வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசு கைவிடும்?


சென்னை, ஆக.19: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.  இவ்வாறு முடிவை நிறுத்திவைப்பதற்கு முன்னோட்டமாக, மருத்துவ பொது நுழைவுத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கை வெளியிடுவதை மத்திய அரசு வியாழக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் மாணவர்கள் சேர, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுதும் நடைமுறையை இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.  மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்து மகாராஷ்டிர மாநில சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வு முறை கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினார்.  இதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே உள்ள வழக்கில் தங்களையும் வாதியாக இணைத்துக் கொள்ளுமாறு, தமிழக அரசு புதன்கிழமை, மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.மாநிலங்களவையில்... மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும்  பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தக் கூடாது என்று தி.மு.க. உறுப்பினர் சிவா, அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழகத்தில் பொறியியல்-மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். இவ்வாறு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்பது, மாநிலங்களின் உரிமையில் தலையிடும் செயலாகும் என்று அவர்கள் கூறினர்.மக்களவையில்...பொது நுழைவுத் தேர்வு பிரச்னையை மக்களவையில் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் மு.தம்பிதுரை எழுப்பினார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார் தம்பிதுரை.
கருத்துக்கள்

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் முதன்மை எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு எதிர்ப்பைக் காட்டியதன் விளைவு இந்திய நிலயிலான பொதுத் தேர்வு நீக்கப்படுகிறது. இதே ஒற்றுமையை அனைத்து நிலைகளிலும் காட்ட வேண்டும். ஆளும்கட்சிக்குப் பொதுத் தேர்வு வேண்டா என்னும எண்ணம் இருந்தாலும் எதிர்க்கட்சியும் இதனைப் போராட்ட ஆயுதமாக எடுத்ததால்தான் வெற்றி கிட்டுகிறது. எனவே, எதிர்க்கட்சி சிறப்பாகச் செயல்படும்பொழுதுதான் வெற்றி பெற இயலுகிறது. இல்லையேல் எத்தனையோ மடல்கள் அடைந்த குப்பைத்தொட்டி நிலைதான் இது தொடர்பான கடிதத்திற்கும் ஏற்பட்டிருக்கும். மாறாக நற்பெயர் வாங்குவதில் ஏற்பட்ட போட்டிப் பாராளுமன்றத்தில் ஒரே குரலாக எதிரொலித்து நன்மையில் முடிந்துள்ளது. இனிமேலாவது தமிழ் உரிமை, தமிழக உரிமை, தமிழர் தாயக உரிமை, உலகத் தமிழர் உரிிமை என எல்லாவற்றிலும் ஒத்த கருத்தில் இணைந்து குரல் கொடுக்கும் நிலை வரவேண்டும். 
வாழ்க தமிழினம்!வெல்க தமிழர் தாயகம்! உலகத் தமிழர் உரிமையுடன் உயர்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 4:21:00 AM
தெலுங்கராக வாழ்ந்துகொண்டு தமிழனாக நடிக்கும் கருணா(க) நிதி மத்தியில்.. .இராமசாமி இவனல்லவா மான‌ தமிழன் மலேசியாவின் ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் P.இராமசாமியும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.குலசேகரன் அவர்களும் உள்ளடங்கிய பிரத்தியேக குழு இலங்கைத் தீவில், இலங்கை இராணுவத்தினால், மே மாதம், 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என பேராசிரியர் ராமசாமி அவர்கள் இன்று கோலலம்பூரில் தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் தெரிவித்தார்.. தமிழர்களின்தாயக‌ பகுதிகளில், இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும் வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர்
By gopu
8/20/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 
பொது நுழைவுத் தேர்வை அறவே நீக்கியது திமுக: கருணாநிதி


மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை நிறுத்திவைத்தது மத்திய அரசு

First Published : 21 Aug 2010 12:00:00 AM IST



தமிழகம்
பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: ஜெயலலிதா
First Published : 20 Aug 2010 12:42:32 AM IST

Last Updated : 20 Aug 2010 03:18:35 AM IST
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக