anna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
anna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கண்ணியமும் பேரறிஞர் குடும்பமும் இணைந்து நடத்திய அண்ணா பிறந்தநாள் – விருது வழங்கும் விழா!

கண்ணியமும் பேரறிஞர் குடும்பமும் இணைந்து நடத்திய அண்ணா பிறந்தநாள் – விருது வழங்கும் விழா!

நட்பு - பதிவு செய்த நாள் : 16/09/2012

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணா இல்லத்தில் தமிழ் உணர்வாளர் 70 பேருக்கு விருது வழங்கப்பட்டது.முனைவர் பொற்கோ உள்பட அறிஞர்கள் வாழ்த்திப் பேசினர். அறிஞர் அண்ணாவின் 104 ஆவது பிறந்த நாள் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் இல்லத்தில், கண்ணியம் இதழ் ஆசிரியர் குலோத்துங்கனும், அண்ணா குடும்பத்தினரும் இணைந்து அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். இல்லத்தின் முகப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் 70 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ தலைமை தாங்கினார். அண்ணாவின் பேரன் மலர்வண்ணன் வரவேற்றுப் பேசினார். மற்றொரு பேரன் சௌமியன் முன்னிலை வகித்தார். கவிக்கொண்டல் செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா.கணேசன், கந்தன், தமிழறிஞர் திருவள்ளுவன், கிருட்டிணமூர்த்தி உட்பட 70 மொழி இன உணர்வாளர்களுக்கு பொற்கோ விரிதுகள் வழங்கிக் கௌரவித்தார்.


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் இராமசாமி, தமிழறிஞர் மறைமலையான், முனைவர் மதிவாணன் வாழ்த்திப் பேசினர். தமிழறிஞர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் நன்றி கூறினார்.

அண்ணாவின் பேரன் மலர்வண்ணன்,பேரன் சௌமியன், பேத்தி மு.இளவரசி, செயசிறீ மலர்வண்ணன், சரளா சௌமியன் உட்பட அண்ணாவின் குடும்பத்தினர், அண்ணாவின் பற்றாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

~நன்றி: மாலைமுரசு
 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

Family members of Annaa : அண்ணா குடும்பத்தினர்: இன்றைய நிலை

Blog post image #1
தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.
அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.
1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண்ணிக்கையாக அமைந்தது.
அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரியின் பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.
தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணாவுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வைத்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.
தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தரவில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்திலோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தினருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன்வந்தபோதுகூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்கத்தில் வேறு யாருக்கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல்களை செல்வி.ஜெயலலிதா அரசு நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றாண்டையொட்டி (2009) அண்ணாவின் வளர்ப்பு மகன்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.
அண்ணாவின் முதல் மகன் பரிமளம், மருத்துவம் பயின்றவர். டாக்டர் அண்ணா பரிமளம் என்றழைக்கப்பட்ட இவர், அரசு தோல் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே www.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார். தற்போதும் அந்த இணையதளம் மாதமிருமுறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கைவிட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத்தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர்களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதியரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரிமளம்-சரோஜா தம்பதியரின் இரண்டாவது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.
அண்ணாவின் இரண்டாவது மகன் சி.என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணாவின் காஞ்சி பத்திரிகையில் பணியாற்றியதோடு, அச்சுத்தொழிலையும் மேற்கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், காலமாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கிறார். இத்தம்பதியரின் மகள் பிரியதர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.
சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதியரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம்பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.
அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ.ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜாமணி-வெங்கடேஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.
அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும்பத்தினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணாவுக்குப் பிறகு அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத்தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல்தளங்களில் விமர்சனம் எழுகின்றபோதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.
தகவல் உதவி: செம்பியன் 

புதன், 19 அக்டோபர், 2011

இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை
இணைந்து நிகழ்த்தும்
டாக்டர் சி. இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
நாள்: 29.9.2011                                                                                காலை 10.00 மணி

தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.

தமிழால் வாழ்ந்தோர் பலர்; தமிழுக்காக வாழ்ந்தோர் மிகச் சிலர். அம்மிகச் சிலருள் ஒருவரான பேராசிரியர் சி. இலக்குவனார் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த ஆராய்ச்சியாளர், மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பேராசிரியர், உணர்ச்சிக் கவிஞர், எழுச்சியூட்டும் இதழாளர், தமிழினப் போராளி எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர். தமிழின் இரு கண்களாக இலங்கும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நுட்பமாய் ஆய்வுசெய்து அறிவுலகிற்கு வழங்கியவர். இவர் ஆற்றிய பல்வேறு பணிகளுள் எக்காலத்தும் நிலைத்த புகழ் தருவதாய்த் தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதாய் அமைந்தது அவரது தொல்காப்பிய ஆராய்ச்சியேயாகும். தொல்காப்பியத்தின் அருமைபெருமைகளைப் பிறமொழி அறிஞர்கள் உணரவேண்டுமென்கிற உயரிய நோக்குடன் அதை ஆங்கிலத்தில் செம்மையாக மொழியாக்கம் செய்திருப்பதுடன் மொழியியல் பார்வையில் ஆழமும் விரிவும் பொருந்தியதொரு திறனாய்வையும் வழங்கியிருப்பது அவரது விரிந்த நூலறிவையும் புலமைசார் ஆய்வு அணுகுமுறையையும் பல்லாண்டுக் கடும் உழைப்பினையும் புலப்படுத்தி நிற்கின்றன.


தொடர்ச்சி காண்க   :




சனி, 17 செப்டம்பர், 2011

Periyar by Annaa: பெரியார் எப்படிப்பட்டவர்?

Blog post image #1
கல்லூரி காணாத கிழவர்!
அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாது கிளர்ச்சிக்காரர்!
பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!
யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!
கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லாதவர்!
தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!
ஆரிய மதம், கடவுள் எனும் மடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!
ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது! இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.
சாமான்ய மக்களின் - இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!
தேர்தலா . . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? தூ… அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுபவர்!
சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!
கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!
இவ்வளவு வயதாயிற்று - இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் - ஒரு சர் பட்டம் பெற்றாரா?
ஜெனீவா போனாரா அரசு செலவில்?
அமெரிக்கா போனாரா அரசாங்கத்தின் செலவில்?
எதைக் கண்டார்?
எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!
இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!
இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்? தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்! எப்படி?
எப்படி எனில், அவர் ஒரு மாயாவி! ஜால வேடிக்கைக்காரர்!
வேடிக்கை பேசாதே என்று கூறுவீர்! வேடிக்கையல்ல நாம் கூறுவது!
தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?
மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா, எப்படி? என்று கேட்பான்.
பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!
அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் - விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.
மனி மேலே மாசு! மடு மேலே பாசி! வயலிடையே களை!
தமிழர் - அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!
மாசு துடைத்திடுக - பாசி போக்கிடுக - களை நீக்குக - கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!
இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் - இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.
அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.
துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு சர் ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.
அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.
அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!
அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!
தமிழன் ஒரு நாட்டுச் சொந்தக்காரன்! தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!
இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!
ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.
இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.
எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!
எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!
அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!
அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!
-அறிஞர் அண்ணா( திராவிடநாடு - 03.06.1945)

வியாழன், 8 செப்டம்பர், 2011

அறிஞர் அண்ணா ஆவி எழுதிய கடிதம்

அறிஞர் அண்ணா ஆவி எழுதிய கடிதம்

இது ஒரு கற்பனை கடிதம்
பாசமிகு தம்பியே நேசமிகுந்த தங்கையே

     ன்று நீங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக பவனி வர காரணமாக இருந்த காஞ்சி தலைவன் அண்ணாதுரை எழுதும் அன்பு கடிதம் நான் வாழ்ந்த காலத்தில் ஆயிரக்கணக்கான கடிதங்களை தம்பிகளுக்காக எழுதியுள்ளேன் அவைகளெல்லாம் தாழ்வுற்று கிடந்த எனது திராவிட வாரிசுகளை வீறு கொண்டு எழ கொடுக்கப்பட்ட கிரியா ஊக்கிகள் என்பேன் ஆனால் இந்த கடிதமோ அப்படி அல்ல வீதி தோறும் மேடை அமைத்து மேடை தோறும் கொள்கை முழங்கி வளர்க்கப்பட்ட என் கண்ணின் கருமணியான கழகம் பாழ்பட்டு கிடப்பதை பார்த்து பரிதவித்து எழுதும் பரிதாபக் கடிதம்

தம்பி திருக்குவளை தந்த சீர் மிகு வீரத்தமிழா! நமது கழகம் எதற்க்காக ஏன் துவங்கப் பட்டது என்பதை நீ மறந்திருக்க மாட்டாய் நமக்கெல்லாம் தலைவராக இருந்த தமிழ் இனத்தையே கை தூக்கி விடுவார் என்று நாம் நம்பிய பகுத்தறிவு பகலவன் அரும்பாடு பட்டு பகலிரவாய் விழித்திருந்து உழைத்த நம்மை எல்லாம் உதறி தள்ளிவிட்டு தனது சொந்தங்களுக்கு முதலிடம் கொடுத்ததனால் தான் திராவிட கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற புது மரத்தை நட்டு வளர்க்க ஆரம்பித்தோம் அன்று முதல் என் காலம் வரையிலும் வாரிசு அரசியலின் வன்கொடுமையை எதிர்ப்பதே நமது நோக்கமாக கொண்டு பாடுபட்டோம் 


ஆனால் தம்பி நீ செய்தது என்ன ஆயிரமாயிரம் கழக உடன் பிறப்புகள் ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி வளர்த்த கழகத்தை கால் மணி நேரத்தில் உடைப்பது போல ராமச்சந்திரனை வெளியேற்றினாய்! அன்றே இந்த அண்ணனின் இதயம் இரண்டாக பிளந்து விட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழாம் ஆண்டில் கழகம் கண்ட வெற்றி அன்பு தம்பி ராமச்சந்திரனை நம் ராதா துப்பாக்கியால் சுட்ட காட்சியை வண்ணக் காட்சியாக வடிவமைத்து சுவர்களெல்லாம் ஒட்டி சோக கீதம் பாடியதால் அன்றோ கிடைத்தது! அதனால்தான் நானே தம்பி ராமச்சந்திரன் முகத்தை காட்டினால் போதும் முப்பது லட்சம் ஓட்டுகள் கிடைக்குமென்று சொன்னேன் அதை மறந்து உன் நலனுக்காக கழகத்தை உடைத்தாய்

வாரிசு அரசியலே வேண்டாம் என்று வாய் வலிக்க பேசிய நீயே உன் திருகுமரனை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று இளைஞர் அணி தலைவராக இளவரசு பட்டம் கட்டினாய்! அந்த வாரிசின் வளர்ச்சிக்கு வை கோபால்சாமி தடையாக இருப்பான் என்று கொலை பாதக பழி சூட்டி வெளியேற்றினாய்! மீண்டும் கள்ளம் இல்லாத கண்மணியான கழகத்தை சம்மட்டி கொண்டு அடித்து பிளந்து போட்டாய்! அத்தோடு உனது ஆசைக்கு எல்லை கட்டியிருக்கலாம் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளமே அணைக்குள் அடங்கும் போது உன் ஆசை வெள்ளம் அடங்காதா என்று காத்திருந்தேன் காத்திருந்த கண்களை கள்ளி செடிதான் குத்தி காயப்படுத்தியது 

 மகனுக்கு பின்னால் பேரனையும் கொண்டு வந்து மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தாய் கட்டிய மனைவிகள் கொடும் தேளாய் கொட்டியதனால் ஆசை மகளை கொல்லைப்புறம் வழியாக கொலு மண்டபம் அனுப்பினாய் மதுரைக்கு அனுப்பிய இன்னொரு மகனுக்கு மண்ணாளும் மந்திரி பதவி வேண்டி தள்ளாத வயதிலும் தலைநகர் நோக்கி பறந்தாய்! வென்றாய்! அன்பு குழந்தைகளை அரியணை ஏற்றி அழகுப்பார்க்கும் ஆசைக்கு கொடுத்த வேகத்தை பஞ்சை பராரிகளாய் பரிதவிக்கும் தமிழ் இனத்தை தலை நிமிர செய்வதில் காட்டியிருந்தால் இன்று அடுக்கடுக்கான கைதுகள் நடக்குமா? நடந்தாலும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்குமா தமிழ் இனம்?

தம்பி நீ மறந்திருக்க மாட்டாய்! காங்கிரஸ்காரர்கள் காசு கொடுத்து ஒட்டுகளை வாங்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில் கழக தம்பிகளுக்கு நானொரு கடிதம் எழுதினேன் ஞாபகம் இருக்கிறதா? பெருமழையால் வீடிழந்து விம்மி கிடந்தோரை காண செல்கின்றேன் அவர்கள் வாழ்த்தொலி எழுப்பி அல்லவா வரவேற்கிறார்கள் அண்ணன் வந்தானாமே உங்கள் அண்ணன் என்ன கொண்டு தந்தான் உமது அல்லலை போக்கிட ஆளுக்கு ஆயிரம் என்றா அள்ளித் தந்தான் என்று கேலி மொழி பேசிட கூட சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள் நான் என்ன தந்தேன் என்றா கேட்டார்கள் அண்ணன் வந்தான் எமது அல்லலை கண்டான் ஆவன செய்திடுவான் என்றல்லவா நெஞ்சம் நெகிழ கூறுகின்றனர் 


 அத்தகை உள்ளன்பும் உணர்ச்சி பெருக்கும் நிரம்பியுள்ள நிலை கண்டேன் பெருமகிழ்வு கொண்டேன் ஆனால் மறு கணமோ கவலை என் மனதை குடயலாயிற்று இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சி பெருக்கையும் துச்சமென்று எண்ணியல்லவா ஆளவந்தார்கள் மீண்டும் நாங்களே அரியாசனம் அமர்வோம் என்று கூறுகின்றனர் அகந்தை அது என்போம் ஆயினும் எதனால் பிறந்தது அந்த அகந்தை இத்தனை தெளிவாக ஏழை எளியோர் பாட்டாளி விவசாயி கழக பற்றினை தெரிவிப்பதும் கண்டும் மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெற போவதாக எந்த தைரியத்தில் கூறுகின்றனர்? எழுச்சி இருக்கிறது நிரம்ப ஆனால் அது ஏழையரிடம் தான் ஏழையர் விலை கொடுத்து வாங்கிடத் தக்கவர்கள் உணர்ச்சி இருக்கிறது நிரம்ப ஆனால் அந்த உணர்ச்சியை மங்க செய்திடலாம் காசு வீசி இவ்விதமாக அன்றோ தம்பி காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர் ஏழையர் ஆகவே அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் பணத்தால் அடித்து வீழ்த்தி விடலாம் என்றல்லவா எண்ணுகின்றனர்

இப்படி நான் தம்பிக்கு எழுதிய கடிதம் ஒன்று உண்டு அன்று காங்கிரஸ்காரர்கள் கனவான்கள் ஆளவந்தார்கள் செய்ய துணிந்த பணம் கொடுத்து ஒட்டு வாங்கலாம் வெற்றி வாகை சூடலாம் என்று போட்ட கணக்கை ஐயோ! தம்பி இன்று நீயே செய்து என் நெஞ்சில் ஈட்டி பாய செய்து விட்டாயே! முறமெடுத்து புலி விரட்டிய தமிழச்சியை இலவசம் கொடுத்து மயக்கி விடலாம் என்று கனவு கண்டாயே! பணத்தை வாங்காத பண்பாளர்களை தடி கொண்டு மிரட்டி வணக்கிட செய்திடலாம் என்று திட்டம் தீட்டினாயே! இதற்க்காகவா இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம்? தனி நாடு கேட்டு தடியடி பட்டோம்? அப்பாவி இளைஞர்களை சிறைச்சாலைக்கு அனுப்பினோம்? 


 நீயும் நானும் அறியாசனத்தில் அமர எத்தனை இளம் நெஞ்சங்கள் உயிர் கொடுத்திருப்பார்கள்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு உடல் கொடுத்திருப்பார்கள்! கடந்த காலத்தை எல்லாம் நடந்த வரலாறு என்று நினைக்காமல் உடைந்த பானையாக எண்ணி அன்றோ உன் குடும்பத்து வாரிசுகள் அனைத்தையும் கொலு மண்டபத்தில் அலங்கரித்து அணிவகுக்க செய்தாய்! செம்மொழி மாநாட்டில் செப்பத் தெரியாத பேதைகளை பேச வைத்து செம்மாந்திருந்தாய்! அரும்பாடு பட்டு நான் கட்டிய கழகம் என்ற மாளிகையை கோடாலி கொண்டு பிளந்து போட்டாயே! இது நியாயமா? தம்பி இது தர்மமா?

தோளோடு தோள் நின்ற என் தோழனான கருணாநிதியை தோல்வியை சுவைக்க செய்து மருண்டு விழ செய்து விட்டு தமிழ் மண்ணை ஆளவந்திருக்கும் சீமாட்டியே! நான் மேடையேறி விரல் நீட்டி பேசும் போது தாயின் விரல் பிடித்து நடந்த பெருமாட்டியே! உன்னை நினைத்தும் என் உள்ளம் பூரிப்பால் பொங்கி மகிழ வில்லை ஓடுகின்ற திருடனில் ஓரளவு உத்தமன் யாரென்று அறிந்து உட்கார வைத்து போல் தான் நீயும் தமிழ் மக்களால் உட்கார வைக்கப் பட்டுள்ளாய்! இந்த ரகசியம் எனக்கு தெரியும் ஊரில் உள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும் ஆனால் உனக்கு தெரியுமா என் தோழியே? 


நீ நினைக்கிறாய் நமது ஆளும் திறன் கண்டு அறிவு பலம் கண்டு ஆற்றலின் வகை கண்டு ஆள அழைத்துள்ளார்கள் தமிழ் நாட்டு வாக்காளர்கள் என்று நீ நினைப்பது தவறு தங்கையே தவறு! காலுக்கு போடுகின்ற செருப்பிலும் கணக்கற்ற வகையை நீ வைத்திருந்ததையும் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாமல் தமிழகத்து வீதிகளில் ஆயிரம் முதிர்கன்னிகள் வீட்டுச் சிறையில் அடைபட்டு கிடக்க உன் வீட்டு தண்ணீர் குழாயோ சொக்கத் தங்கத்தில் மின்னியதையும் மானம் மறைக்க அரை முழ துணி இல்லாத பல நூறு மனிதர்கள் வெயிலிலும் மழையிலும் சுருண்டு கிடக்க நீயோ மணிக்கொரு ஆடை கட்டி அழகு பார்க்கும் அளவிற்கு காஞ்சிபுரம் பட்டும் காசி பட்டும் அடுக்கடுக்காய் கொட்டி வைத்ததையும் என் இனிய தமிழ் மக்கள் இன்னும் மறக்க வில்லை

முத்து வேலர் பெற்ற என் மூத்த தம்பி நாட்டாச்சி செய்யும் நேரத்தில் அடுப்படியில் ஒழிந்து கிடந்த தனது குஞ்சு குருமான்களை காட்டாச்சி செய்ய கட்டவிழ்த்து விட்டது போல் மன்னார்குடியின் உன் மனம் கவர்ந்த தோழியின் குடும்பத்தை தாலாட்டி சீராட்டியதால் தமிழ் நாட்டு மூலை முடுக்கெல்லாம் வெறியாட்டம் போட செய்ததை மறந்து போவதற்கு என் மறத் தமிழன் மண்டையில் சரக்கில்லாதவனா? எல்லாம் அவன் நினைவில் பச்சை மரத்து ஆணியாய் பதிந்தே கிடக்கிறது ஆனாலும் உன்னை ஆள அழைத்ததற்கு ஆள் வேறு யாரும் இல்லை என்பதே ஆகும் என்பதை மறந்து விடாதே! 


மக்கள் வரி பணத்தை வாரி கொட்டி கட்டிய புதிய சட்டசபை வளாகம் மக்கள் பிரதிநிதிகள் உட்கார்ந்து பணியாற்ற உதவாது உயிருக்கு உத்தரவாதம் தராது என்று இழுத்து மூடினாய்! மனதிற்கு சங்கடம் என்றாலும் சமாளித்துக் கொண்டார்கள் தங்க தமிழர்கள் ஆனால் அடுத்தக் கணமே நீ சட்ட சபைக்காக கட்டிய இடத்தை மருத்துவ மனையாக்க போவதாக அறிவித்தாய் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற உறுப்பினர்களின் உயிருக்கு உத்திரவாதம் தராத கட்டிடம் ஒட்டு போட்டு உழைத்து ஓடாய் தேய்ந்து போன ஏழை தமிழனின் உயிருக்கு மட்டும் பாதுகாப்பு தருமோ! அல்லது தமிழனின் உயிர் என்ன உப்பு போட்டு ஊறவைத்த ஊறுகாயா இலையின் ஓரத்தில் வைத்து தூக்கி எரிய? அல்லது ஏழை தானே செத்தால் என்ன என்று கருதுகிறாயா செல்வ மகளே!

சமசீர் கல்வி என்ற அரசியல் சித்து விளையாட்டில் ஒன்றுமே அறியாத பிஞ்சுகளாம் பிள்ளை குட்டிகளை அறுவது நாட்கள் கல்வி கற்க முடியாமல் கண்களை கட்டி விட்டாயே அது நியாயமா தகாத பாடங்கள் தந்த புத்தகத்தில் இருக்கிறது என்றால் உதாவாத பக்கங்களை உதறிவிட்டு நடத்தி இருக்கலாமே பாடங்களை ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்தபின் நீதி மன்றமே நீதி இல்லை இது என்று சொன்ன பிறகு அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் என்ன? நீ சமசீர் கல்வியில் காட்டியது கல்வி மீதுள்ள கரிசனம் அல்ல கருணாநிதியின் மீதுள்ள எரிச்சலின் தரிசனமே ஆகும்!


தனக்கென்று உள்ள விருப்பு வெறுப்புகளை பள்ளம் பறித்து புதைத்து விட்டு ஏற வேண்டிய இடமே நாட்டு சிம்மாசனம் தனது அழுக்குகளை சுமந்து கொண்டு ஆட்சி செய்ய நினைப்பவன் விரைவில் செல்வான் மண்ணாசனம் இந்த உண்மையை மறந்தவன் மறைப்பவன் எல்லோருக்கும் நிரந்தர இடம் இருட்டான கல்லாசனம்

ஸ்ரீ ரங்கத்து ஜெயராமன் மகளுக்கும் திருக்குவளை முத்துவேலர் மகனுக்கும் காஞ்சிபுரத்து கற்றறிந்த தலைவன் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றுள்ளது உடனடியாக நூலகம் போங்கள் தம்பிக்கு அண்ணாவின் கடிதம் என்ற நூலின் இருபத்தி ஒன்றாம் பாகத்தில் இருபத்தி ஒன்பதாம் பக்கத்தை எடுத்து இரண்டாவது பாராவை படித்து பாருங்கள் அதில்

பாம்பு புற்றுக்கு பால் வார்க்கும் தர்மமும் எறும்புகளுக்கு அரிசி போடும் தர்மமும் காக்கை கழுகுகளுக்கு தின்பண்டம் போடும் தர்மமும் செய்திடுவதிலே விருப்பமும் பழக்கமும் கொண்ட முதலாளிகள் அதிக விலைக்கு பண்டங்களை விற்பதற்கோ கள்ள மார்க்கட் நடத்துவதற்கோ பொய் கணக்கு எழுதுவதற்கோ கடன் பட்டவன் கதறிடும் போது அந்த கண்ணீரை கண்டு மனதை கல்லாக்கி கொள்வதற்கோ துளியும் தயங்குவதில்லை என்று எழுதி வைத்திருக்கிறேன் 


அந்த வாசகம் நான் அப்போது காங்கிரஸ் காரர்களை மனதில் வைத்து எழுதியது என்றாலும் இன்றைக்கு நிஜமாக முழுவதும் பொருந்தி வருவது உங்கள் இருவருக்கும் தான்

உங்களின் திருநாவுகள் வறுமையின் கோரத்தை பற்றி பேசுகிறதே தவிர உங்கள் கரங்கள் ஏழ்மையை ஒழிப்பதற்கான சாரத்தை தேட வில்லை உங்கள் நலன்தான் அல்ல அல்ல உங்களது குடும்பம் மற்றும் தோழியின் குடும்ப நலன் மட்டும் தான் உங்கள் கண்களில் தென்படுகிறது

காக்கும் தெய்வமாக உங்களை மட்டுமே நம்பி இருக்கும் ஓட்டாண்டி தமிழனின் நலன் என்பதை பற்றி உங்கள் மனது சிந்திக்க கூட மறுக்கிறது தமிழனை ஆட்டுக் கூட்டமாக ஓட்டுப் போடும் இயந்திரமாக பார்க்கிறீர்களே தவிர சதையும் எலும்பும் இதயமும் கொண்ட உணர்வு மனிதன் என்று நீங்கள் பார்க்கவே இல்லை

நிலைமை இப்படியே தொடர்ந்தால் உங்களை தாங்கி பிடிக்க குப்பை மேடுகள் மட்டும் தான் தயராக இருக்கும் மக்களின் இதய மேடுகள் கல்லாகி போகும் கடந்த காலத்தில் நடந்த தவறுகளை கனவாக நினைத்து மறந்து விட்டு இன்று இப்போது தான் புதிதாக பிறந்தோம் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணியை புரிவோம் என்று உழைக்க வாருங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தால் தயங்கினால் போகி அன்று பற்ற வைக்கும் நெருப்பு குப்பைகளை எரிப்பது போல் மக்களின் இதய நெருப்பு உங்கள் தொப்பைகளை எரித்து விடும் ஜாக்கிரதை!



இப்படிக்கு      
அறிஞர் அண்ணா



ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அண்ணா வளர்ப்பு மகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

 
தம் குடும்பத்தினரைத் தன் வழியில் அரசியலில் குறுக்கு முறையில் இறக்காத பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மைக்கேற்ப அவர் வளர்ப்பு முறையால் ஊழல் பார்வையையும்  மோசடிச் செயல்பாட்டையும் கொள்ளாது  எளிமையாக வாழ்ந்த திரு  இளங்கோவன் மறைவிற்குத் தனி மணி நேயர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள்! அரசியல் மூலம் ஆதாயம் பெற்றுச் செல்வம் பெருக்காத பெருந்தன்மை நாளைய உலகில் உங்களைப்பற்றியும் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும் பேசும். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

அண்ணா வளர்ப்பு மகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

First Published : 07 Aug 2011 04:54:41 AM IST


சென்னை, ஆக. 6: முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன் இளங்கோவனின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:  அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.ஏ.இளங்கோவன், உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  நேரில் அஞ்சலி: முதல்வர் ஜெயலலிதா சார்பில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோச்சனா சம்பத், அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் இளங்கோவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது மனைவி விஜயாவுக்கு தந்தி அனுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்தி:  திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக அரசைக் கண்டித்து நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருவாரூர் சென்றுள்ளார். இதனால் இளங்கோவன் துணைவியார் விஜயாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆறுதல் தெரிவித்து இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார். இதனிடையே, இளங்கோவனின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

Parties of Election Seasons: dinamani article: தேர்தல் நேரக் கட்சிகள்!

இராசாசி என எழுதத் தெரிந்த விக்கிரமசிங்கனுக்கு அணணா என்று எழுத மனம் வரவில்லையா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்


தேர்தல் நேரக் கட்சிகள்!



ஓவ்வொரு தேர்தலின் போதும், ஒன்றிரண்டு அரசியல் கட்சிகள் உதயமாவதும் அவற்றில் சில தங்களைத் தக்க வைத்துக் கொள்வதும் மற்றவை வந்த சுவடே தெரியாமல் காணாமல் போவதும் இந்திய அரசியலுக்கே உரித்தான தனித்துவம். இந்த விஷயத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல.1957-ல் நடந்த இரண்டாவது சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் அரங்கத்தில் சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக நுழைந்தபோது அடுத்த பத்தே வருடங்களில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியினரே கூடக் கனவு கண்டிருக்கமாட்டார்கள். அன்றைய முதல்வர் கு. காமராஜின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பிரஜா சோஷலிஸ்ட்டுகளும் தேர்தல் களத்தில் மோதினாலும் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.வின் வெற்றிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.1962-ம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டப் பேரவைத் தேர்தலில் பரபரப்பாக வலம் வந்த புதிய கட்சி ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி. இன்றைய பொருளாதார சீர்திருத்தம், தனியார்மயமாக்குதல் போன்ற கொள்கைகளை முன் வைத்து, காங்கிரஸ் கட்சியின் சோஷலிஸத்துக்கு மாற்றாக செயல்படப் போவதாக அறிவித்த சுதந்திராக் கட்சி, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. தி.மு.க.வின் அசுர வளர்ச்சி, காங்கிரஸô அல்லது தி.மு.க.வா என்கிற இருமுனைப் போட்டியை உருவாக்கியதாலோ என்னவோ மற்ற மாநிலங்களில் சுதந்திரா கட்சிக்குக் கிடைத்த வரவேற்பு தமிழகத்தில் கிடைக்கவில்லை.நான்காவது சட்டப் பேரவைத் தேர்தல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த துப்பாக்கிச் சூடு போன்ற பல பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் அமைந்தது. அதனால், புதிய கட்சி எதுவும் களத்தில் இறங்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் அங்கம் வகித்தன.1971-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸô அல்லது காமராஜ் போன்ற மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸô என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.மக்களுக்குப் பழக்கமான காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் காளை சின்னம் முடக்கப்பட்டு, ஸ்தாபன காங்கிரஸ் "ராட்டை' சின்னத்திலும், இந்திரா காங்கிரஸ் "பசுவும் கன்றும்' சின்னத்திலும் போட்டியிட்டன.ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் ஒரு புறமும், இந்திரா காங்கிரஸýடன் கைகோத்து தி.மு.க. மறுபுறமும் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலின் இன்னொரு முக்கியமான அம்சம் - சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு மு. கருணாநிதி தலைமையில் தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் இது என்பது.மக்களவைத் தொகுதியில் மட்டும் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜை வீழ்த்துவது குறிக்கோள் என்பதால் போட்டியிடாமல் திமுகவை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது இந்திரா காங்கிரஸ். அதனால், 184 இடங்களில் திமுக வெற்றிபெற்று மிருகபலத்துடன் ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு இந்த அளவுக்கு இடங்களைக் கைப்பற்றி எந்தக் கட்சியும் பதவிக்கு வரவில்லை. 1972-ல் எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகு நடந்த முதல் தேர்தல் ஆறாவது சட்டப் பேரவைத் தேர்தல். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் எம்.ஜி.ஆரின் தலைமையிலான கட்சி மக்களைச் சந்தித்தது. இதற்கு முன்பே திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கு நடந்த இடைத்தேர்தலிலும், கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் எம்ஜிஆரின் புதிய கட்சி மாபெரும் வெற்றியடைந்திருந்தது.1977-ல் நடந்த இந்தத் தேர்தலில்தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் இடையே நடந்த பலப்பரீட்சையில் மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது 1977 தேர்தலில்தான்.ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி மற்றும் சோஷலிஸ்டுகள் ஒன்றாக இணைந்து ஜனதா கட்சி என்கிற பெயரில் களத்தில் இறங்கினர். அகில இந்திய அளவில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் தாக்கம் குறைவாகத்தான் இருந்தது. காமராஜின் மறைவுக்குப்பிறகு நடந்த முதல் தேர்தல். ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பெரும்பான்மையான தலைவர்கள் இந்திரா காங்கிரஸýடன் இணைந்துவிட்ட பிறகு நடந்த தேர்தல் என்பதும் இதன் தனிச்சிறப்பு. 1979 நாடாளுமன்றத் தோல்வியைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டதால் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்பந்தம்தான் 1980 சட்டப் பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில் தி.மு.க.வும் இந்திரா காங்கிரஸும் கைகோத்து நின்றபோது, அந்தப் பலமான கூட்டணியை எதிர்கொள்ள எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்டதுதான் 16 கட்சிக் கூட்டணி.இந்தத் தேர்தலில் களம் கண்ட இரண்டு மாநிலக் கட்சிகள் - ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து வந்த குமரி அனந்தனின் தலைமையிலான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸýம், இந்திரா காங்கிரஸிலிருந்து வெளியேறிய பழ. நெடுமாறனால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸýம். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது. தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும் அதற்குப் பிறகு காணாமல் போய்விட்டது.எட்டாவது சட்டப் பேரவைத் தேர்தலை ஒரு அனுதாப அலைத் தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தியின் படுகொலையும், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவும் பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க. மற்றும் இந்திரா காங்கிரஸýக்கு சாதகமாக அமைந்தது. 1984-ல் நடந்த இந்தத் தேர்தலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லாமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.(தொடர்ச்சி நாளை)

சனி, 23 அக்டோபர், 2010

natpu மீபத்தில் மாவட்டவாரியாகத் தன் கட்சியினரைச் சந்தித்துவரும் தி.மு.க தலைவரான கருணாநிதியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தமிழக அரசியலை இயல்பாகக் கவனித்து வரும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். அதில் அவர் தொடர்ந்து வலியுறுத்தும் விஷயம் - உள்கட்சி ஒற்றுமை. அப்படியொரு ஒற்றுமை இருந்தால் ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் தி.மு.க வை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
தன்னைக் குறைத்து மதிப்பிட்டு சர்வே ஒன்று ஒரு நாளிதழில் வெளிவந்ததற்காக அந்த நிறுவனம் பட்டபாடு தமிழகத்திற்குத் தெரிந்த ஒன்றுதான். உட்கட்சிப் பிரச்சினை எந்தெந்த விதங்களில் எல்லாம் தி.மு.க வில் வெடித்திருக்கிறது என்பதும் பலருக்கும் தெரியும். தி.மு.க வில் இருக்கும் மோதல்கள் குறித்த பத்திரிகைச் செய்திகள் - அ.தி.மு.க ஆட்சியின்போது வெளிவந்த தகவல்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான். முதல்வர் கருணாநிதி இப்போதும் அடிக்கடி உட்கட்சி ' ஒற்றுமை' பற்றிக் குறிப்பிடக் காரணம் என்ன?  இல்லாமல் போனதால்தானே!
natpu நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தபோது காங்கிரசுக்கு தி.மு.க மீது இருந்த மதிப்பு இப்போதும் இருக்கிறதா? சோனியாவைத் தேடிப்போய்ப் பார்க்க வேண்டிய நிலையில்தான் மூத்த தலைவரான கருணாநிதியும் இருக்கிறார். தமிழகத்திற்கு வரும் ராகுல்காந்தி கருணாநிதியைப் பார்ப்பதைத் தவிர்க்கும்போது இவர் மட்டும் விமான நிலையத்திற்குப் போய் சோனியாவைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
காரணம் - ஒன்று தான். மத்திய அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்தும் விதத்தில் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். அந்தத் துறை சார்ந்த ராசா மீது குற்றச்சாட்டுகள் வலுத்துக் கொண்டிருக்கும் நிலையில் - காங்கிரசுக்கு அதனால் ஏற்படும் தர்மசங்கடத்தையும் தி.மு.க உணர்ந்திருக்கிறது. ராசா மீது எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்று தி.மு.க தொடர்ந்து வற்புறுத்தினாரும் அது காங்கிரஸ்.தி.மு.க உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.
காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - ஊழலை மட்டும் ஒரு காரணமாக வைத்து தி.மு.க அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால் - காங்கிரசுக்கும் அதே குற்றச்சாட்டு பொருந்தாதா என்று தி.மு.க பதிலுக்குக் கேள்வி எழுப்பலாம். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்படும் தொகை - ஒரு லட்சம் கோடியைத் தொடுமளவுக்குப் போயிருப்பதும், தமிழ்நாட்டு ஊடகங்களில் அது குறித்த செய்திகள் அவ்வளவாக வராத நிலையில் வட இந்திய ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் தலையாயப் பிரச்சினையாக இன்று வரை அடிபட்டுக் கொண்டிருப்பதும் காங்கிரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியத்தை - அதனால் ஏற்படும் இழப்பைப் பொருட்படுத்தாமல் யோசிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரசுக்கு உருவாகியிருக்கிறது.
natpu வாரிசு மோதலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் தற்போது தி.மு.க வின் அடையாளமாக அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி பெரியார், அண்ணா கொள்கைகளை நினைவூட்டிப் பேசியிருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது மட்டும் அவர்களைப் பேசியாக வேண்டிய அவசியம் தி.மு.க வுக்கு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி நாங்கள் என்கிற அடையாளத்தையும் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது.
பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா என்றும் நாளைக்கு ஒரு வேளை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்த நூலகத்தை இடித்துத் தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா என்றும் உடன்பிறப்புகளை உசுப்புகிற விதத்தில் கேட்டிருக்கிறார். தி.மு.க ஆட்சியில் உருவான வள்ளுவர் கோட்டமும்,  பூம்புகார் உள்ளிட்டவற்றை ஆட்சி மாறியதும்natpu இடித்தத் தள்ளிவிட்டார்களா? அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறவில்லையா?  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தான் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்கள் அமல்படுத்தப்பட்டு அவை இன்று இயல்பாகி விட வில்லையா?
அப்புறம் ஏன் தி.மு.க தொண்டர்களைத் தூண்டும்விதத்தில் இதையெல்லாம் இடித்து விடுவார்கள் என்கிற அச்சத்தை ஏன் கருணாநிதி பரப்ப வேண்டும்? இலங்கையில் சிங்களர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த மாதிரி தமிழகத்தில் நிகழும் என்று எதை வைத்து முடிவுக்கு வந்து ஏன் வீண் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்? காங்கிரசில் முதலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் தி.மு.கவுக்குப் புதிராகத் தெரிந்தார். பிறகு ராகுல் தெரிந்தார். இப்போது சோனியா உட்படப் பலரும் புதிராகத் தெரிகிறார்கள். அதனால் திராவிட நாடு பற்றிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 'இந்த ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வருமானால் நிச்சயமாக அண்ணா கனவாகி விடுவார்' என்றும் அவரைப் பேச வைத்திருக்கிறது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிற தொல். திருமாவளவன் காங்கிரசுக்கு எதிரான கண்டனத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் மீதான பாசமும் தி.மு.கவுக்கு இப்போது வந்திருக்கிறது. தேர்தல் என்னென்ன உளவியல் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்துகிறது!
காங்கிரஸ் ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணிக்குப் போகிறதா என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் - காங்கிரஸ் தயவில் தி.மு.க இருப்பதைப் போன்ற தோற்றம் தற்போது ஏற்பட்டிருப்பதை காங்கிரஸ் ஒருவேளை விரும்பலாம். தி.மு.கவுடன் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதிகள் என்பதை வற்புறுத்த இந்தச் சந்தர்ப்பத்தை அது பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
natpu அ.தி.மு.க வெவ்வேறு இடங்களில் கூட்டத்தைக் கூட்டுவது ஒருபுறம் தி.மு.கவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் இன்னொருபுறம் காங்கிரசின் மௌனமும், புதிரான செயல்பாடுகளும் பதற்றத்தை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அதனால் தான் எப்போதோ கீழே போட்டுவிட்ட ஆயுதங்களான திராவிட நாடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, பெரியார், அண்ணா கொள்கைகளை எல்லாம் திரும்பவும் கையில் எடுக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இவற்றைச் சொன்னால் இவற்றின் அர்த்தத்தை உணர்ந்தவர்கள் தி.மு.கவில் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போது தி.மு.கவில் உள்ள இளைய தலைமுறைக்கு தி.மு.கவில் எந்தக் கோஷ்டியில் இருந்தால் பாதுகாப்பு, வருமானம் வர வாய்ப்பு என்கிற யதார்த்தமான விஷயங்களே நிறைந்திருக்கும் போது - தி.மு.கவில் பழைய கொள்கைகளைத் தூசி தட்டிப் பேசினால் இன்றைய தி.மு.கவில் இருக்கும் இளைய தலைமுறைக்கும் அது புதிராகவே இருக்கும்.


Comments

 Ilakkuvanar Thiruvalluvan said:
கட்சி நிலைப்பாட்டிற்கு எவை தேவையோ அவற்றைக் கலைஞர் பேசியுள்ளார். எனினும் அவற்றிற்கான காரணங்களை யூகி நன்கு அலசி ஆராய்ந்துள்ளார். இருப்பினும் காங். யாரும் சீண்டாத கட்சியாக மாறுவதே தமிழ் நலனுக்கு நல்லது. ஆனால் முதன்மைக் கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு இழந்து வரும் அக்கட்சிக்கு மதிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். தாங்கள் உண்டாக்கும் மாயையில் தாங்களே சிக்குவதால் எக்கட்சியை வேரறுக்க வேண்டுமோ அக்கட்சியையே அடைக்கலம் புகும் அவல நிலைக்குச் செல்கிறார்கள். கொள்கையும் நேர்மையும் தமிழ், தமிழர் நலனும் இருப்பின் அந்த நிலை வராது. இதனை உணர்த்துகிறது கட்டுரை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தலில் திமுக போட்டி ஏன்? - கருணாநிதி விளக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் தலைவரும், முத
சென்னை, அக்.22: பெரியார், அண்ணா தந்த திராவிடக் கொள்கைகளைக்  காப்பாற்றுவதற்காகத்தான் தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறோமே தவிர, நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.   சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தி.மு.க.வினருடனான கலந்துரையாடல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியது:  இந்த ஆய்வுக் கூட்டம் நிர்வாகிகளைப் பேசச் செய்து வேடிக்கைப் பார்ப்பதற்காக நடைபெறவில்லை. தி.மு.கவை வலுப்படுத்துவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது;   தேர்தல் ஓட்டுகளுக்காக அல்ல. பெரியாரும், அண்ணாவும் இந்த இயக்கத்தை உருவாக்கி எங்கள் கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுகளைப் பெற்று, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியின் கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று நினைக்கும் யாரும் தி.மு.க.வில் இருக்கும் தகுதி படைத்தவர்கள் அல்ல. இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிபட இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் பயன்படுத்திக்கொள்கிறோம். ஒருவேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம்.  இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதில் வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் தி.மு.க. வரும் தேர்தலிலே வெற்றி பெற முடியாது. தி.மு.க.வினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் நிலைக்கும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும். தி.மு.க. ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தால் தமிழகத்திலே மூட நம்பிக்கை படர்ந்துவிடும். தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கருதுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.  இந்த இயக்கத்தைக் காப்பாற்றினால்தான், இதனுடைய மூலாதாரக் கொள்கைகள் காப்பாற்றப்படும். பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு விழா,  நூற்றாண்டு நூலகம் ஆகியவை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒரு வேளை - அது நடக்காது, நடக்கக் கூடாது - தி.மு.க. மாற்றப்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்து தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு, தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா? கோவை தமிழ்ச் செம்மொழி மாநாடு, தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு விழா ஆகியவை தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால்தான் நடைபெற்றன. இந்த ஆட்சி போய்விட்டால், இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார். பெரியார் கடந்த காலமாகிவிடுவார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

2 / 2 ) பெரியாரின் தமிழ்நாடு தமிழர்க்கே கொள்கை கைவிடப்பட்ட பின்பு அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கையும் குடும்ப ஆட்சி எதிர்ப்பும் கைவிடப்பட்ட பின்பு அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பயனில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இடைத் தேர்தலில் பரப்புரை செய்த பெருந்தலைவர் காமராசரைச் சாடியவர் அறிஞர் அண்ணா. ஈழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற பொழுதும் கொலைகாரர்களுடன் கூட்டணி வைத்து பதவி அறுவடை செய்து கொண்டு அவர்களின் இலட்சியத்தைக் காப்பாற்றத்தான் ஆட்சி என்றால் எள்ளி நகையாட மாடடார்களா? ஆட்சிச் சுவையை இழக்க ஆயத்தமாக இல்லை ; எனவேதான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஒத்துக் கொள்ளலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (முன் தொடர்ச்சி 1/2 காண்க)
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:15:00 AM
1 / 2 ) தமிழ் என்னும் சொல்லின் சிதைவுரு திராவிடம் என்னும் பொருளில் திராவிடம் கையாளப்படவில்லை. தமிழ்க்குடும்ப இனம் என்னும் பொருளில் திராவிடம் எனத் தமிழ் நாட்டில் மட்டும் குறிக்கப்படுகிறது. அந்த வகையில் பிற தென் மாநிலங்களில் திராவிட உணர்வு ஊட்டப்படவில்லை. அவர்கள் அயல் மொழியான ஆரியத்தைப் போற்றுகிறார்கள். மூலத்தாய் மொழியான தமிழைப் பகை மொழியாகக் கருதுகிறார்கள். தமிழினத்தையும் பகை இனமாகவே கருதுகிறார்கள. அவ்வாறிருக்க திராவிடக் கொள்கையைக் காப்பாற்றத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழர்க்கே தலைமை என்னும் கொள்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கேற்ப தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தொடர்ச்சி 2/2 காண்க)
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:14:00 AM
தமிழ் என்னும் சொல்லின் சிதைவுரு திராவிடம் என்னும் பொருளில் திராவிடம் கையாளப்படவில்லை. தமிழ்க்குடும்ப இனம் என்னும் பொருளில் திராவிடம் எனத் தமிழ் நாட்டில் மட்டும் குறிக்கப்படுகிறது. அந்த வகையில் பிற தென் மாநிலங்களில் திராவிட உணர்வு ஊட்டப்படவில்லை. அவர்கள் அயல் மொழியான ஆரியத்தைப் போற்றுகிறார்கள். மூலத்தாய் மொழியான தமிழைப் பகை மொழியாகக் கருதுகிறார்கள். தமிழினத்தையும் பகை இனமாகவே கருதுகிறார்கள. அவ்வாறிருக்க திராவிடக் கொள்கையைக் காப்பாற்றத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழர்க்கே தலைமை என்னும் கொள்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கேற்ப தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரியாரின் தமிழ்நாடு தமிழர்க்கே கொள்கை கைவிடப்பட்ட பின்பு அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கையும் குடும்ப ஆட்சி எதிர்ப்பும் கைவிடப்பட்ட பின்பு அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பயனில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இடைத் தேர்தலில் பரப்புரை செய்த பெருந்தலைவர் காமராசரைச் சாடியவர் அறிஞர் அண்ணா. ஈழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற பொழுதும் கொலைகாரர்களுடன் கூட்டணி வைத்து
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:11:00 AM
Please Karuna, stop your noncence talking, How many year still keep taking same thing, You can not further defend your bad politics in the mane of graet Periyar & Anana Are you tamilan, Just think youreslf, where yuu wend hide our own tamil people when they have been dying in EElam We know your ugly politics,when your comfortable in place of Cheife mnister you will forhget everthing except your famiy but when you are come to crticalthen sart think about Anans, Periayar, Tamilan Sory this is enough, we are counting your life to be end
By Anbu
10/23/2010 4:07:00 AM
என்ன இது முக கொள்கை அது இது என்று பேசுகிரார். முகவின் திராவிடம், தமிழ், தீண்டாமை போராட்டம் எல்லாம் தன் குடும்பத்திர்க்கு தமிழ் நாட்டிர்க்கு அல்ல.
By Appan
10/23/2010 4:01:00 AM
In terms of corruption Karuna is way, way better than Jeya. Atleast his family is enjoying and also facing the public in elections. What about the human waste eating pigs Mahadevan, Venkatesh, Divakaran, Kaliyaperumal, Sasi, Ravanan,Ilavarashi, etc, etc. What did they do either for TN or ADMK party, except born in Sasi's family. rajasji you can go and eat these pigs waste, but do not try to make other people to eat it.
By PA Valarmathi
10/23/2010 3:18:00 AM
யோவ் ...என்னைய்யா உளறுற !....என்ன ஒரு கால் ஜெயலலிதா வந்து விட்டால் !...புரட்சித் தலைவி முதல் அடி வெற்றிகரமாக கோவையில் எடுத்துவைத்தார்கள்! உனக்கு நுரையீரல் அவுட் ஆயிடுச்சு ! திருச்சியிலே இரண்டாவது அடி எடுத்து வைத்தார்கள் ! உனது கல்லீரல் காணாமல் போய் விட்டது ! மதுரையிலே மூன்றாவது அடி எடுத்து வைத்தார்கள் ! உனது கிட்னி சட்னியாயிருச்சு ! வரும் தேர்தலோடு உனது இதயம்.....இல்லை நீ பேரறிஞர் அண்ணாவிடமிருந்து ஏமாற்றி திருடிய இதயம் விடை பெற்றுக்கொள்ளும் ! தமிழ் தமிழ் இனம் என்று இனி எந்த தமிழனையும் நீ ஏமாற்ற முடியாது ! அண்ணா ...பெரியார் என்று சொல்லும் தகுதியினை நீ என்றோ இழந்து விட்டாய் ! தமிழ் இனத்தை அடிமைப் படுத்தி சுரண்டிக் கொண்டிருக்கும் உன்னை....கட்சியினரை வஞ்சித்து உன் குடும்பத்தினர்கள் அனைவரையும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்து தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்ச வாய்ப்பளித்த உன்னை.... அண்ணாவின் ஆன்மா ..பெரியாரின் ஆன்மா மன்னிக்காது ! இதனை ஒவ்வொரு தமிழர்களும் நன்கு அறிவர் ! உனது அரசியல் மோசடி இனி எடுபடாது ! குடும்பத்துடன்..கொள்ளைக் கூட்டத்துடன் நேரத்தோடு விடைபெறு !!! @ rajasji
By tamilatchi
10/23/2010 2:39:00 AM
Shut up your mouth. Just tell the people of Tamil Nadu why the hell you went to Delhi, immediately after the two parilament elections? To get posting for Anna and Periyar family people? All the political parties now a days contesting the elections to win it and then loot the people. Nobody today is working for people. Just for themselves and for their family. Just accept that fact and shut up.
By PA Valarmathi
10/23/2010 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தற்போதைய செய்திகள்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே லட்சியம்: ஜெயலலிதா

First Published : 14 Sep 2010 12:28:55 PM IST


சென்னை, செப்.14: மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களுக்கு நல்ல விலை உண்டு என்ற நிலையை உருவாக்கிய முதல்வர் கருணாநிதி அரசை வீ்ட்டுக்கு அனுப்புவதே அண்ணா 102-வது பிறந்தநாளில் ஏற்கும் சபதம் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:     எண்ணிலடங்கா திறமைகளை தன்னில் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் 102-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்வு கொள்கிறோம்.    மொழி, இலக்கியம், இனம், பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்காக தன் வாழ்நாளை மிச்சமில்லாமல் அர்ப்பணித்தவர் அண்ணா.   1967-ல் அரியணையில் அமர்ந்த அடுத்த ஆண்டே 1968-ல் உலகத் தமிழ் மாநாட்டை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்வோடு பங்குபெறும் வண்ணம் நடத்திக் காட்டினார்.      ஸ்ரீ, ஸ்ரீமான், ஸ்ரீமதி, குமாரி என்னும் வடமொழிச் சொற்களுக்கு முற்றாக விடை கொடுத்து, திரு, திருமதி, செல்வி என்னும் அழகு தமிழ்ச் சொற்களை அரசு மடல்களில், ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.    சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினார். இந்த மாநிலத்திற்கு `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி, சங்கரலிங்கனார் போன்ற தியாகிகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தார்.    மாற்றுக் கருத்து கொண்டோரை நாராச நடையில் பேசி, நான், நீ என்று விளிக்கும் நாலாந்தரப் பேச்சாளராய் இல்லாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று எதிர்ப்போரின் கருத்தையும் ஏற்று பரிசீலிக்கும் பரந்த உள்ளம் கொண்டவராக அண்ணா திகழ்ந்தார்.    இப்படி, பெருந்தன்மைகளின் உச்சமாய் வாழ்ந்த அண்ணாவின் அரசியல் குருகுலத்தில் பண்பாடு கற்றுக்கொண்ட நல்ல மாணவராக எம்.ஜி.ஆர். உருவானார்.    தனது மாட்சிமை மிக்க தலைவரான பெரியாரின்பால் அன்பு கொண்டிருந்த அண்ணா, எப்படி தலைவர் இருக்கையை அவருக்காகவே கடைசி வரையிலும் ஒதுக்கி வைத்திருந்தாரோ, அது போலவே எம்.ஜி.ஆரும் தலைவர் இருக்கையை தான் நிரப்பிக் கொள்ளாமல், பொதுச் செயலாளர் பதவியையே ஏற்றுக் கொண்டார்.    அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியிலேயே பெரியாருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இருக்கையை இன்றும் ஆக்கிரமித்துக் கொள்ளாமல், அவர்கள் வழியிலேயே நானும் அரசியல் பணிகளை செய்து வருகிறேன்.    ஒழுக்கம் போதிக்கும் உயரிய பள்ளியிலும் மோசமான மாணவர்கள் நுழைந்துவிடுவது போல, அண்ணாவின் அரசியல் குருகுலத்தில் பயின்றாலும், அவரது விருப்பத்திற்கு மாறாக அரியணையை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, பேரறிஞர் அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இருக்கையையும் தனதாக்கி, ஆக்கிரமித்து; கழகத்தை குடும்பமாக நேசிக்க வேண்டும் என்ற அண்ணாவின் பண்பாட்டை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு, தனது கோபாலபுரக் குடும்பத்தையே கட்சியிலும், அரசியலிலும், அதிகாரங்களிலும் திணித்து, ஆக்கிரமித்து; அண்ணாவின் விருப்பத்திற்கு மாறாக நடந்து வருபவர் கருணாநிதி என்பதை இத்தருணத்தில் நினைத்து வருத்தப்பட்டுத் தான் ஆக வேண்டும்.    இன்று அண்ணா உயிரோடு இருந்திருந்தால், "ஏ மிகத் தாழ்ந்த தமிழகமே" என்று விளித்து, வருந்தியிருப்பார்.    எழுத்தில் அடக்கிட முடியா அவலங்களால் தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை, அதிகார வெறிபிடித்த கருணாநிதி குடும்பத்திடமிருந்து மீட்பது ஒன்று தான் அண்ணாவுக்கு நாம் சேர்க்கும் பெருமையாகும்.  அதற்காக இந்நாளில் உறுதி ஏற்போம்.    கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்னும் பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரத்திற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி; `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பதை, "என் குடும்பத்தின் சிரிப்பில் குதூகலத்தைக் காண்போம்" என்று உருமாற்றி; `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்பதை, "மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு நல்ல விலை உண்டு" என்ற நிலையை உருவாக்கி; அநாகரீக அரசியலின் உச்சம் தொட்டுவிட்ட கருணாநிதி அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே, அண்ணா 102-ஆவது பிறந்த நாளில் நாம் ஏற்கும் சபதமாக இருந்திடல் வேண்டும் என ஜெயலலிதா, அண்ணா பிறந்தநாளில் செய்திவிடுத்துள்ளார்.
கருத்துக்கள்

சமற்கிருதச் சொற்களுக்கு விடை கொடுத்து அழகு தமிழ்ச் சொறகளைப் பயன்படுத்த ஆவன செய்த பேரறிஞர் அண்ணாவின் தமிழ் உள்ளம் ஜெய என்று தொடங்கும் பெயர்களையே சூட்டிய பொழுது நினைவிற்கு வராதது ஏனோ? அடடா! பதவியி்ல் இருக்கும் போது தமிழை மறப்பதும் பதவியில் இல்லாத போது தமிழை நினைப்பதும்தான் தமிழக அரசியல்வாதிகளின் பழக்கமாயிற்றே! கிரந்த எழுத்தை நீக்கிப் பெயரைக் குறிப்பிடும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தினால் இந்த அறிக்கையை நம்பலாம் 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/14/2010 5:26:00 PM
By pasumpon.somasundaram 9/14/2010 2:36:00 PM Dai pitchakkara naye, onnudiya peru, ooru elutha payama irukkada? by Mukkulathu Singam.
By Pasumpon, Pandia Nadu
9/14/2010 5:08:00 PM
You re cent percent correct madam...Karunanidhi only damaged all the good habits and rituals of Tamilnadu..He only introduced drinking habits...He only introduced corruption in govt offices...He only introduced cheap and ugly platform speaking culture...He only introduced cheating cheap politics...NOW HE ONLY INTRODUCED MONEY FOR VOTE SCHEME...TOTALLY HE NOT ONLY RULED THE STATE, BUT ALSO RUINED THE STATE...HE RUNS THE PARTY ONLY FOR HIS FAMILY...NOT FOR PUBLIC...HE SHOULD BE THROWN OUT...GOD BLESS U MADAM...
By Divya Tamil
9/14/2010 5:08:00 PM
DMK will come back to power with thumping majority. Wait and see.
By samela
9/14/2010 4:52:00 PM
தீய சக்தி ....அய்யா தீயசக்தி...அந்த திருக்குவள தீயசக்தி கருணாநிதிக்குள்ள அடக்கம் ஆயிருச்சு !..அய்யா அடக்கம் ஆயிருச்சு !! மக்கள் சக்தி எங்க புரட்சித் தலைவியோடு சேர்ந்திருச்சு! ..அய்யா ..சேர்ந்திருச்சு!!...தெய்வ சக்தி நம்ம எல்லோரையும் வழிநடத்திருச்சு!.....அய்யா வழி நடத்திருச்சு !! கருவாடு மீனாகாது! :::அந்தக் கருணாநிதியாலும் இனி எழும்ப முடியாது !!! அவன் ஆஆஆஆஆ ட்சி இனி வராது ! அவன் க்க்கக்க்க்காட்சி இனி கிடையாது !!அவன் கட்சியும் இனி தேறாது !!! @ rajasji
By rajasji
9/14/2010 4:50:00 PM
Tamil Nadu public is determined to not to allow a comeback by Jaya. They are absolutely clear about this. They are ready to whitewash Jaya and Co. Then where is the question of sending DMK to home?
By samela
9/14/2010 4:49:00 PM
Karunanidhi must go for the single reason of his family oriented greediness.There is no doubt about it. But, JJ is poorly qualified to replace him. Infact, Tamilnadu needs a Govt. run by some other dispensation than these dravidian parties.Tamilnadu is tired of the rules by these Dravidian parties. The big question is whether there is any salvation.
By ankandasamy
9/14/2010 4:17:00 PM
நாடும் விடை கொடுக்கிறது ! உன்னை வீடும் போ போ என்கிறது !! காடும் வா வா என்கிறது!!! இதுதாண்டா வாழ்க்கை ! இனி ஏண்டா உனக்கு வேட்க்கை !!! புரட்சித் தலைவியின் கைகளில் சுழல்கிறது சாட்டை ! வாங்கி கட்டிக்கொள்ளாமல் கீழே இறங்கடா கிழட்டு சொட்டை !!! @ .....!
By தமிழச்சி தங்கபாண்டியன்
9/14/2010 3:59:00 PM
the most atrocious ,selfish,jeya wants to become CM once again so that sasi gang once again loot tamilnadu.this lady never mind welfare of people once she become CM.karunanidhi is thousand times better than this lady.this double tongued lady will start hitler rule once she is back in power.if she is interested in tamilnadu let her first appear in cases against her and entertain jail.
By arumugam
9/14/2010 3:54:00 PM
ethanai kashtangal. nallatchi tharubavarkaka kaathirukirom.
By su. sathiya arunachalam
9/14/2010 3:51:00 PM
ஜெவிற்கு அன்ன நினைவு திடிரென்று ஏன்? அண்ணாவின் கொள்கை ஒன்றாவது தெரியுமா.. . எழுதி கொடுத்தவர்கள் ஜெவை பற்றி தெரியாமல் இப்படி எழுதி உள்ளனர்.
By ssk
9/14/2010 3:44:00 PM
யாரு அறிக்கை எழுதி கொடுத்தாங்க? அண்ணா அரசியல் இருந்தப்பா நீங்க கவர்ச்சி நடனம் தெருவிலே ஆடிக்கிட்டு இருந்தீங்க. யாரு எதை பேசனும்ங்கற யோக்கியதையே இல்லாமல் பெரிய அரசியல்வாதி போல அண்ணாவை பற்றி அறிக்கை விடுறீங்க.. காலம்செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி...உன்னை சொல்லி குற்றமில்லை...@rajashi
By rajaasji
9/14/2010 3:41:00 PM
DMK SHOULD IMMEDIATELY GO OUT OF TAMILNADU!!! DMK SHOULD GO OUT!! DMK GO OUT! ஆணவமும், அராஜகமும் அழிவுக்கு அறிகுறி. DMK கட்சிக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. 234 தொகுதியும் உங்களுக்கு கிடைக்குமளவுக்கு, அப்பிடி தமிழ்நாட்டுக்கு நீங்கள் என்னதான் செய்தீர்கள். பெட்ரோல் விலை தெரியுமா. சமையல் பொருட்கள் விலை தெரியுமா. பஸ் கட்டணம் என்னனு தெரியுமா. தயவு செய்து தமிழ் நாட்டுக்கு விடுதலை கொடுங்கள். தமிழ் மக்களை வாழ விடுங்கள். நீங்க ஏதோ "தீவ" விலைக்கு வாங்கி உள்ளீர்களாமே. அங்க போய் நீங்களும், உங்க குடும்பமும் அடுத்த 5 வருடத்திற்கு நல்ல ரெஸ்ட் எடுங்க. எங்களை வாழ விடுங்கள். அதுதான் NEENGA உங்க குடும்பமும் தமிழ் நாட்டுக்கு செய்யும் பரிகாரம். - இப்படிக்கு வேதனயுடன் தமிழக மக்கள்....
By kumar
9/14/2010 3:38:00 PM
, ஸ்ரீமதி, குமாரி என்னும் வடமொழிச் சொற்களுக்கு முற்றாக விடை கொடுத்து, திரு, திருமதி, செல்வி என்னும் அழகு தமிழ்ச் ..,,,,,,, எங்கள் தங்கதலைவியெ இந்த கடகேரியல் நீங்க ஏதில் இருக்கிறீகள்
By இந்திய நேசன்
9/14/2010 3:34:00 PM
அவர்கள் கொடாவில் நரந்தரமாக தங்கவைக்காமல் இருந்தால் சரி
By Ganapathy, Trichy
9/14/2010 3:04:00 PM
JJ! you can get back ur power. but you should not let ur party people to loot again.you should give respect to your party people. do not be proudy. we want good politician to rule tamil nadhu. but everyone comes to power and they start to loot the country. if you come to power again, do give importance to agriculture, good road, mosquitoe free environment, no bribe in the government sector, no power cut,etc. good administration we want from you. your first term was very bad, but your second term was little bit ok. so please do service to people this time. also one more request, do not go to kodanadu again.it is spoiling your name and fame. hope this message reaches you.
By ram
9/14/2010 2:48:00 PM
டேய் நாதாரி பசும்பொன் பாண்டிய நாடு,நீ ஜெயா கையில் குடும்பத்தோடு செருப்படி வாங்க ஆசை படு அதெற்கு யாரும் பொறுப்பாக முடியாது.
By pasumpon.somasundaram
9/14/2010 2:36:00 PM
JAYA’S (ACHIVEMENTS ) ATROCITIES 26.Make her party men MUTHUSAMY, CHINASAMY, PONNUSAMY as “dummy piece 27.people like SELVA GANAPATHY, ANITHA can’t bear these beats and escaped 28. SENGOTIYAN, O.PANNEER and others are still tolarate these beats for hoping win (can loot money) atleast this time REPUTATIONS 28.COMMEND ABOUT SONIA’S PERSONALITY TO RAJIV GANDHI “he could have choosen jaya instead of her” like that 29.Gave complaint against Chenna Reddy,pulling her saris 30.Gave complaint against Duraimurugan pulling her saris
By yuvaraj
9/14/2010 2:26:00 PM
JAYA’S (ACHIVEMENTS ) ATROCITIES FAMOUS CHEAPAL BEATS 20.Put VAIKO in jail (supporting ela tamils) torturing him this end to that end in old polish van (Now he believes , jaya will save Ela tamils &will not put him in jail this time) 21.Call all Communist leaders “Address less people”( during last election ),now they adjust with jaya to Save country from America, 22.Put her all time loyalist SANKARACHARI in jail (Dispute in money sharing at tamilnadu hospital) 23.Beat her Auditor and long time loyalist with her chappal. 24.Beat her Lawyer and long time ideologist MR. JYOTHI with her chapel 25.Beat her long time Admirer S.VE SEKAR with chapel ( He believed once, JAYA is God woman to save all Brahmins. His game is over now ) People waiting in this list are “Chao” Ramasamy, Dinamani Vaithiyalingam, EVKS.Elango, Pala. KaruppusamyAnd Subramaniya Swamy (This fellow enjoys more beats like this in order to save our country) 26.Make her party men MUTHUSAMY, CHINASAMY, PO
By yuvaraj
9/14/2010 2:24:00 PM
JAYA’S (ACHIVEMENTS ) ATROCITIES PEOPLE WELFARE SCHME 15.Arrenge Jolly trip to all Temple Elephants(Govt. money) 16.Arrenge free meals at all temples for her well being (Govt.money) 17.Stop final drop of Cauvery water by shouting S.M. Krishna with bad words. TO COUNTER ENEMIES 18.To control Subramaniya Swami ,send women cadres to lift saris in front of him (Hope that fellow enjoyed .Still he is not controled. ) 19.Call all opposition leaders in third rated language—yae karunanithi! Thiruttu rail karunanithi! Thirukkuvalai theeya sakthi!
By yuvaraj
9/14/2010 2:23:00 PM
JAYA’S (ACHIVEMENTS ) ATROCITIES FOR YOUNGSTERS 7.Stops all types of appointments in Govt. services 8.Implement TRB system for Teacher Appointment, that too (Temporary) contract-5year basis, 4000-4500 consolidate salary FOR EMPLOYEES 9.During the Transport employee’s Bonus strike, suspend every one, not permit to rejoin duty even after their apology letter 10.For Govt. employees ,cancel the leave surrender pay. 12.Ask the school Teachers, come by 8.00 am.and send them 6.00pm without any purpose 11.Punish them with ESMA / TESMA rule 12.Ask central Govt. how many years going to pay pension to Retired people? Like that 13.Stop giving their Graduvity and other settlements 14. If Party man who ask questions, got chapel beat by herself or her girl friend .They allowed only to play Drums after her all Idiotic speechs
By yuvaraj
9/14/2010 2:21:00 PM
JAYA’S (ACHIVEMENTS ) ATROCITIES 1.She took severe action against “Conversion of Religion “ 2.Gave full support to “ Kara Sevai” during Babar Masjid Demolition 3.She is the only political leader supports the atrocities of Gujarat CM .Modi 4.Proudly announced that she is the only politician to oppose LTTE, and wants his Arrest/ Killing 5.Looting Govt. Money as Gifts 6.Illegaly purchase and Import Luxurious Car in the name of Binomee
By yuvaraj
9/14/2010 2:20:00 PM
திருக்குவளை தீயசக்தியாம் கயவன் கருணாநிதி & co வை வீட்டுக்கு அனுப்புவதே ஒவ்வொரு தமிழனின் லட்சியமாகும் ! இந்த அறப் போராட்டத்திற்கு உலக தமிழ் இனம் புரட்சித் தலைவிக்கு இதய பூர்வமான ஆதரவினை அளிக்கிறது !! ஒழிக திருக்குவளை தீயசக்தியாம் கயவன் கருணாநிதி & CO !!! வாழ்க டாக்டர் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா !!! வளர்க தமிழ் இனம் !!! வெல்க புனித சக்தியுடன் மக்கள் சக்தி !!! @ rajasji
By rajasji
9/14/2010 2:14:00 PM
dear madam, we read your statement and we agree with your points. Our CM is having family and lot of children, but you don't have any family & children, in this case why you keep lot of money, big bunglows (kodanat),many properties and totally currpted in the past. our past cm kamaraj is o.k, but you give statement that you are so innocent? and others are very, very bad.
By pugazhendhi
9/14/2010 2:12:00 PM
Hi, Dravidan, do you have any matter to publish in Dinamani? We know you have nothing...
By Pasumpon, Pandia Nadu
9/14/2010 1:40:00 PM
Emba Sengagam, Nangalum Enga kudumpathoda Tamil Nattulathamba irukkom. Nee engalayum serthu sollatha.
By Pasumpon, Pandia Nadu
9/14/2010 1:37:00 PM
WHY DINAMANI??? GIVING MORE IMPORTANT TO JJ WASTE YOUR SPACE
By dravidan
9/14/2010 1:37:00 PM
OH JAYA, NEE EVVALAVU KARANAM POTTALUM, KOOKKURALITTU OPPARI VAITHALUM - MAKKAL UN AANAVA PETCHAI ORU POTHUM SEVI SAIKKA MATTARHAL. INIMELUM KATHI PERAYOJANAM ILLAI - UNNAL NICHAYAM AATCHI KATTILIL AMARA MUDIYATHU. THIS IS THE DEVINE LAW OF TAMIL NADU PEOPLE. KODANADU ESTATETUKKU POI HAAYA VOIVEDY, ITHUTHAN UNAKKU NALLATHU.
By SENBAGAM
9/14/2010 1:25:00 PM
unnai pattri engalukku theriyath kannu. sasi kala, vengtesh,ennum ethiny peru kannu un thodathil.
By AL. Arumugam , S'pore
9/14/2010 1:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *