செவ்வாய், 16 நவம்பர், 2010

தலைவர் பிறந்த நாள்! தமிழர் தலை நிமிர்ந்த நாள்!

தமிழர் வீரத்திற்கும் மானத்திற்கும் ஒரு குறியீடு; தமிழர் மானம் காத்த சேரன் செங்குட்டுவனின் மறு பிறவி;  வாராது வந்த மாமணியாய்த் தோன்றித் தமிழர் மானம்  காக்கப்படை அமைத்த மாவீரர்;  தன்மானத்தையும் தன்மதிப்பையும் காக்கும் உணர்வுள்ள  இருபால் இளைஞர்களை ஒன்று சேர்த்த  போராளி; உலகிலேயே கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடைய ஒரே படையணியை அமைத்த  படைத்தலைவர்;மக்களோடு மக்களாய் வாழும்  மனிதநேயத்தலைவர்  ; வஞ்சகர்களால் களத்திலே பேரிழப்பைச்சந்தித்தாலும்  இறுதியில் வாகை சூட உள்ள தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழிய! வாழிய! வையம் புகழ வாழ்வாங்கு வாழ்க! வளமாக நலமாக வாழ்க! என்றென்றும் வாழ்க! வாழ்த்துகளுடனும் வணக்கங்களுடனும் 
இலக்குவனார் திருவள்ளுவன், தி.அன்புச் செல்வி, தி.ஈழமலர், தி.ஈழக்கதிர், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்க்காப்புக் கழகம், தமிழ்க்காப்பு அமைப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக