சனி, 14 மே, 2011

Youth cong. completely washed out: No use of Raghul propoganda: இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி:இராகுல் பரப்புரை எடுபடவில்லை

தோழமைக் கட்சியின் தலைவரின் அகவை திறமை ஆகியவற்றைக்கூடப் பொருட்படுத்தாமல் அவரைப் புறக்கணித்த  போக்கு,தவறான அணுகுமுறை  ஆகியவற்றால் இராகுல் மண்ணைக் கௌவியுள்ளார். தமிழினப் பகையாளியாக இருக்கும்வரை அவரது கட்சிக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனம்திருந்தி தமிழினப் படுகொலையாளர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும் தமிழ் ஈழம் மலரவும் ஆவன செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாடு அவரை வரவேற்கும். இளைஞர் காங்.ஐ அடியோடு புறக்கணித்த தமிழக மக்களுக்குப் பாராட்டுகள். உற்சாகத்துடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி: ராகுல் பிரசாரம் எடுபடவில்லை
சென்னை, மே. 14-
 
 
மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் 29 ஆயிரத்து 204 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி. மு.க. வேட்பாளர் ராஜலட்சுமியிடம் படுதோல்வியை தழுவினார்.
 
அவரை போலவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, ஆகியோரும் தோல்வி அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ஜெயக்குமார், தொழில் அதிபர் வசந்தகுமார், செல்வப்பெருந்தகை, ஆகியோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.
 
வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஞானசேகரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் தோல்வி கிடைத்துள்ளது.   இந்த தடவை இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
 
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா (ஈரோடு மேற்கு), அறிவழகன் (அண்ணா நகர்), விஜய் இளஞ்செழியன் (ஆம்பூர்), அர்த்தநாரி (ஆத்தூர்), ஜோதிமணி (கரூர்), மகேந்திரன் (பேராவூரணி), வரதராஜன் (மதுரை தெற்கு), மயூரா ஜெயக்குமார் (சிங்காநல்லூர்), பெருமாள்சாமி (விளாத்திக்குளம்), நவீன் ஆம்ஸ்ட்ராங் (விருதுநகர்) ஆகிய 10 பேர் களத்தில் இறக்கப்பட்டனர்.
 
இவர்கள் 10 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.   தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் எடுபடாமல் போய்விட்டது.

 
++++++++++++

Saturday, May 14,2011 05:22 PM, Mano said:
அது மட்டுமல்ல... ஈழத்தில் அப்பாவி தமிழர்கட்கு நடந்த கொடுமைகள் யாவும் இவர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை!.... அன்று நமக்காக இவர்கள் எந்தவித குரலும் கொடுக்கவில்லை... நம் குரல்களும் இவர்கள் காதில் விழவும் இல்லை... நம்கண்ணில் வந்த ரத்தக்கண்ணீர் தான் இன்று இவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது... 63 - க்கு 5 - கூட வந்திருக்க கூடாது! 0 தான் கிடைத்திருக்க வேண்டும்... மனிதாபம் அற்ற மகான்கள் அல்லவா அவர்கள்!....
Saturday, May 14,2011 05:21 PM, தமிழன் said:
ராகுல்காந்தி நீ காந்தி பெயரை இழிவு படுத்ததே தமிழனுக்கு தோரகம் செய்தல் இதன் நிலமை
On Saturday, May 14,2011 05:51 PM, subbiah said :
இந்திய பிரதமரை கொன்ற விடுதலை புலிகளை நீ ஆதரிகிரையே நீ ஒர் தேச துரோகி இல்லையா .
On Saturday, May 14,2011 06:02 PM, vivek said :
அப்போ இந்திரா காந்தி அஹ கொன்ன சிங்க் எல்லாம் தேச துரோகி இல்லையா,மன்மோகன் சிங் மகான் அஹ,

Saturday, May 14,2011 05:14 PM, புலி said:
ஆனந்த் தனித்து நின்னவங்களுக்குதான் உன்னோட கணக்கு எடுபடும் அதை முதலில் புரிந்து கொள் தி மு க வோட வாக்குலதான் அந்த அஞ்சு சீட்டும் கிடைச்சது தனித்து நின்னு உங்க சதவீதம் என்னன்னு காட்டுங்க அடுத்தவன் முதுகுல சவாரி செய்யாதீங்க முதலில் உங்க கட்சியில உள்ள ஒவ்வொரு கோஷ்டிக்கும் எவ்வளவு சதவீதம் ஒட்டு இருக்குனு பாருங்க எத்தனை இலட்சம் மக்களோட சாபம் இலங்கையில இருந்து கேட்டுருக்கும் மனசாட்சி உள்ள எல்லோருக்கும் இது புரியும் இன்னும் உங்களுக்கு தண்டனை முடியல கண்டிப்பா தொடரும். பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிஞ்சது மததால பாகிஸ்தானும் பங்களாதேசும் பிரிஞ்சது மொழியாள இந்த இரண்டுமால பிரிஞ்சி இருக்குற இலங்கையில மட்டும் எப்படி இருக்கும் இறையாண்மை பிடல் காஸ்ட்ரோ துப்பாக்கி எடுத்தா அது புரட்சி சே குவேரா எடுத்த அது புரட்சி மா சே துங் எடுத்தா அது புரட்சி அதுவே இலங்கை தமிழன் எடுத்தா அது தீவிரவாதமா எங்காவது ஒரு இடத்திலாவது விடுதலைப்புலிகள் சிங்கள பெண்களை கற்பழித்து இருக்கிறார்களா அதுவே சிங்கள ராணுவத்தை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை எங்கள் இதய தெய்வம் எம் ஜி ஆர் ஆதரவு பெற்ற விடுதலை புலிகளின் நோக்கம் கையளவு நிலத்திலாவது தமிழசிகள் கற்புடன் வாழ வேண்டும் என்பதுதான் நிச்சயம் ஈழம் பிறக்கும் எங்கள் இனமும் செழிக்கும். நன்றி தமிழக வாக்கள தெய்வங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக