செவ்வாய், 7 செப்டம்பர், 2010

வெளியுறவு அமைச்சக பணியில் மகளுக்கு சலுகை: தென் கொரிய அமைச்சர் ராஜிநாமா


சியோல், செப்.6: தென் கொரிய வெளியுறவு அமைச்சர் யு மிங்-வான் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். வெளியுறவு அமைச்சக விதிமுறைகளை மீறி தனது மகளுக்கு சிறப்புச் சலுகைகள் காட்டியதாக இவர் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் லீ மிங்-பாக்-கிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் லீ அமைச்சரவையிலிருந்து பதவி விலகும் நான்காவது அமைச்சர் யு மிங் வான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் லீ-க்கு பெரும் பின்னடை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சரின் மகளுக்கு சலுகை காட்டிய விவரம் வெளியுறவு அமைச்சகத்துக்கு முன்னரே தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தணிக்கையாளர்கள் சோதனைக்கு பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் சில பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஐந்து பேரடங்கிய குழு நேரடித் தேர்வு நடத்தியது. இதில் மூன்று பேர் வெளியுறவு அமைச்சகத்தைச் சாராதவர்கள்.நேரடித் தேர்வு முடிவில் வெளியிலிருந்து வந்த மூன்று பேர் மற்றொரு போட்டியாளருக்குஅதிக மதிப்பெண் அளித்துள்ளனர். ஆனால் அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அமைச்சரின் மகளுக்கு அதிக மதிப்பெண் அளித்துள்ளனர். முடிவில் அமைச்சரின் மகளுக்கு இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சக அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.1973-ம் ஆண்டு வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தவர் யு மிங். தனது அமைச்சகத்துக்கும், அமைச்சக நண்பர்களுக்கும் தொந்தரவு கொடுத்துவிட்டதாகவும், அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக யு மிங் தெரிவித்துள்ளார். 
கருத்துக்கள்

விவரம் தெரியாத கொரியா அமைச்சர். இந்திய அரசியல்வாதிகளிடம் வந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் இலக்கணத்திற்கே களங்கம கற்பித்து விட்டார் என்று இந்திய அரசியல் வாதிகள் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளனர். இப்பொழுது ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. இதைக் கொண்டே எவ்வாறு மீண்டும் அமைச்சர் பதவி பெறுவது என்பது குறித்துத்த் தெரிந்து கொள்ள இந்தியா வரட்டும் யு-மிங்-வான் 
பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2010 4:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக