செவ்வாய், 5 ஏப்ரல், 2011

Parties of Election Seasons: dinamani article: தேர்தல் நேரக் கட்சிகள்!

இராசாசி என எழுதத் தெரிந்த விக்கிரமசிங்கனுக்கு அணணா என்று எழுத மனம் வரவில்லையா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்


தேர்தல் நேரக் கட்சிகள்!



ஓவ்வொரு தேர்தலின் போதும், ஒன்றிரண்டு அரசியல் கட்சிகள் உதயமாவதும் அவற்றில் சில தங்களைத் தக்க வைத்துக் கொள்வதும் மற்றவை வந்த சுவடே தெரியாமல் காணாமல் போவதும் இந்திய அரசியலுக்கே உரித்தான தனித்துவம். இந்த விஷயத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல.1957-ல் நடந்த இரண்டாவது சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் அரங்கத்தில் சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக நுழைந்தபோது அடுத்த பத்தே வருடங்களில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியினரே கூடக் கனவு கண்டிருக்கமாட்டார்கள். அன்றைய முதல்வர் கு. காமராஜின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பிரஜா சோஷலிஸ்ட்டுகளும் தேர்தல் களத்தில் மோதினாலும் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.வின் வெற்றிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.1962-ம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டப் பேரவைத் தேர்தலில் பரபரப்பாக வலம் வந்த புதிய கட்சி ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி. இன்றைய பொருளாதார சீர்திருத்தம், தனியார்மயமாக்குதல் போன்ற கொள்கைகளை முன் வைத்து, காங்கிரஸ் கட்சியின் சோஷலிஸத்துக்கு மாற்றாக செயல்படப் போவதாக அறிவித்த சுதந்திராக் கட்சி, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. தி.மு.க.வின் அசுர வளர்ச்சி, காங்கிரஸô அல்லது தி.மு.க.வா என்கிற இருமுனைப் போட்டியை உருவாக்கியதாலோ என்னவோ மற்ற மாநிலங்களில் சுதந்திரா கட்சிக்குக் கிடைத்த வரவேற்பு தமிழகத்தில் கிடைக்கவில்லை.நான்காவது சட்டப் பேரவைத் தேர்தல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த துப்பாக்கிச் சூடு போன்ற பல பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் அமைந்தது. அதனால், புதிய கட்சி எதுவும் களத்தில் இறங்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் அங்கம் வகித்தன.1971-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸô அல்லது காமராஜ் போன்ற மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸô என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.மக்களுக்குப் பழக்கமான காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் காளை சின்னம் முடக்கப்பட்டு, ஸ்தாபன காங்கிரஸ் "ராட்டை' சின்னத்திலும், இந்திரா காங்கிரஸ் "பசுவும் கன்றும்' சின்னத்திலும் போட்டியிட்டன.ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் ஒரு புறமும், இந்திரா காங்கிரஸýடன் கைகோத்து தி.மு.க. மறுபுறமும் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலின் இன்னொரு முக்கியமான அம்சம் - சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு மு. கருணாநிதி தலைமையில் தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் இது என்பது.மக்களவைத் தொகுதியில் மட்டும் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜை வீழ்த்துவது குறிக்கோள் என்பதால் போட்டியிடாமல் திமுகவை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது இந்திரா காங்கிரஸ். அதனால், 184 இடங்களில் திமுக வெற்றிபெற்று மிருகபலத்துடன் ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு இந்த அளவுக்கு இடங்களைக் கைப்பற்றி எந்தக் கட்சியும் பதவிக்கு வரவில்லை. 1972-ல் எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகு நடந்த முதல் தேர்தல் ஆறாவது சட்டப் பேரவைத் தேர்தல். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் எம்.ஜி.ஆரின் தலைமையிலான கட்சி மக்களைச் சந்தித்தது. இதற்கு முன்பே திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கு நடந்த இடைத்தேர்தலிலும், கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் எம்ஜிஆரின் புதிய கட்சி மாபெரும் வெற்றியடைந்திருந்தது.1977-ல் நடந்த இந்தத் தேர்தலில்தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் இடையே நடந்த பலப்பரீட்சையில் மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது 1977 தேர்தலில்தான்.ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி மற்றும் சோஷலிஸ்டுகள் ஒன்றாக இணைந்து ஜனதா கட்சி என்கிற பெயரில் களத்தில் இறங்கினர். அகில இந்திய அளவில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் தாக்கம் குறைவாகத்தான் இருந்தது. காமராஜின் மறைவுக்குப்பிறகு நடந்த முதல் தேர்தல். ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பெரும்பான்மையான தலைவர்கள் இந்திரா காங்கிரஸýடன் இணைந்துவிட்ட பிறகு நடந்த தேர்தல் என்பதும் இதன் தனிச்சிறப்பு. 1979 நாடாளுமன்றத் தோல்வியைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டதால் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்பந்தம்தான் 1980 சட்டப் பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில் தி.மு.க.வும் இந்திரா காங்கிரஸும் கைகோத்து நின்றபோது, அந்தப் பலமான கூட்டணியை எதிர்கொள்ள எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்டதுதான் 16 கட்சிக் கூட்டணி.இந்தத் தேர்தலில் களம் கண்ட இரண்டு மாநிலக் கட்சிகள் - ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து வந்த குமரி அனந்தனின் தலைமையிலான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸýம், இந்திரா காங்கிரஸிலிருந்து வெளியேறிய பழ. நெடுமாறனால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸýம். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது. தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும் அதற்குப் பிறகு காணாமல் போய்விட்டது.எட்டாவது சட்டப் பேரவைத் தேர்தலை ஒரு அனுதாப அலைத் தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தியின் படுகொலையும், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவும் பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க. மற்றும் இந்திரா காங்கிரஸýக்கு சாதகமாக அமைந்தது. 1984-ல் நடந்த இந்தத் தேர்தலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லாமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.(தொடர்ச்சி நாளை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக