சனி, 30 ஜூலை, 2011

இலங்கைத்தமிழர் சமஉரிமைச் சிறப்பு மாநாடு

மார்க்சியப் பொதுவுடைமைவாதிகளுக்கு உள்ளத்தில் தமிழ்ப்பற்று கிடையாது. அரசியல் சூழலுக்கேற்பத் தங்களை வெளிப்படுத்தவும் தமிழ் ஈழமே தீர்வு என மக்கள் விரும்புவதைத் திசை திருப்பவும் சமவுரிமை நாடகம் ஆடுகிறார்கள். இதுவரை நடந்த சமவுரிமை நாடகத்தின் விளைவுதான் நூறாயிரக்கணக்கான ஈழததமிழர்கள் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டதும் கொடூரமாகத் தாக்கப்பட்டு அதன்பின்  கூட்டாகப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் அவர்களின் மார்பகங்கள்  துண்டிக்கப்பட்டதும் கொத்துக் குண்டுகளால் மக்களும் பிற உயிரினங்களும் நிலப்பரப்பும் அழிந்ததும். மறைமுகமாக இந்திய அரசை ஆதரிப்பதற்காகச் சமவுரிமை பேசுகின்றனர். இவர்களின் மாநாட்டில் தமிழ் ஈழ ஆதரவுக்  கட்சியினர் யாரும் பங்கெடுக்கக்கூடாது. 
உண்மையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத்தமிழர் சமஉரிமை சிறப்பு மாநாடு நடத்த மார்க்சிஸ்ட் முடிவு

First Published : 29 Jul 2011 02:58:53 PM IST


சென்னை, ஜுலை.29: இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளிக்கும்வகையில் அரசியல் தீர்வு காண வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: #தமிழக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும்.  #நிலப்பறிப்பு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மீண்டும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  #இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட வலியுறுத்தியும் இலங்கைத்தமிழர் சமஉரிமை-அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்

இவ்வளவு கொடூரமான கொலைபாதகத்தை நிகழ்த்திய பேரினவாத சிங்கள அரசு தமிழர்களை சரிசமமாக நடத்தும் என்று எவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்மை இன்னும் நம்ப சொல்கிறது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே ஒரு தமிழர் விரோத கட்சி. காங்கிரஸ் கட்சியை போல், இந்தகட்சியையும் தமிழகத்தில் காணாமல் போக செய்ய வேண்டும்.
By ராஜா@மதுரை
7/29/2011 6:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக