புதன், 21 செப்டம்பர், 2011

காந்தி பிறந்தநாளில் பட்டினிப் போராட்டம்: பழ.நெடுமாறன் அழைப்பு

காந்தி பிறந்தநாளில் பட்டினிப் போராட்டம்: பழ.நெடுமாறன் அழைப்பு

First Published : 21 Sep 2011 12:54:12 PM IST


சென்னை, செப்.21: தூக்குத் தண்டனையை அறவே ஒழிக்க வலியுறுத்தியும், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வலியுறுத்தியும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் பட்டினிப் போராட்டம் நடத்த பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களிலும் ஊர்களிலும் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என 3 தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக