேலை என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உங்கள் விருப்பங்களைத் தீர்மானித்து, அதைத் தொடர்ந்து செல்லுங்கள். பாராட்டு வந்து சேரும்' என்றார்.
தமிழில் ஜெய்ஹோ: இசைமேதை ஏ ஆர். ரஹ்மான் பேசுகையில், எல்லாப் புகழும் இறைவனுக்கே, இந்த விழாவில் குழந்தைகள் நான் இசையமைத்த ஹெய் ஹோ பாடலை ஹிந்தியில் பாடியபோது, இதைத் தமிழிலும் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த ஆண்டு அதைச் செய்வேன், பாராட்டியதற்கு தினமணிக்கு நன்றி என்றார்.
டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் பேசுகையில், விருது பெற்றவுடன் இங்கே வந்து கலந்து கொண்டதற்குக் காரணம் நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான். எனக்கு விருóது கிடைத்திருப்பதாக நண்பர்கள் சொன்னபோது, எனக்குத் தெரியாது, நான் கேட்டதும் இல்லை. இத்தகைய விருதுகள் பெற செல்வாக்கைப் பயன்படுத்தினால்தானே இத்தகைய விருதுகள் கிடைக்கும் என்றேன். தகுதிக்கேற்பவும் தருகிறார்கள் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டுக்கு மறுபடியும் பெருமை கிடைக்கத் தொடங்கியுள்ளது. சில காலமாக தொய்வு இருந்த நிலை மாறி, கடந்த இரு ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று நிறைய தமிழர்கள் மத்திய அரசுப் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். தமிழன் மறுபடியும் தலைதூக்கி உலகப் புகழைப் பெறத் தொடங்கியுள்ளான். இந்த விருது பெற்ற அனைவருமே, சாதாரண குடும்பங்களில் இருந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்கள் என்றார்.
டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தமிழ் உணர்வு தமிழர்களிடத்தில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இருக்கிறது. சோரியாஸிஸ் தோல் நோய்க்கு நான் உருவாக்கியுள்ள சித்த மருந்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சித்த மருத்துவமனை அதிகம் வருவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
1946-ல் தொடங்கப்பட்ட தில்லி தமிழச் சங்கத்தின் செயல்பாடுகளை தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். செயலர் சக்தி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் பி. குருமூர்த்தி, ராஜ்குமார் பாலா ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஆங்கிலேயர் அல்லாத இருவர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்பது உலகறிந்த உண்மையாக உள்ளது. தமிழர்கள் தங்களுக்கிடையே தமிழ் பேசாமையே மொழி அழிவுக்கும் நில இழப்பிற்கும் இன அழிப்பிற்கும் காரணமாயிற்று. தினமணி ஆசிரியர் தம் வேண்டுகோளைத் தொடர்ந்து வலியுறுத்தி இதழில் வெளியிட்டு வரவேண்டும். பின்னராவது நம்மவர்களுக்கு உணர்வு வரலாம். தமிழில் பேசுங்கள் ! தமிழ் பேசும் பொழுது (பிற மொழிக் கலக்காமல்) தமிழிலேயே பேசுங்கள்!தமிழில் எழுதுங்கள்! தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுங்கள்! தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுங்கள்! தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்யுங்கள்! இச் செயல்பாடடுகளே தமிழை என்றென்றும் வாழவைக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/1/2010 2:29:00 AM
ஞாயிறு, 28 மார்ச், 2010
தினமணயில் வரும் செய்திகளுக்கு உடனே எதிரொலி கேட்பது உண்மைதான். உரிய பயன் விளைவதும் உண்மைதான். ஆனால், இதே தினமணி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது முழக்கமாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றும் தமிழுக்காகக் குரல் கொடுப்பதற்கான எதிர்விளைவு ஏதும் இல்லையே! இவை தினமணியின் போலிக் குரல்கள் என எண்ணுகிறாரா? அல்லது கேட்பதிலும் பார்ப்பதிலும் பாதி மறைப்பு வந்து இவை அவருக்குத் தெரிவதில்லையா? கம்பரைப் பிற அமர்வுகள் மூலம் காணலாம். ஆனால், மொழிப்பாடமாக, பயிற்று மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்ற இதுவே நல்ல வாய்ப்பான காலம். தினமணி அதற்குக் குரல் கொடுக்க வேண்டும். மொழிப்பற்றும் இனப்பற்றும் இலக்கியப் பற்றும் உள்ள ஆசிரியர் அதில் கருத்து செலுத்தி வெற்றி காண வேண்டும்.தமிழ்த்தாய ஏமாற்றப்படாமல் இருந்தால் கம்பன் ஏமாற்றம் அடையாமல் மகிழ்வார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/28/2010 4:53:00 AM
I am not sure our CM will encourage hindu relegious Schalers rather he always criticise them. Without Kambar, Elango, Sambandar, Appar, Barathiyar how can on tamil conference can be conducted without them. We cannot think of Tamil without any Bakthi and relegious thougts from great schalers. Thanks to Periyar, he is not tamil schalar otherwise entire conference will be dedicated to Periyar only.
3/28/2010 4:41:00 AM