ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மிழகத்தில் மாற்றம் ஏற்படும்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ


திண்டுக்கல், அக். 22: மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்குவதன் மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.    தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுவரும் இளைஞர் காங்கிரஸ் குழு, வியாழக்கிழமை இரவு திண்டுக்கல் நகருக்கு வந்தது. அப்போது யுவராஜா கூறியதாவது: கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரைக் குழு பிரசாரம் மேற்கொள்கிறது.    1,250 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளோம். மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறுவதே எங்கள் நோக்கம். இதன்மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்.    மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவதில்லை. கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் கடமை காங்கிரசுக்கு உண்டு. ஆட்சி முடிந்த பின்னரும், தங்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.    முன்னதாக, குள்ளனம்பட்டிக்கு வந்த யாத்திரைக் குழுவினரை காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.      
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்திலுள்ள தேசிய இனங்களை ஒடுக்கி அயல் இனமாகிய ஆரிய இனத்தை மட்டும் வளரச் செய்வதிலும் ஊழல் பெருக்கத்திலும் சுண்டைக்காய் நாட்டிடம் தமிழ் மீனவர்களைக் காவு கொடுப்பதிலும் தமிழினத்தை இலங்கைத் தீவில் ஒழித்து வருவதிலும் தன் நாட்டுப் பகுதிகளை அயல்நாட்டிடம் பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலையிலும் காங்கிரசே முழுமையான சாதனை புரிந்துள்ளது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு்ளார்கள். காங். வீழ்ந்தால் இந்தியா வலிவும் பொலிவும் பெறும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:30:00 AM
தம்பி யுவராஜ் அவர்களே! தமிழரை, இலங்கை அரசு வெற்றி கொண்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பலருக்கும் புரிந்திருக்கிறது. அதுவும் சென்ற தேர்தலின் முடிவு அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கக் கூடும் என்ற நிலை தெரிந்த பின்னரே பிரபாகரன் கொல்லப்பட்டார். வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு மாற்றம் வரும். வளர்ச்சியா? வீழ்ச்சியா? தமிழக மக்கள் சரியான தீர்ப்புத் தருவார்கள்.
By நாடோடி
10/23/2010 9:25:00 PM
ANNAN YUVARAJA VALHA! JAYA AMMAYAR VALARHA!KARUNA OLIHA!
By INDRAJIT, KANGEAYAM
10/23/2010 12:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக