திங்கள், 19 மார்ச், 2012

mess sisters

சொல்கிறார்கள்                                                                                                                              

உணவக உடன்பிறப்புகள் (மெஸ் சகோதரிகள்) ! 


ஒன்பது ஆண்டுகளாக, "மெஸ்' தொழிலில் அசத்தும் பத்மகுமாரி, ஜெலஜகுமாரி சகோதரிகள்: நாகர்கோவில் பக்கத்துல இருக்கிற கிருஷ்ணன் கோவில் எங்க சொந்த ஊரு. கல்யாணத்துக்கு பின், வீட்டுல சும்மா தானே இருக்கோம்னு, நானும் என் தங்கை மற்றும் எங்க பகுதி பத்து பெண்களைச் சேர்த்து, மகளிர் சுய உதவிக் குழுவை ஆரம்பிச்சோம். ஏதாவது சுய தொழில் தொடங்கலாமேன்னு யோசிச்சு, தையல், எம்ப்ராய்டரி உட்பட, பல தொழில்கள் பற்றி பேசி, கடைசியில, "மெஸ்' தொடங்கலாம்னு முடிவெடுத்தோம். இது சரிப்பட்டு வராதுன்னு, திடீர்ன்னு ஆறு பேர் ஒதுங்கிட்டாங்க. ஆனாலும், மனம் தளராம, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2003ல் இந்த, "மெஸ்'சை ஆரம்பிச்சோம். ஒன்பது வருஷமா நல்லா போயிட்டு இருக்கு. குழுவில், மீதியிருந்த நாலு பேர்ல, ரெண்டு பேர் உடல்நிலை காரணமா, "பார்ட்னர் ஷிப்'பை விட்டுட்டாங்க. நாங்க விடாப்பிடியாகத் தொடர, இன்னிக்கு வெற்றிகரமாக நடந்துட்டிருக்கு எங்க, "மெஸ்!' எங்க, "மெஸ்'க்கு ஏதாவது ஒரு சிறப்பு இருக்கணும்னு யோசிச்ச போது தான், "ஆல் இன் ஆல் பெண்கள்' ஐடியா வந்தது. புதுமைக்காக மட்டுமில்ல, பல பெண்களோட வாழ்க்கைக்கு அது கை கொடுத்த மாதிரியும் இருக்கும்னு, கடையோட எல்லா வேலைகளுக்கும் பெண்களாக வேலைக்கு எடுத்தோம். சமையலை விட்டா வேறு எதுவும் தெரியாத வயதான பெண்களுக்கும் ஆதரவு கொடுத்தோம். காய்கறி வெட்டுறது, சமைக்கறது, கல்லாவில் நிக்கிறது, சுத்தம் செய்றது, "ஆர்டர் டெலிவரி' கொடுக்கிறதுன்னு எல்லாமே பெண்கள் தான். தினமும் மதிய சாப்பாடு மட்டும் தான். ஆனாலும், பருப்பு, சாம்பார், மோர்க் குழம்பு, வெந்தயக் குழம்பு, வத்தக் குழம்பு, மோர், அவியல், பொரியல், கிச்சடின்னு ஏகப்பட்ட அயிட்டங்களை வச்சு அசத்திடுவோம்; வெள்ளிக்கிழமை மட்டும், "எக்ஸ்ட்ராவா' பாயசம் இருக்கும். ஆரம்பிச்ச புதுசுல கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்துச்சு; அளவு தெரியாம குறைவா சமைச்சு, அரக்க பரக்க, மறுபடியும் உலை வைப்போம்; இப்ப எல்லாம் கை வந்துடுச்சு. இப்படி நாலு பேருக்கு நம்ம கையால சாப்பாடு போட்டு, அவங்க வயிறு நிறைஞ்ச சந்தோஷத்தை முகத்துல பார்க்கறதுல, எங்க மனசு நிறையுது!

children in bars

 குடி மையங்களில் தொடு உணவு பரிமாறும் சிறுவர்கள் : எதிர்காலம் கேள்விக்குறி



குடி மையங்களில் தொடு உணவு பரிமாற சிறுவர்களை பணியில் ஈடுபடுத்து வருவது அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில், 600க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன. இதில், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர், வாடிக்கையாளர்களுக்கு மது வாங்கி கொடுத்தல், தொடு உணவு பரிமாறுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும், 8ம் வகுப்பை தாண்டாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.

குடி மையத்தில் தஞ்சம்:குடும்ப வறுமையால் தான் குடி மையத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என, சிறுவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அப்பா வருமானம் போதவில்லை; அதனால் ஊத்திக் கொடுக்கும் வேலைக்கு வந்து விட்டோம் என, பலர் தெரிவிக்கின்றனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முறையான கவனிப்பு இல்லாததால் பலர் குடி மையத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

குடிக்கு அடிமை:வேலை கிடைத்தால் போதும் என வரும் சிறுவர்கள் , பிறர் குடித்து வைத்துச் சென்ற பாட்டில்களை வடித்து ருசி பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். 24 மணி நேரமும் மிதமான போதையில் இருப்பவர்களும் உண்டு. எதிர்காலம் குறித்த எந்த கவலையும் கிடையாது.

குடி மையங்களில் பணியாற்றும் சிறுவர்கள் பற்றி ஆய்வு நடத்தும் அறிவழகன் கூறியதாவது:குடி மையங்களில் மீசை முளைத்திடும் பருவத்தில் உள்ள சிறுவர்கள் அதிகம் உள்ளனர். ஐந்துக்கும், 10க்கும் பிச்சைக்காரர்கள் போல் கையேந்தி நிற்கின்றனர். பழங்குடியினர், நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வரும் சிறுவர்கள் அதிகமாக உள்ளனர்.இவ்வாறு அறிவழகன் கூறினார்.

சென்னை குடி மையங்கள் ஆய்வு நடத்தியவரின் பார்வையில்...
* 6,00க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன.
* ஒரு மையத்தில் இரு சிறுவர்களாவது ஊத்திக் கொடுக்கின்றனர்.
* கல்வியறிவு பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
* வீட்டை விட்டு வெளியேறி வழி தெரியாமல் தஞ்சம் அடைவோரும் உண்டு.
* குடும்ப வறுமையால் பணியாற்றும் சிறுவர்களும் உண்டு.
* பெற்றோரே குழந்தைகளை அடகு வைத்துள்ளதும் உண்டு.
* பெற்றோர் பிரிந்ததால் ஆதரவற்ற சிறுவர்களும் உள்ளனர்.
* பொய் சொல்லி விட்டு வேலை செய்யும் சிறுவர்கள் அதிகம்.

- ஆர்.மோகன்ராஜ் - தினமலர்

ஞாயிறு, 18 மார்ச், 2012

Chinese-helped new SL Naval base comes up in Vanni, targeting Palk Bay

Chinese-helped new SL Naval base comes up in Vanni, targeting Palk Bay

[TamilNet, Saturday, 17 March 2012, 09:45 GMT]
Sri Lanka occupying the country of Eezham Tamils opened a new naval base in the western coast of Vanni at Naachchik-kudaa facing the Palk Bay in a commanding position to target movements from the Tamil Nadu coast of India. Construction of the new naval base received Chinese help. SL navy commander Somathilake Tissanayake inaugurated the base on Monday. Meanwhile, journalists who have gone for the annual church fete at the uninhabited islet Kachcha-theevu in the Palk Bay has noticed a permanently built SL naval base there. The construction material of this base and a newly coming up jetty there were found with Chinese markings. Two SL naval ships are always stationed near Kachcha-theevu. The attacks on Tamil Nadu fishermen deploying Sinhala gangs from the south are operated by SLN in Kachcha-theevu.

SL Navy in Kachchatheevu
Part of permanent naval buildings at the uninhabited island of Kachcha-theevu


This week, petrol bombs thrown by a gang coming in a boat destroyed a Tamil Nadu fishing boat near Kachcha-theevu.

The new naval base, located in a cove at the fishing port Naachchik-kudaa in the Kariyaalai-Naakappaduvan division of the Ki’linochchi district, has been given with a Sinhala name Bhuvaneka.

Naachchikkuda
The location of Naachchikkudaa
From the location the base could monitor the fishing villages from Mannaar to the Devil’s Point coast in the Vanni, as well as movements from Rameswaram in Tamil Nadu and the Ira’nai-theevu and Kachcha-theevu islets.

SL defence secretary and presidential sibling Gotabhaya Rajapaksa put the naval division in this part of Vanni to operation in August last year. The new naval division will function under Sri Lanka’s North Central Command.

Apart from the KKS naval base, already there are three more major SL naval bases in the north at Kaarainakar, Veala’nai and Ma’ndai-theevu to conduct surveillance of movements in the Palk Bay from Tamil Nadu. Besides, there are many small naval detachments all along the coasts of the north.

Right from 1960s Colombo was systematically following a naval policy of choking the coasts of the north in the pretext of checking smuggling. A former Sinhala Government Agent of Jaffna has put it on record that this naval policy in the 1960s itself was actually in anticipation of checking Tamils in the island, because the Colombo government was very much conscious that its policies on Tamils would eventually bring in trouble.

Now the mushrooming naval bases directly target Tamil Nadu, strategic analysts said.

SL coastal bases in North
Sri Lanka's large military establishments that choke Jaffna peninsula and threaten Indian security. Sinhala colonisation is carried out in places no 11, 13, 14, and 16. The locations: 1. High Security Zone, Valikaamam North, 2. Kaarainakar naval base, 3. Vallan, Pungkudutheevu, 4. Periyathu'rai and Saamiththoadda-munai, Delft (Key location for Kachchatheevu and Rameswaram), 5. Kunthavadi, Delft, 6. Thalai-mannaar, 7. Mannaar Fort, 8. Tha'l'laadi, 9. Poonakari Fort, 10. Elephant Pass, 11. Vettilaikkea'ni, 12. Naakarkoayil, 13. Ariyaalai East and the opposite sandbar Ma'n'niththalai, 14. Naavatkuzhi, 15. Ma'ndaitheevu,16. Jaffna city, 17. Kachcha-theevu and 18. Naachchik-kudaa. The innumerable small military posts and the newly planned cantonments in Vanni are not shown in the map. [Satellite Image courtesy: NASA, Visible Earth. Legend by TamilNet]


Related Articles:
10.03.12   SLA re-confiscates land ‘declared’ resettled in Jaffna HSZ
07.03.12   Tamil Nadu Catholic Church reminds umbilical cord relations ..
22.02.12   Rajapaksa secretly inaugurated China project in Jaffna
05.02.12   China to build airport in Poonakari to balance India’s Palaa..
13.12.11   China announces Indian Ocean naval base in Seychelles
05.12.11   Maathakal protests Sri Lanka’s Naval base
19.11.11   China proxies get India's closest coast in Jaffna
16.07.07   Naachchikkudaa

Sinhala school students attack visiting Tamil counterparts from Jaffna

Sinhala school students attack visiting Tamil counterparts from Jaffna

[TamilNet, Saturday, 17 March 2012, 08:51 GMT]
Nations divided at the grassroot in the island despite machinations of global powers, reflected in an episode this week in which visiting students from leading schools of Jaffna were attacked by fellow Sinhala students in a cadet camp at Randamba in the Southern Province. The Sinhala military officials in the camp, rather than attending to complaints, chose to send the Jaffna school students back, with a warning not to tell anyone what had happened to them in the camp. During the decades of war, Colombo had stopped cadet programmes in the schools of Jaffna. Now as a part of its militarisation and structural genocide programme Colombo has conceived the idea of obligatory military training to all university entrants and reintroduction of cadet programme in the leading schools of Jaffna.

Accompanied by teachers, school cadets (or rather children as they are under 18) from St. John’s College, Jaffna Hindu College, Kokkuvil Hindu College and Central College of Jaffna were among those who were taken for the cadet training camp of both Sinhala and Tamil students at the Randamba SL military facility in the Southern Province.

During the camping, verbal exchanges between the two sections snowballed into an attack on visiting Tamil students by the Sinhala students, on Tuesday.

The accompanying Tamil teachers brought the matter to the notice of the military officials conducting the cadet camp. But no disciplinary action was initiated against the attackers.

Again on Wednesday, when the students of Jaffna Central College went to collect their food, they were attacked by the same group of Sinhala students in the locality of their hostel.

Jaffna Central College students returned on Thursday and principals of the other schools have asked for the safe return of their students.

Colombo restarted the cadet programme in the Jaffna schools with great fun-fare last year. The occupying Sinhala military has allocated a school building near Kaakkai-theevu in Jaffna for this purpose.

For advanced training the Jaffna students were taken to Randamba military facility.

School administrations and education officers in Jaffna are highly concerned of the indifferent attitude of the SL military towards the attack on Tamil students. In future they would resist sending their students for any training programme in the South, education circles in Jaffna said.

All the Jaffna institutions mentioned above became degraded into high schools long back, despite their ‘college’ nametags and more than a hundred years old history.

But as high schools they are monumental institutions of Jaffna society and all of them have alumni associations all over the world.

Genocidal Colombo nowadays has a particular sinister eye on the educational institutions of Eezham Tamils and their alumni associations in the diaspora.

* * *


As all school students in the island are under 18, they are children according to international reckoning.

The world establishments and international human rights organisations that are worried about child soldiers among non-state combatants never raise a finger to the cadet programme to the school children that is conducted all over the world by the Establishments to prepare and recruit soldiers.

Schools usually take in children for cadet training from 14 –15 years onwards.

The very idea of cadet programme that originates from British imperial and colonial schooling system, and that is now found pampered in the schools of India and the USA, has the motive of orientating the school children into militaristic thinking, exposing them to the military of the Establishment and luring them for recruitment.

MIA tweets on Channel-4, creates wide war-crimes publicity

MIA tweets on Channel-4, creates wide war-crimes publicity

[TamilNet, Saturday, 17 March 2012, 03:49 GMT]
Maya Arulpragasam (popularly known as MIA), the Jaffna born music phenom, created unexpected world-wide publicity for the Channel-4's recently released documentary on Sri Lanka's war-crimes when she entered a tweet debate with CNN's Anderson Cooper when she tweeted her followers suggesting "they also tune in," and then singled out Cooper, tweeting, "someone should make @andersoncooper watch it / film it and show the world what happens when respected journos get it wrong #killingfields." In her following tweet, she said that Cooper had called her "a terrorist for speaking out."

Huffington Post which covered the "lively debate," said, "MIA was seemingly referring to a 2009 incident when the blog associated with Anderson Cooper's CNN show linked to an article published in the Charleston Mercury News titled, "Lady Tamil Tiger Gives Pop Culture A Bang." The article discussed MIA's hit record, "Paper Planes," and the work of her father who is widely known as a Tamil activist. The article includes the line, "To some, M.I.A. is a peaceful revolutionary artist who has shed light on a desperate situation in Sri Lanka. To others she is a LTTE propagandist rousting international support for a terrorist organization.""

Huffington Post said of the "debate" that the "two seemed to make up in the end, when Cooper said he understood MIA's frustrations that the Sri Lankan war that has not gotten enough coverage in the U.S. Cooper also told MIA to "check her facts" since he also defended her finger pointing at the Super Bowl.

"@andersoncooper p.s thank you for defending my finger , please watch Channel4 #killingfields by @jonsnowC4," MIA responded.

Chronology:


External Links:
Yahoo: Anderson Cooper and M.I.A. Get in Heated Twitter Feud
HuffingtonP: Anderson Cooper, MIA Have Lively Debate About Sri Lanka Over Twitter

Eezham Tamils demonstrate outside US Embassy in London

Eezham Tamils demonstrate outside US Embassy in London

[TamilNet, Friday, 16 March 2012, 23:08 GMT]
Targeting the US draft resolution to be tabled in Geneva later this month, hundreds of Tamils gathered outside the US Embassy in London on Friday demanding that an independent international investigation into the genocide of Eezham Tamils in their homeland be included in the resolution at the 19th session of the UN Human Rights Council. Arranged at short notice by the Tamil Coordinating Committee UK (TCCUK), the demonstration drew a cross section of Eezham Tamils in the UK, including significant number of youth. Demonstrators held placards that identified Eezham Tamils as a nation and asked the international community to initiate a UN-sponsored referendum to resolve their national question.

Demonstration in front of US Embassy in UK


This is the first time in recent years that Eezham Tamils have held a demonstration in front of a US diplomatic mission.

Demonstrators spoke to passersby and took time to explain the protracted nature of genocide, war crimes and crimes against humanity that had been committed by the Sri Lankan state against Eezham Tamils ever since its so-called independence in 1948. They also asked for justice to be placed above geo-politics in dealing with Eezham Tamils and the Sri Lankan State.

Slogans emphasised need for immediate withdrawal of Sinhala armed forces from the Tamil homeland, unconditional release of all Eezham Tamils detained by Sri Lanka and a UN-sponsored referendum with independent and sovereign state of Tamil Eelam as an explicit option.

Event organisers handed over to the Sri Lanka section of the embassy a copy of the joint statement and resolution released by a coalition of 12 grassroot Tamil organisations from around the world on 13 March 2012.

Demonstration in front of US Embassy in UK
Demonstration in front of US Embassy in UK


Chronology:

electricity fromm seaweed/Algae



தமிழகத்தில் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஏற்படும் மின்வெட்டு மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ளது. மாநிலத்தில் தற்போதுள்ள 16,990 மெகாவாட் உற்பத்தியில் 6,761 மெகாவாட் மரபுசாரா எரிசக்தி. இதில் காற்றாலை, சூரியமின்சக்தி மற்றும் பயோமாஸ் மின்சக்தியும் அடங்கும்.

காற்றாலை மின்சக்தி தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவாக கிடைக்கிறது. ஆண்டிற்கு 8 மாதங்கள் தான் தேவையான காற்றின் வேகம் உள்ளது. இதனால் காற்றாலை மின்உற்பத்தி திறன் 13,000 மெகாவாட் மாத்திரமே உள்ளது. மின்விநியோகத்தில் நஷ்டம் மற்றும் இயந்திரக்கோளாறு, அணைகளில் குறைந்த அளவு நீர் போன்ற காரணங்களால், சுமார் 8,500 முதல் 9,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. தற்போது சுமார் 2,500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. மாநிலம் முழுதும் ஆண்டிற்கு 8 சதவீத மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டிற்கு 750 மெகாவாட் மின் தேவை கூடும். தற்போது நிறுவப்படும் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மின்நிலையங்களால் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் மின்தேவையை ஈடு கட்ட முடியாது.

இப்பற்றாகுறையை தீர்க்க தமிழகஅரசு நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்கிறார் வேதியியல் பொறியாளர் என்.எஸ். வெங்கட்ராமன். அவர் கூறிய ஆலோசனைகள் வருமாறு:

* கூடங்குளம் அணுமின்நிலையம் உடனே துவங்கப்பட்டு, அங்கும் கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் இரு மடங்காவது உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வடமாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை வாங்குவது போல், தமிழக அரசு வாங்க வேண்டும். அல்லது இங்கு உள்ள நிறுவனங்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும்.

* தமிழகத்தில் நீண்ட அளவு கடற்பரப்பு உள்ளது. இங்குள்ள சீதோஷ்ணநிலையை பயன்படுத்தி கடற்பாசி உற்பத்தியை பெருக்கலாம். அதிலிருந்து எரிஎண்ணெய் (ஆல்கே பயோபியூயல்) தயாரிக்கலாம். பிற தாவரவிதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை விட கடற்பாசியில் 50 சதவீதம் வரை அதிகம் கிடைக்கிறது. தமிழகஅரசு இதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தி கடற்பாசி எரிஎண்ணெயை வைத்து மிகப்பெரிய மின்நிலையங்கள் அமைக்க முடியும்.

*கடல் அலைகளில் இருந்து மின்உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து பெறலாம்.

* தொழிற்சாலைகள் தாங்களே கூடுதல் மின்சாரம் தயாரிக்க ஊக்கத்தொகையும், வரிச்சலுகைகளையும் அரசு அளிக்கலாம். இங்குள்ள சுற்றுச்சூழலை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை தமிழகஅரசு உடனடியாக மேற்கொண்டால் மின்பிரச்னையை சமாளிக்கலாம் என்கிறார் என்.எஸ்.வெங்கட்ராமன்.

- நமது சிறப்பு நிருபர் -

வனக் காவலன்!


வன உயிர்களிடத்தில் பிரியமுடன் பழகும் வனசுந்தரபாண்டியன்: என் சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர். என் அப்பா, போலீஸ்காரர் என்பதால், எனக்கும் துணிச்சல் அதிகம். வீட்டிற்கு அருகிலேயே மலை இருப்பதால், சிறு வயதிலிருந்தே பள்ளிக்குச் செல்லும் நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காட்டுப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பேன். இதனால், காட்டில் வசிக்கும் பல விலங்குகள், பறவைகளின் நடவடிக்கைகளும், குணாதிசயங்களும் எனக்கு அத்துப்படி.

கூடலூர் வனப்பகுதியில், யானை, மான் போன்ற விலங்குகள் அதிகமென்பதால், அவை வாகனங்கள் செல்லும் வழியில் அடிபட்டுக் கிடக்கும். அவற்றுக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் மருத்துவர்களுடன் நானும் சென்று, மருந்தளிக்கும் வழிகளை ஆர்வமுடன் கற்றுக் கொண்டேன்.நான், 10 ஆண்டுகளாக வன விலங்குகளைப் பாதுகாத்து வருகிறேன். குமுளி செல்லும் வழியில், பறவைகள் மயங்கிக் கிடப்பதாக ஒரு முறை எனக்கு தகவல் வந்தது. உடனே, அங்கு சென்றேன்.

கோடை வாழிடங்களில் மட்டுமே வசிக்கும், "ஹோம் ஷிப்ட்' பறவைகள் என்பதை அறிந்து கொண்டேன். "ஹோம் ஷிப்ட்' பறவைகள் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை. சிறிய அளவில் பருவ மாற்றம் ஏற்பட்டால் கூட, தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து விடும். புதர்கள், பாறைகளின் இடுக்குகளில் களிமண்ணால் கூடு கட்டி வாழும்.
கடும் குளிரினால், மயங்கிக் கிடந்த அந்த பறவைகளை, ஒரு தனி அறையில், மெர்க்குரி விளக்குகளின் மூலம் வெப்பமூட்டிப் பாதுகாத்தேன். இரண்டு நாட்களுக்குப் பின், பறவைகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவைகளுக்கு உணவாக, ஈசல்களை விலைக்கு வாங்கி வந்து ஊட்டி பாதுகாத்தேன்.

அவைகளுக்கு கொஞ்சம் தெம்பு வந்த பின், மிதமான வெயில் அடிக்கும் இடத்தில் பறக்கவிட்டேன். தற்போது, அவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.
என் பணியைப் பார்த்த பொதுமக்களும், வனத்துறை அதிகாரிகளும் பாராட்டியது, எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. என் வேலை, பொழுதுபோக்கு எல்லாமே வன விலங்குகளை பாதுகாப்பது மட்டுமே. இதற்காக, பொது இடங்கள் மற்றும் பள்ளி களில், துண்டு பிரசாரம் செய்து வருகிறேன்.தொடர்புக்கு: 98423 94442.

உதவக் காத்திருக்கிறோம்!



ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் உதவிக் கரம் நீட்டும் லட்சுமி: திருவாரூர் தான், சொந்த ஊர். ராணுவத்தில் வேலை பார்த்த கணவருடன் மூன்றாண்டுகள் மட்டுமே வாழ்ந்தேன். சீனப் போரில் அவர் மரணம் அடைந்து விட்டார். ஒன்றரை வயதிலும், ஆறு மாதத்திலும் என் கையில் இரண்டு ஆண் பிள்ளைகள். என் அண்ணனின் அரவணைப்புடன், அத்தியாவசியப் பொருள் வினியோக அலுவலராக வேலை பார்த்து, பிள்ளைகளைக் காப்பாற்றினேன். கூடவே, பிறருக்கு உதவும் காரியங்களையும் செய்தேன்.அரசியல் மீதிருந்த நம்பிக்கையினால், பிரசாரத்திற்கும் சென்றிருக்கிறேன். இந்நிலையில் தான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த நிகழ்வை எதிர்கொண்டேன். இதயத்தின் நான்கு வால்வுகளும் பழுதடைந்து விட்டன. இனி அவ்வளவு தான் என்று நினைக்கையில், நல்ல உள்ளங்கள் எனக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றதால், செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்டன.

இது எனக்கு மறு ஜென்மம் போன்றது. பிறருக்கு உதவும் வகையில், பயன்பட வேண்டும் என்று, அதற்கான வேலைகளில் இறங்கினேன். ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு, "அன்னை தெரசா இல்லம்', முதியவர்களுக்கு, "இந்திரா காந்தி இல்லம்' ஆரம்பித்தேன்.ஆர்வத்தில் இல்லங் களை ஆரம்பித்தாலும், அதை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டேன். அதையெல்லாம் சமாளித்து, அர்ப்பணிப்புடன் சேவையை தொடர்ந்தேன். பொருளாதார உதவிகளைப் பகிர்ந்து கொள்ள சில நல்லவர்களும், உடல் உழைப்பை பகிர்ந்து கொள்ள சில ஆதரவற்ற தொண்டுள்ளப் பெண்களும் என்னுடன் இணைந்து, இல்லங்களை வழி நடத்த உதவினர்.

தற்போது நான் உட்பட இல்லத்தில் உள்ள அனைவரின் கண்களை தானத்திற்கு எழுதி வைத்திருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள், தங்கள் உடலை, மருத்துவக் கல்லூரிகளுக்கு உடல் தானமும் செய்திருக்கிறோம். இருக்கும் வரை மட்டுமல்ல, அதற்குப் பின்பும் பிறருக்கு உதவக் காத்திருக்கிறோம்!

tamilnadu engineers stand lost :

சில திங்களுக்கு முன்பு உலகக்கணிணி நிறுவனர் உரையில் உலக நாடுகளில் உள்ள கணிணிப் பொறியாளர்களில் 70 விழுக்காடு இந்தியர்கள்  என்றும் அவர்களில் 90 விழுக்காடு தமிழ் நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் எனின் அனை வரும் தமிழர்கள் என்று கொள்ள முடியாது.  கணிசமான எண்ணிக்கையில் பிற மாநிலத்தவரும இங்குப் பயிலுகின்றனர். அதே நேரம் அண்ணாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறியாளர் பட்டம் பெற்றவர்களில் உண்மையான தகுதி படைததவர்கள் குறைவாக உள்ளதாகப் பேசிய பேச்சும்இதழ்களில் வந்துள்ளது. உத்தரகண்ட், பீகார் முதலான வட மாநிலத்தவர்க்கு ஆங்கில அறிவு குறைவே. எனவே, இந்தச் செய்தியில் ஐயப்பாடு உள்ளது. எனவே, உண்மையான புள்ளிவிவரத்தை உரியவர்கள் தெரிவிக்க வேண்டும். குறைபாடுகள் இருப்பின் களைய வேண்டும். பெயரளவுப் பட்டதாரிகளை உருவாக்கிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.

22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.

17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.

சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.

கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

International mother lagnguage day by thamizh meetpu kuuttamaippu

                         ஞாலத் தாய்மொழி நாள்
                  ஞால உழைக்கும் மகளிர் நாள்
                                   கருத்தரங்கம்

                     தி.ஆ.பங்குனி 5, 2043 / 18.3.2012  ஞாயிறு  பிற்பகல் 3.00 மணி

                தேசிய விண்மீன் பள்ளி, வ.உ.சி.தெரு, அரும்பாக்கம், சென்னை 106

தலைமை:                                                                      அ.சி.சின்னப்பத் தமிழர்
வரவே ற்பு:                                                                   கிள்ளிவளவன்
விளக்கவுரை:
தாய்மொழி நாள் :                                                      இலக்குவனார் திருவள்ளுவன்
உழைக்கும் மகளிர் நாள்:                                      கார்குழலி
மார்க்சியமும் பெண்ணுரிமையும் :               குமரன்
அம்பேத்கரும் பெண்ணுரிமையும்:               தமிழ்மறையான்
தமிழ் இலக்கியமும் பெண்ணுரிமையும்:  மா.வீர அரசு
பெரியாரும் பெண்ணுரிமையும்:                  சிவ.காளிதாசன்
பங்கேற்பாளர் சிறப்பித்தல் :                         விசய்  & வேம்பார் சித்திரவேல்
நன்றி:                                                                        தமிழேந்தி

                      ஒருங்கிணைப்பு :  தமிழ் மீட்பு அமைப்புகளின் கூட்டமைப்பு
                        பேசி :  99411 41894