வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஈழத்தமிழர் சிக்கலுக்கு உடனடித் தீர்வு முடியாது: நவநீதம் பிள்ளை

இலங்கை தமிழர்  சிக்கலுக்கு உடனடியாக த் தீர்வு காண முடியாது: நவநீதம் பிள்ளை










இலங்கையில் நடைபெற்ற போரின் போது மனித உரிமை விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை 7 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்குள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு பணிகளை பார்வையிட்டார். பின் யாழ்பாணத்தில் உள்ள மைய நூலக கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது காணாமல் போன தமிழர்கள் விவகாரம் குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசிப்பேன் என்று நவநீதம்பிள்ளை தமிழர்களிடம் கூறினார். மேலும் தற்போது வாழும் இடம் குறித்தும் ராணுவம் நிலங்களை பறித்தது தொடர்பாகவும் ஆலோசிப்பேன் என்றும். இலங்கை தமிழர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என்றும் கூறினார்

அமெரிக்கா மீது வழக்க - ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை, 1953-ம் ஆண்டு சதி செய்து கவிழ்த்த குற்றத்துக்காக அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு முதல்நிலை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பங்கேற்ற 196 உறுப்பினர்களில் 167 பேர் மசோதாவை ஆதரித்தும், 5 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து, விசாரணை அறிக்கையை 6 வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அமெரிக்கா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மூளைச்சாவு: விசைத்தறியாளரின் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_791042.jpg

மூளைச்சாவு அடைந்த விசைத்தறியாளரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு க் கிடைத்தது மறுவாழ்வு
அவிநாசி:அவிநாசி அருகே, சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, விசைத்தறி உரிமையாளரின் உடல் உறுப்புகள், தானம் அளிக்கப்பட்டன. அதனால், ஏழு பேர் மறு வாழ்வு பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தண்ணீர்ப்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர், சிவசாமி, 57; விசைத்தறி உரிமையாளர். தெக்கலூர் விசைத்தறி உரிமையாளர் நலச்சங்க பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த, 21ம் தேதி காலை, இருசக்கர வாகனத்தில், அன்னூர் சென்றார்.நாகம்மா புதூர் பிரிவில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், கே.ஜி., மருத்துவமனையில் சேர்த்தனர். 23ம் தேதி, அவரது மூளை செயலிழந்தது. இதுபற்றி, டாக்டர்கள், சிவசாமியின் மனைவி மல்லிகா, மகன் அய்யாசாமி, மகள் செல்வி ஆகியோரிடம் தெரிவித்தனர்.உறுப்பு தானம் பற்றி அறிந்திருந்த, அவரது குடும்பத்தினர், சிவசாமியின் உறுப்புகளை தானம் அளிக்க, சம்மதம் தெரிவித்தனர். கே.ஜி., மருத்துவமனையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவமனை தலைவர், பக்தவச்சலம் தலைமையில், மருத்துவ குழுவினர், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வுகள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டு, ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன.

டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""விபத்தில் மூளைச்சாவு அடைந்த, சிவசாமியின் இரு சிறு நீரகங்களும், இரு கண்களும், கே.ஜி., மருத்துவமனையில் சிகிச்சை பெறும், நான்கு பேருக்கு, தலா ஒன்று வீதமும், இரண்டு இதய வால்வுகள், சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கு, தலா ஒன்று வீதமும், சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு, கல்லீரலும், வெற்றிகரமாக பொருத்தப்பட்டன,'' என்றார்.

சிவசாமியின் உடல் உறுப்புகளை தானம் பெற்று, ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதை அறிந்த, உப்பிலிபாளையம் கிராம மக்கள், அவரது குடும்பத்தினரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

கச்சத்தீவு பற்றிப் பேச வெளியுறவு த்துறை தடை

கச்சத்தீவு பற்றிப் பேச  வெளியுறவு த்துறை தடை
 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_791009.jpg
கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ளது. "நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கச்சத்தீவை மீட்பது குறித்து, பார்லிமென்டில் விவாதம் நடத்தப்படும் என, தமிழக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
தடைவிதிப்பு:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் அருகே, கச்சத்தீவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதையடுத்து, அந்த தீவு அருகில், நம் மீனவர்கள் மீன் பிடிக்கவோ, அந்தத் தீவில் வலைகளை உலர்த்தவோ கூடாது என, இலங்கை கடற்படை தடை விதித்து வருகிறது. அந்தப் பகுதிக்குச் செல்லும், நம் மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.நீண்ட நெடுங்காலமாக, கச்சத்தீவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்தக் கூட, இலங்கை அரசிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. "கச்சத்தீவு, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே, அந்தத் தீவை, மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எனினும், மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.கச்சத்தீவு விவகாரம் குறித்து, பார்லிமென்ட்டில், சிறப்பு விவாதம் நடத்த வலியுறுத்தி, தி.மு.க., எம்.பி.,யான இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., லிங்கம் ஆகிய இருவரும், சபாநாயகரிடம், நோட்டீஸ் அளித்துள்ளனர்.நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று, கேட்டு இருந்தும், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.இந்த சூழ்நிலையில் தான், கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் பேசுவதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.
ஒப்பந்தம் :

எம்.பி.,க்கள் சார்பில், இதுபோன்ற கோரிக்கைகளுக்காக, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் மூலம், சபாநாயகர் அலுவலகம் கருத்துக் கேட்பது வழக்கம்.அது போல், கச்சத்தீவு நோட்டீஸ் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்து, கடந்த, 5ம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின், இணைச் செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர்ஷ் வர்தன் சிரிங்லா என்பவர், பார்லிமென்ட் செயலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான, கடல் எல்லைகள் எவை என்பது குறித்து, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, இரண்டு ஒப்பந்தங்களில், இரு நாடுகளும் கையெழுத்தும் இட்டுள்ளன. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
முடிந்து போனது:

தன் கடல் எல்லைப் பரப்பில், எதையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. இருதரப்பும், ஒப்புக் கொண்ட படியே, எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு செய்ததில், கச்சத்தீவு, இலங்கை கடல் பரப்புக்குள் அமையும் படி ஆனது.எனவே, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி; இந்த விஷயம், முடிந்துபோன ஒன்று; அதை திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது.இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு; நெருக்கமான நட்பு கொண்ட அண்டை நாடாக, இலங்கை இருக்கும் போது, கச்சத்தீவு குறித்து, பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவது, ஏற்புடையது அல்ல. அவ்வாறு, விவாதம் செய்தால், இருநாடுகளின் நட்புறவில், மிகப்பெரிய தர்மசங்கடத்தை, ஏற்படுத்தும். எனவே, எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்க கூடாது. தவிர, இந்த தகவல்கள் எல்லாமே, வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தின் ஒப்புதலின் படியே தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இளங்கோவன் எம்.பி.,யிடம் கேட்ட போது, ""ஏற்கனவே நடைபெற்ற, அலுவல் ஆய்வுக்குழுவில், டி.ஆர்.பாலு இப்பிரச்னை குறித்து எழுப்பினார். இன்னொரு முறை, நானும் எழுப்பினேன். எனவே, இந்த பிரச்னையை விட மாட்டோம். இன்னும், நாட்கள் உள்ளன. எப்படியும், பார்லிமென்ட்டில், இந்த பிரச்னையை கிளப்புவோம்,'' என்றார்.
மற்றொரு எம்.பி.,யான லிங்கம், ""நானும் இப்பிரச்னை குறித்து, விவாதம் நடத்த வேண்டுமென்று, மறுபடியும் வலியுறுத்துவேன்,'' என்றார்.

- தினமலர் தில்லிச் செய்தியாளர் -

கோவை மாநகராட்சியில் மூலிகை உணவகம்!

"சுடச்சுட' கறிவேப்பிலை இட்லி, கருப்புக்கட்டிப் பணியாரம்...: கோவை மாநகராட்சியில் விரைவில் மூலிகை உணவகம்!

 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_791041.jpg
சென்னையை ப் போன்று, கோவை மாநகராட்சியிலும் மூலிகை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 1981 (?) இல் மூலிகை உணவகம் துவங்கப்பட்டு, மூலிகை தாவரங்கள், தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும், அதேபோன்று, மூலிகை உணவகம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர் பணியாற்றுகின்றனர். கவுன்சிலர்கள், மண்டல பணியாளர்கள், பொதுமக்கள் என, தினமும் 500 பேர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பிரதான அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைத்தால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், ரத்தக்கொதிப்பு நோயாளிகள் பயனடைவர்; அலுவலகத்துக்கு வருவோருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கும்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மூலிகை உணவகம் துவங்குவதற்காக, மருத்துவர்கள் கொண்ட குழு, சென்னை மாநகராட்சியிலுள்ள மூலிகை உணவகத்தை பார்வையிட்டுள்ளனர். கோவையில் கிடைக்கும் மூலிகை தாவரங்களின் அடிப்படையாக கொண்டு, பல்வேறு வகை இட்லி, அடை, பணியாரம் என, மூலிகை மணக்கும் மதிய சாப்பாடு தயாரிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

"மெனு' என்னென்ன?


பரிந்துரையில்,"மூலிகை உணவகத்தில், கருவேப்பிலை இட்லி, ஆவாரம்பூ இட்லி, துளசி இட்லி, திணை மற்றும் சாமை இட்லி வகைகள் தயாரிக்கலாம். முருங்கைக்கீரை, நவதானியம் மற்றும் முசுமுசுக்கை வகை அடைகளும், குழிப் பணியாரம், கருப்பட்டி பணியாரம் போன்றவையும் சமைக்கலாம். உளுந்து களி, சுக்கு களி, தினை மற்றும் எள் உருண்டை, இயற்கை லட்டு, சைவ ஆம்லெட் வகைகள் தயாரிக்கலாம். மூலிகை டீ, மூலிகை சூப் வகைகளும், மூலிகை பழரசங்களும் தயாரித்து விற்கலாம். மதிய நேரத்தில் புழுங்கல் அரிசி சாப்பாடு, ஆவாரம்பூ, முருங்கைக்கீரை, முடக்கற்றான் கீரை சாம்பார் வகைகளும், கொள்ளு, வேப்பம்பூ மற்றும் மணத்தக்காளி ரச வகைகளும், சுண்டை வற்றல், பூண்டு காரக்குழம்பு வகைகளும், இஞ்சி மற்றும் கருவேப்பிலை மோரும், பிரண்டை, கொள்ளு, தூதுவாளை துவையல் வகைகளும் வழங்கலாம்' என கூறப்பட்டுள்ளது.மூலிகை உணவகத்தை லாப நோக்கம் இல்லாமலும், மகளிர் சிக்கன சங்க நாணய உறுப்பினர்களை கொண்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை, மாநகராட்சி பொது நிதியில் செலவிடவும் திட்டமிட்டுள்ளனர்.


இன்று கவுன்சில் கூட்டம் :

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள் இருந்தாலும், "அம்மா' உணவகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் உணவகம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ளது. சென்னையில் உள்ள மூலிகை உணவகம் சிறப்பாக செயல்படுவதாலும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளதாலும், அதேபோன்று கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. நாளை (இன்று) நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டதும், அடுத்தகட்ட பணிகள் துவங்கும்' என்றனர்.

தன்தொழிலால் தன்னம்பிக்கை கிடைக்கும்!

 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79113120130829013015.jpg


தன்தொழிலால் தன்னம்பிக்கை கிடைக்கும்!
 

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச த்தொழிற் பயிற்சி வழங்குவதுடன், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி த் தரும், பி.கே.செரியன்: நான், சென்னை, கிண்டி மத்திய தொழில்நுட்ப பயிற்றுனர் மைய வளாகத்தில் உள்ள, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின், துணை இயக்குனராக பணியாற்றுகிறேன்.
இங்கு, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ், 1976ம் ஆண்டு முதல், மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் தந்து, வேலைவாய்ப்பை ஏற் படுத்தி தருவதுடன், ஊக்க தொகையையும் பெற்று தருகிறோம். 40 சதவீத உடல் ஊனத்தை தாண்டியவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, 51 முதல் 70ஐ.கியூ., உள்ள, 15 முதல் 50 வயதுள்ளவர்கள் மட்டுமே, பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்யலாம். இதற்கு, மாவட்ட மண்டல மறுவாழ்வு அதிகாரியின் சான்றிதழ் தேவை. ஆண், பெண், கல்வியறிவு என, எந்த தடையுமின்றி, தங்களின் திறமையின் அடிப்படையில் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இம்மையத்தில் பதிவு செய்த மாற்றுத் திறனாளிக்கு, இலவச கணினி பயிற்சி, தட்டச்சு, "ரேடியோ, டிவி' மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல், டெய்லரிங், போட்டோகிராபி, ஸ்கிரீன் பிரின்டிங், தங்க அளவு நிர்ணயித்தல் போன்ற பயிற்சிகளை, இலவசமாகவே வழங்குகிறோம். சுய வேலைவாய்ப் பை பெற விரும்பி னால், எம்.எஸ்.எம்.ஈ., (மைக்ரோ, ஸ்மால், மீடியம் என்டர்பிரைசஸ்) மூலம் உதவுகிறோம். மாற்றுத் திறனாளிக்கு தேவைப்படும், செயற்கை கை, கால்கள், மூன்று சக்கர சைக்கிள் வண்டி, காது கேட்கும் இயந்திரம், பார்வை குறைபாட்டிற்கு தொடு உணர்வு கருவி, டேப்ரெக்கார்டர் போன்ற கருவிகளையும், இலவசமாக வழங்குகிறோம்.
எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல பெரிய நிறுவனங்களில், பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். தொடர்புக்கு: 044- 2250 1534.

புதன், 28 ஆகஸ்ட், 2013

உலகத்திருமுறை மாநாடு 2013


Rajapaksa party brings in gangster politics

Rajapaksa party brings in gangster politics to Jaffna

[TamilNet, Wednesday, 28 August 2013, 06:45 GMT]
A clash between two factions of the SL President Mahinda Rajapaksa’s UPFA alliance in Jaffna ended up in gunfire on Tuesday in Thenmaraadchi, Jaffna. SLFP Jaffna organiser Mr Ankajan Ramanathan’s group and Mr Saravananthan’s group in Thenmaraadchi were chasing each other in vehicles, from Kodikaamam to Chaavakach-cheari. At the end, Saravananthan’s squad smashed vehicles belonging to Ankajan’s squad. Ankajan's father Ramanathan, who was armed with a handgun, opened fire on Sarvananthan’s group, seriously wounding a Saravananthan supporter, the sources further said. Ankajan’s’s gang was also behind the death threat to a TNA candidate in Jaffna, Mr Thambirasa.

Following the complaints of death threats to the TNA MP, SL Election Commissioner Mahinda Deshapriya had instructed the SL police in Jaffna to remove arms from private persons. But, backed by SL presidential sibling Basil Rajapasa, Ramanathan’s squad is in possession of modern guns, informed sources said.

Sarvananthan, who had defected from the UNP and joined the UPFA recently and the SLFP’s official organizer of Jaffna district, Ramanathan Ankajan, have been competing with each other in recent times.

Sarvananthan, who comes from Kodikaamam in Thenmaraadchi, was a business co-partner with the late T. Maheswaran, who was assassinated in Colombo in 2008.

Sarvanathan entered into politics after T. Maheswaran, and was elected as a councilor to Chaavakach-cheari town council in the last civic elections. Later, he joined the UPFA.

Sarvananthan, backed by SL presidential sibling Basil Rajapaksa, is a UPFA candidate in the provincial council elections. The SL military in Thenmaraadchi also backs him.

But, Ramanathan Ankajan gets the backing of SL military commander in Jaffna Major General Mahinda Hathurusinghe and the blessings of another SL presidential sibling, Gotabhaya Rajapaksa.

Mr Mudiyappu Remedius who is a human rights lawyer, Mr Shiraz, a Muslim representative, Mr Ponnambalam, a fishermen society representative and Mr Akilathas, a trade union representative from Vadamaraadchi, are the others encouraged as UPFA candidates by the commander of the occupying SLA.

The ruling Rajapaksa alliance has been encouraging various agents as independent groups and UPFA alliance partners to split the votes in the North in the forthcoming provincial council elections.

Navi Pillay meeting Tamils in Jaffna ended in eyewash

Navi Pillay meeting Tamils in Jaffna ended in eyewash, say Tamil activists


The UN Human Rights Commissioner Navanetham Pillay met a group of 15 Tamil rights activists and civil representatives at the UN office in Jaffna. While she spent more time with the Sri Lankan State officials, the independent Tamil activists were given just 90 seconds each to present their cases under 8 different themes that included the cases of missing persons, detention of prisoners, land grab, colonization and attacks on religious institutions.

The rights activists said they were not provided enough time to make their cases and complained that the entire tour has ended as another eyewash or even farce.

The mother of Dilruxon, a Tamil youth, who was slain inside the prison in Vavuniyaa following a protest, narrated to Navi Pillay what had happened to her son in the Sri Lankan detention.

In the meantime, the SL military and the Colombo Establishment had brought Sinhala protestors to stage counter-protests in Jaffna.

The Sinhala gangs were held at standby at some halls in the city to launch counter-strikes.

But, as Navi Pillay didn’t reach out to the Tamil victims who had gathered in front of the Jaffna Public Library, the Sinhalese ‘protesters’ didn’t have an opportunity to stage any counter-protest, informed sources told TamilNet.

Chronology:

SL forces chase out Tamils waiting to see Navi Pillay

SL forces chase out Tamils waiting to see Navi Pillay in Vanni

[TamilNet, Wednesday, 28 August 2013, 00:47 GMT]
Sri Lankan military intelligence and SL policemen brutally attacked and chased out a group of 30 families and relatives of missing persons, who had gathered near Paranthan junction in Ki’linochchi district on Tuesday to express their message to the visiting UN Human Rights Commissioner Ms Navanetham Pillay. The families had come as they were told that Navi Pillay would be traveling through A9 on a visit to Mu’l’li-vaaykkaal from Jaffna. Commenting on the nature of the public response to Ms Pillai’s visit to the North, observers said that had Ban Ki Moon come, people wouldn’t have cared or even if they had gathered they wouldn’t have shed tears but would have responded differently.

When the UN Secretary General Ban ki Moon thought of ‘visiting’ the Tamils in the barbed wire camps after the war, they didn’t even want to stand up.

Commenting on the outcome of public response to Navi Pillai, the observers said that every renewed faith shown by people towards global organisations meant for humanity are thwarted by the Establishments of vicious agenda that have hijacked those organisations. The course of the case of Eezham Tamils is one such that has to be carefully perused by human civilisation in planning for future on what to do with the culprits of humanity, the Tamil observers further said.

In the meantime, a Colombo newspaper, The Island, on Wednesday, blatantly bared the genocide-shielding anxiety in the South, by reporting that the people who had gathered in Jaffna on Tuesday morning were “victims of LTTE violence” and the SL police only barricaded them off.

In Vanni, on Tuesday afternoon, the SL policemen and military intelligence officers attacked the gathering using batons.

Following the assault, the protesting families had to abandon their effort to express their feelings to the visiting UN Human Rights Commissioner.

Ms Navi Pillay, who took part in some events in Ki’linochchi visited Ve’l’laa-mu’l’livaaykkaal and left for Trincomalee, news sources in Vanni said.

Preparing for her visit, the occupying Sinhala military in a few days back removed all the remaining vestiges of war at Mu’l’li-vaaykkaal, such as abandoned vehicles etc., and dumped them elsewhere.

Chronology:


Related Articles:
23.06.09   Task of legal war vested with diaspora