hindu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
hindu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 அக்டோபர், 2012

Understanding BJP’s politics vis a vis Sri Lanka

Understanding BJP’s politics vis a vis Sri Lanka

[TamilNet, Sunday, 30 September 2012, 10:32 GMT]
Despite MDMK leader Vaiko’s protests against the invitation of Mahinda Rajapaksa to inaugurate a Buddhist university in BJP ruled Madhya Pradesh alleging that the Sri Lankan government was responsible for the destruction and desecration of hundreds of Hindu temples in the course of its genocidal war and the military occupation of the Eezham Tamils’ homeland, no senior leader of India’s biggest Hindu nationalist party condemned Rajapaksa’s presence at the event. On the contrary, the Madhya Pradesh Chief Minister has appealed for stronger cultural ties with Sri Lanka. In a hard-talk show on Win TV's Urimaik-kural hosted by C.R. Baskaran earlier this month, Tamil Nadu activists Srinivasa Rao and P. Abdul Samad, general secretary of the TMMK, argued that when it came to the Eezham Tamils, there was no difference in the policies of the opposition BJP or the ruling Congress.



Shivraj Singh Chouhan, the BJP CM of the Indian state of Madhya Pradesh, has appealed to Sri Lanka to facilitate the construction of a temple for Sita at Divurumpola, which is near Colombo. Some myths created around the Hindu epic Ramayana believe that Sita, the wife of the Hindu god Rama, had undergone the ‘fire test’ to prove her chastity at this location. Mr. Chouhan further promised that the funds for the construction of this temple would be collected by the government of Madhya Pradesh.

Likewise, the BJP leader has also promised that Madhya Pradesh would provide subsidies to those pilgrims from the state who wanted to travel to sites in the island associated with the Ramayana.

Most of the claimed Ramayana sites in the island that are now ‘marketed‘ to guillible Indian and Malaysian tourists are based on recently created myths and false etymology. One such example is Sita-eliya in Nuwara Eliya, told to be the place where Sita was kept imprisoned. The name of the place actually stands for the cold stream that flows in the locality.

Interestingly, renowned Indian archaeologists like the late Professor H. D. Sankalia has said that the Lanka of the Ramayana epic was not today's island of Sri Lanka, but a river islet in Madhya Pradesh.

BJP’s ideology, Hindu nationalism, is derived from the ideology of ‘Hindutva’ that was first expounded by Vinayak Damodar Savarkar in the 1920s. This was adopted as the political philosophy of the Rashtriya Swayamsewak Sangh (RSS), a militant Hindu nationalist organization, which is also the parent organization of the BJP.

In short, Hindutva believes that Hindus in the subcontinent are a nation and that the Indian government should privilege Hindus in its structure and function. However, quite some Indian academics allege that the Hindutva project only privileges the image of the fair-skinned, Hindi speaking, north Indian male as the ideal prototype. Hindutva parties have also been accused of organizing riots against Muslims and other minorities in the past decades.

BJP gained political ascendancy after the demolition of the Babri Masjid in Ayodhya by Hindutva outfits in December 1992. The argument behind the demolition was that the Masjid was built over a Ram temple that had been razed to the ground in the past.

In the interview to Needhiyin Kural, Mr. Samad referred to the hypocritical attitude of the BJP that bases its politics on temples demolished in the past, but remained silent over the destruction of the Eezham Tamils’ temples by successive Sinhala chauvinist regimes.

One of the historical personalities greatly venerated by the Hindu nationalists is Chatrapati Shivaji, a chieftain in 17th century Maharashtra who rebelled against the oppressive Delhi-centric regime of Aurangazeb, and rose to the status of sovereign by carving a separate kingdom. His military tactics included, but not restricted to, guerrilla warfare. Chatrapati Shivaji is considered my many scholars to be one of the historical pioneers of armed struggle through guerrilla warfare in the subcontinent. The RSS, and by extension, the BJP lay claim his legacy.

Neither the RSS nor the BJP recognize the achievements of the armed struggle of the Eezham Tamils, led by the LTTE, choosing instead to side with the oppressive Sinhala nationalist forces in the island, giving legitimacy to the latter and dubbing the former as ‘terrorism’.

Even after the Eezham Tamils’ armed struggle for a sovereign state of Tamil Eelam was crushed through an internationally abetted genocidal war, in which Congress ruled India played no small a role, the opposition BJP is also united with the Congress party in denying the Eezham Tamils a just political solution, while providing red-carpet treatment to the genocide-accused Mahinda Rajapaksa.

Activist circles in Tamil Nadu also claim that RSS backed Hindutva forces in the state are trying to work to dilute popular sentiments among the Tamils there so as to make the support for Tamil Eelam blunt in the state. While Subramaniam Swamy and Cho Ramasamy are the most obvious examples of this, the other ‘soft’ types are equally malicious, they claim.

It is also alleged that the BJP, much like the Congress, is no different when it comes to India’s foreign policy in that they place short-term economic gains over long-term strategic interests. The excessive dependence of both the parties on Indian and foreign corporates is cited as the reason for their compromise on both the moral and strategic fronts.

The other accusation of Saiva scholars in Tamil Nadu is that the destruction by Sri Lankan forces of Saivite temples and local places of worship in the Tamil homeland correspond to the RSS’s desire to eliminate or assimilate all those forms of native religion that do not conform to its version of Hinduism.

Tamil Nadu activists further question whether the Hindu nationalist BJP giving legitimacy to the Sinhala-Buddhist chauvinist regime is a matter of convenience or the natural coming together of ideological bedfellows.

Related Articles:
21.09.12   Protests intensify against Rajapaksa’s presence in India, Co..
20.09.12   Vaiko stopped at Madhya Pradesh border
19.09.12   Self-immolation protestor dies, anti-Rajapaksa agitations in..
17.09.12   Tamil Nadu activist attempts self-immolation to protest Raja..
07.09.12   Congress, BJP, religiously sanctify genocide
05.09.12   BJP denies inviting Rajapaksa as Tamil leaders announce prot..
04.09.12   ‘BJP legitimizes Sri Lanka’s culture of genocide through Bud..

ஞாயிறு, 17 ஜூன், 2012

நேருவின் ஆதிவாசி மனைவி....?

நேருவின் ஆதிவாசி மனைவி....?

-கி. இலக்குவன்
பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன்னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண்ணான புத்னி மெஜான் மிகவும்மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆதிவாசிப்பெண்களின்பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன், வரவேற்பு நிகழ்ச்சியில் பஙகேற்ற அவரிடம் நேருவுக்கு மாலையணிவித்து வரவேற்கும் கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அவரை, நேரு விழா மேடைக்கு அழைத்துச்சென்றார்.
சுரன்


கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் பரபரப்புடன் தனது கிராமமான கர்பானாவுக்குத்திரும்பிய அந்த ஆதிவாசிப்பெண்ணிற்குபேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அப்பாவிப்பெண்ணின் எதிர்காலமே இருளில் தள்ளப்பட்டது. நீ நேருவுக்கு மாலை அணிவித்ததால் நடைமுறையில் உனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டதாகப் பொருள் என்று அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர்.

அடுத்தநாள் ஊர்ப்பெரியவர்கள் நடத்திய கூட்டத்தில் அவள் நேருவின் மனைவியாகிவிட்டாள் என்றுதீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதனால் அந்த கிராமத்தைச்சேர்ந்தஎவரையும் திருமணம் செய்து கொள்ளும் தகுதியையும்அவள் இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிவாசிப்பெண்ணான அவள், சந்தல் இனத்தைச்சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அந்த கிராமத்திலிருந்தே விலக்கி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. 


இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமூகப்புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும்என்று அஞ்சிய அவளது குடும்பத்தார், அவளை கைவிட்டுவிட்டனர். அனாதையாக்கப்பட்டஅவளுக்குக் குடிக்கத்தண்ணீர் அளிப்பதற்குக்கூட எவரும் முன்வரவில்லை.

பஞ்சட் அணைக்கட்டுமானப் பிரதேசத்துக்கு திரும்பியஅவளுக்கு சுதிர் தத்தா என்றஒருவர் அடைக்கலம் அளித்தார் .கணவன் -மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. 1962ம் ஆண்டில்அவளது வேலையும் பறிபோய்விட்டது. சிறு சிறு வேலைகளை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தாள். 23ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தியை சந்தித்து தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தாள். நேருவின் பேரனின் தயவினால் அவளுக்கு வேலை திரும்பவும் கிடைத்தது.


இதன் மூலம் எனது வயிற்றுப்பசி நீங்கியது என்ற போதிலும் தான்பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறவில்லையே என்ற வேதனையுடனேயே வாழ்ந்துவிட்டு கடந்த ஆண்டில் அந்த அப்பாவிப்பெண் மரணமடைந்தார். நல்ல எண்ணத்துடன்
செய்யப்பட்ட நேருவின் செயல் இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்.

 ‘தி இந்து’  நன்றி : http://suransukumaran.blogspot.in/2012/06/blog-post_9867.html

வெள்ளி, 16 மார்ச், 2012

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

[TamilNet, Thursday, 15 March 2012, 06:04 GMT]
Activists of Delhi Tamil Students’ Union, Democratic Students Union, Students for Resistance and other common students raised slogans against N. Ram accusing him of being a ‘media fascist’ and ‘a stooge of Rajapaksa’ at a public meeting in JNU after his reply to a question on The Hindu’s role in whitewashing the Sri Lankan state genocide of the Eezham Tamils, wherein he had extensively blamed the LTTE. The meeting on ‘Paid news and media ethics’ was organized at JNU on Wednesday by the Student’s Federation of India, which is the students wing of the CPI(M). The fact that N.Ram and The Hindu have unethically manipulated news to cover up the war crimes of Colombo makes them complicit in the genocide committed on the Eezham Tamils, a Tamil Nadu research scholar in JNU told TamilNet.

Mr. Ram was talking about journalist coverage in India elections and during the US’ wars and on the theme of media ethics, referring greatly to Noam Chomsky’s Manufacturing Consent, a classic on understanding how news is manipulated and on editorial bias.

An activist of the DTSU raised a question on why Ram, who had talked about journalists being attacked in Palestine and Iraq, had nothing to say about media freedom and assault on journalists in Sri Lanka, including murder of Sinhala journalist Lasantha Wikramatunga.

When he has been silent about this, used his newspaper to support the genocidal war on the Eezham Tamils, called a visit to the IDP camps in Vavuniya an uplifting experience when they were reality in concentration camps, how could he talk about the ethics of journalism, the activist further asked.

As a reply, N. Ram had said that those who criticize the GoSL do not criticize the LTTE [an argument highlighted by Mahinda Rajapaksa too nowadays]. After criticizing the ‘ruthlessness’ of the LTTE in his reply, he added a line that had the GoSL committed excesses, he would criticize that too.

When an activist of the DSU observed that his bias was obvious in his reply itself, where he had criticized the LTTE for ten minutes, but had only one line to say about the GoSL, and whether this was his idea of media ethics, Ram fumbled for a response. At this, students in the audience remarked loudly that ‘this is why they gave you Sri Lanka Ratna’ and shouted ‘shame’.

Student organizations and common students then raised slogans calling him a ‘media fascist’ and a ‘stooge of Rajapaksa’.

“More than anyone else, N. Ram and The Hindu know what happened in Vanni was genocide. They had access to not just the highest rungs of power, but their reporters were also in the field, with the invading Sinhala army. The fact that they have unethically manipulated news to cover up all the war crimes which are now being exposed by outlets like Channel 4, makes them complicit in the genocide of the Eezham Tamils,” a DTSU activist in JNU told TamilNet.

Related Articles:
26.03.10   Coup in The Hindu means more than a family feud
16.10.08   Attack on media: freedom, arrogance and playing with the wil..

சனி, 17 செப்டம்பர், 2011

Periyar by Annaa: பெரியார் எப்படிப்பட்டவர்?

Blog post image #1
கல்லூரி காணாத கிழவர்!
அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாது கிளர்ச்சிக்காரர்!
பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!
யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!
கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லாதவர்!
தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!
ஆரிய மதம், கடவுள் எனும் மடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!
ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது! இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.
சாமான்ய மக்களின் - இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!
தேர்தலா . . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? தூ… அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுபவர்!
சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!
கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!
இவ்வளவு வயதாயிற்று - இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் - ஒரு சர் பட்டம் பெற்றாரா?
ஜெனீவா போனாரா அரசு செலவில்?
அமெரிக்கா போனாரா அரசாங்கத்தின் செலவில்?
எதைக் கண்டார்?
எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!
இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!
இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்? தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்! எப்படி?
எப்படி எனில், அவர் ஒரு மாயாவி! ஜால வேடிக்கைக்காரர்!
வேடிக்கை பேசாதே என்று கூறுவீர்! வேடிக்கையல்ல நாம் கூறுவது!
தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?
மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா, எப்படி? என்று கேட்பான்.
பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!
அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் - விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.
மனி மேலே மாசு! மடு மேலே பாசி! வயலிடையே களை!
தமிழர் - அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!
மாசு துடைத்திடுக - பாசி போக்கிடுக - களை நீக்குக - கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!
இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் - இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.
அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.
துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு சர் ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.
அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.
அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!
அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!
தமிழன் ஒரு நாட்டுச் சொந்தக்காரன்! தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!
இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!
ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.
இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.
எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!
எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!
அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!
அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!
-அறிஞர் அண்ணா( திராவிடநாடு - 03.06.1945)

வியாழன், 28 ஏப்ரல், 2011

views about the change of religion

திரு இலக்குவனார் கூறுவது சாலச்சிறந்த கருத்து. மத மாற்றம் சம நோக்கு சமுதாயத்தைப்படைக்காது. மனமாற்றமே இதனை சாதிக்க முடியும். மனமாற்றம் உடனடியாக ஏற்படாது. அனைவரும் தத்தம் ஆதி மதத்தில் இருப்பதே சிறப்பு. ஜாதி மத பேதமற்ற சமுதாயத்தை உறுவாக்க முனைந்துள்ளதாக கூறும் அரசே ஜாதி மத இன மொழி அடிப்படையில் சலுகைகளை அறிவிப்பது வெறும் ஓட்டு வங்கி அரசியலல்லவா? திரு இலக்குவனார் கூறும் ஈழ இஸ்லாமியர்கள் ஒரு மத மாற்றம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு மிகச சிறந்த உதாரணம். அறியாது செய்வது மடமை. அறிந்தே செய்வது கொடுமை. மடமை எது கொடுமை எது என்பதை சிந்தித்து உணர்ந்து செயல்படுவதே மக்களின் கடமை. இரா.நீல.வரதராஜன், புதுச்சேரி
By N.Varadharajan
4/4/2010 5:30:00 AM
mr.Radha krishnan, are you in the foreign country? As though you know nothing about the christian community, you are speaking? Think of the problem that happenned in many places in christian community like Eraiyur, mandai kadu. Please go and ask the people in the villages what is real situation of the christian community. Don't bluff as you wish. Why don't you give equel status among the Hindu society? the people are same but you the politician encouraging to continue. what I say is give the benefit to all the low caste people with out seeing the religion or erradicate all the caste and help the all the poor people. Don't speak partially that only to the Hindu Dalit can be given assistence. Think when you speak. speak the justice.
By augi
4/4/2010 5:23:00 AM
பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப்பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/4/2010 4:39:00 AM
Iam a hindu and I was attracted to Christianity. I Loved a christian girl. Though I was a christian. Her parents ensured my caste is on par then only they agreed for the marriage. Tamil chritians, though they forsake the religion they are not giving up the religion. So descrimnation continues to them even after they convert ...
By ahuja
4/4/2010 3:50:00 AM
+++++++++++++++++++++++++++++++++
[By Ilakkuvanar Thiruvalluvan 4/4/2010 4:39:00 ] (அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும்). உங்கள் பல நல்ல கருத்துக்களை படித்தவன். பிறப்பின் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. உலகில் உள்ள எந்த மதத்தையும் எப்போதும் யார் வேண்டுமானாலும் போடலாம். கழற்றலாம். ஒரு மதத்தை ஒருவன் ஏற்று கொள்வதால், அவன் ஜாதி எப்படி மாறுகிறது, அவனுடைய சலுகைகள் ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விளக்கினால் புரிந்து கொள்வேன்.
By Kannan
4/4/2010 11:45:00 AM

என்ன ஒரு காமெடி ஆர் ஸ் ஸ் ஜாதியினை ஒழிக்கிறதா பிறகு ஏன் தாழ்த்தப்பட்டவர்களை கோவில் கருவறையில் அனுமதிப்பதில்லை சங்கராச்சரியரும் தழ்த்தப்பட்டவனும் ஒரே தட்டில் சாப்பிடுவார்களா பி ஜெ பி யில் பார்ப்பனரல்லாத எவரும் தலைவனாக முடிவதில்லை. அவரவர்கள் ஆதி மதத்தை பின்பற்றவேன்டும் என்றால் உங்களின் ஆதி மதம் எதுவென்று உன்களுக்கு தெரியுமா, இந்து மதம் என்றால் யாறாவது இந்து என்ற வார்த்தை வேதங்களில் எங்கு உள்ளது என்று காட்ட முடியுமா. சகோதரர் இலக்குவனார் அவர்கள் இந்து மத வெதங்களை படிதால் இஸ்லாத்தைப் பற்றி அறியலாம்.
By salal
4/4/2010 8:27:00 AM


திங்கள், 21 செப்டம்பர், 2009

உலக இந்துக்களைப் பாதுகாக்க மக்களவையில் தீர்மானம்:
அசோக் சிங்கால் கோரிக்கை



விஸ்வ இந்து இணையதள (வெப்) டிவியை தொடங்கி வைத்துப் பேசுகிறார் விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால்.
சென்னை, செப். 20: உலக இந்துக்களைப் பாதுகாக்க மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் "விஸ்வ இந்து டி.வி' என்ற இணையதள தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடக்கி வைத்து அசோக் சிங்கால் பேசியது: "உலகில் உள்ள மக்களில் மிகவும் பொறுமையான மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் படைத்தவர்கள் இந்துக்கள் மட்டுமே. ஒரு போதும் வன்முறையைக் கையில் எடுப்பதில்லை. இந்துக்கள் அகிம்சை வழியைக் கடைப்பிடிக்கின்றனர். இந்துக்களின் கருத்துகளை உலகிற்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதை இது போன்ற ஊடகங்கள் மூலம் கொண்டு செல்ல முடியும்' என்றார் அசோக் சிங்கால். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அசோக் சிங்கால் கூறியது: மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ""அத்வானி பதவி விலக வேண்டும்'' என்றோ, ""மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை'' என்றோ நான் கூறவில்லை. நான் பேசுவதை ஊடகங்கள் திரித்துக் கூறி வருகின்றன. அத்வானி பெரிய அரசியல்வாதி, பெரிய கட்சியை அவர் வழிநடத்திச் செல்கிறார். அவருக்கு நான் ஆலோசனை கூற ஒன்றும் இல்லை; ஏனென்றால் நான் அரசியல்வாதியல்ல. உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே மத்திய அரசின் உதவியுடன் மிகப் பெரிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதால் கங்கை நதிக்கு பாதிப்பு ஏற்படும். இதைக் கைவிட்டுவிட்டு அப்பகுதில் சிறிய, சிறிய அணைகளைக் கட்டலாம். அணை அமைய உள்ள இடத்தைப் பார்வையிட, வரும் அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் மடாதிபதிகள் அடங்கிய குழுவினர் செல்ல உள்ளோம். இது குறித்துப் பேசுவதற்குத்தான் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இலங்கையில் வாழும் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதே இலங்கை அரசின் குறிக்கோளாகும். அங்கு வாழ்ந்த 10 லட்சம் தமிழர்கள் ஏற்கனவே குடிபெயர்ந்து விட்டனர். மிஞ்சியுள்ள 3 லட்சம் தமிழர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதே நிலைதான் நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்துக்களுக்கு உள்ளது. இதை மத்திய அரசு உணர்ந்து உலக இந்துக்களைக் காக்கும் வகையில் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இப்போது சீனப்படை இந்தியாவில் அதிக அளவு ஊடுருவி வருகின்றது. இந்தியா கோழைத்தனமான நாடு அல்ல. ஆனால் ஒரு கோழைத்தனமான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனால்தான் 10 லட்சம் ராணுவ வீரர்கள் நம் கையில் இருந்தும் ஊடுருவல்கள் நடக்கின்றன என்றார் அசோக் சிங்கால். நிகழ்ச்சியில் அகில இந்திய செயல் தலைவர் வேதாந்தம், மாநிலத் தலைவர் ஆளவந்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

ஒப்புக்குச் சப்பாணித் தீர்மானத்தால் என்ன பயன்? உண்மையிலேயே தமிழர்களை இந்துக்களாகக் கருதினால் இன்னும் கடுமையாகப் போராடுங்கள். தமிழ் ஈழம் அமையட்டும்! நேபாளத்திற்காகத்தான் கூறுகின்றீர்கள் என்றால் வாயை மூடிக் ‌கொண்டு இருங்கள். ... ... இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2009 2:42:00 AM

punda mahane where where you when people died.

By kuppu
9/21/2009 1:00:00 AM

Appreciations to VHP for this. Appreciations to BJP in particular for pro-tamil, pro-minority, pro-social stand. Don't listen to extreme fundamental elements like RSS .. Congress and non-BJPs are ready to blame BJP for any violence, even by starting itself to fool people.

By keeran
9/21/2009 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *