cong. vaiko லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cong. vaiko லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

Save the life of three- Vaiko request to soniya: மூவரின் உயிரைக் காப்பாற்ற சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

மத்தியில் ஆளும் கட்சியின்தலைவர் என்ற முறையிலும் கொல்லப்பட்டவர் அவரது கணவர் என்பதால் கட்சி நடவடிக்கைகளால் அப்பாவிகள் பலியாவதாலும் அவரிடம் வைக்கோ அவர்கள் வேண்டுதல் விடுத்தது  சரியே! இதுவரை செய்த  கரிசுகளுக்கு (பாவங்களுக்கு)க் கழுவாயாக (பரிகாரமாக) மூவர் விடுதலைக்கு  வழி விட்டால் அவரது மதிப்புதான் உயரும். இல்லையேல் எப்படியும் சட்டப்படி விடுதலை  பெறுவர். ஆனால், அவரது கட்சி நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகித் தமிழ் நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்!இனத்தைக் காப்போம்! /




மூவரின் உயிரை காப்பாற்ற சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

First Published : 20 Sep 2011 04:04:58 AM IST

வேலூர், செப். 19: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுகோளாக ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.  வேலூர் மத்தியச் சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து திரும்பிய வைகோ, நிருபர்களிடம் கூறியது:  தூக்குத் தண்டனை கைதிகள் மூவரின் உயிரை காப்பாற்ற முதல்வர் வரலாறு படைக்கும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளார். 8 வாரத்துக்கு தூக்குத் தண்டனைக்கு தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுகோளாக ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், மத்திய அரசும் இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்திருந்தாலும் கூட, மீண்டும் மனுவை அவர் மறுபரிசீலனை செய்வதில் சட்டத்தில் எவ்விதத் தடையும் இல்லை. என்றார் வைகோ.

வியாழன், 8 செப்டம்பர், 2011

எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை:வைகோ



தூத்துக்குடி:""உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை,'' என, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தில், கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்ட வைகோ கூறியதாவது: நெல்லையில் ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின் 103வது பிறந்த நாள் விழா மாநாடு, செப்.,15ம் தேதி நடக்கிறது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, பார்லியில் முதல் குரல்கொடுத்தது நான் தான்.உலகில் ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள், மீனவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ம.தி.மு.க., ஆதரவு தெரிவிக்கிறது. இந்த அணுமின் நிலையத்தில் சிறு அளவு ஆபத்து ஏற்பட்டாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை. எனவே, உள்ளாட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தர, எங்கள் கட்சியினரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டில்லி ஐகோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு பலர் பலியாகியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே, எங்களது கட்சியின் நிலைப்பாடு.இவ்வாறு வைகோ கூறினார்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்குத் தொடர்பா? வைகோ

ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸþக்கு தொடர்பா? வைகோ

திருநெல்வேலி, நவ. 8: ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸýக்கு தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறினார்.திருநெல்வேலியில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:தி.மு.க. குடும்ப அரசியலுக்கு எதிராக தமிழகத்தில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வலுவாக உள்ளது. கருணாநிதி தலைமையிலான அரசை மாற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்.பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்துக்கு கருணாநிதி துரோகம் செய்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தயங்குகிறார். இதனால் காங்கிரஸýக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மன்மோகன் சிங் முன்வரவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் வீடு திரும்புவார்களா என்ற சந்தேகம் பெற்றோருக்கு ஏற்படுகிறது.சிறு தங்க நகைக்காககூட வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அக் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். காங்கிரஸ் - தி.மு.க. உறவு தொடர்பாக இளங்கோவன் எழுப்பிய கேள்விக்கு கருணாநிதி பதில் கூறவில்லை. வழக்கமாக இளங்கோவன் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறும் கருணாநிதி, தற்போது பெட்டி பாம்பாக அடங்கியுள்ளார். இலங்கை ராணுவத்தினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உண்மைக்கு மாறான தகவல்களைத் தருகிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்தும் தாக்குல் தொடர்கிறது. மீனவர்களின் வலைகள் கிழிக்கப்படுகின்றன, படகுகள் தகர்க்கப்படுகின்றன. மீனவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் வைகோ.
கருத்துகள்

எல்லாம் நன்குணர்நத வைகோவிற்குப் பொதுமக்களால் நன்கு உணரப்பட்ட இச்செய்தியில் இப்பொழுதான் ஐயம் எழுகிறதா? வியப்பாக உள்ளதே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English