புதன், 27 அக்டோபர், 2010

2 தமிழக அமைச்சர்களை பதவீநீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்


சென்னை, அக்.27: கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரை சிறைக்கு சென்று சந்தித்த வீரபாண்டி ஆறுமுகத்தையும், கம்யூனிஸ்டு கட்சியினரை மிரட்டிய தா.மோ.அன்பரசனையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.அவ்வாறு நீக்கவில்லை எனில் திமுக அரசைக் கலைத்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் குப்புராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்தக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாநில குற்றப் புலனாய்வுத் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், அவரை கைது செய்தது.  இந்தச் சூழ்நிலையில், சுரேஷ்குமாரை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சைரன் பொருத்தப்பட்ட, தேசியக் கொடி கட்டப்பட்ட அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து சேலம் மாநகர மேயர் உள்ளிட்ட பலரும் கொலையாளி சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர். கொலைக் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ள அமைச்சருக்கும், மேயருக்கும் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அமைச்சரின் நடவடிக்கையின் மூலம், உண்மையான அரசு தப்ப வைத்துவிடுமோ என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.  தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருக்கும் தா.மோ. அன்பரசன் சில நாட்களுக்கு முன்பு, 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊருக்கு ஒருவர் உள்ளார்.  நாங்கள் நினைத்தால், நீங்கள் கூட்டம் போட முடியுமா? அடக்கி வாசியுங்கள் ... இல்லை என்றால் தெருவில் நடமாட முடியாது ... ஜாக்கிரதை' என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார்.  சட்டம்-ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்தால், உடனடியாக சேலம் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவும்; வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதை செய்யவில்லை என்றால், சட்டம்-ஒழுங்கைக் காக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என்ற அடிப்படையிலே தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உண்மையான அரசு தப்ப வைத்துவிடுமோ >இந்த இடத்தில் உண்மையான குற்றவாளியை அரசு தப்ப வைத்து விடுமோ என்றிருக்க வேண்டும். திருத்துக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தலைவிக்காக அப்பாவி மாணவிகளை உயிரோடு எரித்த குற்றவாளிகளை முன்னாள் அமைச்சர் சென்று சந்தித்தது போல்தான் இதுவு்ம் என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும் அரசு ஊர்தியைப் பயன்படுத்தியதைத் தவிர்த்திருக்க வேண்டும். )
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 4:12:00 PM
Shenkotaiyan and Jeyakumar came to see us at jail. Please hang them with us.
By Thurumapuri bus burning convicts
10/27/2010 4:10:00 PM
கருனானிதி ஒரு பினம் அவனகு எங்க ??????????
By KASAMALM KARUNANIDHI
10/27/2010 3:55:00 PM
நீ எங்காவது ஓடிபோய்டு தழிழ்நாட்டில் கல்லால் அடித்து விரட்டிவிடுவார்கள்
By ராவணன்
10/27/2010 3:50:00 PM
அடங கொம்மா உன்ன எங்க போய் தேடுறது? கொடனாட்டுலையா? இல்லை சிருதாவூர்லையா? இல்ல, ஆந்திர எல்லையிலேயா ? இல்ல மல்லையா வீட்டு தோட்டத்துலையா? வந்துட்டா யோக்கியமாட்டம். பத்து வருஷம் நீ ஆட்சி செஞ்சே. ஆனா தமிழ்நாட்டு மக்களை பத்து வருஷம் கைதியா ஆக்கிட்டே. பாதி தமிழ்நாட்ட கொள்ளையடிச்சு சசிக்கு எழுதிவச்சிட்டே. இன்னும் மிச்சம் மீதி இருக்கிறத கொள்ளையடிக்கவா உனக்கு பதவி ஆசை. அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை நிம்மதியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? தமிழ்நாட்டுல இனிமே தமிழனுக்கு தான் தலைமை பதவி....
By Kannappan
10/27/2010 3:46:00 PM
மாறுதலுக்கு இந்த அம்மணி ஜெஜெ சொல்வது அர்த்தம் உள்ளதாக உள்ளது. முக நாட்டின் நலம் கருதி இந்த அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். செய்வாரா ?.
By Appan
10/27/2010 3:07:00 PM
ஒரு மாநில அமைச்சர் கொலையாளிக்கு ஆறுதல் சொல்கிறார், கொலை செய்யப்பட குடும்பத்தினரை இது மறைமுகமாக மிரட்டுவது போல் உள்ளது.ஒரு மந்திரியின் ஆதரவும் ஒரு ஆளுங்கட்சியின் சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ள ஒரு கொலையாளியை எதிர்த்து எப்படி சாட்சி சொல்ல முன்வருவார்கள்.ஒரு மத்திய அமைச்சர் தினகரன் எரிப்பு குற்றவாளிக்கு ஆதரவு. ஒரு முன்னால் திமுக அமைச்சர் கடத்தல், கொலை மிரட்டல்லில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டார். தா மோ அன்பரசன் கொலை செய்து விடுவோம் என்கிற தொனியில் மிரட்டுகிறார். இந்த அமைச்சரவையின் தலைவர் கருணாநிதி இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு அவர் குடும்பம் சம்பாதித்தால் போதும் நாட்டில் என்ன நடந்தால் என்ன என்ற போக்கில் சினிமபடங்களுக்கு கதை எழுதுகிறார். அவருடைய ஐந்து வருட ஆட்சியை கதையை எழுதினால் ஒரு மிகப்பிரமாண்டமான வண்முறை படமாக அவர் குடும்ப உறுப்பினர்களின் திரைப்பட நிறுவனங்கள் சேர்ந்து எடுக்கலாம். நிஜக்கதானாயகர்கலாக அவர்களே நடிக்கலாம்.
By raja
10/27/2010 2:41:00 PM
அப்போ விளாதிகுளம் எம் எல் ஏ விசயத்தில் சத்தம் காணோம். ஒ, அது அம்மா கட்சி ஆள்
By manoharan
10/27/2010 2:37:00 PM
கொலை செய்யவதற்கு உடந்தையாய் இருந்தவருக்கு (நளினி) சிறைக்கு சென்று சந்தித்த சொக்க தங்கம் சோனியா காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழன் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு நீக்கவில்லை எனில் காங்கிரஸ் அரசைக் கலைத்து, இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் - இது எப்படி இருக்கு...
By தகரபாலு
10/27/2010 1:33:00 PM
இன்னும் ஆட்சியி ல் உள்ளதா நினைப்பு நினைப்பு புழைப்பை கெடுத்துஞ்சா
By Siva
10/27/2010 1:22:00 PM
HELLO SELVI, COMPARING YOUR PAST GOVERNMENT, THIS GOVERNMENT IS FARE BETTER. IF WE WANT TO PUBLISH YOUR PAST THERE WILL BE NO SPACE IN THIS ( கருத்தைப் பதிவு )SO SUCH KIND OF NAUGHTY/UGLY THINGS YOU AND YOUR PARTIES DID IN THE PAST.
By pugazhendhi s
10/27/2010 1:09:00 PM
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கருணாநிதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜெயலலிதா வழக்கம் போல் உறங்கிவிட்டு, ஒரு வாரம் கழித்து இதை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் உட்பட பலரும் ஏற்கனவே இந்த சத்திப்பை குறை கூறியுள்ளனர். கருணாநிதி இதில் தயங்கினால், முதலமைச்சருக்கு உரிய மரியாதை அவருக்கு இல்லை.
By K Rajan
10/27/2010 12:50:00 PM
Minister Domodharan (Alandur Consitiuency) & Pallavaram Municipality Chairman E.Karunanaidhi have made more than 1000 crores in last 4 years and have puschased property in benami names. CBI should Investigate this. JJ madam pls include this in your demand as well
By Whistle blower of Pallavaram Municipality
10/27/2010 12:15:00 PM
Well said Madam You always hit the nail on its head
By Sundar
10/27/2010 12:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக