செவ்வாய், 16 நவம்பர், 2010

கோவைக் காவல்துறையின் கொலை: அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்
கோவை என்கவுன்டர்: அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை, நவ.15: கோவை என்கவுன்டர் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.கோவையில் சிறுவர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் கொன்றதாக போலீஸôர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதில் மனு அளிக்க வேண்டும். அப்போது, என்கவுன்டர் குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கருத்துகள்

பொதுவாகக் கைதிகளை அழைத்துச் செல்வதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் இல்லாமல் வைகறையில் அழைத்துச் சென்றது ஏன்? ஊர்தியில் போகும் பொழுது அவன் சுட்டதால் இவர்கள் சுட்டார்கள் என்பது நம்பும் படி இல்லாத வகையில் சுட்டு இறந்த பின் தரைத்தளத்தில் பிணம் உள்ளதே! கண்ணில் சுடப்பட்டது எவ்வாறு? தப்பிச் செல்வதாயின் கால்களிலும் ஆயுதம் இருந்தது எனில். கைகளிலும் சுடலாமே! உடையணிந்துள்ள நிலையில் அழைத்துச் செல்லப்படும் கைதியின் பிணம் அவ்வாறு தோற்றமளிக்கவில்லையே! மற்றொரு கைதியை உடன்அழைத்துச் செல்லாததற்குக் கூறும் காரணம் ஏற்கும்படி இல்லையே! வேறொருவரைத் தப்ப விடுவதற்காக அல்லது கொலையுண்ட சிறாரின் குடும்பத்தாரிடம பணம் வாங்கிக் கொண்டு சுட்டதாகப் பிறர் எண்ணும்படி அமைந்துள்ளதே! இப்படிப் போட்டுத்தள்ளும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் காவல்படுகொலைகள் நிற்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக