வியாழன், 12 மே, 2011

thamizh nadu student selected by writing in thmizh : முழுவதும் தமிழில் தேர்வு எழுதி இஆ.ப. தேர்ச்சி பெற்று மாணவர் சாதனை

பாராட்டுகள். தேர்ச்சிக்கு உதவிய தமிழன்னையை மறவாமல்  தமிழ்ப்பற்றுடனும் மனித நேயத்துடனும் மக்கள்  தொ்ண்டாற்றிச்சிறக்க வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

முழுவதும் தமிழில் தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று
மாணவர் சாதனை

First Published : 12 May 2011 02:39:28 AM IST


சென்னை, மே 11: திருவாரூரைச் சேர்ந்த மாணவர், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை முழுவதும் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.  திருவாரூரைச் சேர்ந்த சீனிவாசன், இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என் மூன்று நிலைகளையும் தமிழில் எழுதியுள்ளார்.  தாய் மொழியில் தேர்வு எழுதிய இவர் முதல் முயற்சியிலேயே 134-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.  தமிழ் இலக்கியப் பட்டதாரியான இவர், மின் ஆளுமைத் துறையை மேம்படுத்தும் ஆவல் உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக