ஆமதாபாத், செப்.6- மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
"காவி நிறம் என்பது இந்து மதம் மற்றும் துறவிகளின் அடையாளமாக உள்ளது. அது கடவுள், அமைதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும்." என்று சுவாமி நிஜானந்த் தீர்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தவே முன்னிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. இதில், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போஸீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 25-ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
"காவி நிறம் என்பது இந்து மதம் மற்றும் துறவிகளின் அடையாளமாக உள்ளது. அது கடவுள், அமைதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும்." என்று சுவாமி நிஜானந்த் தீர்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தவே முன்னிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. இதில், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போஸீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்
9/6/2010 6:10:00 PM
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:08:00 PM
9/6/2010 6:08:00 PM
By வீர ஹிந்து முத்துபேட்டை ...
9/6/2010 5:50:00 PM
9/6/2010 5:50:00 PM
By Hindustan-Kuruvi
9/6/2010 5:46:00 PM
9/6/2010 5:46:00 PM
By கோழி
9/6/2010 5:44:00 PM
9/6/2010 5:44:00 PM
By rajasji
9/6/2010 5:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/6/2010 5:26:00 PM