சனி, 21 ஆகஸ்ட், 2010

மாநில உரிமைகளில் தில்லி தலையிடுகிறது: முதல்வர் கருணாநிதி


சேலம், ஆக. 20: மாநில அரசுகளின் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.சேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.39 கோடி கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.273 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.36 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து கருணாநிதி பேசியது:சேலத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது திறப்பு விழா காணும் இந்தப் புதிய அலுவலகம் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 51 துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு மிகப் பெரிய அலுவலகமாகத் திகழ்கிறது. இதேபோல் ரூ.139 கோடி மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன மருத்துவமனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானதாகத் திகழ உள்ளது.நுழைவுத் தேர்வு:மருத்துவமனைகள் மத்திய அரசின் பொறுப்பில் வரும். அப்படி வந்தால் இனி நுழைவுத் தேர்வு உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுக  ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு இருந்தால்  கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது, உயர்ந்த பதவிகளுக்கு வர முடியாது என்ற காரணத்தால், நுழைவுத் தேர்வு என்னும் கதவு இல்லாமலேயே மாணவர்கள் முன்னேறி வர வசதியாக சட்டம் இயற்றினோம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதில் எந்தக் கட்சிக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. காங்கிரஸ், பாமக கட்சிகள் இதே கருத்து உடையவை. அதிமுக கூட நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மத்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறது, ஆனால் இவர் கடிதம் எழுதுகிறார் என்று அறிக்கை வெளியிட்டார்.கடிதத்தின் பலனே இது... நான் கோரிக்கைகளுக்காகவும், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன். நுழைவுத் தேர்வு குறித்த கடிதத்தில் சாமானிய குடிமகன்களின் வாழ்வை நுழைவுத் தேர்வு அழித்துவிடும் என்று தமிழக மக்களின் மனதை பிரதிபலித்து கடிதம் எழுதினேன். அதன் பலனாகத்தான் இப்போது நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு என்ற தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது.உரிமைகளை பறிக்கக் கூடாது: அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு எடுக்கும் முறையில் இருந்தால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.மத்திய அரசு எடுக்கும் நுழைவுத் தேர்வு முடிவானாலும், வரி விதிப்பு போன்ற எந்த செயலாக இருந்தாலும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிந்தே மத்திய அரசு  முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இங்கிருந்து எழும் குரல் பொதுவான விஷயங்களுக்கு ஒருமித்த குரலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றார் முதல்வர்.விழாவில், நிதி அமைச்சர் க.அன்பழகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், மத்திய இணையமைச்சர் காந்திச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது குறித்து தமிழ்நாட்டின் முசிபூர் இரகுமான் அவர்கள் வருத்தப்பட்டால் பயனில்லை. மாநிலத்தில் தன்னாட்சிக்கு உரிமை கொடுக்கும் அவர் பிற மாநில அரசுகளுடன் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டும்.தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் கடலோரக் காவலை மத்திய அரசிடம் ஒப்படைக்கக்கூறிய கருத்தையும் திரும்பப் பெற வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் முயன்று வெற்றி காண ‌வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 5:56:00 AM
நிருபாமா – கருணாநிதி: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் “போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ்,
By முத்தமிழ்
8/21/2010 4:43:00 AM
அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ், போர் நடந்த பகுதியில் தமிழர்களின் வாழ்வும், மறுவாழ்வுப் பணிகளும் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிய இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார். “எங்கே வீடு கட்டித் தரவேண்டும் என்று (சிறிலங்க அரசு) இடம் ஒதுக்கித் தருகிறார்களோ அந்த இடத்தில் இந்தியா வீடு கட்டித்தரும்” என்று கூறியுள்ளார்.” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியும்,
By முத்தமிழ்
8/21/2010 4:42:00 AM
இனப்படுகொலையின் பின்னணியில் செயலாற்றிய( தெலுங்கன் தட்சணாமூர்த்தி என்ற) மானில கருணாநிதி அரசு, மத்தியரசின் இத்தாலிய சோனியா இலங்கை இராயபக்ச‌ அரசு என்ற முக்கோண கூட்டணிக்கு எதிரான உணர்வலைகளும் இந்திய அரசிசைப் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவும் அதே வேளை தமிழ் நாட்டின் அதிகரித்துவரும் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மிகவும் நுணுக்கமான முயற்சியே இந்த உதவியின் பின்புலமாகும். உழைத்து வாழ்ந்த வன்னி மக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்களின் விளைநிலங்கள் பல் தேசிய முதலீட்டுக்காகவும், பௌத்த விகாரைகளின் புனிதப் பிரதேசங்களுக்காகவும், இராணுவக் குடியிருப்புக்களுகாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வளம்மிக்க நிலங்களை வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து
By முத்தமிழ்
8/21/2010 4:40:00 AM
வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து அவற்றில் சிங்களக் குடியேற்றங்களையும்,இந்திய- பல்தேசியக் நிறுவனங்களை அமைக்கவும், இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுவதற்கான அறிகுறியே இந்த உதவியின் சாராம்சம். தவிர, இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு நிதிக் கொடுப்பனவுகளிலிருந்து வழங்கப்பட்ட பணத்தில் அரசால் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு அடிப்படையான உதவிகள் கூட வழங்கப்படவில்லை. புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசு திட்டமிட்டது போல எழுச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ் நாட்டில் இதனை மட்டுப்படுத்தி அழிப்பதற்கான ஆயுதமாகவும் இந்த உதவி பயன்படுத்தப்படுகிறது. தமிழ்ப் பேசும் மக்களின் இனச் செறிவைக் குறைத்து அவர்களின் அடையாளத்தை அழிக்கும் இலங்கை – இந்திய அரசுகளிகளின் முதல் நோக்கமும் எழுச்சிகளை ஒடுக்கும் இரண்டாவது நோக்கமும் கொண்ட இலங்கை அரசிற்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகள் இனம்காணப்பட வேண்டும்.
By முத்தமிழ்
8/21/2010 4:39:00 AM
Congress politcians suck poor people money and live in Ac rooms, travel in AC cars, Go aboroad , send their children to America to study. Our Chilren study under the trees, no tailets, no teachers . Are Poor indian so stupid still believe in congress party. Congress is dead after Mahathma Gandi is dead. jey hinth!இந்திய எம்.பி.க்கள் சம்பளம் உயர்வு இந்திய நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 3 மடங்காக அதிகரிக்க இந்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த உயர்வு போதாது என்று பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மாதம் 16 ஆயிரம் ரூபாயாக உள்ள சம்பளம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர, தினப்படி, தொகுதி சுற்றுப்பயணப்படி, அலுவலக ஊழியர் ஊதியம், இலவச விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், அரசுத்துறைச் செயலர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் புகார் கூறுகிறார்கள். அரசுத்த
By Vadivel
8/21/2010 3:56:00 AM
Sir.Karunanithi Iyaaa it is too late ! Sonia madam and Rahul sir chested you and yamilnadu people. They want distroy DMK as Stilankan Tamils in Srilanka. It is the tuth. Still you don't understand who is Sonia jajeeve gandi madam is.They betrays all Tamil people by Killing the freedom fighters who wanted freedom for Tamils. Sorry Sir, you have about 50 years experience in politics;but, you do not understand Italian womens sir.
By George
8/21/2010 3:50:00 AM
It was said that hindia did not interfere in eelam affairs. So we won't believe that hindia govt is interfering in tamil nadu affairs. Ass hindia had not interfered in the tamil nadu affairs. Screw yourself karuna ni(kabo)dhi.
By jandian
8/21/2010 3:42:00 AM
நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு. சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட் டுள்ளமையினை மிகவும் கவலைக்கும் கண்டனத்து க்குரிய விடயமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குகிறது.திரு சீமான் தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மக்களுக்குமாக எழுப்பும் ஆதரவுக்குரல் ஒடுக்கப்படும் மக்களுக்கு நியாயம் கோரும் வகையிலானது. எல்லை தாண்டும் சிறீலங்காவை அச்சுறுத்தக்கூடியது. சீமான் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறியீட்டு வடிவில் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்து விடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.எனவே தமிழக அரசு இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுத்த திரு.சீமான் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக ஆவன செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கின்றது.செயலகம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் secretariat@tgte.org
By naam tamilar
8/21/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும்....Well said Ilakkuvanar..wonderfull arguement.
By Seralaathan-Melbourne
8/21/2010 7:36:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக