உயர்நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குரு பூசை, அரசியல், சாதி த் தலைவர்களின் வருகைக்குத் தடை: உயர்நீதிமன்றம் அறிவுரை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_802252.jpg

குரு பூசை, அரசியல், சாதி த் தலைவர்களின் வருகைக்கு த் தடை: உயர்நீதிமன்றம்  அறிவுரை
சென்னை: "குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டான் செவ்வாயல் கிராமத்தில், ஒண்டி வீரன் நினைவகத்துக்கு, தமிழ் புலிகள் இயக்கத்தினர், வாகனங்களில் செல்வதை தடுக்கக் கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். சிவகிரி தாலுகாவில், நெற்கட்டும்சேவல் கிராமத்தில், மாமன்னார் பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும், பூலித்தேவன் நினைவு அறக்கட்டளை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரம், பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவகத்துக்கு வருபவர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி, விஜயா என்பவர், மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: ஜாதி வர்ணம் பூசப்படாத ஒரே தலைவர், மகாத்மா காந்தி தான். மற்ற தலைவர்களை எல்லாம், எப்படியோ ஒரு வழியில், ஜாதி மற்றும் மத அடிப்படையில், அடையாளம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. மிகப் பெரிய தலைவர்கள் எல்லாம், ஜாதி தலைவர்களாக சுருக்கப்பட்டு விட்டனர். இதை, அந்த தலைவர்கள் உயிருடன் இருக்கும் போது, நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வழக்குகளைப் பொறுத்தவரை, தங்கள் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில், கொண்டாட்டங்களை நடத்துவதாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவதாகவும், வாடகை வாகனங்களில் வருவதற்கு, போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் தென் பகுதிகளைப் பொறுத்தவரை, ஜாதி ரீதியாக பதற்றம் கொண்டது. அசம்பாவிதம் ஏதும் நடந்தால், பதற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும், புதிய தலைவர்கள், கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர், "குரு பூஜை' என்கிறனர். இந்த விழாக்களை, அந்தந்த ஜாதியில் உள்ளவர்கள், தங்கள் பலத்தைக் காட்டும் விதத்தில் செயல்படுகினறனர். விடுதலைப் போராட்ட வீரர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்களை கவுரவிக்க வேண்டும் என்பதில், சந்தேகமில்லை. உண்மையில் பார்த்தால், அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை கவுரவிக்கவில்லை; ஜாதி அடிப்படையில் கவுரவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், பூலித்தேவன், ஒண்டிவீரன், வ.உ.சி., தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கன், கட்டபொம்மன், ராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தியாகி இமானுவேல் சேகரனார், சிவகங்கை மாவட்டத்தில், வேலு நாச்சியார், மருது பாண்டியன், திருச்சி மாவட்டத்தில், முத்தரையர் ஆகியோருக்கு, விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தலைவர்களின் பிறந்த நாள் அல்லது இறந்த நாளை, கொண்டாடுகின்றனர். ஜாதி தலைவர்களாக, இவர்களை சித்தரிக்கின்றனர். இது, அந்த தலைவர்களுக்கு செய்யும் மரியாதை அல்ல. அவர்களை அவதூறு செய்வதாகும். விழாக்கள், கொண்டாட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம், பதற்றம் ஏற்படுகிறது. சூழ்நிலையை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கைகளை போலீசாரால் தான் எடுக்க முடியும். விழாக்கள், கொண்டாட்டங்களை, ஜாதி தலைவர்கள் தான் நடத்துகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக, நினைவகங்கள் முன், அரசியல் தலைவர்களும் வரிசையில் நிற்கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வரும் போது, தேவையின்றி அந்த விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, இது போன்ற கொண்டாட்டங்களின் போது, அரசியல் கட்சித் தலைவர்கள், அந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்லாமல் இருப்பதே, சமூகத்துக்கு அவர்கள் செய்யும் பெரிய சேவை. இதைத் தான், இந்த கோர்ட் எதிர்பார்க்கிறது.

குரு பூஜை கொண்டாட்டங்களால், பொதுமக்களுக்கு தான் இடையூறு, இழப்பு ஏற்படுகிறது. எனவே, குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், ஜாதி தலைவர்கள் செல்வதற்கும், தடை விதிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். தலைவர்களுக்கு மரியாதை, கவுரவம் செய்ய, அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதி தலைவர்கள் விரும்பினால், நினைவிடங்களுக்கு செல்லாமல், மரியாதை செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிப்பது என, உதவிகளை செய்யலாம். தங்கள் தொண்டர்களையும், இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம். அதன் மூலம், மறைந்த தலைவர்களுக்கு மரியாதை, கவுரவம் செய்யலாம். மறைந்த தலைவர்களுக்கு கவுரவம் செய்ய முயற்சிப்பதன் மூலம், இருக்கிற சாதாரண மனிதர்களை தொந்தரவு, துன்புறுத்தல் செய்யக் கூடாது. இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

மகாராட்டிரக் குருகுலப் பள்ளிகளில் 793 குழந்தைகள் பலி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_796736.jpg

மகாராட்டிரக் குருகுலப் பள்ளிகளில் 793 குழந்தைகள் பலி 
 மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஐகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும், இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற இறப்புக்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை; ஆசிரம பள்ளிகளில் வாழும் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது; ஒவ்வொரு ஆசிர பள்ளிக்கும் ஒரு மருத்துவ அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்; ஆசிர பள்ளிகளில் காலியாக உள்ள 185 காலி பணியிடங்கள் செப்டம்பர் 13ம் தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சுமார் 1100 குருகுல பள்ளிகள் உள்ளது. இதில் 4.50 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றவர். இவர்களில் பெரும்பாலானோர். பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 453 பேரின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 340 குழந்தைகளின் பெற்றோர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துள்ளனர்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு சாதிப் பெயர்களா?- உயர்நீதிமன்றம்

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு சாதி ப் பெயர்களா? அரசு  விடை யிறுக்க உயர்நீதிமன்றம் அறிவிக்கை 

சென்னை: தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் சாதிப் பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.,:

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர், எஸ்.சரவணன் என்பவர், தாக்கல் செய்த மனு: ஜாதி முறையை ஒழிக்க வேண்டும் என்றால், மக்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட வேண்டும். தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதி பட்டங்களை நீக்கும்படி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். ஜாதி வன்முறையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள், 1997ல் மாற்றப்பட்டன. "மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, வெள்ளாளர் மகளிர் கல்லூரி, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, சிக்கையா நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, யாதவர் கல்லூரி, மதுரை சிவகாசி நாடார் கல்லூரி' என, பல கல்லூரிகளின் பெயர்களில், ஜாதியின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளைப் பொறுத்தவரை, சவுராஷ்டிரா பள்ளி, நாடார் சரஸ்வதி பள்ளி, அரசு கள்ளர் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, சி.பி.ராமசாமி அய்யர் பள்ளி என, பள்ளிகளின் பெயருக்குப் பின்னும், ஜாதி பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மனதில்:

மக்கள் நல அரசானது, ஜாதியின் பெயரில், பள்ளிகள், கல்லூரிகளை நடத்தக் கூடாது. தலைவர்களின் பெயர்கள் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், அவர்களின் பெயருக்குப் பின், ஜாதி பெயரையும் இணைப்பது, அப்பாவி மக்களின் மனதில் ஜாதிய முறையை புகுத்துவது போலாகும். பள்ளிக் குழந்தைகளின் மனதில் பதிய ஆரம்பித்தால், இந்த சமூகத்தில், ஜாதி முறையை ஒழிக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகளை, அரசு நடத்துவதற்கு, சட்டம் அதிகாரத்தை அளிக்கிறது. ஜாதி பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கவில்லை. எனவே, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஒட்டியிருக்கும், ஜாதி பெயர்களை நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 10ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

சனி, 13 ஜூலை, 2013

நாமிருக்கும் நாடு நமதில்லை - தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி



இந்தி, வங்காளம் முதலான மொழியினர் தங்கள் மாநிலங்களில் தங்கள் மொழிகளில் வாதிட உரிமை இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் தமிழில் வாதிட மறுக்கப்படுவது அறமற்ற செயலாகும். மத்திய அரசிற்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வரும் முதல்வர்,  உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வும் தலையிட்டு உரிமை பெற்றுத் தர வேண்டும். இத்தகைய போக்கு  நாமிருக்கும் நாடு நமதில்லை என்பதை உணரச் செய்து தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழில் வாதாடியதால் வழக்குகள் தள்ளுபடி:  உயர்நீதிமன்றம் அதிரடி


மதுரை:இரு வழக்குகளில், மனுதாரர்களின் வழக்கறிஞர், தமிழில் வாதிடுவேன் என்பதை, ஏற்க முடியாத நிலையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கோவில்பட்டி, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவில், "கணவர் பக்கீர் மைதீன், சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு, ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி அடக்கச்சி சுந்தரராஜன், "விளவங்கோடு மிடாலனில் வீடு கட்ட, வரைபட அனுமதி வழங்க, கருங்கல் ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.

மனுக்கள், நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் வழக்கறிஞர் பகவத்சிங், "தமிழில் என் வாதத்தை முன்வைக்க விரும்புகிறேன்' என்றார்.

ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, "பெஞ்ச்' ஆங்கிலத்தில் தான் வாதங்களை முன்வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளதாக, நீதிபதி கூறி, அந்நகலை பார்வையிடுமாறு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

"இல்லை... தமிழில் தான் வாதிடுவேன்' என, வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில், வழக்காடு மொழியான ஆங்கிலத்தில் தான், வாதங்கள் இருக்க வேண்டும் என, அரசியலமைப்புச் சட்டம், தெளிவாக கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கில், ராஜ்நாராயணன், "இந்தியில் தான் வாதிடுவேன்' என்றார். இதை நீதிபதிகள் சில நிமிடங்கள் செவி மடுத்தனர். அட்டார்னி ஜெனரல் தப்தாரி, எதிர்ப்புத் தெரிவித்தார். ராஜ்நாராயணனின் வாதம் புரியவில்லை என, நீதிபதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர்."இந்தியில் பேச அனுமதிக்க முடியாது. ராஜ்நாராயணன் ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது வழக்கறிஞர் மூலம் வாதிடலாம் அல்லது வாதங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கலாம். ஏனெனில், இக்கோர்ட்டின் வழக்காடு மொழி ஆங்கிலம். ராஜ்நாராயணன் சம்மதம் தெரிவிக்காவிடில், கோர்ட் இவ்வழக்கில் தலையிட முடியாது' என்றனர் நீதிபதிகள்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, இங்கும் பொருந்தும். அரசியலமைப்புச் சட்டமும் இதை வலியுறுத்துகிறது. இவ்வழக்கில், மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கையை, ஏற்க முடியாத நிலையில், கோர்ட் உள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

செவ்வாய், 18 ஜூன், 2013

உடலுறவே திருமணம்தான் - தீர்ப்பு

தாலி கட்டி, மாலை மாற்றி,  தீ வலம் வந்தால்தான் திருமணமா?


கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது. தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும். அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.