திங்கள், 25 ஜூலை, 2011

தனித்தமிழ்நாடு அமைவது ஒன்றே இனித் தீர்வாகும்!


பரமக்குடி பொதுக்கூட்டத்தில் அரிமாவளவன் 

இலங்கையின் கொடுங்கோலன் இராசபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்களத்தின் அரிமாவளவன் எழுச்சி உரையாற்றினார்.  கூட்டத்தில் பாவலர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“இலங்கையின் முற்றதிகாரி இராசபக்சே ஓர் இழிவான இனப்படுகொலைக் குற்றவாளி என்று இன்று உலகிற்கே தெரியும்!  ஆனால், அந்த இனப்படுகொலைக்கு முற்றாகத் துணைபோன இந்தியாவையும் இந்திய அதிகாரிகளையும் மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாதான் என்னைத் தவறாக வழிகாட்டியது என்று இராசபக்சே இன்று புலம்பித் தவிக்கிறான்!  இந்தியா இதை மறுக்கவில்லை! 

ஈழத்தமிழர்களின் 62 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் முற்பகுதி அறவழிப்போராட்டமாக அமைந்தது.  ஆனாலும் சிங்களப் பேரினவாத அரசு அப்போராட்டங்களை கொலைவெறியோடும் குருதிப் பசியோடும்தான் அடக்கி ஒடுக்கியது.  இன்றைக்கு ஊடகங்கள் விழித்துக் கொண்டிருக்கிற காலம்!  முள்ளிவாய்க்கால் உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.  ஆனால், 62 ஆண்டுகாலப் போராட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.  காந்தி தேசமென்றும், அகிம்சையின் களம் என்றும் பாரதத் திருநாடு என்றும் பீற்றிக் கொள்கிற இந்தியா கண்ணெதிரே வெட்ட வெளிச்சத்தில் நடந்த இந்த பச்சைப் படுகொலைகளை, இன அழிப்பைக் கண்டும் காணாததுபோலத்தான் இருந்தது.  காரணம் “நாங்கள் இந்தியர்கள் நீங்கள் தமிழர்கள்” என்று தில்லி வல்லாட்சி எப்போதுமே கருதி வந்தது.  பாலத்தீன விடுதலைக்கும் வங்காளத்தின் விடுதலைக்கும் காவடி தூக்கிய இந்தியா ஈழத்தின் மீது எரி நெருப்பைக் கொட்டியது!  காரணம் அவர்கள் இந்தியர்கள், நீங்கள் தமிழர்கள்!

இராசீவ் காந்தி இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்போகிறேன் என்று அனுப்பிய அமைதிப் படை பத்தாயிரம் தமிழர்களைக் கொன்றுவிட்டுத்தான் திரும்பியது.  பார்ப்பன ஏடான இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு ஒரு செய்தியை வெளியிட்டது.  44 தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்முறையால் அவர்களைச் சிதைத்து இறுதியில் தெருவில் கிடத்தி தகரிளை ஏற்றிக் கொன்றார்கள் என்று!  அமைதிப் படை இப்படியெல்லாம் செய்த அட்டூழியத்தினால் பத்தாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்ட்டார்கள்.  தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடியவுடன் பதறியடித்து எழுந்த தமிழன் வாஞ்சையோடு பாரத நாட்டின் மூவண்ணக் கொடிக்கு பற்றோடு வணக்கம் செலுத்துகிறான்.  வெகுளி இவன்!  இன்னும் இந்தியாதான் தாய்நாடு என்று நம்பிக் கொண்டு இருக்கிறான்!  தில்லிக்காரனோ, “நீ தமிழனடா!  நான் இந்தியனடா” என்று இறுமாப்போடு எட்டி உதைக்கிறான்!  “எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்து”ப் பழகிய அப்பாவித் தமிழன் ஆயிற்றே!  என்ன செய்வது?

இறுதியில் முள்ளி வாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ்ச் சொந்தங்கள் பட்டினிப் பசியோடு, நண்டுகளும் சிண்டுகளுமாய் பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழுது கொண்டு நிற்க, பெண்டு பிள்ளைகள் உயிர்ப்பிச்சை கேட்டு பரிதவித்து நின்ற அந்த நேரத்தில் கொடுங்கோலன் ராசபக்சே இந்த காந்தி தேசத்தைக் கேட்டுவிட்டுத்தான் ரசாயணக் குண்டுகளைப் போட்டு அந்த இடத்தை ஐந்து நிமிடங்களில் சாம்பல் மேடாக்கினான்!  பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது!  அன்றொருநாள் யாழ்ப்பாணத்திற்குள் சிக்கித் தவித்த நாற்பதாயிரம் சிங்களப் படை வீரர்களுக்கு விடுதலைப் புலிகள் உயிர்ப்பிச்சை கொடுத்தார்கள்!  ஆனால் நரக நாதாரிகளின் கூட்டில் மலர்ந்த இந்திய சிங்களப் பேய்கள் அந்த 40 ஆயிரம் தமிழர்களை நொடியில் தின்று தீர்த்தது.  காரணம் அவர்கள் இந்தியர்கள் நாமோ தமிழர்கள்.

சேனல் 4ன் வழியாக கண்ட காட்சிகளில் உலகே உறைந்து போயிருக்கிற வேளையில் அந்தக் கொலைகாரப் படைகளுக்கு தாய்த் தமிழ் மண்ணில் ஊட்டியில் இன்றைக்கும் பயிற்சி கொடுக்கிறான் இந்தியன்!  காரணம் சிங்களன் இன்னும் கொல்லத்துடித்துக் கொண்டிருக்கிறான்.  அச் சிங்களனுக்கு எப்படி பாலியல் வன்முறைகள் செய்வது, எப்படிக் கொத்துக் குண்டுகள் வீசுவது, எப்படி ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று இன்னும் பயிற்சி கொடுக்கிறான்.  காரணம், அவன் இந்தியன்!  நீ கீழ் நிலையில் கிடக்கிற, ஒடுக்கப்படவேண்டியவன், நசுக்கப்பட வேண்டியவன், நசுக்கி ஒழிக்கப்பட வேண்டியவன் என்று அவன் கருதுகிற தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் நீ!

உன் கடற்கரையில் 545 மீனவர்களைப் பிணமாக்கிய சிங்களனுக்கு இந்தியா உதவியது!  இன்றும் உதவிக் கொண்டிருக்கிறது.  காரணம் அவன் இந்தியன், நீ தமிழன்!  

நீ அழிக்கப்பட வேண்டும், உன் இனம், உன் மொழி, உன் சுவடுகள், உன் வரலாறு, உன் கலைகள், உன் பண்பாடு, உன் பெண்கள், உன் பிள்ளைகள், உன் எதிர்காலம் எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று நினைக்கிற இந்தியன்!  நீதான் வெள்ளந்தியாக, வெகுளியாக, பால்மனம் படைந்தவனாக நிற்கிறாய்!  இன்னும் நம்பிக் கொண்டு நிற்கிறாய்! பட்டாக்கத்தியை உயர்த்தி நிற்கிற கசாப்புக் கடைக்காரனைப் பார்த்து புன்னகை பூக்கிற ஆட்டுக்குட்டியாய் நிற்கிறாய்!  நீ, தமிழன்!  அவன் இந்தியன்!

இங்கிலாந்தில் கிடக்கிற ஒரு வெள்ளையன் மாந்த உணர்வினால் தூண்டப்பெற்று சேனல் நான்கு என்கிற தொலைக் காட்சியில் உன் இனம் அழிக்கப்பட்டதை போட்டுக் காட்டினான்! இந்த உலகம் குலுங்கி அழுதது!  ஆனால், தமிழினத் தலைவனாகப் பட்டம் சூட்டிக் கொண்டு பதவியில் இருந்த கருணாநிதியிடம் 20க்கும் மேற்பட்ட தொலைக் காட்சிகள் இருந்தன, இன்னும் இருக்கின்றன!  அவையெல்லாம் நித்தியரஞ்சிதாவையும் அவர்களது படுக்கைகளையும் வலம் வந்து வலம் வந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன!  காரணம் அவர்கள் திராவிடர்கள்!  நீயோ தமிழன்!  தாழ்ந்து கிடக்கிற தமிழன்!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தத் திருட்டுத் திராவிடக் கட்சிக் கூட்டணிக்கு அன்று நீ கொடுத்திருந்தாய்.  அவர்கள் தயவில் இந்தாலிய டிராக்கூலாவின் தில்லி அரசாட்சி இருந்தது!  உன் சொந்தங்களை அவர்கள் அங்கே கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் ஆயுதங்களும் ஆட்களும் அங்கே படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தபோது கருணாநிதியின் கண் அசைவிற்குத்தான் 40 பேரும் காத்திருந்தார்கள்.  ஆனால், கருணாநிதி கடற்கரையில் படுத்து நாடகமாடினார்!  திகாரில் வாடும் கனிமொழிக்காக கதறியழும் இந்தக் கயவர், நயவஞ்சகர், என் இசைப்பிரியா சிதைக்கப்பட்ட போது அவளைப் போன்ற பல்லாயிரம் பெண்களும் பிள்ளைகளும் இளைஞர்களும் சதைக் குவியலாய்  கிடந்தபோது நாடகமாடினார்!  காரணம் அவர் திராவிடர்!  நீ தமிழன்!  வரலாறு அறியாத தமிழன்!  அவனுக்கு 1800 ஆண்டு காலப் பகை!  உன்னை அழித்தொழித்து அத்தனையையும் அள்ளிக் கொள்ள எத்தனைக்கும் பகைவன்!

உலகப் பரப்பில் 12 கோடித் தமிழர்கள் நாம்!  தாய்த் தமிழகத்தில் 7 கோடித் தமிழர்கள் நாம்!  ஆனால் இலங்கை என்கிற சுண்டைக் காய் நாட்டில் ஒன்றறைக் கோடி சிங்களர்கள்!  அவர்கள் இன்றைக்கு 12 கோடித் தமிழர்களை  வென்றிருக்கிறார்கள்.  இந்த உண்மை கசக்கிறது!  எட்டிக்காயின் கேவலமாய்க் கசக்கிறது!  12 கோடித் தமிழர்கள், வரலாற்றில் மிகச் சிறந்த ஓர் இனம்!  வீரம் செறிந்த இனம் இன்று ஒன்றைரைக் கோடி சிங்கள இன வெறியர்களால் தோற்கடிக்கப்பட்டுக் கிடக்கிது.  ஒரே காரணம்! நமக்கு நாடில்லை!  அவனிடம் ஒரு நாடு இருக்கிறது!  நாம் நாடற்ற குடிகளாய் இருக்கும் வரை கையேந்தி கையேந்தி கையறு நிலையில் நிற்போம்!  எவன் ஒருவன் உன்னை அழித்தொழிக்க நினைக்கிறானோ, அவனிடமே நீ கையேந்தி நிற்கிறாய்!  உன் பிள்ளைகளை கொன்றொழிக்க ஆயுதம் கொடுத்தவனிடம் கையேந்தி நிற்கிறாய்!  நீ மாயையில் நிற்கிறாய்!  இந்தியன் என்ற மாயையில், சேற்றுக் குழியில் சிக்கி நிற்கின்றாய்!

ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க பெருத்த ஆர்வம் காட்டிய கருணாநிதியும், இந்தியாவின் சில மலையாள அதிகாரிகளும் இந்த இனப் படுகொலைக்கு முகாமையான காரண கர்த்தாக்கள்!  இவர்கள் இன்று சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள்.  சிவசங்கர மேனனும் நாராயணனும் நிரூபமாவும் கருணாநியின் கோபாலபுரச் சந்திப்புகளுக்குப் பிறகே கொழும்பு சென்று கூடிக் குலவினர்!  இவர்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகளே!  ஆனால், எப்படி இதற்கெல்லாம் தீர்வு காணப்போகிறாம்!

ஒரே தீர்வுதான்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்குங்கள், முன்னெடுங்கள், முனைப்போடு செயலாற்றுங்கள்! இந்தத் தமிழ்இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று நெஞ்சில் நெருப்பாற்றலோடு எழுதிக் கொள்ளுங்கள்!  தமிழருக்கு என்று ஒரு நாடு தோன்றினால் மட்டுமே ஈழம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழருக்குத் தீர்வு உண்டு, விடுதலை உண்டு என்று நம்புங்கள்! உன் நண்பன் யார், எதிரி யார் என்று தெளிவாக வகுத்துக் கொள்ளுங்கள்!

நீ திராவிடனுமில்லை!  இந்தியனுமில்லை!  நீ தமிழன் என்று உன்னை உதைத்துச் சொல்லுகிற திராவிடனுக்கும் இந்தியனுக்கும் முன்பாக துணிந்து நிமிர்ந்து எழுந்து சொல்லுங்கள்!  “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஓங்கிச் சொல்லுங்கள், உரத்தக் குரலில் சொல்லுங்கள்!  தமிழருக்கு என்றொரு நாடு அமைவது தமிழினத்தின் பிறப்புரிமை என்று சொல்லுங்கள்! அப்படி நீங்கள் சொல்கிற பொற்காலம் அண்மித்துவிட்டால் உலகத் தமிழர்கள் விடுதலைக் காற்றை விரைவில் சுவாசிப்பர்! என்பது மட்டும் உறுதி.



-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக