புதன், 21 செப்டம்பர், 2011

காந்தி பிறந்தநாளில் பட்டினிப் போராட்டம்: பழ.நெடுமாறன் அழைப்பு

காந்தி பிறந்தநாளில் பட்டினிப் போராட்டம்: பழ.நெடுமாறன் அழைப்பு

First Published : 21 Sep 2011 12:54:12 PM IST


சென்னை, செப்.21: தூக்குத் தண்டனையை அறவே ஒழிக்க வலியுறுத்தியும், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வலியுறுத்தியும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் பட்டினிப் போராட்டம் நடத்த பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களிலும் ஊர்களிலும் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என 3 தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ban to rajapakshe to go out of New YOrk: நியுயார்க்கைவிட்டு வெளியே செல்லஇராசபட்சவுக்குத் தடை?

நியுயார்க்கைவிட்டு வெளியே செல்ல ராஜபட்சவுக்கு தடை?

First Published : 21 Sep 2011 11:29:49 AM IST


நியுயார்க், செப்.21: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை நியுயார்க் நகரைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நியுயார்க் நகருக்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே இலங்கை அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நியுயார்க்கில் மட்டுமே அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியுயார்க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஏன் எதிர்க்க வேண்டும் மரணத் தண்டனையை?

ஏன் எதிர்க்க வேண்டும் மரண தண்டனையை?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 

செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி குறிக்கப்பட்டிருக்கிற மூன்று பேருக்கான மரண தண்டனை குறித்த விடயம் இது.
உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவரின் மரணதண்டனையை நிறைவேற்றுவது நாகரிக உலகத்தில் நமது நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும்.
தண்டனை என்பது சமூகத்தைப் பயமுறுத்துவதற்காகவோ அல்லது எதிர் காலச் சந்ததியினர் எப்படி வாழ வேண்டும் என்கிற படிப்பினைக்காக மட்டும் என்றால், நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம்.
தண்டனை பல படிநிலைகளைக் கொண்டது. ஒரு ரூபாய் திருடுனவனுக்கும், ஒரு கோடி திருடுனவனுக்கும் வித்தியாசம் இருக்கு – அடிப்படையில் திருட்டு என்பது ஒன்றுதான் என்றாலும். கொலை செய்தவனையும் கொலைக்கு உதவி செய்தவனையும், எதற்கு என்று தெரியாமலேயே உதவி செய்தவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா. பல இஸ்லாமிய நண்பர்கள் இப்படித் தான் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் – சில உதவிகள் வேண்டும் என்று செய்யப் போய் / எதுக்குன்னு தெரியாம செய்யப் போய் கடைசியில மிகப் பெரியத் திட்டம் தீட்டி செயல் பட்டதா ...
கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு அதிக பட்ச தண்டனை மரணம் என்றால் – திரு. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து போய் விட்டார்கள். இறந்தவர்களைத் தூக்கில் இட முடியாது என்பதற்காக மற்றவர்களைத் தூக்கில் இடுவது – ஒரு கோடிக்கும் தூக்கு ஒரு ரூபாய்க்கும் தூக்கு என்கிற விதத்தில் வந்து விட்டால் நமக்கு நீதிமன்றங்களே தேவையில்லையே – வெறும் காவல் துறை மட்டும் போதும். இந்தத் தவற்றுக்கு இந்தத் தண்டனை என்கிற அளவில் சட்டம் இருந்தால் மட்டும் போதுமே. எதற்கு நீதிமன்றங்கள், எதற்கு ஒரே மாதிரி வழக்குகளுக்கு வேறு வேறு மாதிரியான தண்டனை? வெறும் காவல் துறை மட்டும் தண்டனையை நிறைவேற்றலாமே.
சரி - தண்டனையில் வித்தியாசம் இருக்கிறது என்றால் – இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கிப்பட்டிருக்கிற மூவருக்கும், கொலையில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் தண்டனையில் வித்தியாசம் வேண்டாமா? பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஒருவனுக்கும் மரண தண்டனை – ஒருவரைக் கொன்றதற்காக பலருக்கு மரண தண்டனை என்பது சரியா?
அல்லது இந்த வழக்கு என்பது தடாச் சட்டத்தில் வராது என்கிற போது [இதைத்தான் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் எல்லாத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்], எப்படி அதில் பெற்ற வாக்குமூலம் மட்டும் செல்லுபடியாகும்? – எப்படி அந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தைக் கொண்ட தீர்ப்பு செல்லுபடியாகும்?
அல்லது அப்படியே அவர்கள் குற்றவாளிகள் என்றாலும் – ஏற்கனவே ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சிறைச்சாலைக்குள் முடங்கிக் கிடந்த ஒருவருக்கு இப்போது மரணம் என்கிற தண்டனை வேறு தேவையா?
நண்பர்களே – உணர்ச்சிப் பிழம்புகள் கொதிக்க இதற்குப் பின் உள்ள அநியாயங்கள் குறித்தெல்லாம் யோசித்து இந்த மரண தண்டனையை எதிர்க்க வேண்டியதில்லை. மனித நேயம் உள்ள யாரும் எதிர்க்கலாம். இருபது ஆண்டுகள் சிறைக்குள் ஏற்கனவே ஆயுள தண்டனை முடிந்து இரண்டாவது ஆயுள் தண்டனையில் பாதியை முடித்தவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை தானே என்கிற பார்வையில் யோசித்தால் போதும். மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்.
குறிப்பு
மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான் என்பதற்கான மிகப் பெரிய அடையாளம் போர், மனித இழப்பு, வன்முறை இவைகளெல்லாம் வெறுக்கத்தக்கவை என்ற நிலையை அடைந்ததுதான். அந்த நிலையை மானிட சமூகம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் அடைந்தது – அதற்குப் பிறகுதான் மனித உரிமையும், மனிதன் ஒருபோதும் ஒரு பொருளாக நடத்தப்படக்கூடாது என்பது மட்டுமல்ல, மனிதன் ஒவ்வொருவனும் மதிப்பு மிக்கவன் என்கிற சித்தாந்தம் வெகுவாக ஊன்ற ஆரம்பித்தது.
பல போர்களுக்குப் பிறகு – உயிரிழப்பிற்குப் பிறகு ஞானோதயம் வந்து – எல்லாரையும் மதிக்க உறுதியோடு இருக்கிறார்கள். இது நடைமுறையில் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும், எந்த அளவுக்கு அரசியல் ஆதாயத்தோடு மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன, மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கப்படுகின்றன என்பதும் விவாதத்துக்குள்ளாக்கப் படவேண்டியதுதான் – ஆனாலும் அதையும் தாண்டி இன்றைக்கு பல நாடுகள் சாதித்திருக்கிற மனித உரிமை பற்றிய கருதுகோள்களும் மனித மாண்பு மதிக்கப்பட மேற்கொண்டிருக்கிற முயற்சிகளையும் பார்க்கிறபோது அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் மரண தண்டனை ஒழிப்பு என்பது.
நாம் நாகரீகவாதிகளா?

மரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை



மரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான K.T.தாமஸ், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நான்கு கைதிகளுக்கு மரண தண்டனை விதித்த ஆயத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் ஆவார். கடந்த செப்டம்பர் 2, 2011ல் ஏசியன் ஏஜ் இதழில் வெளியான அவரது கட்டுரையின் மொழியாக்கம் இது)
afzalguru_360இந்திய குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததும், தமிழக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அப்சல் குரு குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டரில் சமீபத்தில் பதிவு செய்தவையும், மரணதண்டனை குறித்த விவாதத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. உண்மையில், பரபரப்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நீதிமன்றங்கள் இந்த அதீதமான தண்டனையை எப்போதெல்லாம் விதிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த சர்ச்சை சூடுபிடிக்கத்தான் செய்கிறது. மற்ற நேரங்களில் இது குறித்த விவாதம் துடிப்பற்றே இருக்கிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் 26 பேருக்கும் அமர்வு நீதிபதி ஒருவர் மரணதண்டனை விதித்தபோது விவாதம் ஏதும் எழாமலேயே போனது. பின்னர் உச்ச நீதிமன்றம் 22 குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பை தள்ளுபடி செய்து, நால்வருக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது. அப்போதும் கூட கொந்தளிப்பை உருவாக்கக்கூடிய இப்பிரச்சனை பொது விவாதத்திலிருந்து தப்பியது.
இது இவ்வாறிருக்க, வன்புணர்ச்சிக் குற்றத்திற்காக ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பில் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி தள்ளுபடி செய்தபோதுதான் இப்பிரச்சனை முன்னிலைக்கு வந்தது. மிக நீண்ட காலத்திற்குப்பிறகு அவர் தூக்கில் இடப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உள்ள கைதிகளின் நிலையும் வேறொன்றில்லை, ஏனெனில் மிக நீண்ட காலமாக தூக்குக்கயிர் கண்கள் முன்னால் ஆட, அவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள்.
இந்த நான்கு குற்றம்சாட்டப்பட்டோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற ஆயத்திற்கு தலைமை வகிக்க நேர்ந்தது எனது துரதிர்ஷ்டம்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முதலில் தூக்கிலிடப்படுவதற்காக தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, என் ஞாபகத்தில், சரித்திரத்தில் வேறு எந்த வழக்கிலும் இருந்ததில்லை. நான் வழக்கறிஞராகப் பணியைத் துவங்கிய காலகட்டத்தில் மரண தண்டனை தீர்ப்பு அடிக்கடி வழங்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், சட்டப்படி, அமர்வு நீதிபதி மரண தண்டனை தீர்ப்பு அளிக்கவில்லையெனில், அதற்கான காரணங்களை அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. பின்னர் சட்டம் மாற்றப்பட்டு ஆயுள் தண்டனையே சராசரி தண்டனை ஆன போது, மரண தண்டனை விதிப்பதற்கு அமர்வு நீதிபதிகள், சிறப்புக் காரணங்களை அளிக்கவேண்டிய நிலை வந்தது!
அரிதிலும் அரிதான வழக்கு இல்லையெனில் இவ்வதீதமான தண்டனையை சுமத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பின்னர் கட்டுப்பாடு விதித்தபோது, சட்டம் மேலும் முறுக்கப்பட்டது. ஆனால் “அரிதிலும் அரிதான” என்ற இந்த கருத்து சொற்பொருளியல் அளவிலேயேதான் இருந்து வந்தது.
ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் மற்ற வழக்குகளை விட குரூரமான மேலோட்டங்கள் அதிகமாக இருப்பதாகத் தோன்றிய போதெல்லாம் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் மரண தண்டனையை விதித்து வந்துள்ளன. பெரும்பாலான கொலைகள் கொடூரமான முறையில் நிகழ்த்தப்படுபவையாகவே இருக்க, ஒரு குறிப்பிட்ட வழக்கை அரிதிலும் அரிதானது என்று தனது சொல்லாடலால் விவரிப்பது நீதிபதியின் விருப்பத்தைப் பொருத்து அமைந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல்களில் நிகழும் பெரும்பாலான கொலைகள் அரிதிலும் அரிதான வழக்குகளாக கருதப்படவில்லை என்று அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் கொலை செய்யப்படுவது பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில், அரிதிலும் அரிதானதாக விவரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்திரா காந்தி படுகொலை வழக்கிலும், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலும், ஜெனரல் வைத்யா கொலை வழக்கிலும் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகள் இதை உறுதி செய்கின்றன. ஆனால் 1984இல் நடந்த சீக்கியர் கலவரங்களின்போதைய கொலை வழக்குகள் ஏதும் அரிதிலும் அரிதான வழக்காகக் கருதப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற கோட்பாட்டை எடுத்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் பிரபலமான பச்சென் சிங்க் வழக்கின் தீர்ப்பை இயற்றியவர் நீதியரசர் சர்க்காரியா ஆவார்.
இதுபோன்ற வழக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான அளவுகோல் குறித்து அவர் கூறுகையில், “அரிதிலும் அரிதான வழக்கு என்பது ஆயுள் தண்டனை என்ற மாற்று கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளமுடியாத வழக்குகளே ஆகும்” என்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்தபோது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நிகழ்ந்தமையால் இதைச் சுட்டிக்காட்டுகிறேன்.
அது, நான், நீதியரசர் வாத்வா மற்றும் நீதியரசர் முஹம்மது காத்ரி ஆகியோர் அடங்கிய ஆயம். நளினி குறித்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அவரையும் குற்றவாளியாகவே அறிவித்தது. ஆனால் மூவரில் ஒரு நீதிபதி தனது காரணங்களை முன்வைத்து, அவர் தூக்கில் இடப்படக்கூடாது என்றார். எனினும், மற்ற இரு நீதிபதிகளும் அவரும் சாகும் வரை தூக்கில் இடப்பட வேண்டியவரே என்று எடுத்துரைத்தனர். ஆகவே, பெரும்பான்மை தீர்ப்புக்கேற்ப அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன்னர் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த தீர்ப்பு மறுஆய்வுக்கு வந்தது. ஆயத்தின் ஒரு மூத்த நீதிபதி என்ற முறையில் வழக்கறிஞர்களிடம் மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதை நான் கூறினேன். நான் அப்படிச் செய்ததற்கான காரணம், வெளிப்படையான தவறுகள் ஏதும் முந்தைய பதிவுகளில் இல்லாத பட்சத்தில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மற்றிக்கொள்ளாது என்பது தான். ஆகவே நாங்கள் அந்த மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய முடிவுசெய்தோம்.
எனினும் அந்த மறுஆய்வு மனு மீதான தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் என் மனதில் ஒரு புது யோசனை உதித்தது. அதனால், புதிய அடிப்படையில் அந்த மறுஆய்வு மனுவை அனுமதித்துக்கொண்டு தீர்ப்பைப் பிறப்பித்தேன். மூவர் ஆயத்தில் ஒருவர் ஆயுள் தண்டனைக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க, இரு நீதிபதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலில், அரிதிலும் அரிதான வழக்குகளை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று கூறினேன். அதாவது, ஒரு நீதிபதி மரண தண்டனைக்கு எதிராக பேசிய சூழலில், குறைவான மாற்று என்பது கேள்விக்கிடமின்றி தள்ளுபடி செய்யப்படவில்லை. மற்ற இரு நீதிபதிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக குடியரசுத் தலைவர் நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். சட்டத்தால் நிறுவப்பட்ட செயல்முறைக்கேற்ப அல்லாமல், ஒரு மனிதனின் உயிரையோ சுதந்திரத்தையோ பறிக்கக்கூடாது என்று அரசியலமைப்புச்சட்டத்தின் சரத்து 21 கூறுகிறது. இதன் பொருள், சட்டம் நியாயமாக, நேர்மையாக, சரியானதாக இருப்பின் உங்களது உயிர் கூட அச்சட்டத்தால் எடுக்கப்படலாம். மரண தண்டனை என்பது ஒரு மனிதனைக் கொல்வதாகும். சட்டத்தின் பாதுகாப்பு இருந்தால் ஒரு நபரைக் கொல்வது குற்றம் இல்லை என்பதே இப்போது சட்டம்! சட்ட அனுமதி இருப்பின் ஒரு மனிதன் கொல்லப்படலாமா?
மரண தண்டனை இருக்க வேண்டும் என்று சொல்வோரும், ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்வோருமாக, சட்டம் அறிந்தோரும், மனித உரிமை ஆர்வலர்களும் தங்களை இரு குழுக்களாக பிரித்துக்கொண்டுள்ளனர். நீங்கள் ஒருவரைக் கொன்றால் எப்படி உங்களை தண்டனையிலிருந்து விலக்க முடியும்? தண்டனை என்பது என்ன? நீங்கள் உங்கள் குழந்தையை எதற்கு தண்டிக்கிறீர்கள்? ஒருவரை சீர்திருத்தவே அவரை தண்டிக்கின்றீர்கள் என்பது திண்ணம். முன்பெல்லாம் தண்டனைக்கு மூன்று பரிமாணங்கள் கொண்ட நோக்கம் இருந்தது: சீர்திருத்தம், குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது மற்றும் பழிவாங்குவது. பழிவாங்குதல் என்ற குறிக்கோள் இப்போது வழக்கற்றுப்போன, பட்டிக்காட்டுத்தனமான ஒன்றாக கருதப்படுகிறது. பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற கோட்பாட்டை பெரும்பாலான நவீன கால குற்றவியல் நிபுணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எஞ்சிய இரு நோக்கங்களில், சீர்திருத்தம் என்ற நோக்கம் குற்றம் இழைத்தவரை இல்லாமல் செய்யும் போது, அடையமுடியாததாகிறது.
எஞ்சுவது, குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கம். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று கூறும் குழுவினர் தங்கள் கூற்றை நியாயப்படுத்த முன்வைப்பதும், மரண தண்டனை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் என்ற வாதமே ஆகும். ஆனால் இது நிஜமாகவே குற்றங்கள் நிகழ்வதை தடுக்கிறதா? இன்றைக்கும் சவுதி அரேபியாவில் வெள்ளிக்கிழமைகளில் ஜுமா வழிபாட்டிற்குப் பின்னர் ஒருவர் காண நிர்பந்திக்கப்படுகிற கொடூரமான காட்சி, குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்படுவதாகும்.
இதற்கான பொருள் என்னவென்றால், மக்கள் தொகை மிகவும் குறைவான ஒரு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் குற்றம் புரிவோர் ஒழிக்கப்படவில்லை என்பதேயாகும். ஒரு குற்றவாளி தண்டனையில் இருந்து தப்பினால் மற்றவர்களை அதே போன்ற குற்றங்கள் இழைக்க அது ஊக்குவிக்கும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் மரண தண்டனை நிஜமாகவே குற்றம் இழைப்பதிலிருந்து குற்றவாளிகளை தடுக்கிறதா என்று ஒரு ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை, மரண தண்டனையின் தாக்கத்தையும் ஆயுள் தண்டனையின் தாக்கத்தையும் எவரும் ஒப்பீடு செய்து பார்த்ததில்லை.
perarivalan_267ஆனால் நம்மிடம் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாகாணங்களைச் சார்ந்த பதிவுகள் உள்ளன. திருவிதாங்கூர் அரசர்தான், 1940இல் முதலில் மரண தண்டனையை ஒழித்தார். பின்னர் அதே வருடம் கொச்சியின் அரசரும் இதே போன்றதொரு அறிவிப்பை விடுத்தார். பின்னர் இந்த மாகாணங்கள் 1950இல் இந்திய குடியரசில் இணைந்த போது இங்கு மரண தண்டனையையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரவேண்டியிருந்தது. இது இவ்வாறிருக்க, இவ்விரு மாகாணங்களிலும் 1940லிருந்து 1950 வரையிலும், 1950லிருந்து 1960 வரையிலும் நடந்தேறிய கொலைகளை குற்றவியல் நிபுணர்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்தனர். மரண தண்டனை நிலுவையில் இல்லாத காலத்தில் இருந்ததை விட 1950லிருந்து 1960 வரையிலான காலத்தில் கொலை விகிதம் அதிகமாக இருந்ததைக் கண்டறிந்து அவர்கள் திகைப்புற்றனர். குற்றம் நிகழ்வதிலிருந்து தடுக்கும் கருவியாக மரண தண்டனை அமையும் என்ற கருத்தில் உண்மையில்லை என்பதை இது தெளிவாக்குகிறது.
இங்கிலாந்தில் சிறு திருடர்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவரசியமான சம்பவத்தை மாபெரும் தத்துவவாதியான ஆர்தர் கொட்ஸ்லர் விவரிக்கிறார். குட்டித் திருட்டுகள் புரியும் நபர்களை மரண தண்டனை தடுக்கும் என்ற எண்ணத்தில்தான் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு திருடன் தூக்குமேடையேற்றப்படும் போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக அக்காட்சியை காண வருவர். அவ்வாறு ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த மக்களில் 63 நபர்களின் பணம் அந்நிகழ்ச்சியின் போது திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு செய்திகள் கிடைத்தது. மரண தண்டனை, குற்றத்தைத் தடுக்காது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
இனி எஞ்சுவது மரண தண்டனையைச் சூழும் மனிதத்தன்மையற்ற அம்சங்களே ஆகும். முதலாவதாக, குற்றவாளியை சீர்திருத்துவதற்கான குறிக்கோளை அது அழிக்கிறது. இரண்டாவதாக, உங்கள் முடிவைத் திருத்தும் கடமைக்கு (குறிப்பாக, உங்கள் தீர்மானம் தவறானது என்று பின்னர் தெரியவரும் போது) முன்கூட்டியே முடிவுகட்ட உங்களை நிர்பந்திக்கிறது. மூன்றாவதாக, குற்றவாளியை கொல்வதின் மூலம், சட்டத்தின் மறைவில் இருந்துகொண்டுதான் என்றாலும், நீங்கள் ஒரு கொலையைத் தான் புரிகிறீர்கள். நான்காவதாக, சட்டம் கொடுக்கும் அதிகாரத்தால் ஒருவரை கொல்லும்போது, நீங்களும் அந்த நபரின் பழிவாங்கும் மனப்போக்கையே பகிர்ந்துகொள்கிறீர்கள்.
ஐந்தாவதாக, ஆத்மீகமான முறையில் சொன்னால், உங்களால் திருப்பிக் கொடுக்க முடியாத உயிரை நீங்கள் எடுக்கவும் கூடாது. ஆறாவது காரணம், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றை வைத்து மரண தண்டனை விதிக்க முடிவு செய்வதைக் குறித்ததாகும். வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்த எனது அனுபவங்களின் அடிப்படையில், சாட்சிகள் சாட்சியம் சொல்ல பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்று என்னால் அதிகாரப்பூர்வமாகக் கூற முடியும். கொலையின் தீவிரத்தை கொலை செய்யப்பட்டவரின் உற்றார் உறவினர் பொதுவாக மிகைப்படுத்தித் தான் கூறுவர். ஆகையால், ஒரு கொலை மிகக் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டது என்ற உங்கள் முடிவு மிக பலவீனமான அடிப்படையைக்கொண்டு எடுத்த முடிவாகவும் இருக்கக்கூடும். மேலும், கொலை வழக்குகளில், குற்றவாளிகளாக கருதப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இவர்களில் 90 விழுக்காட்டினர் சமூகத்தின் கீழ் படிநிலைகளைச் சார்ந்தோர் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
நான் கொலை புரிவதில்லை, நீங்களும் செய்யாமல் இருக்கலாம். இதற்கு நாம் வளர்க்கப்பட்ட விதமே காரணமாகும். ஆனால், கல்விபெற்ற வகுப்பினரின் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிந்த அளவுக்கு சேரியில் வாழ்பவர் மற்றும் நாடோடியாக அலைபவர்களின் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு ஆத்மீகம் குறித்தும் தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் எந்தவிதமான தார்மீகமான தடைகளும் இன்றி வன்முறையில் ஈடுபடுகின்றனர். மகசேசே விருது பெற்ற கிரண் பேடி எழுதியுள்ள புத்தகத்தைப் படித்த பின்னர் எந்தவொரு குற்றவாளியும் சீர்திருத்தப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அரசோ பொதுமக்களோ சீர்திருத்தம் என்ற இப்பிரச்சனையில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு குறுக்கு வழிதான் தெரியும்; குற்றவாளியைத் தீர்த்துக்கட்டி அதில் கிடைக்கும் காட்டுத்தனமான மகிழ்ச்சியில் களிப்பது. எனது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். குற்றவாளியை நிரபராதி என்று நீதிமன்றம் கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் சில நேரங்களில், அரிதாகத் தான், நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவர்.
இது வழக்குகளைப் பரபரப்பாக்குவதின் விளைவே ஆகும். குற்றம் சுமத்தப்பட்டவர் உண்மையில் நிரபராதி என்று நீதிபதி கண்டறிந்த ஒரு உதாரணம் சரித்திரத்தில் உள்ளது. இருப்பினும் குரோதம் நிறைந்த மக்கள் கூட்டம் ஒன்றை சமாதானப்படுத்துவதற்கு அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டியிருந்தது. இது 2000 வருடங்களுக்கு முன்னர் எருசலேம் நகரில் நடந்தது. அந்த நீதிபதியின் பெயர் பொந்தியு பிலாத்து என்றும் அந்த கைதியின் பெயர் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்றும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இல்லை!
(K.T. தாமஸ், T.S. ஸ்ரீநிவாச ராகவனிடம் கூறியது - http://www.asianage.com/ideas/death-penalty-nothing-brutal-murder-state-814)
தமிழில்: சபிதா, இராபர்ட் சந்திரகுமார் ( robertckumar@gmail.com)

Gnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது

3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது

First Published : 21 Sep 2011 02:08:03 AM IST


அமர்காந்த், ஸ்ரீலால் சுக்லா, சந்திரசேகர் கம்பாரா
புதுதில்லி, செப். 20:புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர்களான அமர்காந்த், ஸ்ரீலால் சுக்லா ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான, இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதேநேரம், 2010-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதினை கன்னட இலக்கியவாதியான சந்திரசேகர் கம்பாரா பெறுகிறார். இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. சிறந்த எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான டாக்டர் சீதாகாந்த் மஹாபத்ரா தலைமையில் கூடிய தேர்வுக் குழு 45 மற்றும் 46வது ஞானபீடவிருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது.  86 வயதாகும் அமர்காந்த் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். அவர் எழுதிய நாவலுக்கு 2007-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது பல சிறுகதைகள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் 1925-ல் பிறந்த சுக்லா, சாகித்ய அகாதெமி மற்றும் வியாஸ் சம்மான், பத்மபூஷன் விருதுகளை பெற்றவர். 74 வயதாகும் கம்பாரா சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இலங்கைக் கடற்படையுடன் இந்தியா கூட்டுப்பயிற்சி நடத்துவதா?மருத்துவர் இராமதாசு கண்டனம்


இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டு பயிற்சி நடத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
 
 
 
சென்னை, செப்.20-
 
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பயிற்சியை தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு பல்வேறு உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண் டிக்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு இந்தியா உதவிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறது.
 
காங்கேசன் துறைமுகத்தை பல நூறுகோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வரும் இந்திய அரசு, அடுத்தக் கட்டமாக இலங்கை கடற்படைக்கு பயிற்சியும், பிற உதவிகளையும் வழங்க இருக்கிறது. இலங்கையுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வரும் நிலையில் அந்நாட்டு கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல.
 
அப்பாவி தமிழ் மீனவர்களை கொன்று குவித்ததற்கு பரிசாகத்தான் இந்த பயிற்சியை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறதா என்ற வினா தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மனதில் எழுந்திருக்கிறது. எனவே தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்.
 
இலங்கையுடனான ராணுவ உறவுகளை முறித்துக் கொண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 

Save the life of three- Vaiko request to soniya: மூவரின் உயிரைக் காப்பாற்ற சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

மத்தியில் ஆளும் கட்சியின்தலைவர் என்ற முறையிலும் கொல்லப்பட்டவர் அவரது கணவர் என்பதால் கட்சி நடவடிக்கைகளால் அப்பாவிகள் பலியாவதாலும் அவரிடம் வைக்கோ அவர்கள் வேண்டுதல் விடுத்தது  சரியே! இதுவரை செய்த  கரிசுகளுக்கு (பாவங்களுக்கு)க் கழுவாயாக (பரிகாரமாக) மூவர் விடுதலைக்கு  வழி விட்டால் அவரது மதிப்புதான் உயரும். இல்லையேல் எப்படியும் சட்டப்படி விடுதலை  பெறுவர். ஆனால், அவரது கட்சி நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகித் தமிழ் நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்!இனத்தைக் காப்போம்! /




மூவரின் உயிரை காப்பாற்ற சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

First Published : 20 Sep 2011 04:04:58 AM IST

வேலூர், செப். 19: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுகோளாக ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.  வேலூர் மத்தியச் சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து திரும்பிய வைகோ, நிருபர்களிடம் கூறியது:  தூக்குத் தண்டனை கைதிகள் மூவரின் உயிரை காப்பாற்ற முதல்வர் வரலாறு படைக்கும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளார். 8 வாரத்துக்கு தூக்குத் தண்டனைக்கு தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுகோளாக ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், மத்திய அரசும் இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்திருந்தாலும் கூட, மீண்டும் மனுவை அவர் மறுபரிசீலனை செய்வதில் சட்டத்தில் எவ்விதத் தடையும் இல்லை. என்றார் வைகோ.

கூடங்குளம் சிக்கல்: செயலலிதாவுடன் தலைமையமைச்சர் பேச்சு

கூடங்குளம் பிரச்னை: ஜெயலலிதாவுடன் பிரதமர் பேச்சு

First Published : 20 Sep 2011 05:24:52 AM IST

Last Updated : 20 Sep 2011 05:34:38 AM IST

 சென்னை, செப். 19: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை மாலை தொலைபேசியில் பேசினார். இந்தப் பிர்சனை குறித்துப் போராட்டம் நடத்திவரும் மக்களிடம் பேசுவதற்கு மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் பிரதமர் அப்போது உறுதி அளித்தார். இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலை கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை தில்லிக்கு அனுப்பிப் பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்க இருப்பதாகவும் அதற்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்கித் தரும்படியும் கேட்டுக் கொண்டார். இந்தப் பிரச்னையில் சுமுகத் தீர்வு ஏற்படும் வரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை தனது கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார். தொலைபேசியில் பேச்சு: இந்த நிலையில், ஜெயலலிதாவுடன் மன்மோகன் சிங் திங்கள்கிழமை மாலையில் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது "சுமார் 100 பேர்களுடன் தொடங்கிய போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கு கொண்டுள்ளார்கள்' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதற்குப் பதிலளித்தப் பிரதமர், இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகக் கூறினார். அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் சென்று அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாட வேண்டுமென்றும் மற்றும் தனது கடிதத்தில் தெரிவித்தபடி தமிழ்நாட்டுக் குழுவை பிரதமர் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும்படியும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் தொடர்பாக நியூயார்க் செல்ல இருப்பதாகவும் செப்டம்பர் 27-ம் தேதி திரும்பி வந்தவுடன் அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார். பிரதமரின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். நாராயணசாமி: இதனிடையில், தில்லியில் தினமணி நிருபரிடம் பேசிய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளத்தில் போராட்டம் நடத்திவரும் மக்களை செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளதாகவும், முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தெரிவித்தார். அவருடன் அணுசக்தி துறை அதிகாரிகள் குழுவினர் வருவதாகவும் நாராயணசாமி கூறினார்.  

தேசியத் தலைவரின் மாமியார் சின்னம்மா காலமானார்

தேசியத் தலைவரின் மாமியார் சின்னம்மா காலமானார்
18 September, 2011 by admin
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.

சரவணையைப் பிறப்பிடமஅகவும் புங்குடுதீவை வசிப்பிடமஅகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் திருமதி. அருணாதேவி குமாரதாஸ் (லண்டன்), சிறீதரன் (டென்மார்க்), திருமதி. மதிவதனி பிரபாகரன் (தமிழீழம்), மாவீரரான பாலச்சந்திரன் ஏரம்பு (கப்டன் அருண்)ஆகியோரின் தாயாரும், திரு. குமாரதாஸ் (டென்மார்க்), தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் (தமிழீழம்), திருமதி. சாந்தினி சிறீதரன் ஆகியோரின் மாமியாரும், பூர்னிமா (டென்மார்க்), வித்யா அனஸ் (டென்மார்க்), இந்துமதி (டென்மார்க்), அருணன் (டென்மார்க்), சந்துஜா (டென்மார்க்), சாள்ஸ் அன்ரனி (தமிழீழம், துவாரகா (தமிழீழம்), பாலச்சந்திரன் (தமிழீழம்) ஆகியோரின் பாட்டியும், நீலனின் பூட்டியும் ஆவார்.





India’s indirect campaign backs Sri Lanka’s military and genocide

India’s indirect campaign backs Sri Lanka’s military and genocide

[TamilNet, Monday, 19 September 2011, 09:36 GMT]
Choosing a time when Geneva is supposed to decide on investigating Sri Lanka’s war crimes, New Delhi has scheduled a large-scale joint military exercise with Sri Lanka in Trincomalee in the country of Eezham Tamils. Meanwhile, a senior leader of India’s major opposition party, Dr. Murli Manohar Joshi of BJP, chose to deliver a lecture in Colombo on Saturday commemorating a Sinhala-Buddhist revivalist, and according to The Hindu, Dr. Joshi “was left with the impression that everyone wanted an early solution leading to a united Sri Lanka under one constitution.” Both the Administration and Opposition of New Delhi indirectly signal against investigating genocidal Sri Lanka’s war crimes and the ‘impression’ Joshi conveyed to The Hindu has no moral validity as Tamils are constitutionally prevented from telling their opinion on the national question, commented a Tamil politician in the island.

The naval exercise New Delhi is conducting with Colombo beginning from Monday is of a larger scale compared to the earlier ones, Times of India reported Sunday, citing an Indian official.

Though India trains soldiers from several countries, ranging from Maldives, Mauritius and Mongolia to Botswana, Uzbekistan and Tajikistan, the facilities extended to Sri Lanka are much more, Times of India further said.

Meanwhile, Joshi’s impression reflecting the same line of thinking of New Delhi’s ruling alliance came after his meeting with SL prime minister DM Jayaratne, SL foreign minister G L Peiris and TNA leader R Sampanthan, The Hindu said on Sunday.

When asked why the BJP had of late begun talking about the Tamil issue, Joshi said that as a “responsible and constructive opposition.” it was the duty of the party to raise issues of national interest and national wellbeing.

Immediately after the genocidal war, Prof. Romila Thapar who is ideologically opposite to Dr. Joshi also chose to deliver a lecture in Colombo, harping on ‘Buddhism’.

If Joshi and Thapar work in the same lines in talking about Buddhism and in buttressing the integrity of a genocidal State, then there must be something wrong in the Buddhism exported by India, the Tamil politician in the island commented.

Dr. Joshi delivered a lecture commemorating Anagarika Dharmapala who tagged the Indians and Tamils in the island with a term 'Para', which in Sinhala means foreigners as well as 'untouchables'.

Politicians like Joshi are allowed to ‘fabricate’ impressions in the name of the ‘national interest’ they imagine, because Tamil Nadu is yet to openly make a stand on the independence of Eezham Tamils and Tamil Nadu is yet to embark on the edification of Joshi’s ilk on what is India’s national interest in the southern flank, was the comment heard from alternative political circles in Tamil Nadu.