வெள்ளி, 19 நவம்பர், 2010

இலங்கை மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் உதவி

தமிழக மீனவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் சிங்களர்களுக்கு அறிவு வருவதில்லை. சிங்கள அரசும் இந்திய அரசும் தமிழக மீனவர் படுகொலைகளுக்கு வாய்மூடி இருந்தாலும் சிங்கள மீனவர்களாவது  எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? இனியாவது மனித நேயத்துடன் நடந்து கொள்ளட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவி


நாகப்பட்டினம், நவ.18: கோடியக்கரை அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்து கரைக்கு அழைத்து வந்தனர்.இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது விசைப்படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் கரைதிரும்ப முடியாமல் தத்தளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் அவர்களை மீட்டு கோடியக்கரை கரைக்கு அழைத்துத் வந்தனர்.பின்னர் அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக