உடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலைத் தானம் செய்த மனைவி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82757820131016001605.jpg

சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலை த் தானம் செய்த மனைவி
மதுரை : கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது, மாரடைப்பால் இறந்த கணவரின் கண்களை, திண்டுக்கல் மருத்துவமனையிலும், உடலை பெங்களூரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தானம் செய்தார் மனைவி.

பெங்களூர் சாமந்த்நகரை ச் சேர்ந்தவர் உமேசுகுமார் ராவ், 53. விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இவரது மனைவி சிரீலதா, ஆசிரியை. குடும்பத்துடன் நேற்று முன்தினம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நள்ளிரவு, 2:00 மணிக்கு, உமேஷ் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

அழுது புரண்ட குடும்பத்தினர், அந்த இக்கட்டான நேரத்திலும், இறந்தவரின் கண்களை தானம் செய்ய விரும்பினர். இறந்த, 6:00 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்பதால், அதற்கான வசதியுள்ள மருத்துவமனை குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு, திண்டுக்கல் அரவிந்த் கண்மருத்துவமனை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக இறந்த உடலுடன், திண்டுக்கல் சென்றனர். அங்கு அவகாச நேரத்திற்கு, அரைமணி நேரத்திற்கு முன், அவரது கண்கள் தானம் பெறப்பட்டன. இதன்பின் உடலுடன் பெங்களூரு சென்றனர். உடலை பெங்களூரு அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்ததாக, அரவிந்த் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.
Click Here

சனி, 10 ஆகஸ்ட், 2013

உடலில் எரி வாயு வெளியாகும் குழந்தைக்குப் பண்டுவம்

( மு.கு. : எங்கும் பரவி வாய்த்துள்ளதால் காற்றுக்கு வாயு என்றும் பெயர்.)

உடலில் தீப்பற்றும் வாயு வெளியாவதே காரணம் : திண்டிவனம் குழந்தைக்கு  முனைப்பான பண்டுவம்
சென்னை : "உடலில் தீப்பற்றும் பாதிப்பு உள்ள குழந்தையின் உடலில் இருந்து, தீப்பற்றும் வாயு வெளியாவதே பிரச்னைக்கு காரணம்' என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவர்கள் குழு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

திண்டிவனம், டி.பரங்கிணியைச் சேர்ந்தவர் கர்ணன்; கூலித்தொழிலாளி. இவரது, மூன்று மாத ஆண் குழந்தை ராகுல். ஒரு மாத்தில், நான்கு முறை குழந்தையின் உடலில், திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது; உடலில் தீக்காயங்களும் உள்ளன. பயந்துபோய் கர்ணன் குடும்பத்தினர், கோவில் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், குழந்தையை, நேற்று முன்தினம், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

நோய் பாதிப்பு குறித்து, மருத்துவர்கள் கூறியதாவது: குழந்தையின் உடலில் இருந்து, எளிதில் தீப்பற்றும் வாயு வெளி வருவதால் தான், தானாக உடலில் தீப்பிடிக்கும் நிகழ்வு நடக்கிறது. 300 ஆண்டுகளில், உலகம் முழுவதும் இது போன்று, 200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 வயது வரை உள்ளோருக்கும், பாதிப்பு இருந்துள்ளது. அதே போன்ற பாதிப்பு தான், இந்த குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது. நான்கு முறை தீப்பிடித்ததால், 10 சதவீத தீக்காயம் உள்ளது. மருத்துவர்கள் குழு ஆய்வு நடத்தி, தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமடையும். இவ்வாறு, கூறினர்.

அதே நேரத்தில், "குழந்தையின் உடலில் மீண்டும் தீப்பிடிக்காது என, கூற முடியாது. எளிதில் தீப்பற்றாத உடைகள் அணிவதும், சமைக்கும் இடங்களுக்கு அருகே, தீப்பிடிக்க வாய்ப்புள்ள பகுதிகளுக்கு போகாமலும் குழந்தையை பார்த்துக் கொள்வது நல்லது' என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

புதன், 17 ஜூலை, 2013

உடலுக்குள் ஒரு வெடிகுண்டு!

உடலுக்குள் ஒரு வெடிகுண்டு!


பேரழிவை ஏற்படுத்தும், காசநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை கூறும், மருத்துவர் சவும்யா சுவாமிநாதன்: நான், தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின், இயக்குனராக பணியாற்றுகிறேன். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய, ஒரு வெடிகுண்டின் விளிம்பில், நாம் உட்கார்ந்திருக்கிறோம் என்றால், அது டி.பி., எனும், காசநோய் தான். இந்நோயால், ஆண்டிற்கு, 3 லட்சம் பேர் இறக்கின்றனர்; 18 லட்சம் பேர், சிகிச்சை பெறுகின்றனர்.
காற்றில் பரவும், பாக்டீரியா கிருமி மூலம் தொற்றுவதே, காசநோய். குடிசை பகுதியில் வசிப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், மது, குடி பழக்கம் உள்ளவர்களை, டி.பி., பாதிக்கிறது. டி.பி.,க்கு எந்த ரத்த பரிசோதனையும், இதுவரை கண்டுபிடிக்கவில்லை. "எக்ஸ்-ரே' மற்றும் "சிடி' ஸ்கேனால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
தொடர்ச்சியான இருமல், உடல் எடை குறைதல், சளியில் ரத்தம் தெரிவது, இந்நோயின் அறிகுறிகள். இந்நோய்க்கு, மருந்துகளை எதிர்க்கும் சக்தி அதிகம் என்பதால், நோயாளிக்கு ஒரு வேளைக்கு, நான்கு வகையான, "ஆன்டிபயாடிக்' மாத்திரைகளை தருவதில் இருந்தே, இந்நோயின் வீரியத்தை அறிய முடிகிறது. அப்படி தரப்பட்டாலும், பலருக்கு இந்நோய் சரியாவதில்லை.
மூளை, முதுகுதண்டு, எலும்பு, வயிறு என, உடலின் எந்த பாகத்தையும் பாதித்து, அங்கு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். இன்று, இளம் பெண்களின் கழுத்தில், நெறி கட்டுவது அதிகரிக்கிறது. அசிங்கமாக நினைப்பரோ என, துப்பட்டாவால் மூடி மறைத்து, கட்டி முற்றிய நிலையில், மருத்துவரிடம் வருவது அதிகரிக்கிறது.
டி.பி., பாதிப்பு, ஏழை நாடுகளில் தான் அதிகம் என்பதால், லாபம் கிடைக்காது என்ற எண்ணத்தில், விரைவில் குணப்படுத்தும் மருந்தை, இதுவரை யாரும் கண்டுபிடிக்க முயற்சிக்காமல், நீண்ட கால சிகிச்சை முறையே உள்ளன. இதன் சிகிச்சைக்கு செலவு அதிகம். அரசு மருத்துவமனைகளில், இதற்கான மருந்து மாத் திரைகள், இலவசமாகவே கிடைக்கின்றன.