திங்கள், 5 நவம்பர், 2012

ஆயுதப்படை சிறப்பு அதிகார ச் சட்டம் நீக்கக்கோரி மணிப்பூரில் ஐரோம் சர்மிளா உண்ணா நோன்பு : இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

ஆயுதப்படை சிறப்பு அதிகார ச் சட்டம்  நீக்கக்கோரி மணிப்பூரில் ஐரோம் சர்மிளா உண்ணா நோன்பு : இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு
 
 
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதம்: இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு
இம்பால், நவ.5

மணிப்பூரில் ‘இரும்புப் பெண்’ என்று அழைக்கப்படும் ஐரோம் சானு ஷர்மிளா உண்ணாவிரதம் தொடங்கி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண் 2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

தனது 28வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 12 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை இவர் ஈர்த்தார்.

அசாம் ரைபிள்ஸ் படையினரால் 2.11.2000-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்ப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாடடி அவரை கைது செய்த போலீசார் இம்பாலில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு ஆஸ்பத்திரியில் ஷர்மிளாவை அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவர் 12 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பலரது கோரிக்கையை ஏற்க ஷர்மிளா மறுத்துவிட்டார்.

மனித உரிமை போராளிகளுக்கான குவாஞ்சு விருது, மயிலம்மா விருது, 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருது உள்ளிட்ட பல விதுகள் ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நீக்கும்வரை எந்த விருதையும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் ஷர்மிளா உறுதியாக உள்ளார்.

அவர் உண்ணவிரதத்தை தொடங்கி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை இயக்கங்கள், ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக