விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 அக்டோபர், 2022

புதுதில்லியில் தமிழக இளைஞருக்குச் ‘சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர்’ விருது

 அகரமுதல


      04 October 2022      No Comment



  “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது

புதுதில்லியில் “உலகளாவிய பேரரசு நிகழ்வுகள்(Global Empire Events)” என்ற அமைப்பின் சார்பில்  “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது வழங்கும் விழா நடந்தது.

 இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூரைச் சேர்ந்த  அசன் முகம்மதுவுக்குச்  “சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

 இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசியக் கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணிக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களைச் சேர்ந்த முப்பத்து எண்மரில் சிறந்த ஒருவராக அசன் முகம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.  கல்வி, தொழில், பொதுத் தொண்டில் சிறந்து விளங்குபவர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

இந்த வருடம் தில்லி துவாரகாவில் உள்ள “கதிர்நீல/ரேடிசன் புளூ உறைவகத்தல் (Radisson blue hotel) இந்த விழா சிறந்த முறையில் நடந்தது.

விருது பெற்ற அசன் முகம்மது  தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றியை  உரித்தாக்கினார். முதன்மையாகத் தனது பொறியியல் கல்லூரிப் படிப்பைச் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தனது உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டுக் கல்லூரிக் கட்டணத்தைசங செலுத்த உதவிய  அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்.

 அவருடைய அருவினை/சாதனை மேன்மேலும் தொடரப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துகள் தெரிவிக்க :

+91 95001 68656

முதுவை இதாயத்து

துபாய், ஐ.அ.நா.

00971 50 51 96 433

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது

அகரமுதல

ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்!
ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
மேலும் பொருளாதார வசதியில்லாமல் மருத்துவம் பெறுபவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், அமீரகத்தில் பொது மன்னிப்புக் காலத்தில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோருக்கு நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவிகள் முதலான பல்வேறு பணிகளைத் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

இத்தகைய பணியில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவரை உற்சாகப்படுத்தும் வகையில் சார்சா இந்தியச் சங்கம் அவருக்கு இந்தச் சிறப்பு விருதை வழங்கிச்சிறப்பித்துள்ளது. இதனைப் புகழ்மிகு மலையாளப் பாடகர் அப்சல் வழங்கினார்.
மேலும் இவர் துபாயில் செயல்பட்டு வரும் தேவிப்பட்டிணம் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிக்கு: தொடர்பு எண் +971 52 947 1333
முதுவை இதாயத்து

சனி, 9 மார்ச், 2019

தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது, திருச்சிராப்பள்ளி

அகரமுதல

உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப்  போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது.
 தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை, இரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினரான தூய வளனார் கல்லூரி கலைமனைகளின் அதிபர் தந்தை இலியோனார்டு  முன்னிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 22 தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,  பள்ளி – கல்லூரி மாணாக்கர்களால் தமிழ்க் குரிசில் என்னும் சிறப்பாரம் (விருதுகளை) வழங்கப்பெற்றுப் பொன்னாடை அணிவித்து மலர்கள் தூவி போற்றப்பட்டனர்.
 பெயரில், கல்வியில், கையெழுத்தில், வழிப்பாட்டில், நிருவாகத்தில், ஆட்சியில், வணிகப் பெயர்ப் பலகையில், ஊர்திகளில், இல்லற வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில், எங்கும் எதிலும் தமிழே நிலைபெறச் செயல்படுவோம் என மாணவர்கள், சான்றோர் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றனர்.
நிறைவில் தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதியைப் (பலூன்) பறக்கவிட்டு, அன்னைத் தமிழ் வாழ்க! என்றும் தமிழாய் வாழ்வோம்! தாய் தமிழை தலை நிமிரச் செய்வோம்! என்றும் முழக்கங்கள் முழங்கினார்கள்.
இந்நிகழ்வை தமிழரண் மாணவன் விசயகுமார் ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றினார். தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தீபிகா, தமிழரண் மாணவி கவிதா இருவரும் தொகுத்து வழங்கினார்.
இறுதியில் தமிழரண் மாணவி அபிநயா நன்றி கூற இனிதே நிறைவுற்றது.
– நம்ம திருச்சி 09.03.2019

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

கவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

 அகரமுதல

 சிறந்த சிறுகதை நூலிற்காகக்

கவிஞர் மு.முருகேசிற்கு விருது

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசு எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது.
          திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளைஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி தோட்டத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா அரங்கில் செவ்வாய்க்கிழமை (தை 24 / பிப்.07) அன்று நடைபெற்றது.
           இவ்விழாவிற்குத்,  திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் ஆ.முருகநாதன்   தலைமையேற்றார். தமிழ்ச் சங்கச் செயலாளர் தணிக்கையாளர் ஏ.(உ)லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.
           2017-ஆம் ஆண்டு வெளியான  சிறந்த கதை நூலின் ஆசிரியர் கவிஞர் மு.முருகேசிற்கு உரூ.5000/-  விருதுத்தொகையைக் குன்றக்குடி ஆதினம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.  பாராட்டுச் சான்றிதழை வே.தொ.நு.(விஐடி) பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கினார்.

வியாழன், 17 மே, 2018

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

விருதினைப் பெற்ற சிங்களர் !

முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது.
சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது.
அந்தவகையில் சிங்களப் பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருதினையும், உயர் சட்டத்தரணி கரிகாலன் எசு. நவரத்தினம் அவர்களுக்கு  சா.சே.வே.செல்வநாயகம் (தந்தை செல்வா) விருதினையும், பேராசிரியர் சபாநாயகம் தேவநாயகம் அவர்களுக்கு மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருதினையும், செல்வி சி.பொன் அமுதரசன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசிலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை எதிர்த்துப் போராடிவரும் வாழ்நாள் உறுதிப்பாட்டுக்காக முனைவர் பிரையன் செனிவிரத்னா அவர்களுக்கு நெல்சன் மண்டேலா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
‘முனைவர் செனிவிரத்னா அவர்களைச் சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் முனைவர் பிரையன் செனிவிரத்னா( Dr Brian Senewiratne):
தமிழினத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்துத் தீரத்துடனும் பலநேரம் தனியொருவராகவும் முன்வந்து இயக்கம் நடத்தியுள்ளார். தம் சொந்தச் சிங்கள உடன்பிறப்புகளின் நல்வாழ்வில் எவ்வளவு அக்கறை கொண்டவரோ அதே அளவுக்குத் தமிழர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர் முனைவர் செனிவிரத்னா.
சிறிலங்காவில் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் உரிமைகளை ஒடுக்குவதையும், தமிழர்களின் சனநாயக அறப் போராட்டங்கள் அரசாங்க ஆதரவு பெற்ற இனவதைகளாலும் இராணுவப் படைகளாலும் அடக்கப்படுவதையும் கண்ட முனைவர் செனிவிரத்னா தமிழர்தம் உரிமைகளைக் காப்பதே வாழ்வில் தம் கடன் எனக் கொண்டார். அவர்கள் தாங்கள் பிறந்த தாய்நாட்டில் நிகர்மை, கண்ணியம், இடர்காப்புடனும், பாகுபாடின்றியும் வாழும் உரிமைக்காகப் போராடிச், சிங்கள இனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதே உரிமைகள், வாய்ப்பு வசதிகளை அவர்களும் துய்க்க வழி செய்வதைக் குறிக்கோளாக ஏற்றார்.
1972ஆம் ஆண்டு செனிவிரத்னா பெரதேனியா பலகலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக இருந்த நேரத்தில் அவருக்கு உறவுக்காரரான சிறிமா பண்டாரநாயக்காவின் தலைமையர் பதவிக் காலத்தில் சிங்களக் காடையர்கள் தமிழர்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வேட்டையாடித் துரத்திய போது அந்தத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் செனிவிரத்னா. அவரே நகைச்சுவையாகக் கூறியது போல் ‘இரவுச் சுற்று’ சென்று (மருத்துவ மனையில் தொகுதி தொகுதியாகப் பார்வையிடுவாரே, அப்படி) கண்டித் தெருக்களில் அலைந்து, செத்துக் கொண்டிருந்த தமிழர்களை அள்ளி வந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்தார்; உயிர்பிழைக்க முடியாதவர்களுக்குக் கண்ணியமான சாவு கிடைக்கச் செய்தார்.
இவரது தன்னளிப்பை அறிந்தேற்குமுகத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேலவை உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
கரிகாலன் எசு. நவரத்தினம் :
கரிகாலன் 1958ஆம் ஆண்டு தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய போது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தார். அவ்வாண்டில் ‘தனிச்சிங்களம் – சிறி’ எதிர்ப்புப் போராட்டத்தில் சா.சே.வே.செல்வநாயகம் (தந்தை செல்வா), வன்னியசிங்கம் போன்ற தமிழர் தலைவர்களோடு தளைப்படுத்தப்பட்டார். தமிழர்கள் அரசியல் காரணங்களுக்காகத் தளைப்படுத்தப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்ட முதல் போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
திரு கரிகாலன் தமிழர் போராட்டத்தில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டுத், தமிழர்களின் பெரும் அறப் போரட்டங்களில் முன்னணிப் பங்கு வகித்தார். இவற்றுள் ஒன்றாகிய 1961 அறப் போராட்டத்தில் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் அமைதிவழிப்பட்ட தமிழர் உரிமைக் கிளர்ச்சிகளால் மூன்று மாதக் காலம் அடியோடு முடங்கிப் போயிற்று. சிறிலங்கா அரசாங்கம் நெருக்கடிநிலை அறிவித்து, கரிகாலனையும், எஸ்.ஜே,வி. செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்ற தலைவர்களையும் தளைப்படுத்தியது. அவர்களனைவரும் தெற்கில் பனகொடா எனப்படும் இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டனர். இருபது வயதுக் கரிகாலன்தான் சிறைப்பட்டவர்களிலேயே இளையவர். ஆறு மாதக் காலச் சிறைக் காவலுக்குப் பின் மற்றத் தலைவர்களோடு அவரும் விடுதலை செய்யப்பட்டார்.
கரிகாலன் சட்டத் தரணியாக உறுதியெடுத்துப் பொறுப்பேற்ற போது அவரைப் பாராட்டி வாழ்த்த  சா. சே. வே. செல்வநாயகம் அவர்களே நேரில் உச்ச நீதிமன்றம் சென்றதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் சட்டத் தாரணி ஆன பிறகு செல்வநாயகம்  முதலான தமிழர் தலைவர்களோடு நெருக்கமாக இருந்து செயல்பட்டார். தமிழர்தம் கோரிக்கைகள் குறித்தான  முதன்மை ஆவணங்களும் உடன்படிக்கைகளும் விவாதித்து வரையும் பணியில் அவரே நேரில் சா. சே. வே. செல்வநாயகத்துடன் நேரம் செலவிட்டார்.
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்ட போது, அவர் அம்மாணவர்களின் முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவராகி, தமக்கு வரக் கூடிய  பேரிடர்பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு உதவினார். நீதிமன்றங்களில் பொன். சிவகுமாரன், தங்கத்துரை, குட்டிமணி  முதலான தமிழ் இளைஞர்களுக்காக வழக்குரைத்தார். தங்கத்துரை தமக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட போது, கரிகாலனைப் போற்றித் தன் மகனுக்குக் கரிகாலன் என்றே பெயரிட்டார். தங்கத்துரையும் குட்டிமணியும் மேலும் 52 தமிழ் அரசியல் கைதிகளும் 1983 தமிழர் இனவதையின் போது வெலிக்கடைச் சிறைக்குள் சிங்களச் சிறைக் காவலர்களின் துணையோடு சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நாதம் ஊடகசேவை
TGTE
+1-212- 290- 2925

வியாழன், 17 அக்டோபர், 2013

வன ஒளிப் படக் கலைஞர் விருது வென்ற சிறுவன்

வன ஒளிப் படக் கலைஞர் விருது வென்ற 14 அகவை இந்திய ச் சிறுவன்

First Published : 17 October 2013 01:54 PM IST






2013ஆம் ஆண்டுக்கான இளைஞர்  வனப் புகைப்படக் கலைஞர்களுக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த 14 வயது உதயன் ராவ் பவார் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் நேட்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் பிபிசி வோர்ல்ட் வைட்டுடன் இணைந்து வழங்கும் இந்த விருதினை, மத்தியப் பிரதேச மாநிலம் சம்பல் நதியில் ஒரு முதலை, தனது 11 குட்டிகளை தலையில் சுமந்தபடி செல்வதை எடுத்த உதயன் ரோ பவார் வென்றுள்ளார்.

சனி, 8 ஜூன், 2013

ஒசாமாவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட உத்தி கண்டுபிடித்த சிவநாதனுக்கு விருது

ஒசாமாவை க் கொல்ல மேற்கொள்ளப்பட்ட உத்தி கண்டுபிடித்த சிவநாதனுக்கு விருது




நியூயார்க் :சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.

அதன் பின், அதே பல்கலையில் பேராசியராக பணியாற்றிக் கொண்டே, நுண் இயற்பியலில் தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இவரது ஆராய்ச்சியின் பயனாக, மிகக்குறைந்த ஒளியையும் லட்சம் மடங்கு பெருக்கிக் காட்டும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். அமெரிக்க படையினர், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே, அமாவாசை இரவிலும், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா மீது தாக்குதல் நடத்தி அவனை கொன்றனர்.இதற்காக, இலங்கைத் தமிழரான சிவனாதனுக்கு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த உண்மையும், இந்த விருது வழங்கும் விழாவில் தான் வெளிப்பட்டது.




புதன், 22 மே, 2013

அமீரகத்தில் தமிழருக்கு விருது

அமீரகத்தில் தமிழருக்கு விருது

First Published : 21 May 2013 04:55 PM IST


அபுதாபியில் உள்ள கடல்சார்  போக்குவரத்து கழகம் ( Marine Transport Authority) என்கிற அமைப்பு தமிழரான கனகராசு என்பவருக்கு அதன் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் 2012ம் வருடம் சிறப்பாக பணியாற்றியதற்காக கௌரவித்து பரிசு வழங்கியுள்ளது 
இத் துறையில் பரிசைப் பெறும் முதல் தமிழர் இவர்.  தஞ்சை மாநிலத்தைச் சேர்ந்தவர் கனகராஜு.
கடல் சார் போக்குவரத்துக்கு கழகம் என்பது அனைத்து போக்குவரத்துக்கும்  தலைமையிடமாக அபுதாபியில் இயங்கி வருகிறது என்பதும், அதில் கனகராஜு 2006 முதல் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 மே, 2013

இலண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்

இலண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்மே 12,2013,17:45 IST


இலண்டன்: சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எச்டி., பட்டம் பெற்ற ராஜேந்திரகுமார், தற்போது லண்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆசிரியராக, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். மேலும் 2012ம் ஆண்டு கார்டிப் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி உள்ளது.
இவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
நான் சென்னை சைதாபேட்டை செயின்ட் மேரி பள்ளியில் துவக்க கல்வியும், ஆசான் நினைவு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளிக்கல்வியும் படித்தேன். 1988ல் எம்.ஏ. ( பொது நிர்வாகம்) முடித்த பிறகு, 1995ல் பி.எச்டி., பெற்றேன். தற்போது லண்டனில் ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இங்குள்ள கணக்காயர் அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன்.
பட்டம் முடித்தபிறகு சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய உறவினர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் என்பதால், நானும் ஆசிரியர் பணியையே தேர்வு செய்தேன். என்னுடைய ஆசிரியர்கள் பலரை, எனக்கு இந்த தொழிலில் முன்னோடிகளாக கருதுகிறேன்.
இந்த ஆசிரியத் துறையில், நாம் தொடர்ந்து நமது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரிட்டனில் கல்வி முறை, யதார்த்தமாக, நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது; ஆனால் இந்தியாவில், இதற்கு மாறாக, பாடங்களை மட்டும் அடிப்படையாக கொண்டதாக உள்ளது. நான் என்னுடைய பணி மூலம், என்னுடைய மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க விரும்புகிறேன். ஆசிரியர் என்ற முறையில், எனக்குத் தெரிந்த விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மாணவனாக இன்னும் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அறிவைத் தேடுவதென்பது, ஒரு தொடர்நிகழ்வாகும்; எனக்கு எல்லாம் தெரியும் என்று எவருமே கூறிக் கொள்ள முடியாது.
சென்னையில் இருந்தபோது சென்னை மட்டுமே உலகமாக எனக்குத் தோன்றியது; கிணற்றுத் தவளையாக இருக்கக்கூடாது என்பதை அப்புறம்தான் உணர்ந்து கொண்டேன். வாழ்‌க்க‌ை ஒருமுறைதான்; எனவே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உலக அனுபவத்தைப் பெற வேண்டும். இந்திய மாணவர்கள் ஒருமுறையாவது வெளிநாட்டில் படிகக வேண்டும்; அப்போதுதான், அவர்களுக்கு பன்னாட்டு கலாச்சாரங்கள் குறித்து தெரிந்து கொள்ள இயலும். எதிர்காலத்தில் சர்வதேச நிறுவனங்களில் பணி புரியநேரும்போது பயனுள்ளதாக இருக்கும்.
உலகின் எதிர்கால மாக்கெட், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்க நாடுகளிடையே உள்ளது. இதில் இந்தியா அடுத்து 20 ஆண்டுகளில் முக்கிய பங்காற்றும். சீனாவை விட இளைய சமுதாயத்தினர் அதிகம் இருப்பதால், இந்தியா உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும். அந்நிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்புள்ள இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே இருக்கும்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

இப்போது தவசியண்ணன்...

இப்போது தவசியண்ணன்...



பொதுவாக ஒரு படைப்பாளி எழுதும் எழுத்து வாசிக்கும் வாசகரை கொஞ்சமேனும் பாதித்தால்தான் அது எழுத்தாக எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இந்த கட்டுரை, படைப்பாளியான என்னையே இன்னும் உலுக்கியெடுத்து உள்ளத்தினுள் குமுறலையும், அழுகையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலிலைச் சார்ந்த மலர்வதி என்ற எளிய பெண் எழுதிய "தூப்புக்காரி' என்ற நாவலுக்கு, இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கக்கூடிய உயரிய விருதான சாகித்திய அகதமி விருது வழங்கப்பட இருப்பதை பற்றி, நிஜக்கதை பகுதியில் கடந்த வாரம் எழுதியிருந்தேன்.


படித்துவிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மலர்வதியினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும், உதவிகளையும் பகிர்ந்து கொண்டனர்.
அந்த கட்டுரைக்கான வாசகர் பின்னூட்டத்தில் ஒரு கடிதம்,


மலர்வதியை எல்லாரையும் போல நானும் பாராட்டுகிறேன், ஆனால் இவரை கொண்டாடும் அதே நேரத்தில், இவருக்கு முன்பாக கடந்த வருடம் "சேவல் கட்டு' என்ற நாவலை எழுதியதன் மூலம், இதே சாகித்திய விருதினைப்பெற்று, கொண்டாட ஆள் இல்லாமல் வறுமையிலும், கடுமையான நோயிலும் வாடும் உயர்ந்த இலக்கியவாதியும், என் ஒப்பற்ற நண்பருமான மா.தவசியைப்பற்றி இணையதளத்தில் எழுதுங்களேன், இதன்மூலம் நிஜக்கதை வாசகர்கள் அன்பால், ஆசியால், உதவியால், வாழ்த்துக்களால் அவர் முன்போல உத்வேகத்துடன் உயிர்த்து வருவார் என்று நம்புகிறேன், என்று சொல்லி தவசியின் தொடர்பு எண்ணை குறிப்பிட்டு இருந்தார்.
மதுரை உத்தங்குடியில் உள்ள அவரது எண்ணுடன் உடனடியாக தொடர்பு கொண்டேன். முதலில் போனை எடுத்த பேசிய பெண் , "அவர்ட்டாதான் பேசணுமா?'' என்றுகேட்டு ஒரு சில வினாடிகள் தாமதித்து, "இப்ப பேசுங்க'' என்று சொன்னார்.


"நா....ன்....த...வ...சி...பேசுறேன்'' என்று பேசிய குரலைக் கேட்டதுமே, அவர் சொல்லமுடியாத சோகத்திலும், வெல்லமுடியாத நோயிலும் இருப்பதை உணர்ந்தேன். ஒரு எழுத்தை உச்சரிப்பதற்கே நிறைய மூச்சு வாங்கியது, மிக, மிக சன்னமான குரலில் இளைக்க, இளைக்க அவர் ஒரு வார்த்தையை உச்சரிக்கவே ஒரு நிமிடம் எடுத்துக்கொண்ட சூழலை உணர்ந்த மாத்திரத்தில், அவரை மேற்கொண்டு சிரமப்படுத்த விரும்பாமல், "தவசி அண்ணே நீங்கள் எதுவும் பேச வேண்டாம், உங்களைப் பத்தி உங்கள் நண்பர் கிருஷ்ணமூர்த்தி எல்லா விவரமும் சொன்னார், நான் அதை சேகரித்து இந்த வாரமே கட்டுரையாக போட்டுவிடுகிறேன், கட்டுரை வந்தபிறகு தமிழிலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்ட உலகாளாவிய எம் வாசக பெருமக்கள் உங்களோடு நிச்சயம் பேசுவார்கள், உதவுவார்கள், ஆகவே எதற்கும் இனி கவலைப்படாதீர்கள், கட்டுரையை பிரசுரித்துவிட்டு பின் உங்களை தொடர்பு கொள்கிறேன், சரிங்காளண்ணே'' என்றதும் பழையபடி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு அதே களைப்புடனும், இளைப்புடனும் "ந..ன்..றி...ரொ..ம்..ப...ச..ந்..தோ...ஷ...ம்'' என்று சொல்லி முடித்தார்.
எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தவசி தொடர்பான விஷயங்களை சேகரித்தேன், பெரிதும் உதவியவர் அவரது ஒப்பற்ற நண்பர் ஏ.கிருஷ்ணமூர்த்திதான்.


மா.தவசி, முதுகுளத்தூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர், தமிழின் மீது நிறைய பற்று கொண்டவர், இதனால் எம்.ஏ., தமிழ் படித்தவர் எம்.பில் எனப்படும் ஆராய்ச்சி படிப்பையும் தமிழிலேயே செய்து முடித்தார்.
சமூக அவலங்களை தனது சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் வழியாக வெளிப்படுத்தியவர், எழுதுவதற்காக ரொம்பவே மெனக்கெடுவார், நிறைய தேடல் இருக்கும். மணைவி, இரண்டு குழந்தைகள் என்றான பிறகு குடும்பத்திற்காக பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியர் வேலையும், தனது ஆத்ம திருப்திக்காக எழுதுவதையும் வாழ்க்கையாகக் கொண்டார்.


புத்தகம் போட்டதன் மூலம் நிறைய கடன்பட்டவர், ஆனாலும் மக்களுக்கு இந்த விஷயங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக எவ்வளவு கடன் பட்டாலும் பரவாயில்லை என்று மீண்டும், மீண்டும் புத்தகம் போட்டவர்.
அப்படி அவர் எழுதியதுதான் "சேவல் கட்டு'. தென்மாநிலங்களில் நடைபெறும் சேவல் சண்டையை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான நாவலது. அந்த நாவலுக்குதான் கடந்த வருடம் சாகித்திய அகதமி விருது அறிவிக்கப்பட்டது. அநேகமாக இந்த விருது தமிழர் ஒருவர் வாங்கிய முதல் விருதாகவும் இருக்கவேண்டும். அப்போது அவருக்கு வயது 35தான்.


சிவ பக்தரான தவசி வத்திராயிருப்பு மலையில் உள்ள சுந்தரமகாலிங்கத்தை செருப்பு போடாமல் நடந்தே போய் தரிசித்து நன்றி தெரிவித்துவிட்டு திரும்பினார்.
இப்படி அவ்வளவு பெரிய மலையின் மீதே சாதாரணமாக ஏறி இறங்கியவர், இரண்டாவது நாள் தனது வீட்டின் வாசல் படிக்கட்டுகளைக்கூட தாண்டமுடியாமல் சிரமப்பட்டார், ஏதோ வயிற்றுக்குள் உருளுவது போல உணர்ந்தார். இன்னும் இரண்டு நாளில் விருது வாங்கப் போகவேண்டும் என்ற நிலையில் என்ன இது இடையூறு என்று ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார்.


அங்கு வயிற்கு வலிக்கான ஆரம்பகட்ட சிகிச்சையை கொடுத்துவிட்டு, மேற்கொண்டு சிகச்சைக்காக அவரது "திசு'வை சேசகரித்து சோதனை சாலைக்கு அனுப்பிவைத்தனர்.
ஒடிசா போய் விருது வாங்கிவிட்டு மகிழ்ச்சி பொங்க திரும்பியவருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி "லேப் ரிப்போர்ட்' என்ற பெயரில் காத்திருந்தது... ஆம், அவருக்கு புற்று நோய்., அதுவும் குணப்படுத்தவே முடியாத முற்றிய நிலையில்...

தவசி ரொம்பவே அதிர்ந்து போய்விட்டார்.


இந்த தகவலுக்காகவே காத்திருந்தது போல இரண்டொரு நாளில் நோயின் தீவிரம் உடலை குன்றச் செய்துவிட்டது, வேலைக்கு போக முடியாத அளவில் வீட்டில் படுக்கப்போட்டது.
வேலைக்கு போக முடியாததால் சரியான சம்பாதித்தியம் இல்லை, ஒரு பக்கம் குடும்பச் செலவு, இன்னொரு பக்கம் குழந்தைகள் படிப்புச் செலவு, இதை எல்லாவற்றையும் விட புற்று நோய்க்கான அதிகபட்ச சிகிச்சை செலவு.


சிகிச்சைக்கான செலவு அதிகமானதால் அலோபதி சிகிச்சைசயை விட்டுவிட்டு ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறினார், அந்த சிகிச்சையில் அவருக்கு தந்த மருந்தே நிறைய மாதுளையும், ஆப்பிள் பழமும் சாப்பிடுங்கள் என்பதுதான். அதற்கெல்லாம் வசதியில்லாதால் மாதுளையும், ஆப்பிளும் தன்னைப்பார்க்க வருபவர்கள் கொடுக்கும் போது சாப்பிடும் பொருளாகிவிட்டது.
நாளுக்கு நாள் நலிந்து கொண்டே போகும் தன்னால் அதிக நாட்கள் உயிருடன் இருக்கமுடியாது என்ற கவலையைவிட, தன்னை உறங்காவிடாமல் துரத்திக்கொண்டு இருக்கும் பல விஷயங்களை புத்தகமாக பதிவு செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான் இவருக்கு அதிகமாக இருந்தது.


இவ்வளவு நடந்தும் எழுத்தாளனுக்கு உரிய கம்பீரத்துடன் தனது இல்லாமையை, இயலாமையை வெளிப்படுத்துவதை முற்றிலுமாகவே தவிர்த்து வந்தார். யாரிடமும் கைநீட்டுவதை சுய கவுரவத்திற்கான இழுக்காகவே கருதினார்.
யாருக்கும் கிடைக்காத எழுத்து வரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, உங்கள் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் விஷயங்கள் புத்தகங்களாக மாறவேண்டும், இன்னும் பல புதிய படைப்புகள் தருவதற்காகவாவது, நீங்கள் உயிருடன் இருக்கவேண்டும், ஆகவே உங்களுக்கு தேவையான விஷயங்களை தினமலர் வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள், உங்களைப்பற்றி எழுதுவதற்கு மட்டும் சம்மதியுங்கள் என்ற சொல்லி அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவரது சம்மதம் பெற்றபிறகு என்னை தொடர்பு கொண்டார்.


பிறகு நான் தவசி அண்ணனிடம் பேசியபோதுதான் அவரது நிலமையின் தீவிரத்தை உணர்ந்தேன்.
உடனடியாக இந்த கட்டுரையை எழுதிவிட்டு வாசகர்கள் தொடர்புக்கு ஒரு போன் எண் போடவேண்டும், தவசியால் பேசமுடியாத நிலையில் யாருடைய போன் போடலாம் என்று கேட்பதற்காக அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.


ஒரு நீண்ட மவுனத்தை எடுத்துக்கொண்டார்,
மவுனத்திற்கு பிறகு விசும்பலும், கேவலும், அழுகையும், தொடர்ந்தது.


பின்னர் உடைந்த குரலுடன் அவர் சொன்னது,
தவசி அண்ணன் இறந்துட்டாரு .

- எல்.முருகராசு



வெள்ளி, 8 மார்ச், 2013

சாகித்ய அகடமி விருதுவாங்கப் பணமில்லா மலர்வதி

சாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி ப்  பெண்: விருது வாங்கச் செல்ல பணமில்லாததால் கவலை
நாகர்கோவில்: தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை கதையின் கருவாக கொண்டு உருவாக்கிய படைப்புக்கு, சாகித்ய அகடமி விருது வென்று, குமரி மாவட்ட இளம் பெண் மலர்வதி சாதனை படைத்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, வெள்ளிக்கோடு கிராமம். இங்கு அமைந்துள்ள, வியாகுல அன்னை ஆலயத்தை ஒட்டி, டூவீலர் செல்வதற்குக் கூட சிரமப்படும், ஒரு சிறிய ஒற்றையடி பாதை. அதன் உள்ளே, சற்று தூரம் நடந்து சென்றால், ஒரு முழுமை பெறாத வீடு. சுற்றுச் சுவர்கள் சிமென்ட்டின் அரவணைப்பை எதிர்பார்த்து காத்திருக்க, தரையும், மண் துகளுடன் ஏதோ ஒரு சோகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கு ஒரு ஏழை குடும்பம். அதுதான், படைப்பாளிகளை தற்போது திரும்பி பார்க்கச் செய்யும், மேரி புளோரா என்ற, மலர்வதியின் வீடு. இவர் அண்மையில், "தூப்புக்காரி' (ஸ்வீப்பர்) என்ற ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பலர் உதவியுடன் வெளியிட்ட, ஐந்தாவது நாவல். பல மூத்த எழுத்தாளர்கள் அளித்த ஊக்கத்திலும், பாராட்டிலும், தன், "தூப்புக்காரியை' சாகித்ய அகடமி விருதுக்காக அனுப்பி வைத்தார்.

ஒரு மாத பத்திரிகை அலுவலத்தில், சராசரி சம்பளத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இருந்து, ஒரு கடிதம் வந்தது. அதில், "தூப்புக்காரி நாவல் எழுதியதற்காக இந்த ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. வரும், 22ம் தேதி, கவுகாத்தியில் நடைபெறும் விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. செப்பு பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் விருதாக வழங்கப்படுகிறது. இப்படி உயரிய விருதை பெற்ற மேரி புளோரா என்ற மலர்வதி, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தந்தை எலியாஸ்; தாய் ரோணிக்கம்; அக்கா லதா; அண்ணன் ஸ்டீபன். இவர், தாயின் வயிற்றில் வளர்ந்த போதே, தந்தை, குடும்பத்தை தவிக்க விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து, சென்று விட்டார். தந்தை சென்ற பின், வறுமை சூழலில் தவித்த குடும்பத்துக்கு உதவியாக, தாய் ரோணிக்கத்துக்கு, வெள்ளிக்கோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், தூப்புக்காரி வேலை கொடுக்கப்பட்டது. வெறும், 30 ரூபாய் சம்பளத்தில், மூன்று பிள்ளைகளை வளர்க்க, ரோணிக்கம், மிகவும் சிரமப்பட்டார். தன் தாய், கழிவறைகள சுத்தம் செய்யும் போது, தாயின் முந்தானையை பிடித்து நடந்த மலர்வதிக்கு, அந்த துர்நாற்றமும், பினாயில் மணமும், இன்னும் மூக்கை விட்டு விலகவில்லை. அந்த வலியும், கடினமான அனுபவமும் தான், "தூப்புக்காரி' நாவலை உருவாக்க உதவியது என்கிறார் மலர்வதி. தற்போது மலர்வதிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. ஆனால், அந்த பாராட்டுக்களால் மலர்வதியால் மகிழ முடியவில்லை. காரணம், கவுகாத்தி செல்ல வேண்டும்; துணைக்கு, அண்ணன் செல்ல வேண்டும். மொழி பெயர்க்க, வேறு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். ரயிலில் சென்றால் மொழிபெயர்க்க செல்பவர், "10 நாள் செலவிட முடியாது' என்கிறார். விமானத்தில் செல்ல வேண்டும். அதற்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை வேண்டும். தன் ஒரு சவரன் செயினை, அடகு வைத்து விடலாம். அதற்கு மேல் பணத்துக்கு என்ன செய்வது என்ற யோசனையின் இறுக்கத்தில், மலர்வதி, வாடியுள்ளார்.