முடியாது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முடியாது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஈழத்தமிழர் சிக்கலுக்கு உடனடித் தீர்வு முடியாது: நவநீதம் பிள்ளை

இலங்கை தமிழர்  சிக்கலுக்கு உடனடியாக த் தீர்வு காண முடியாது: நவநீதம் பிள்ளை










இலங்கையில் நடைபெற்ற போரின் போது மனித உரிமை விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை 7 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்குள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு பணிகளை பார்வையிட்டார். பின் யாழ்பாணத்தில் உள்ள மைய நூலக கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது காணாமல் போன தமிழர்கள் விவகாரம் குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசிப்பேன் என்று நவநீதம்பிள்ளை தமிழர்களிடம் கூறினார். மேலும் தற்போது வாழும் இடம் குறித்தும் ராணுவம் நிலங்களை பறித்தது தொடர்பாகவும் ஆலோசிப்பேன் என்றும். இலங்கை தமிழர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என்றும் கூறினார்

சனி, 17 நவம்பர், 2012

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது

 
படில் ிில் இர்குடிாது என ிய ரசு ்லமா?
 
பெங்களூரு: ""தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்."நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை.கர்நாடகா அணைகளில், எட்டு அடிக்கு மேல் சகதியாகக் காணப்படுகிறது. தற்போது அணைகளிலுள்ள தண்ணீரை கணக்கெடுக்கும் போது, எட்டு அடியை, "மைனஸ்' செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டத்தை அளவிடும் போது, எப்போதுமே உண்மை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.விவசாயம், குடிநீருக்கான தண்ணீர், கர்நாடக அணைகளில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உள்ளது; எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். மீண்டும், கர்நாடகா தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி, கர்நாடகா சார்பில், மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பொம்மை கூறினார்.