bill லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bill லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

அமெரிக்கா மீது வழக்க - ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை, 1953-ம் ஆண்டு சதி செய்து கவிழ்த்த குற்றத்துக்காக அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு முதல்நிலை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பங்கேற்ற 196 உறுப்பினர்களில் 167 பேர் மசோதாவை ஆதரித்தும், 5 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து, விசாரணை அறிக்கையை 6 வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அமெரிக்கா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வியாழன், 7 பிப்ரவரி, 2013

Tamil Heritage Month Bill Proposed

Tamil Heritage Month Bill Proposed in Canadian Parliament

[TamilNet, Wednesday, 06 February 2013, 23:48 GMT]
Tamil Canadian federal MP Rathika Sitsabaiesan introduced Bill C-471 in the Canadian Parliament on January 31, to designate the month of January as Tamil Heritage Month in Canada by an Act. This bill, a private member’s bill that doesn’t often become law, if passed, will enshrine at the federal level an ongoing practice among Tamil community organizations. Neethan Shan, founder and chair of the Tamil Heritage Month Committee, believes that such a commemoration of Tamil heritage will provide a platform for discussion of Tamil national identity. "We have been working hard for two years to get both the federal and provincial governments to recognize Tamil Heritage Month formally and we are hopeful that it will happen before our fifth year anniversary in January 2014," Neethan Shan, founder and chair of the Tamil Heritage Month Committee, told TamilNet.

While cultural heritage months are often largely symbolic, Shan added that he believes a federal Tamil heritage month would "definitely help us create broader awareness not only about our culture, traditions and heritage but also about our nationhood and histories. Therefore, discussion and documentation of our struggle for self-determination in Eelam will and must be an integral part of Tamil Heritage Month." A similar Act was introduced in the province of Ontario last year but the Ontario legislature heard first reading on the bill, but it seemed to have stalled after the first reading. It is not law until it passes third reading and receives royal assent.

“This bill would enshrine Tamil Heritage Month in law so that throughout Canada, every year, the month of January will be known as Tamil Heritage Month. I am proud to present a bill that recognizes and honours Tamil heritage and will help raise awareness of the contributions of Tamil Canadians throughout our country," said Ms. Sitsabaiesan in a press release dated January 31.

In her speech before the House of Commons, she saluted the "organizations and individuals in [her riding of] Scarborough—Rouge River and across the country, who have organized events during this month, for the pride they take in our Tamil heritage."

According to the website of the Tamil Heritage Month Committee, "municipal governments of Ajax, Brampton, Markham, Oshawa, Pickering, Toronto, Whitby and York Region have proclaimed January as Tamil Heritage Month."

A similar bill passed first reading in the Ontario Provincial Legislature on June 12, 2012.

Ms. Sitsabaiesan's bill was also read and printed, and now awaits further action from the House of Commons.



External Links:
Legislative Assembly of Ontario:Bill 111, Tamil Heritage Month Act, 2012

புதன், 15 பிப்ரவரி, 2012

EPC puts off debate on controversial ‘land grab’ bill

EPC puts off debate on controversial ‘land grab’ bill

[TamilNet, Tuesday, 14 February 2012, 01:37 GMT]
The Eastern Provincial Council (EPC) on Monday put off the debate on the proposed "Town and Country Planning Ordinance Amendment" till February 28 as majority members of the opposition raised objection to the amendment bill. This controversial amendment allows the central government to acquire any land for ‘development’ and ‘religious purposes’ without the consent of the provincial council.

The amendment has been placed before the provincial councils to obtain their approval before tabling it in parliament on a directive by the SL Supreme Court before determine its constitutionality.

The SL Supreme Court is of opinion that powers regarding land are devolved to provincial council. Hence the consent of the provincial council is needed before tabling any amendment to parliament regarding land matters.

திங்கள், 8 நவம்பர், 2010

பேரவைக் கூட்டம் - தமிழ் வழிக் கல்விக்கான சட்டம்

பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்: நான்கு மசோதாக்கள் நிறைவேறுகின்றன


சென்னை, நவ. 7: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. 13-வது சட்டப்பேரவையின் 14-வது கூட்டத்தொடர் இதுவாகும்.ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டமாக கடந்த மார்ச் 19-ம் தேதி நிதிநிலை (2010-2011) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், 40 நாள்களுக்கும் மேலாக கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில், சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது.நான்கு முக்கிய மசோதாக்கள்: சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாள் நடத்துவது? என்னென்ன விஷயங்களை விவாதிப்பது என்பது பரிசீலிக்கப்படும். இதன்பின், பேரவை நடைபெறும் நாட்களை பேரவைத் தலைவர் தெரிவிப்பார்.திங்கள்கிழமை தொடங்கும் பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரின்போது, நான்கு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது; கூட்டுறவுச் சங்க தனி அதிகாரிகளுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு; சொத்துப் பதிவின்போது வசூலிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணம் மீது 50 சதவீதம் மேல்வரி விதிக்கப்படுகிறது.இது, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போன்று பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது பெருந்திட்டத்தில் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவும் பேரவையில் கொண்டு வரப்படுகிறது.பிரச்னைகளைக் கிளப்பும்: குழந்தைகள் கடத்திக் கொலை, அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவைகளைச் சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேரவையில் பிரச்னையைக் கிளப்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு ஏற்படும் எதிர்ப்புகள், இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் தலைவர்களின் கைது உள்ளிட்ட சம்பவங்களை பேரவையில் அந்தக் கட்சியினர் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் அரசு எடுத்து வரும் நிலைப்பாடுகள் பற்றியும் எதிர்க்கட்சிகள் பேரவையில் கடும் விமர்சனத்தை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது.குளிர்கால கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நடைபெறும் என சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
கருத்துகள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஐந்தில் ஓரிடம் என அவர்களை ஒதுக்கி வைக்காமல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனச்சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உண்மையாகவே தமிழ் வழியில் படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தமிழ் வழிக் கல்வியைப் ப்ரவலாக்கி அறிவியல் மேதைகளை உருவாக்க வழி வகுப்பதாகவும் அமையும். ஆனால், அரசிற்கு அது குறித்துக்கவலை இல்லை என்னும் வருந்தத்தக்க நிலைதான் உள்ளது. அனைவரையும் தமிழ் வழியில் படிக்கச் செய்வோம்! தரணியெங்கும் தலைமையுறச் செய்வோம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 10 மே, 2010

இதன் பெயரா ஜனநாயகம்? : தலையங்கம்



சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும் இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்கிற முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று, இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அப்போது பெருவாரியான இந்தியக் குடிமக்கள் கல்வியறிவு இல்லாமல், இந்தியப் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியிருந்த காலம். ஆனால், உலக வல்லரசாகத் துடிக்கும் ஒளிரும் இந்தியா மக்களாட்சியின் அடிப்படை உணர்வையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதுதான் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.நாடாளுமன்ற விவாதம் நடக்கும்போது நாள்தவறாமல் வந்தமர்ந்து விவாதங்களில் கலந்து கொள்வதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் ராம் மனோகர் லோகியா, ஆச்சாரிய கிருபளானி, என்.ஜி. கோரே, மது லிமயே, மது தண்டவதே, என்.ஜி. ரங்கா, மினு மசானி, எஸ்.ஏ. டாங்கே, பி. ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், பூபேஷ் குப்தா, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைசிறந்த நாடாளுமன்றவாதிகள் அமர்ந்திருந்தனர்.எந்தவொரு பிரச்னையிலும் காரசாரமான விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், அரசின் செயல்முறைகளைத் துளைத்தெடுக்கும் கேள்விக்கணைகள். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றும்போது தவறாமல் வந்தமர்ந்து விடுவாராம் பண்டித நேரு. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் அரசுத் தரப்பில் விளக்கங்கள் போதவில்லை என்று கருதினால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் நேரு தலை வணங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம். நல்லாட்சியை ஆளும் தரப்பும் எதிர்க்கட்சி தரப்பும் இணைந்து உறுதிப்படுத்துவது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளம் என்று பிரதமர் நேருவே பல தடவை தனது நாடாளுமன்ற உரைகளில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.பல பிரச்னைகளில், நடைமுறைகளில் நாம் "அது அந்தக் காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது என்பது வேறு. மக்களாட்சித் தத்துவத்தில் அடிப்படையான நாடாளுமன்ற நடைமுறைகளில் "அது அந்தக் காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது என்பது நமது அடித்தளம் ஆட்டம் காண்கிறது என்பதற்கான அறிகுறியல்லவா? இதைப் பற்றி நாம் சிந்திப்பதுகூட இல்லையே, ஏன்?கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது எப்படி என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எந்தவித விவாதமும் இன்றி, காதும் காதும் வைத்ததுபோல ஐந்து முக்கியமான மசோதாக்கள் கடைசி இரண்டு நாள்களில் நிறைவேற்றப்பட்டது பல உறுப்பினர்களுக்கேகூடத் தெரியுமா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.ஒருபுறம், மத்திய தகவல் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தது. திரிணமூல் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிரான கோஷங்களை இடதுசாரிகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதையே ஒரு சாக்காக வைத்துப் பல முக்கியமான மசோதாக்களை விவாதம் எதுவுமே இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டுவிட்டது மத்திய அரசுத் தரப்பு.""முதலில் அவையை ஒழுங்குக்குக் கொண்டு வாருங்கள். அதற்குப் பிறகு இந்த மசோதாக்களைத் தகுந்த விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றுங்கள். மக்களைப் பாதிக்கும் பல விஷயங்கள் வெளிப்படுத்தப்படாமலே மசோதா நிறைவேறுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்'' என்று சில மூத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் மீரா குமாரிடம் மன்றாடிக் கொண்டிருக்கும்போது, எதையுமே சட்டை செய்யாமல் சட்டம் மெத்தப் படித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கான தேசிய கமிஷனின் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொண்டார்.தொடர்ந்து, மத்திய எரிசக்தி அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தன் பங்குக்கு, எரிசக்தி பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிக் கொண்டார். ஏழே நிமிடங்களில் இரண்டு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி சரித்திரம் படைத்தது இந்திய நாடாளுமன்றம்.தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டச் சட்டத்திருத்த மசோதா, பணிக்கொடை (கிராச்சுவிடி) வழங்கும் மசோதா மற்றும் மருத்துவப் பரிசோதனைச் சாலைகள் பதிவு மற்றும் நெறிப்படுத்துதல் மசோதா ஆகியவை விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஏனைய மூன்று மசோதாக்கள். சந்தடிச் சாக்கில், கடந்த 18 ஆண்டுகளாக இப்போது அப்போது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் தாக்கல் செய்யப்படாமலே நழுவி (தடுக்கப்பட்டு) வந்த லாட்டரி தடைச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுவிட்டது.எதிர்க்கட்சிகள் பொறுப்பில்லாமல் இருப்பதுகூட மன்னிக்கப்படலாம். அரசின் தவறுகளை விமர்சிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்றால், நியாயமான விவாதங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வது ஆளும் கட்சியின் கடமை. எதிர்க்கட்சிகளைச் சமாதானப்படுத்தி அரவணைத்துச் செல்வதும், முறையான விவாதங்களுக்கு வழிகோலுவதும்தானே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் பொறுப்பு?எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களைச் சாதகமாக்கி விவாதமில்லாமல் தனது மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணம் வகுப்பதுடன், நாடாளுமன்ற நடைமுறையின் நியாயத்தையே கேலிப்பொருளாக்கும் செயல். தேவையில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்தி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்றை மெய்ப்படுத்தி விடாதீர்கள் என்பதுதான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.
கருத்துக்கள்

தினமணியின் வேண்டுகோள் சரியே! ஆனால், விவாதம் இன்றிச் சட்ட வரைவுகளை ஏற்றுச் சட்டமாக்குவது முதல் முறையன்று. இதே போன்ற அவலங்கள் தமிழகச் சட்டமன்றத்திலும் அரங்கேறியுள்ளன. எனவே தினமணி தன்னுடைய இந்த உரையைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மேலவை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். சிலராவது விழிப்புணர்வு பெற்றுத் தம் கடமையை ஆற்ற முன்வரலாம் அல்லவா? விவாதம் இன்றி ஏற்கப்படும் சட்டம் செல்லாது என்று ஒரு சட்டம் கொண்டு வரலாமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/10/2010 4:20:00 AM

Tes, your editorial reflects the correct situation and proves Churchil right . Any wat, we have lost our worthiness for self governance long lonh ago.

By ankandasamy
5/10/2010 2:28:00 AM

அரசின் தவறுகளை விமர்சிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்றால், நியாயமான விவாதங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வது ஆளும் கட்சியின் கடமை. சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும் இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்கிற முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று, இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. வல்லரசாகத் துடிக்கும் ஒளிரும் இந்தியா மக்களாட்சியின் அடிப்படை உணர்வையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதுதான் தலைகுனிவை ஏற்படுத்துகிறது

By naam tamilar
5/10/2010 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 12 மார்ச், 2010

தலையங்கம்:வஞ்சிக்கப்படும் வஞ்சியர்...!



மகளிர் இடஒதுக்கீடு மசோதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகுதான் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அது ஒருபுறமிருக்க, ஊடகங்களில் இந்த மசோதா பற்றி கருத்துத் தெரிவிக்கும் மகளிர் பலர் ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைவதாகக் கூறுவது வேதனைக்குரிய ஒன்று.ஏதோ இதுவாவது கிடைத்ததே என்பதற்கு மகளிருக்கு சமஉரிமை அன்பளிப்போ, இனாமோ, பிச்சையோ அல்ல. நியாயமான உரிமை. உரிமையைப் பெறுவதற்குப் போராட வேண்டியவர்கள் கிடைத்ததை வைத்துக் கொண்டு சந்தோஷப்படுவதாகக் கூறுவது அவர்களது தன்னம்பிக்கை இன்மையையும், பலவீனத்தையும்தான் காட்டுகிறது. அப்படி போதும் என்கிற மனநிலை ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நமது கருத்து.கட்சி அமைப்புகளிலும், வேட்பாளர் பட்டியலிலும் சரிபாதி இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்பவர்கள், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பது விதண்டாவாதம் என்று சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் விவரம் இல்லாதவர்களோ, விஷயம் புரியாதவர்களோ அல்ல. பிரச்னையை திசைதிருப்பிக் குளிர்காய விரும்புபவர்கள்.கட்சி அமைப்புகளில் பூத் கமிட்டியிலிருந்து உயர்மட்ட செயற்குழு வரை எல்லாத் தளங்களிலும் மகளிருக்கு சமஉரிமை கேட்பதன் நோக்கமே, இந்த இடஒதுக்கீடு ஆணாதிக்கவாதிகளுக்குச் சாதகமாகப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதால்தான். மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அந்த மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளுக்குப் பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்போவது யார்? எல்லா அரசியல் கட்சிகளின் உயர்மட்டக் குழுக்களிலும் ஆண்களின் மேலாதிக்கமல்லவா இருக்கிறது?கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை கட்சி அமைப்புகளில் ஆண்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், கட்சியின் வேட்பாளராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் இந்த ஆணாதிக்க அரசியல்வாதிகளின் தயவை நாடித்தானே தீர வேண்டும்? அந்தக் கட்சித் தலைமையின் விருப்பு வெறுப்புகளும், ஆசாபாசங்களும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கத்தானே செய்யும்?முதலில் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் சரிபாதியாக உறுதி செய்யப்பட்ட பிறகு இடஒதுக்கீடு பற்றிப் பேசும்போது, பெண்கள் ஆணாதிக்க அரசியல் தலைவர்களை அண்டிப் பிழைத்து வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் அவலம் இருக்காது. இல்லையென்றால், பெண் வேட்பாளர்கள் மட்டுமல்ல, அவர்களது பெண்மையேகூடக் கேவலப்படுத்தப்படும் அவலம் அரங்கேறும் வாய்ப்பு மிகமிக அதிகம்.இன்றைய நிலையில் எடுத்துக்கொண்டாலும், அரசியல் பின்னணி இல்லாத எத்தனை பெண்கள் உள்ளாட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் உறுப்பினர்களாக முடிகிறது? மகளிருக்கான இடஒதுக்கீடு பிரச்னையில் முன்வரிசையில் இருக்கும் சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், பிருந்தா காரத் மூவருமே தங்களது அரசியல் விலாசத்தால் அரசியலில் முன்வரிசைக்கு வந்தவர்களே தவிர, கட்சியின் கடைநிலைத் தொண்டராக இருந்து முன்வரிசைக்கு வந்தவர்களல்ல. அப்படி வந்திருந்தால் அவர்களுக்கு ஆணாதிக்கத்தின் கோரமுகம் எத்தகையது என்பது தெரிந்திருக்கும்.15-வது மக்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் 59 மகளிரில், 45 பேர் அரசியல் பின்னணி உடையவர்கள். ஏனைய 14 பேரில் 6 பேர் மட்டும்தான் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். தமிழக அமைச்சரவையையே எடுத்துக் கொள்வோம். அமைச்சர்கள் பூங்கோதை மற்றும் கீதா ஜீவனின் இன்றைய நிலைமைக்குக் காரணம் அவர்களது கட்சிப் பணியல்ல. அவர்களது விலாசம். அமைச்சர் தமிழரசியின் பின்னணி அவரது கணவர் ரவிகுமார்தான் என்பதும், தனது மதுரை மேற்கு ஒன்றிய வார்டு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அவர் தன் மனைவியைப் போட்டியிட வைத்து அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார் என்பதும் தெரியாத விஷயமல்ல.இந்தியா முழுவதும் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் இதுதான் நிலைமை. அரசியல் கட்சிகளின் அமைப்பில் மாறுதல் ஏற்படுத்தப்படாமல் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளிலும் இந்த நிலைமைதான் ஏற்படப்போகிறது. ஒன்று தனது மனைவி மக்களை மகளிருக்கான ஒதுக்கீடைப் பயன்படுத்தி வேட்பாளராக்கி மகிழ்வார்கள். இல்லையென்றால், தங்களது கைப்பாவைகளை வேட்பாளராக்கித் தங்களது விரலசைப்புக்கு ஏற்பச் செயல்பட வைப்பார்கள்.ஏதோ மூன்றில் ஒரு பங்காவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடையும் மகளிர், இரண்டு வகையில் ஏமாற்றம் அடைய இருக்கிறார்கள். முதலாவதாக, இவர்கள் நினைப்பதுபோல அதிகாரப் பகிர்ந்தளிப்பு கிடைக்கப் போவதில்லை. இரண்டாவதாக, ஆணாதிக்க அரசியல்வாதிகளின் மேலாதிக்கம் மேலும் அதிகரிக்கும்.விலைவாசி ஏற்றம் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களை விழி பிதுங்க வைத்திருக்கிறது. அவர்களது ஆத்திரம் நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் மத்திய, மாநில ஆட்சிகளின் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு தரும் மசோதாவை நிறைவேற்றி, ஏதோ பெரிய சரித்திர சாதனை செய்துவிட்டதுபோல வெளிச்சம்போட்டுக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள். திசைதிருப்பும் யுக்திதான் இந்த மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவே தவிர, மகளிரின் சமஉரிமைக்கான உத்தரவாதமல்ல. ஏமாந்து விடாதீர்கள்!
கருத்துக்கள்

யார் என்ன சொன்னாலும் அரசியல் வாதிகளின் மனைவி, தாய்,தமக்கை,தங்கை,ஆசைநாயகி முதலானோரே பெண்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னிலைப் படுத்தப்படுவார்கள். இதைத் தவிர்க்க என்ன செய்ய இயலும்? இத்தகைய பெண்கள் மூலம் அவர்களை அண்டியுள்ள அடுத்த நிலைப் பெண்கள் பயனடையலாமே தவிர நேரடியாக அடித்தள நிலையிலுள்ள பெண்கள் இட ஒதுக்கீட்டில் பயன் பெற இயலாது. கட்சிக் கொத்தடிமைகளில் இருந்து மக்கள் விடுபட்டால்தான் ஓரளவேனும் பெண்கள் இட ஒதுக்கீட்டால் பயனுறுவர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்