செவ்வாய், 10 மே, 2011

2 days permission to attend enforcement office for kanimozhi: நீதிமன்றக் காவலுக்குக் கனிமொழிக்கு விலக்கு

கழுத்தைச் சுற்றிய பொருள் என்னும் இந்நூல் பெண் எழுத்தாளர் சிமமந்தா கோழி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) என்பவரால் எழுதப் பெற்ற  சிறையறை 1 (செல் one)முதலான 12 சிறுகதைகளின் தொகுப்பு. முதல் கதை சிறைக்கு  அனுப்பபட்டு அங்கேயே வாழ்வு முடிந்த இருவர் பற்றிய கதை. ௧௧ ஆவது கதை நாளை வெகு தொலைவில் (Tomorrow Is Too Far) என்னும் கதையாகும்.கழுத்தைச் சுற்றித் தண்டனை வளையம் இறுகினாலும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்காகப் படிக்கலாம்.வருங்காலம் வெகு தொலைவில் உள்ளதோ என்னும் ஐயப்பாட்டாலும் படிக்கலாம்.  எப்படியோ படித்துப்  பொழுது போக்குவது  நல்ல செயல்தானே!  பெண் படைப்பாளி மற்றொரு பெண் படைப்பாளியின் படைப்புகளைப் படிப்பதும்நன்றுதானே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கனிமொழிக்கு விலக்கு
First Published : 10 May 2011 12:42:57 PM IST

Last Updated : 10 May 2011 03:14:21 PM IST
புதுதில்லி, மே.10: நீதிமன்றத்தில் ஆஜரவாதில் இருந்து அடுத்த இருநாட்களுக்கு கனிமொழிக்கு விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.2ஜி வழக்கு தொடர்பாக திமுக எம்பி கனிமொழியும், சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியும் தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.முன்னதாக 2ஜி வழக்கில் சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க கனிமொழி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி கனிமொழி இன்று அவரது கணவர் அரவிந்தனுடன் நீதிமன்றம் வந்தார். அவர்களுடன் தூத்துக்குடி எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை உடன் வந்திருந்தார். இதில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது.நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழி தன்கையில் The Thing Around Your Neck என்ற புத்தகத்தை வைத்திருந்தார். அது நைஜீரிய எழுத்தாளரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் 12 சிறுகதைகள் உள்ளன. அவரது கணவர் அரவிந்தன் கையில் டெல்லிவாலா என்ற புத்தகம் இருந்தது.மருத்துவக் காரணங்களுக்காக மே 7-ம் தேதி ஆஜராகாத சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கருத்துகள்

She has to attend the summon of Enforcement Directorate on 12th, Hence the court permitted,thats all
By pinky george
5/10/2011 8:58:00 PM
கழுதை தீந்து கடேரும்பு அனா கதைய இறுக்கே ,மெல்ல மெல்ல விட்டுரூ வங்கல்போல இர்ருக்கு , மக்களுக்கு நாமம் குலைக்க படுகிறது
By valipokkan
5/10/2011 8:22:00 PM
14 -ம தேதி செய்தி என்ன என்று தினமணியில் இப்போதே போட்டு விடலாம். இதுவரை அனைவரும் நீதி மன்றம் வந்த ஒரே நாளில் கைது செய்யப்பட்டார்கள். இவருக்கு மட்டும் இரண்டு நாள் விசாரணை. இப்போது விலக்கு. mmmmmm
By sbm
5/10/2011 8:09:00 PM
Its good to see rajasji back ..
By Kovaikkaran
5/10/2011 6:54:00 PM
எல்லாம் சரிதான், நீதிபதி அவர்களே ! நீதிக்கு மாறாமல் மக்களும் நாடும் வாழ சரியான தீர்ப்பை வழங்கவும்
By skveni
5/10/2011 6:30:00 PM
மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது. ஏன்?ஏன்
By SPR
5/10/2011 6:15:00 PM
நல்ல தான் இருக்கு நடப்பது எல்லாம் காக்கா வடை கதை தான் ஏமாந்து போகபூரோம்
By vikas
5/10/2011 5:26:00 PM
நல்ல தான் இருக்கு நடப்பது எல்லாம் காக்கா வடை கதை தான் ஏமாந்து போகபூரோம்
By vikas
5/10/2011 5:26:00 PM
The thing around your neck is the 'Noose'. You and your family cannot escape this time. End game for you.
By Karthik
5/10/2011 5:23:00 PM
"எனக்கு சட்டம் தெரியாது. எனவேதான் குற்றத்தில் ஈடுபட்டேன் " என நீதிமன்றத்தில் வாதாட முடியாது . ஆனால், இனிமேல் குற்றவாளிகள் " எனக்கு என்பது வயது ஆகிவிட்டது , எனக்கு தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் இத்தாலி பாஷை தெரியாது . எனவே எனக்கு தண்டனை வழங்காதீர்கள்" என குற்றவாளிகள் வாதாட சி.பி.ஐ ஒரு கெட்ட முன் உதாரணத்தை உருவாக்கி இருக்கிறது.”
By gowtham
5/10/2011 5:12:00 PM
"எனக்கு சட்டம் தெரியாது. எனவேதான் குற்றத்தில் ஈடுபட்டேன் " என நீதிமன்றத்தில் வாதாட முடியாது . ஆனால், இனிமேல் குற்றவாளிகள் " எனக்கு என்பது வயது ஆகிவிட்டது , எனக்கு தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் இத்தாலி பாஷை தெரியாது . எனவே எனக்கு தண்டனை வழங்காதீர்கள்" என குற்றவாளிகள் வாதாட சி.பி.ஐ ஒரு கெட்ட முன் உதாரணத்தை உருவாக்கி இருக்கிறது.”
By gowtham
5/10/2011 5:12:00 PM
Pls read karudapuranam
By nambi
5/10/2011 5:03:00 PM
பணம் இருந்தால் பிணமும் வாயை திறக்கும் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணமாகிவிட்டது என்றே சொல்ல தோன்றுகிறது இந்த நீதிமன்ற ஆஜர் விலக்கு.
By ஹரிநாராயணன்
5/10/2011 4:53:00 PM
ஜாமீன் விசாரணை மே14 க்கு ஒத்திவைப்பு. நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு தீர்ப்பு எப்படி இருக்கபோகிறது என்பதற்கான முன்னோட்டம்.இன்னமும் நியாயத்தையும் நேர்மையையும் நம்பிகொண்டிருக்கும் இந்தியர்களின் நிலை அந்தோ பரிதாபம்.
By kusumban
5/10/2011 4:34:00 PM
எப்போதும் பிறரைப் பழித்துப்பேசி ஆனந்தமடைவதையே பொழுதுபோக்காகக் கொண்ட ஒரு கூட்டம் அதற்குரிய வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் தங்களது தன்மையைகாட்டிக் கொள்கிறது. அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியூட்டும் வண்ணமாக தகவல்கள் வித்தியாசமாக வந்து கொண்டேயிருக்கின்றன. தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமையட்டும் என வாழ்த்தும் கூட்டணிக் கட்சியினன்
By Tamilian
5/10/2011 4:11:00 PM
அந்த புத்தகத்தின் தலைப்பு "பரமசிவன் கழுத்தில்லிருந்து பாம்பு கேட்டது கருடா சவுகியம்மா அதற்கு கருடன் சொன்னது யாரும் இருக்கும் இடத்தில இருந்துக்கொண்டால் எல்லாம் சவுகியமே.அதைதான் கனிமொழி கூறுகிறார். அவர்மீது யாராவது அவதூறு கூறினால் அவர் அப்பன் கருணாநிதி கடைந்து எடுத்து விடுவார். சாவுதான் இதற்கு முற்றுப்புள்ளி.
By Rasappaa
5/10/2011 4:10:00 PM
கண்டிப்பா உப்பு தின்னவா தண்ணி குடிச்சே திறனும் இல்லானே நம்ம நாட்டோட ஜனநாயகமே கேளிகுத்த போய்டும் .... எனவே நீதிபதி அய்யா அவர்களே நல்ல தீர்ப்பை வழங்குங்கள் .............
By செந்தில்முருகன்
5/10/2011 3:51:00 PM
'The around your neck ' -என்ன ஒரு கவித்துவமான நிலைமைக்குப் பொருத்தமான தலைப்பு. ஆனால் இப்படி ஒரு புத்தகத்தை நீதி மன்ற விசாரணையில் இருக்கும் போது படித்துக் கொண்டிருந்தால் அது நீதி மன்ற அவமதிப்பாகாதா? அரவிந்தன் தனது எதிர்கால வாழ்க்கையை நினைத்து இப்போதே 'டெல்லிவாலா' படிக்க ஆரம்பித்திருப்பது பொருத்தம்.
By இராமசாமி சேகர்
5/10/2011 2:53:00 PM
உலக தமிழ் காவலனின் மகள் அல்லவா?அதான் இந்த மொழி பாசம்
By narayanan
5/10/2011 2:47:00 PM
புஸ்தகத்தை சொல்லி 2g செய்தியை திசை திருப்புவதுபோல் உள்ளது.
By shameed
5/10/2011 2:46:00 PM
தைரியமா இருக்குற மாதிரி காட்டிகிறாங்க வேற ஒன்னும் இல்ல .
By பாஜ்ருடீன்
5/10/2011 2:29:00 PM
அடா.....இந்த நேரத்திலாவது மகாத்மா காந்தியின் சுய சரிதை படித்தால் திருந்த வாய்ப்பிருக்கும் அதைவிடுத்து நைஜீரிய மாபியாக்கள் ...சோமாலிய கடற்க் கொள்ளையர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறாங்கப்பா ! நைஜீரியப் புத்தகத்துல தப்பிக்க நிறைய உபாயத்தை சொல்லியிருப்பார்கள் போல இருக்கு! ஆனால் கிடுக்கிப் புடி எப்படிப் போடுவது என்று அமெரிக்க புத்தகத்தைப் படித்து கை தேர்ந்தவர்கள் விசாரணை அதிகாரிகள் ! என்ன நடக்கிறது என்று பார்ப்போம் !!! @ rajasji
By rajasji
5/10/2011 1:51:00 PM
அந்த புத்தகத்தின் அட்டை மட்டுமே ஆங்கிலம் ஆனால் உள்ளே இருபது மாடிகொல்லாமல் ஊZல் பண்ணுவது எப்படி என்று ஒரு புத்தகம் இருந்தாலும் இருக்கும்.
By a.ajithkumar
5/10/2011 1:34:00 PM
The Thing Around Your Neck"....is your Diamond Neclace ! It is a Great Problem to you ! நீயும் உன் அப்பனும் முறைகேடாக சேர்த்த திருட்டுப் பணத்தில்...மக்களை ஏமாற்றி வஞ்சித்து சுருட்டிய ஊழல் பணத்தில் வாங்கி அணிந்திருக்கும் இந்த பாவப் பட்ட "வைர நெக்லஸ்" தான் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்கள் கூட்டத்தின் தோல்விகளுக்கும் இந்த தேசத்தின் சீரழிவிற்கும் மூல காரணம் ! எனவே நீதிமன்றங்களின் நேரத்தை விரயம் செய்யாமல் மக்களின் வரிப்பணத்தை இதற்க்கு மேலும் சீரழிக்காமல் உனது கழுத்தில் கிடக்கும் வைர நெக்லசையும் முறை கேடாக சுருட்டிய செல்வங்களையும் கோர்ட்டில் ஒப்படைத்து விடு ! ஒருக்கால் உனக்கு பாவ மன்னிப்பு கிடைக்கலாம் ! அதை விடுத்து The Thing Around Your Neck"...என்று குப்பைக்குப் போகும் புத்தகத்தைப் படித்து கெட்டுப் போகாதே அன்புத் தங்கச்சி ! The Thing Around My Mind is Soooooooo... Beautiful" !!!....@ rajasji
By rajasji
5/10/2011 1:23:00 PM
காலை சுற்றிய பாம்பு , கடிக்காமல் விடாது என்பார்கள். கழுத்தை சுற்றிய கயிறு , கடைசியில் காப்பாற்றுமா?
By பி.டி.முருகன் திருச்சி
5/10/2011 1:06:00 PM
இந்த பத்திரிக்கைக்காரங்க எதையெல்லாம் கவனிக்கிறாங்கப்பா...!! அப்போ... தமிழ் தாத்தாவின் மகள் "தமிழுக்கு கெட்-அவுட், ஆங்கிலத்துக்கு கட்-அவுட்" என்று ஆகிவிட்டாரா??
By Abdul Rahman - Dubai
5/10/2011 1:06:00 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து
கனிமொழிக்கு தளர்வு
First Published : 11 May 2011 12:34:59 AM IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக