செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கூட்டணி பற்றி விமர்சித்தால் நடவடிக்கை: தங்கபாலு


கோவை, ஆக.16: திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூட்டணி பற்றி விமர்சனம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கோவையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். சென்னையில் டிசம்பர் மாதத்தில் சோனியா காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.   தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக தலைமை மற்றும் திமுக தலைமை இடையே எவ்வித உரசலும் இல்லை. காங்கிரஸ்-திமுக உறவில் யாரும் குறுக்கே வர முடியாது. அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இதுவரை நான் விமர்சித்துப் பேசவில்லை. மற்றவர்கள் விமர்சித்துப் பேசுவது முறையல்ல. திமுகவை பற்றி தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது.  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. எனவே, தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சியை பலப்படுத்துவதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை தெரிவிக்க தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்றவர்கள் கருத்து அதிகாரபூர்வமானது அல்ல.  அதிமுக, திமுக கட்சியின் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது இயல்பான விஷயம். அது பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்பட வேண்டியது இல்லை. காங்கிரஸ் கட்சியில் புதிதாக 14 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.  வரும் தேர்தலில் மகளிர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்படும். இளைஞர்களுக்கும் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படும் என்றார்.
கருத்துக்கள்

ம்! கலைஞருக்காக இவ்வாறு அறிவிக்கிறாரே தவிர, கோவன் மீதும் கார்த்திக்பாவ மீதும் நடவடிக்கை எடுக்க இயலாதவராகவே இருக்கிறார். அவர்களை ஆட்டுவிப்பவர்கள் யார் என்று இவருக்கும் தெரியும். இருப்பினும்தான்தான் தலைவர் என்பதைத் தனக்குத்தானே நினைவூட்டுவதற்காக அவ்வப்பொழுது இவ்வாறு அரைத்த மாவை அரைக்கிறார். இனிக் கிளிபபிள்ளை போல் சொன்னதையே சொல்லாமல் விளக்கமாவது கேட்க வேண்டும்.அல்லது தமிழினப் பகையான காங்கிரசிற்குத் தி.மு.க. முத்திரை தேவைப்படுவதை உணர்த்திக் காங்.கிடையே கூட்டங்களாவது போட வேண்டும்.அல்லது அதற்கும் வாய்ப்பில்லையேல் அமைதி காக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/17/2010 3:35:00 AM
சமீபத்தில் பம்பாய் துறைமுகத்தில் மோதிக்கொண்டு மூழ்கிய இரண்டு கப்பல்களைப் போல ...தி மு க வும் காங்கிரெஸ்ஸும் உரசிக் கொண்டு மூழ்கிக் கொண்டிருக்கிறது !....இருந்தும் நீங்கள் கவலைப் படாதீர்கள் !! எங்கள் புரட்சித் தலைவியிடம் சொல்லி ஒரு ஹெலிகாப்ட்டர் ஒன்றினை அனுப்பி வைக்கிறோம் ! கூடிய வரையில் கப்பல் சிப்பந்திகளையும்... மாலுமிகளையுமாவது மீட்டுக் கரைசேர்க்கிறோம் ! உடைந்து போன காகிதக் கப்பலைப் பற்றிக் கவலைப் படாமல் மீட்புப் பணிக்கு வரும் எங்கள் கழக தோழர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கரைசேர்ந்து கடைத்தேற வேண்டுமாய் பணிவன்புடன் வேண்டுகிறேன் ! நன்றி !!! @ rajasji
By rajasji
8/17/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக