ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஒச்சாயி தமிழ்தான்: தா.பாண்டியன்

சென்னை, அக்.24: ஒச்சாயி என்ற பெயர் தமிழ்தான் என்றும், அப்பெயரில் எடுக்கப்பட்ட படத்துக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி - தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம்.தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.'ஒச்சாயி'' என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும்.எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

தமிழ் வளர்த்த பாண்டியர் பெயர் வைத்துள்ளதால் உங்கள் சொல்படி கேட்க வேண்டும் என்று இல்லை. விதி என்றால் விதிதான். ஒன்று கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் பெயருடன் சேர்த்து விளக்கம் இருக்க வேண்டும். படத்தயாரிப்பாளர் வெளியாளாக இருந்தாலும் வெளியீட்டாளராவது சுற்றமாகவும் வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும். எனவே, வெறும் தமிழ்ப் பெயர் வைத்து எங்களை இழிவு படுத்துவதால் உதவ இயலாது. இப்படியே விட்டால் தாய்மொழி என்னும் குறுகிய வட்டத்திற்கள் அனைவரையும் அடைத்து விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டடியுள்ளது. இவ்வாறு உரியவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். எதற்கு வம்பு? ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து விடச் சொல்லுங்கள். உதவி கிடைக்கும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக