புதன், 17 ஜூலை, 2013

Jayalalithaa fears New Delhi, Colombo weakening Tamils further

Jayalalithaa fears New Delhi, Colombo weakening Tamils further

[TamilNet, Tuesday, 16 July 2013, 23:53 GMT]
Citing moves to repeal the 13Th Amendment, public stand of Gotabhaya Rajapaksa in this regard and a recent meeting of Basil Rajapaksa with New Delhi, presumably to justify Colombo’s stand, the Tamil Nadu Chief Minister, Ms J. Jayalalithaa in a letter to New Delhi’s PM on Sunday urged India not to give in to Colombo’s moves to take away even the limited political rights of Tamils. Also citing the 2007 demerger of the North and East “as a sinister first step leading to the eventual abrogation and repeal of the 13th Amendment, which has starkly appeared on the agenda now,” Ms. Jayalalithaa’s letter implied her fear of New Delhi further collaborating with Colombo against Tamils in the island, political observers said.

“The Tamil Nadu Legislative Assembly had passed a Resolution on 27th March, 2013, calling for, inter alia, a referendum on a “separate Eelam” amongst Tamils in Sri Lanka and Tamils displaced from Sri Lanka and resident in other countries. While the aspirations of the Sri Lankan Tamils can be realised only through a Tamil Eelam, the process of securing the right to self determination, through the devolvement of democratic decentralisation by the 13th Amendment to the Constitution of Sri Lanka, should not be jeopardised in any manner,” Ms. Jayalalithaa’s letter to Dr. Manmohan Singh said.

The very fact that how the 13th Amendment in a unitary constitution of the genocidal State could be jeopardized shows why the 13th Amendment should not be harped on by any shade of Tamil polity, Eezham Tamils activists for alternative politics in the island commented.

As the agenda of Colombo as well as New Delhi and Washington is the annihilation of the territoriality of the nation of Eezham Tamils in the island, the 13th Amendment process is just facilitation to the agenda, even though there could be small differences in the modus operandi, the activists said.

For all practical purposes, there is not much difference between saying that the 13th Amendment process should not be derailed and the process of structural genocide of Eezham Tamils should not be derailed. Colombo only wants to quicken the process, the activists commented.

“India cannot afford to be a passive bystander at this juncture,” the Tamil Nadu CM’s letter said. But, had India been a passive bystander and not an active partner in the genocide, Eezham Tamils wouldn’t have faced their plight of today, the activists said, adding that in this regard the problem is not merely the Sonia Congress but the BJP too.

All the Establishments that were in complicity with the genocide only count on the genocidal Sinhala military. The process they have set is to finish the genocide to the end and is to absolve their crimes through that. None of them talk on the territorial integrity of the nation of Eezham Tamils in the island, which is the crux of the matter in finding solutions. Washington and New Delhi sit on Tamil polity everywhere, engineering and seeing that there will be no mass political struggle, the activists said.

Ms. Jayalalithaa has taken certain remarkably bold steps through the Tamil Nadu State Assembly in calling the genocide, the genocide, calling for international investigations of war crimes and in calling for a referendum among Tamils on the question of separate Eelam. But, unless a mass struggle of Tamils directly addresses the issue with Washington and New Delhi, progress will be found only in irreversible structural genocide. Tamil Nadu is crucial in bringing the breakthrough. Time after time, the Tamil polity cannot be reduced to the stage of saying ‘Pichchai vea’ndaam naayaippidi’ (you may not give alms but hold the dog), the activists in the island further commented.

உடலுக்குள் ஒரு வெடிகுண்டு!

உடலுக்குள் ஒரு வெடிகுண்டு!


பேரழிவை ஏற்படுத்தும், காசநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை கூறும், மருத்துவர் சவும்யா சுவாமிநாதன்: நான், தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின், இயக்குனராக பணியாற்றுகிறேன். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய, ஒரு வெடிகுண்டின் விளிம்பில், நாம் உட்கார்ந்திருக்கிறோம் என்றால், அது டி.பி., எனும், காசநோய் தான். இந்நோயால், ஆண்டிற்கு, 3 லட்சம் பேர் இறக்கின்றனர்; 18 லட்சம் பேர், சிகிச்சை பெறுகின்றனர்.
காற்றில் பரவும், பாக்டீரியா கிருமி மூலம் தொற்றுவதே, காசநோய். குடிசை பகுதியில் வசிப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், மது, குடி பழக்கம் உள்ளவர்களை, டி.பி., பாதிக்கிறது. டி.பி.,க்கு எந்த ரத்த பரிசோதனையும், இதுவரை கண்டுபிடிக்கவில்லை. "எக்ஸ்-ரே' மற்றும் "சிடி' ஸ்கேனால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
தொடர்ச்சியான இருமல், உடல் எடை குறைதல், சளியில் ரத்தம் தெரிவது, இந்நோயின் அறிகுறிகள். இந்நோய்க்கு, மருந்துகளை எதிர்க்கும் சக்தி அதிகம் என்பதால், நோயாளிக்கு ஒரு வேளைக்கு, நான்கு வகையான, "ஆன்டிபயாடிக்' மாத்திரைகளை தருவதில் இருந்தே, இந்நோயின் வீரியத்தை அறிய முடிகிறது. அப்படி தரப்பட்டாலும், பலருக்கு இந்நோய் சரியாவதில்லை.
மூளை, முதுகுதண்டு, எலும்பு, வயிறு என, உடலின் எந்த பாகத்தையும் பாதித்து, அங்கு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். இன்று, இளம் பெண்களின் கழுத்தில், நெறி கட்டுவது அதிகரிக்கிறது. அசிங்கமாக நினைப்பரோ என, துப்பட்டாவால் மூடி மறைத்து, கட்டி முற்றிய நிலையில், மருத்துவரிடம் வருவது அதிகரிக்கிறது.
டி.பி., பாதிப்பு, ஏழை நாடுகளில் தான் அதிகம் என்பதால், லாபம் கிடைக்காது என்ற எண்ணத்தில், விரைவில் குணப்படுத்தும் மருந்தை, இதுவரை யாரும் கண்டுபிடிக்க முயற்சிக்காமல், நீண்ட கால சிகிச்சை முறையே உள்ளன. இதன் சிகிச்சைக்கு செலவு அதிகம். அரசு மருத்துவமனைகளில், இதற்கான மருந்து மாத் திரைகள், இலவசமாகவே கிடைக்கின்றன.

புறநானூற்று அறிவியல் வளம்

புறநானூற்று அறிவியல் வளம்



புறநானூற்று அறிவியல் வளம்
  
  அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய வைக்கின்றது. சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகை  நூல்களுள் ஒன்றான புறநானூறு தெரிவிக்கும் அறிவியல் உண்மைகள்  சிலவற்றைப் பார்ப்போம்.
  ஒரு பொருளை விளக்குவதற்கு உதவுவதே உவமை. எனவே, உவமை என்பது தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனுடன் ஒப்புமையாகக்  கூறப்படும் பொருள் அல்லது பொருள்கள் நமக்குப் புரியும். பேராசான் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் உவமைஅணியில் சிறந்திருந்தமையால்தான் அச்சிறப்புமிகு அறிஞர் பெருமகனார், உவமஇயல் என அதற்கெனத் தனி இயலை வகுத்துள்ளார். எனவே, அறிவியல் உண்மைகளை உவமையாகப் புலவர்கள் கையாண்டுள்ளனர் என்றால் இவ்வறிவியல் உண்மைகள் மக்கள் எளிதில் புரியக்கூடிய உண்மைகளாக விளங்கும் சிறப்பைப் பெற்றிருந்தன எனலாம். எளிய பொது மக்களிடையேயே அறிவியல் உண்மைகள் மண்டிக்கிடந்தன எனில் தமிழர் அறிவியலின் ஆழம் அளக்கவியலாததாக இருந்திருக்கின்றது என்பதே உண்மை.
 மாற்றுச்சக்கரம்
   ஊர்திகளுக்கான மாற்றுச்சக்கரத்தை இஃச்டெப்னி(stepney)  என்கிறோம். ஆனால், இச்சொல் தெருவின் பெயராகும். இங்கிலாந்திலுள்ள  இஃச்டெப்னி (stepney) தெருவில்  20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மாற்றுச்சக்கரம் ஒன்றை  வால்டர் தேவீசு (Walter Davies) என்பவரும் தாம் (Tom) என்பவரும்  ஏற்பாடு செய்து தந்தனர். இத் தெருவில் கண்டறியப்பட்ட இம்முறைக்கு  இஃச்டெப்னி(stepney ) என்னும் பெயர் நிலைத்து விட்டது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர்கள்  மாற்றுச் சக்கரங்களின் தேவை உணர்ந்து அதை உருவாக்கி உள்ளனர் என்னும் பொழுது அவர்களின் அறிவியல் அறிவு வியப்பளிப்பதாக உள்ளது. ஔவைப் பிராட்டியார், கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன   (புறநானூறு 102) என உவமையைக் கையாள்கிறார்.  ஊர்திச் சக்கரங்களில் ஏதும் பழுது ஏற்பட்டால் பயணம் நிற்காமல் தொடருவது பற்றிச் சிந்தித்துள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள். அப்பொழுது உருவாக்கப்பட்டதுதான் சேம அச்சு. சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில்  சேமத்திற்காக - பாதுகாப்பிற்காக- இணைக்கப்படுவதே சேம அச்சு. இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என இப்பாடல் அடி மூலம்  ஔவைப்பிராட்டியார் விளக்குகிறார்.
  மன்னரைப் பாராட்டப் பயன்படுத்திய இவ்வடி மூலம் நமக்குப்  பழந்தமிழரின் அறிவியல் உண்மை ஒன்று கிடைத்துள்ளது.
காற்றறிவியல்
   பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான்  என்பதும் ஆரியப் புராணம்.  ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.
  கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர்.  அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன்  பகலின் (Hemera ) உடன்பிறப்பு என்றும் விண்கடவுளின் (Uranus) மகன் என்றும்  உரோமர்கள் துயரத்திற்கும்(Chaos) இருளிற்கும் (Caligo) பிறந்த மகன் என்றும்  கருதினர்.   இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் கடவுள்களின் அல்லது தேவதைகளின் குழந்தையாகக் கருதினர். இயற்கையாக மேனாட்டார் கருதாக் காலத்திலேயே காற்றின் பல் வேறு தன்மைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
காற்றோடு எரி நிகழ்ந் தன்ன செலவின்
எனக் காற்று கலந்தால் தீ விரைவாக எரியும்  அறிவியல் உண்மையை உவமையாகக் கூறுகிறார் ஆசிரியர் கோவூர் கிழார்.
  அண்மை நூற்றாண்டுகளில்தான் காற்றின் அடிப்படையில் விண்மண்டிலத்தைப் பிரித்தனர் பிற நாட்டு அறிவியலாளர்கள்.   மேலே செல்லச்  செல்லக் காற்றின் அளவு குறைவதைக் கொண்டு அடிவளி மண்டிலம்(troposphere), மீவளி மண்டிலம்(Stratosphere), இடைவளி மண்டிலம்(mesosphere), வெப்பவளி மண்டிலம்(thermosphere),  மேல்வளி மண்டிலம்(exosphere) எனப் பகுத்தனர். நம் தமிழ் முன்னோரும், காற்று வழங்கும் பரப்பிற்கேற்ப, கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி எனக் காற்றை வகைப்படுத்திப் பெயரிட்டனர். காற்று இல்லாத மண்டிலமும் இருந்ததை உணர்ந்தனர்.
  அண்மைக்கால அறிவியலின் வளர்ச்சியாகக் காற்றில்லா மண்டிலத்தைக் கண்டறிந்தது  குறித்து உலகம் மகிழ்கிறது. ஆனால், உண்மையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்று  இல்லாதபகுதி உள்ளதை நம் தமிழ்முன்னோர் நன்கு அறிந்துள்ளனர் என்பது அவர்களின் அறிவியல் முன்னோடித் திறனை உணர்த்துகிறது அல்லவா?
   வரி விதிப்பை நீக்குவதற்கு அறிவுரை கூறும்  புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் வேந்தனிடம்  வரி விதிப்பை நீக்குமாறு வேண்டினார். அப்பொழுது அவர்,  பழந்தமிழ்நாட்டு எல்லையையும் மூவேந்தர் சிறப்பையும் குறிப்பிடும் வகையில், கடல்களால்  சூழப்பெற்று, காற்று வழங்காத வானத்தின் கீழ் உள்ள நிலத்தை ஆளும் மூவேந்தர் என்கிறார்.
நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளியிடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்தைக் தண்தமிழ்க் கிழவர்  (புறநானூறு: 35: 1-3)
என்னும் பாடலடிகளில்தான் புலவர், இவ்வாறு, காற்று  பயன்பாட்டில் இல்லாத வான் மண்டிலத்தைக் குறிப்பிட்டுள்ளார். (நளி இரு - நீர் செறிந்த; முந்நீர் - கடல்; ஏணி- எல்லை)
 மார்க்கண்டேயனார் என்னும் மற்றொரு புலவர்,  இடம்  விட்டு இடம் பெயரும் காற்று இல்லாத வானம் என்பதை,
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடைவழங்கா வழக்கரு நீத்தம்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 365: 1-3)
  நில மண்டிலமும் நீர் மண்டிலமும் தீ மண்டிலமும் வளி மண்டிலமும் கடந்து நிற்கும் விசும்பு நீத்தம் எனப்பட்டது. .... … …இதன்கண் வளி வழங்குதலின்மையின் வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் எனப்படுவதாயிற்று என உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் விளக்குகிறார்.
 வளிமண்டிலம் சூழ இருப்பது ஞாலம் ஆதலின் அதனைக்கடந்து நிற்கும் விசும்பை நீத்தம் என்றார்   என நீத்தம் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்.  எனவே, காற்று இல்லாத பகுதியை விசும்பு என அழைத்துள்ளனர் என்பதையும் காற்று நீங்கி இருத்தலால் நீத்தம் எனப் பெயர் பெற்றது என்பதையும் அறியலாம்.
  விண்ணறிவியலிலும் காற்றறிவியலிலும் சிறந்திருந்த தமிழ் முன்னோர், உயரச் செல்லச் செல்லக் காற்றின் பயன்பாடு குறைந்து செல்வதை உணர்ந்திருந்தனர். இதனையே புறநானூற்றுப்பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
புலவர் குறுங்கோழியூர்க்கிழார்,  வளிவழங்கு திசை ( புறநானூறு 20:3) எனக் காற்று வழங்கும் திசை பற்றிக் குறிப்பிடுகிறார். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
வளி திரிதரு திசை(புறநானூறு 30.4) பற்றி அறிந்தவர் பண்டுதொட்டே இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.
புலவர் மாங்குடி மருதனார், கப்பலை இயக்கும் ஆற்றலைக் காற்று பெற்றிருந்ததை,
வளிபுடைத்த கலம் போல (புறநானூறு 26.2.) என்னும் உவமையில் குறிப்பிடுகின்றார்.
புலவர்  ஐயூர் முடவனார், வளிமிகின், வலியும் இல்லை(புறநானூறு 51.3) எனக் காற்றுப் புயலாக மிகும் பொழுது அதன் வலிமையைத் தடுக்க இயலாது எனக் குறிப்பிடுகின்றார்.
புலவர் மதுரை மருதன் இளநாகனார்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே! (புறநானூறு 55.22-23)
என மணலினும் பலவாக வாழுமாறு வாழ்த்தும் பொழுது, காற்று மணலைக் கொண்டுவந்து கொட்டும் அளவு வலிமையாகக் கடற்காற்று வீசுவதைக் குறிப்பிடுகின்றார்.
 புலவர் வெண்ணிக் குயத்தியார், வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! (புறநானூறு 66.2.) என வாழ்த்தும் பொழுது காற்றின் இயல்பையும் இயக்கத்தையும் அறிந்து, ஆளுமை பெற்ற மரபில் வந்த மன்னன் எனத் தொன்மைக்காலத்திலிருந்தே காற்றறிவியலைத் தமிழர்கள்அறிந்திருந்த உண்மையைக் குறிப்பிடுகின்றார்.
புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், வரைவளி(புறநானூறு  133.4) என மலைக்காற்று பற்றிக் குறிப்பிடுகின்றார்.
புலவர் கழாத் தலையார், வளிவழக் கறுத்த வங்கம் போல(புறநானூறு 368.9) என்னும் உவமையில் கடற்பகுதியில் காற்று இயங்கா நிலை உள்ளதையும் குறிப்பிடுகின்றார்.
புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர். விண்ணில் உழலும் காற்றையும்  தீயைப் பற்றிப் பரவச் செய்யும்  அதன் ஆற்றலையும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும், (புறநானூறு 2.4-5) என்னும் அடிகளில்
குறிப்பிடுகின்றார்.
புலவர் கோவூர் கிழார், காற்று நெருப்புடன் இணைந்து அழிக்கும் ஆற்றலைக்,
காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்(புறநானூறு 41.16-17)
என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.
இவற்றால், காற்றறிவியல் பழந்தமிழர் நன்கு அறிந்த ஒன்று என உணரலாம்.
நிலா
  ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் மக்கள், நிலா(Mawu) மேற்கில் வாழும் மூதாட்டி என்றும் இரவு குளிர்ச்சியைத் தரும்  பெண்தெய்வம் என்றும்  பகல் கடவுளான இலிசா(Liza) உடன் இணைந்து உலகத்தை உருவாக்கியதாகவும்  நம்பினர்.
மெக்சிகோவைச் சேர்ந்த அசுடெக்(Aztec) மக்களின் தொன்மத்தின்படி, நிலவின் பெயர் பொன்மணிகள்(Coyolxauhqui); பூமித் தெய்வத்தின் (Coatlicue) மகள்; சூரியக்கடவுளின்(Huitzilopochtli) உடன் பிறப்பு; தாயின் இழிசெயலுக்காக  அவரைக் கொல்வதற்குத் தன் நானூறு இருபால் உடன்பிறப்புகளையும்  ஊக்கப்படுத்தியவள்; எனப் பலவாறான கருதுகோள்கள் இருந்தன.
சீனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிலா என மொத்தம் 12 நிலாக்கள் உள்ளதாகக் கருதினர்.
  தமிழ் மக்கள்  நிலவைப் பிற நாட்டார் போல் பகுத்தறிவிற்கு ஒவ்வாத வகையில் கருதவில்லை. அதன் இயற்கைத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், நிறைமதி, தேய்மதி, வெள்ளுவா (பௌர்ணமி), காருவா(அமாவாசை), வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு வாய்மதி, வைகறை மதி, பக்கமதி, நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள், திங்கள் குழவி, மதி அரும்பு, என நிலவின் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.  நிலவாகிய மதியை அடிப்படையாகக் கொண்டே மதி  அல்லது திங்களின் பெயரில்  மாதம் அல்லது திங்கள் எனக் காலத்தைப் பகுத்துள்ளனர். எனவே, திங்கள் சுற்றும் கால அளவை உணர்ந்த அறிவியல் தலைமக்களாக நம் முன்னோர் இருந்துள்ளனர். புறநானூற்றிலும் திங்களின் இயற்கை  பற்றிய பாடல் இடம் பெற்றுள்ளது.
மூவைந்து - பதினைந்து - நாள்களில் முறை முறையே வளர்வதும் தேய்வதுமாகிய   முழு வெண்ணிலவைப்  போல என உவமையாகப் புலவர் கோவூர் கிழார்
மாக விசும்பின் வெண் திங்கள்
மூவைந்தான் முறை முறைக்
கடல்நடுவண் கண்டன்ன     (கோவூர் கிழார்: புறநானூறு : 400 : 1-3)
என்னும் பாடல்  அடிகள்  மூலம்,  விளக்குகிறார்.
பிறப்பு, வளர்ச்சி, தாழ்ச்சி, இறப்பு முதலான உலகியல் நிலையாமை குறித்துத் திங்களின் வளர்வது, தேய்வது, மறைவது ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் புலவர் கூறுகிறார்.
தேய்த   லுண்மையும்  பெருக லுண்மையும்
 மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
 அறியாதோரையும் அறியக் காட்டி
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து 
என்னும் பாடலடிகள் திங்களின் பல்வகைத் தோற்றம், தோற்றமின்மை குறித்து விளக்குகின்றன.
விண்மீன்கள் நடுவே திங்கள் உலா வருவதை உவமானமாகக் கூறுவதன் மூலம்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்  என்று புலவர்கள் கூறுகின்றனர்.
வெண்மையான  விரிந்த கதிர் ஒளியுடையது நிலா என்பதை, விரிகதிர்   வெண்டிங்கள் என்னும் பாடலடி விளக்குகிறது.
 மேலும் திங்களின் குளிர் தன்மையுடன் ஒப்பிட்டுப் பண்புகளை விளக்கும் பாடலடிகளும் உள்ளன.
இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை (புறநானூறு 394.6)  எனக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், நிலா மறைந்து பகல் வருவதை விளக்குகிறார்.
புலவர் திருத்தாமனார், நிலா மறையும் பொழுதில் வெள்ளி முளைப்பதை,
மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர, (புறநானூறு 398.1) என விளக்குகிறார்.
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை  (புறநானூறு  67.2-5)
எனப் புலவர் பிசிராந்தையார், வெற்றிவாகைசூடும் மன்னனின் முகம்போல நிலா விளங்குவதாக அதன் காட்சி பற்றிக் கூறுகின்றார்.
புலவர்  ஔவையார்
திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை(புறநானூறு  102: 6-7)
எனத் துன்ப இருள்  போக்கும் முழுநிலா போன்றவன்  அதியமான் நெடுமான் அஞ்சி எனப் போற்றுகையில், இருள்நீக்கும் நிலவின் தன்மையைக் குறிப்பிடுகின்றார்.
புலவர் பெருஞ்சித்திரனார் நிலவைக் காட்டிப் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டும் பழக்கத்தைக் குறிப்பிடுகின்றார்(புறநானூறு 160.22)  நிலா நிலா ஓடி வா என நிலவைக் காட்டிக் சோறு ஊட்டும் பழக்கம் பன்னெடுங்காலமாக இருப்பதை, நிலா பற்றிய ஈடுபாட்டைக் குழந்தைபருவத்தில் இருந்தே உருவாக்கி வந்துள்ளர்  நம் தமிழர்கள்  என்பதை இப்பாடல் மூலம் நாம் அறியலாம்.
மனைஅமைப்பியல்
  நகர அமைப்பிலும் வீடுகள் அமைப்பிலும் தமிழர் நாகரிகமே உலகத்தில் சிறந்ததாக உள்ளது என்பதை அரப்பா, மொகஞ்சதாரோ எச்சங்கள்  விளக்குகின்றன.  தாமரைமலர் போல் அமைந்த மதுரை நகரின்  சிறப்பு நகர அமைப்பிற்கு மற்றொரு சான்றாகும்.
  புறநானூற்றுப் பாடல்கள்  மூலமும் நாம் பழந்தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான நகர அமைப்பை அறிந்து கொள்ளலாம். நகரம் என்பது பொதுவாக சிறப்பாகக் கட்டப்பெற்ற வீட்டையே குறித்துள்ளது. இதன் மூலம் வீடுகள் கட்டப்பட்ட சிறப்பை அறியலாம். வீடுகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் அக்காலத்தில் கட்டட அறிவியலில் தலை சிறந்து நம் தமிழ் முன்னோர்கள் விளங்கினர் என்பதை மெய்ப்பிக்கின்றன.
நெடுநகர் ( புறநானூறு 23.9 ; 280.3;281.6; 285.8)  என்ற சொல்லாட்சி  சிறப்பான நெடுமனைகள் கட்டப்பட்டிருந்தன என்று  அறிய  வைக்கிறது.
வினைபுனை நல்லில் ( புறநானூறு 23.10) என்ற  தொடர்  வினைத்திறனுடன் சிறப்பாக புனையப்பெற்ற நல்ல இல்லங்கள் அன்றிருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகும். புனையப்பெறுதல் என்னும் பொழுது, கதவுகள், தூண்கள், மாடங்கள், சுவர்கள் முதலான வீட்டு உறுப்புகள் சிறப்பாக அழகுபடுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என நாம் அறியலாம்.
செல்வச் செழிப்பிற்கு ஏற்றாற்போல் நெல்  குவித்துச் சேமித்து வைக்கத்தக்க வகையிலும்  பொன்மாடங்கள், பொன்தூண்கள் எனப் பயன்படுத்தப்படும் சிறப்பிலும்  வீடுகளும் தெருக்களும்  அமைக்கப் பட்டிருந்தன  என,  நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு : 338.2) என்னும் அடியில் புலவர் குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார் விளக்குகிறார்
 நெல் சேமிக்கும் வகையில் இருந்தால் மட்டும்  போதுமா? பிற கூலங்களையும் பொருள்களையும் சேமித்து வைக்க வேண்டாவா?  வீடு எது, ஓடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும் பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிக்கப்பட்டுச்  சேமிக்கப்படும் வகையில் பெரிய அளவில் வீடுகள் அமைந்திருந்தமையைப் புலவர் பரணர்,
மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால் (புறநானூறு : 343.2) எனக்
குறித்துள்ளார். (மிசை அம்பி உயர்வான படகு; குவை-குவியல்; கறி மிளகு)
குடும்பத்தினருக்கு மட்டும் ஏற்ற வகையில் வீடுகள் அமைந்திருந்தால்  பணியாளர்கள் எங்கே இருப்பர்?   புலவர் குன்றுகட் பாலியாதனார், மனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும்  அடி மூலம் வீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதை விளக்குகிறார்.  எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன; மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்த சிறப்பான நகரமைப்பைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதைப் புறநானூறு மூலமும் நாம் அறிய முடிகிறது. 
புலவர் கோவூர்கிழார்,  கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கப்பட, தை மாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலக் குளிர்ச்சியாகவும் அகலமாகவும் வீடுகள் கட்டப்பெற்றிருந்தன என்பதைத்,
தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.
புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-
சுண்ணாம்பு; பனிக்கயம் குளிர்ந்த நீர்நிலை) பொருள்களைக் கெட்டுப்போகாமல் காக்க, இன்றைக்குத் தண்கலன்கள் உள்ளன. அன்றைக்கோ தண்மனைகள் இருந்துள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா?
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன  என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.
புலவர் உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை, முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார். புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை, நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.
எந்திரவியலிலும் பழந்தமிழர்கள் சிறந்திருந்தனர். கோட்டை வாயில், அரண் முதலான பலவும் இயந்திர நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அக்காலக்கட்டத்தில் அத்தகைய  எந்திர நுட்பம் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. எந்திர ஊர்தி இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. கரும்பாலை இயந்திரம் போன்றவையும் எந்திரஇயலின் நுட்பத்தால் உருவானவையே. புறநானூற்றிலும் இது குறித்த பாடலடி இடம் பெற்றுள்ளது.
தமரெனின்    யாவரும்  புகுப
அமரெனின் திங்களும் நுழையா
எந்திரப்     படு புழை  (புறநானூறு 177 )
என்கிறார் புலவர் ஆவூர் மூலங்கிழார்.
   நாட்டிற்குரியவர்கள் அனைவரும் தடையின்றி நுழையும் வண்ணம்   கோட்டைவாயில் அமைக்கப்பட்டிருந்தது.  அதே நேரம், போர்க்காலத்தில் பகைவர் எவரும் நுழைய முடியாதபடி, திங்கள் ஒளியும்கூட உள்ளே நுழைய இயலாதபடி, எந்திரப் பொறிகளை உடைய இட்டி வாயிலை உடையதாக இருந்துள்ளது என இப்பாடலடிகளில் புலவர் தெரிவித்துள்ளார். இத்தகைய எந்திரச் சிறப்பு குறித்துப் பிற பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் உள்ளன. இவைபோல் புறநானூறும் தெரிவித்துள்ளது.
நெடுநகர் வரைப்பு ( மாறோக்கத்து நப்பசலையார் 280.3 ; அரிசில் கிழார் 281.6;) நெடு நகர் (அரிசில் கிழார்  285.8), கூடு விளங்கு வியன் நகர் ( நெற்கூடு விளங்கும் அகலிய  நகரின்கண்-பரணர்:148.4), ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் (விளங்கியவாளையுடைய வேந்தரது  ஒள்ளிய விளக்கத்திணையுடைய உயர்ந்த கோயிற் கண் - ஆவூர் மூலங்கிழார் :177.1), வளம் கெழு திருநகர்( செல்வம் பொருந்திய அழகிய நகர்-ஆவூர் மூலங்கிழார்: புறநானூறு 261.6; தாயங்கண்ணியார் 250.6;),நெல்லுடை நெடுநகர் (சாத்தந்தையார் 287: 9), கபில நெடுநகர் (கபிலர்  337.11), திருநகர் (உலோச்சனார் 377.3), அருங்கடி வியன்நகர் (மாறோக்கத்து நப்பசலையார் 383) என்னும் தொடர்கள்,  வீடுகள் இக்காலம் போலவே மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை விளக்குகின்றன.
காவற்சிறப்புடன் நகரங்களும் மனைகளும் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,காவலர்  கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர் (390), கடியுடை வியன்நகர் (272.4)என்னும் அடிகள் விளக்குகின்றன.
செல்வச் செழிப்பை வெளிப்படுத்தும்வகையில் நகரங்களும் மனைகளும்  உருவாக்கப்பட்டன என்பதைச் செழுநகர்(391), முரைசு கெழு செல்வர் நகர் (127.10), பொன்னுடை நெடுநகர்(198.16) முதலான தொடர்கள் எடுத்துரைக்கின்றன.
  வானியல், உடையியல், ஒப்பனையியல், மருந்தியல், பொறியியல், ஊர்தி்யியல், படையியல், பயிரியல், விலங்கியல், பறவையியல், உடலுறுப்பியல், காற்றியல், தோலியல், புவியியல், பூச்சியியல், நீந்துவனவியல், கடலியல்  முதலான பல்வேறு அறிவியல் துறைச்செய்திகள் புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குப் புறநானூற்றில் இருந்து சில துறைக் குறிப்புகள் சிலவற்றைப் பார்த்துள்ளோம். இவற்றை இலக்கியக் குறிப்புகளாக எண்ணாமல் அறிவியல் உண்மைகளாக அறிவியல் பாடங்களிலும் படித்துத் தமிழ் அறிவியலை வளர்த்தெடுப்போம்!
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள் 352)என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
எல்லா அறிவியலும் மேனாட்டிற்குரியனவே என்னும் அறியாமை நீங்கி நடுநிலையுடன் ஆராய்ந்தால் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நம் தமிழர் அறிவியல் வளத்தில் சிறந்திருந்ததை உணரலாம்.
புறநானூற்றைப் பரப்புவோம்! 
தமிழ்அறிவியல் வளத்தை மீட்டெடுப்போம்!
 - இலக்குவனார் திருவள்ளுவன்
 

செவ்வாய், 16 ஜூலை, 2013

மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான்

தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு த் தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான் அறிக்கை
தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான் அறிக்கை
சென்னை, ஜூலை. 16–
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கு ரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி 2010-ம் ஆண்டில் நடந்த சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளியுமான பகத்சிங், தனது வாதத்தை தமிழில் பேசத் தொடங்கியதும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி இந்திய அரசமைப்பு பிரிவு 348-ஐயும், உச்ச நீதிமன்றத்தில் ராஜ் நாராயணன் இந்தி மொழியில் வாதிட்டதை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவையும் காரணம் காட்டி, தமிழில் வாதிடுவதை ஏற்க முடியாது என்று கூறியது மட்டுமின்றி, அதையே காரணமாகக் காட்டி மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார். இது வேதனைக்குரிய நடவடிக்கையாகும்.
தமிழ் மொழியில் வாதிடும் வழக்குரைஞர்களிடம் வழக்கை கொண்டு செல்லாதீர்கள், அதனை நீதிமன்றம் ஏற்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த நடவடிக்கை இருக்கிறது. இது தமிழ் மொழியை, அதன் தகுதி நிலையை இழிவுபடுத்துவதாகும். தமிழ் மொழியில் வாதாட மறுப்பது என்பது எமது இனத்தின் அடிப்படை உரிமை மறுப்பே, அதனை தன்மானமுள்ள தமிழினம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
இந்திய நாடு வெள்ளையரின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தபோது கூட, அவன் வெளியிட்ட நாணயத்தில் தமிழில் எழுத்தப்பட்டிருந்தது. ஆனால், விடுதலை பெற்ற நாடாக இந்தியா மாறிய நாளில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழிக்கு உரிய நிலை மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக டெல்லியிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைதான் உள்ளதெனில், தமிழர் விடுதலை பெற்ற ஒரு நாட்டின் அடிமை இனமா? என்று கேட்கிறோம்.
தமிழ்நாட்டின் நிர்வா கத்தை, அது தொடர்பான நடவடிக்கைகளை முறை படுத்தும் சட்டமியற்றக்கூடிய அரசமைப்பு உரிமை தமிழ் நாட்டிற்கு உள்ளதென்றால், எம் மாநிலத்தில் இயங்கும் உயர் நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழ் இருப்பதற்கு மட்டும் சட்ட மியற்றும் அதிகாரம் எமக் கில்லையா? எனது இனத்தின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா இது?
உயர் நீதிமன்றங்களில் எந்த மொழியில் அல்லது மொழிகளில் வாதிடலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவைக்கே உள்ளது என்கிற திருத்தத்தை கொண்டு வர தமிழக அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை இனப்பிரச்சனையில் தானே தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றியதுபோல், தமிழை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வகை செய்யும் அரசமைப்புத் திருத்தத்தை கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வரே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். அப்படிப்பட்ட முயற்சி தோல்வியுற்றால், இந்தி மொழிக்கு எதிராக கிளர்ந் தெழுந்ததுபோல், மற்றொரு மொழிப்போருக்கு தமிழினம் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

US Navy, Sinhala military engage in joint training

US Navy, Sinhala military engage in joint training operations in Trincomalee

[TamilNet, Tuesday, 16 July 2013, 05:28 GMT]
American Navy SEALS and the Sri Lankan military are currently conducting joint training operations at the Sinhala military occupied Trincomalee. The Annual Joined Combined Exchange Training (JCET) between the US Naval Special Warfare Community and the Sri Lankan military named ‘Flash Style’, which commenced on 2 July at the naval dockyard in Trincomalee, is scheduled to conclude on 19 July. Joint training exercises with the same name had been conducted earlier in 2000, before the commencement of the internationally abetted war on the de-facto state of the LTTE. Given this prolonged cooperation between the US armed forces and the genocide-accused Sinhala military, one is forced to arrive at the conclusion that the Pentagon’s policy approves of the genocidal policy of the Sri Lankan state, a Tamil analyst commented.
US SEALS with SL Military
[Photo courtesy: airforce.lk]


“Special Boat Squadron, Fast Attack Flotilla, Divers and Rapid Response Rescue and Release Squadron of the Sri Lanka Navy and MI 24 Squadron and Regiment Special Forces of the Sri Lanka Air Force are taking part in the exercise along with a 10- member US team from US Navy SEALs, Special Boat Unit and Air Force,” Sri Lanka Navy said in an release.

In 2000, the US conducted similar ‘Flash Style’ exercises with the Sri Lankan Navy. In that time, a team from the US Army Psy-Ops Group was also training the Sri Lanka Army on techniques of psychological war.

In 2002, according to British author Paul Moorcraft, the US Department of Defence gave the Sri Lankan military the idea to use cluster bombs on the LTTE held areas.
US SEALS with SL Military
[Photo courtesy: airforce.lk]

தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் விழா 2044 / 2013


கல்லூரிப் பெண்களும் சம்பாதிக்கலாம்!

கல்லூரி ப் பெண்களும் சம்பாதிக்கலாம்!

வெறும், 20 உரூபாய்  மருதாணிக் கூம்பு வாங்கி, 2,000 சம்பாதிக்கும், கல்லூரி மாணவி உமா மகேசுவரி: நான், கும்பகோணம், அரசு கவின் கலைக் கல்லூரியில், காட்சி தகவல் தொடர்பு மற்றும் வடிவமைப்பில், மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். சிறு வயதில் இருந்தே, நன்றாக படம் வரைவேன். அதனால், பக்கத்து வீட்டு குட்டீஸ் மற்றும் கல்லூரி மாணவியரின் கைகளில், மெஹந்தி போட்டு பழகினேன்.பகுதி நேர வேலையாக, தெரிந்தவர்களுக்கு போட ஆரம்பித்து, இன்று, கும்பகோணத்தில் நடைபெறும், பெரும்பாலான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு, நான் தான், மெஹந்தி போடுகிறேன். டிசைனை பொறுத்து, 150 முதல், 250 ரூபாய் வரை கட்டணம் வாங்கி, மாதம் குறைந்தது, 2,000 சம்பாதிக்கிறேன். விடுதியில் தங்கி படிப்பதால், அறை வாடகை, சாப்பாடு என, என் செலவுகளுக்கு பயன்படுத்துகிறேன்.மணப்பெண்ணுக்கு போடும் மெஹந்தியை கூட, ஒன்றரை மணி நேரத்தில் முடித்து விடுவேன். 15 நாட்கள் வரை அழியாமல் இருக்கும் பாரம்பரிய, "மெஹந்தி டிசைன்கள்'; ஒரு வாரம் வரை இருக்கும், "அரபிக் டிசைன்கள்'; புடவைக்கு ஏற்ற வண்ணங்களில், "ஜர்தோஸி டிசைன்கள்' என, அனைத்தையும் போடுவேன்.மெஹந்தி போடுவதை, கல்லூரி மாணவியர் கற்றால், "பார்ட் டைம்' வேலையாகச் செய்து, உங்கள் செலவுக்கான பணத்தை, நீங்களே சம்பாதிக்கலாம். பக்கத்தில் உள்ள, "பியூட்டி பார்லர் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனங்களுக்குச் சென்று, "மெஹந்தி போட ஏதாவது ஆடர் வந்தால் சொல்லுங்கள்' என, நீங்களாக முன்வந்து, ஒரு முறை செய்து காட்டுங்கள். இதன் மூலம், வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடியும்.குனிந்து, நிமிர்ந்து, கூர்ந்த கவனத்துடன் மெஹந்தி போடுவதால், ஓய்வு அவசியம். இதில், அதிக முதலீடு தேவையில்லை; 20 ரூபாய்க்கு கோன் வாங்கினாலே, 2,000 வரை சம்பாதிக்கலாம். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், ஒரு டிசைனுக்கு, 1,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

1 அயிரைக் கா ஞெகிழிக் குப்பைக்கு அரைக் கா(கிராம்) தங்கம்: மாநகராட்சி

1  அயிரைக் கா ஞெகிழிக் குப்பைக்கு அரைக் கா(கிராம்) தங்கம்: மாநகராட்சி அறிமுகப்படுத்துகிறது கலக்கல் திட்டம்

சென்னை: வகுதி(வார்டு)  தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

குப்பை கொடுத்தவருக்கு, ஒரு டோக்கன் வழங்கப்படும். இப்படி சேர்க்கப்படும் டோக்கன்களில், அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க, மாதம் ஒரு முறை மண்டல உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும்.அதில், முதல் பரிசாக அரை கிராம் தங்கம் வழங்கப்படும். 2வது பரிசாக ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்படும். இதற்காக, தங்கத்திற்கு3 லட்சம் ரூபாய், கைக்கடிகாரத்திற்கு 3 லட்சம் ரூபாய் என, மாதம் 6 லட்சம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில், முதல் மூன்று மாதங்களுக்கான 18 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மூன்று மாதங்கள் இந்த திட்டம் நடக்கும். மக்களின் வரவேற்பை பொறுத்து, திட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மாதம் நடைபெறும், மண்டலக்குழு கூட்டத்தில், இந்த திட்டம் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, உடனே இந்த திட்டம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Mullaiththeevu protests against poaching by Sinhala fishermen

Mullaiththeevu protests against poaching by Sinhala fishermen

[TamilNet, Monday, 15 July 2013, 19:45 GMT]
Tamil fishermen in Mullaiththeevu have vowed to step up protest campaign till Sri Lankan Fisheries Minister, his representative or the SL Government Agent of the district meet them and assure that no southern fishermen would be allowed into Mullaiththeevu for fishing.

Mullaiththeevu town was paralysed on Wednesday last week due to one day hartal in support of the fast unto death campaign by three Tamil fishermen against southern Sinhala fishermen being allowed to fish in the seas off Mullaiththeevu with the support of the occupying Sri Lanka Army and Sri Lanka Navy.

Three Tamil fishermen of Mullaiththeevu began their fast unto death on Monday in front of the District Secretariat.

To give moral support to the fasting campaign traders of Mullaiththeevu closed down their business establishments and observed full day hartal on Wednesday last week.

‘Crimes against women on increase in Sri Lanka’

‘Crimes against women on increase in Sri Lanka’: AHRC

[TamilNet, Monday, 15 July 2013, 19:38 GMT]
“In Sri Lanka the citizens live in an environment that has no respect for women and it is estimated that 95% of women using public transport are at risk of being subjected to sexual harassment,” states a news report by the Asian Human Rights Commission on Monday. Further citing from a press conference held in Colombo on July 14 by Women for Rights, the report alleged that crimes causing violence relating to women and children is on the rise in the island. Commenting on this report, a Tamil social activist from Jaffna said that while the information provided was a matter of grave concern, it was regrettable that the Colombo-centric reportage took no account of the genocidal nature of crimes perpetrated against Tamil women.

Excerpts from the AHRC report follow:

“Every ninety minutes a woman is raped in Sri Lanka, said Women for Rights at a press conference held in Colombo on July 14. The organisation further said that Sri Lanka is 5th on a list regarding domestic violence. Crimes causing violence relating to women and children is on the rise. In Sri Lanka the citizens live in an environment that has no respect for women and it is estimated that 95% of women using public transport are at risk of being subjected to sexual harassment.”

“The spokesperson for the organisation attributed this situation to the government's policy of protecting criminals and allowing local politicians to carry out such crimes with impunity. This approach of neglect towards crime is a strategy that works from the top to the bottom of the government's hierarchy. The organisation also said that the number of crimes against women is far higher than what is actually reported in the media.”

“The above statements from one of the leading organisations for women in Sri Lanka come as no surprise. The criminal justice apparatus in the country has been allowed to collapse. The investigative function of the police has now been virtually suspended and this acts in favour of the criminals. The responsibility for the collapse of the policing system lies firmly with the government and particularly with the promulgation of the 18th Amendment to the Constitution which has virtually invalidated even the limited reforms of the police and other public institutions initiated under the 17th Amendment.”

“Several lawyers interviewed by the Asian Human Rights Commission stated that the practice of criminal law has virtually become a farce. The police officers manipulate the system and the Attorney General's Department makes no attempt to resist the extreme degeneration that is taking place. Besides this the courts themselves become party to this dismal state of affairs by attempting to force down 'settlements'.”

“Under these circumstances the call made by Women for Rights for government intervention to stop crimes against women is quite unlikely to bear any positive results. The challenge now is for all, including women's organisations, to take up the collapse of the criminal justice system and the rule of law in general as the common problem affecting everyone. It is only the development of the solidarity of all those who have become victims of criminals and others who are exploiting the situation that the government's neglect can be confronted. Until then as one lawyer said, "We all are sitting ducks".