சனி, 14 மே, 2011

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்': தொல்.திருமாவளவன்

எதிர்கால ஆட்சிப்பொறுப்பிற்கு வர வேண்டியவர் தமிழ் ஈழ நண்பனாக இருந்துவிட்டு த் தமிழினப் படுகொலைகாரர்களுடன் சேர்ந்ததாலேயே தோல்வியைத் தழுவ நேர்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்ல எதிர்காலம் உள்ளது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


"மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்': தொல்.திருமாவளவன்

First Published : 14 May 2011 03:35:49 AM IST


சென்னை, மே 13: சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பகல் 12 மணிக்கு திருமாவளவன் சந்தித்தார். மதியம் 2 மணி வரை சந்திப்பு நீடித்தது.இதன்பின்பு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைக்கு உரிய பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அதற்கு ஏற்றாற்போல் கூட்டணியும் வலுவாக இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுகள் வந்திருக்கின்றன.அரசியலில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பின்னர் ஆராய்வோம் என்று அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக