engineering studies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
engineering studies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மே, 2012

விருப்பத்துடன் உழைத்தால் வெற்றி உறுதி.


இஷ்டப்பட்டு செய்யுங்கள்!

மின்னணு பொறியியல் துறையில் பி.இ., பட்டம் பெற்று, மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சதீஷ்குமார்:வங்கிக் கடன் பெற்று மின்னணு பொறியியல் படித்தேன். படிப்பு முடிந்தவுடன் வேலை தேடி சென்னையை வலம் வந்தேன். இரண்டு மாதங்கள் தேடியும் வேலை கிடைக்காததால், மனம் சோர்ந்து போனேன். ஒரு நாள் மெரீனா கடற்கரைக்குச் சென்று விட்டு திரும்பும் வழியில், மீன் இறக்குமதி வணிகத்தைக் கண்டேன். இருளில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில், ஒரு ஒளியைக் காட்டியது போல் நடந்தது அந்நிகழ்வு. இன்று என் வாழ்க்கையையே அது, வெளிச்சத்தின் பாதையில் வழி நடத்துகிறது.என் சொந்த ஊரான ராமேஸ்வரம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால், அங்கு மீன் பிடித் தொழில் தான் முதன்மைத் தொழில். எனவே, ராமேஸ்வரத்தில் இருந்து மீன்களை வாங்கி, சென்னையில் விற்கலாம் என நினைத்தேன். முதலீடே இல்லாமல், மீன் விற்பனைத் தொழிலைத் தொடங்கியதும், அதில் காலூன்ற கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. மாலை, 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மீன்களை ஏற்றிச் சென்று, அதிகாலை, 6.30 மணிக்கெல்லாம், சென்னை எழும்பூரை அடைவேன்.பின், அங்கிருந்து லைட்ஹவுஸ் வரை சென்று, மீன் விற்பனையை முடித்து விட்டு, மீண்டும் மாலை, 5 மணிக்கு, சென்னையில் இருந்து ரயிலில் ஏறி, அதிகாலை, 5.30 மணிக்கு ராமேஸ்வரம் அடைவேன். என் தூக்கம் முழுவதும் ரயில் பயணங்களில் தான். மூன்று மாத கடுமையான உழைப்பிற்குப் பின், தற்போது நான் சொந்தமாக ஒரு டெம்போ வாங்கியுள்ளேன். இந்த டெம்போ, என் தொழிலுக்கு சற்று உதவியாக உள்ளது. தற்போது, நான் ஒரு பொறியாளர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்.வேலையில் நல்ல வேலை, கெட்ட வேலை என, கவுரவம் பார்த்தால், நிச்சயம் நல்ல நிலைக்கு வர முடியாது. எந்த வேலையானாலும், இஷ்டப்பட்டும், கடின உழைப்புடனும் செயல்பட்டால், வெற்றி நிச்சய

ஞாயிறு, 18 மார்ச், 2012

tamilnadu engineers stand lost :

சில திங்களுக்கு முன்பு உலகக்கணிணி நிறுவனர் உரையில் உலக நாடுகளில் உள்ள கணிணிப் பொறியாளர்களில் 70 விழுக்காடு இந்தியர்கள்  என்றும் அவர்களில் 90 விழுக்காடு தமிழ் நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் எனின் அனை வரும் தமிழர்கள் என்று கொள்ள முடியாது.  கணிசமான எண்ணிக்கையில் பிற மாநிலத்தவரும இங்குப் பயிலுகின்றனர். அதே நேரம் அண்ணாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறியாளர் பட்டம் பெற்றவர்களில் உண்மையான தகுதி படைததவர்கள் குறைவாக உள்ளதாகப் பேசிய பேச்சும்இதழ்களில் வந்துள்ளது. உத்தரகண்ட், பீகார் முதலான வட மாநிலத்தவர்க்கு ஆங்கில அறிவு குறைவே. எனவே, இந்தச் செய்தியில் ஐயப்பாடு உள்ளது. எனவே, உண்மையான புள்ளிவிவரத்தை உரியவர்கள் தெரிவிக்க வேண்டும். குறைபாடுகள் இருப்பின் களைய வேண்டும். பெயரளவுப் பட்டதாரிகளை உருவாக்கிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.

22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.

17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.

சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.

கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

திங்கள், 13 ஜூன், 2011

Ka.Pa.Aravaanan about engineering education: பொறியியல் கல்வி படும்பாடு: க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

பொறியியல் கல்வி படும்பாடு: 
க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்
தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?

அண்மையில் வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியின்படி, நம் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் நூறு பொறியியல் பட்டதாரிகளில், இரண்டு பட்டதாரிகள் மட்டுமே, அவர்கள் படித்து வெற்றி பெற்ற பாடத்தில், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். இச்செய்தி, நம் நாட்டில் உள்ள பொறியியல் கல்வித் தரம் பற்றிய ஐயத்தை பன்மடங்கு ஆக்குகிறது.பொறியியல் கல்வியை தனியார் வசமும், தனியார் வணிக வசமும், நம் மேதகு அரசுகள் ஒப்படைத்தன. அதன் பிறகே, ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஆங்காங்கே தோன்றின. இக்கல்லூரியின் தரம் பற்றி ஆராய, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையில், "60 சதவீத பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்ற பெயருக்கே தகுதியில்லாதவை. போதிய அளவு சோதனைச்சாலைகள் இல்லை, வகுப்பறைகள் இல்லை.பணியாற்றும் ஆசிரியர்கள், மிகத் தகுதி குறைவானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலானோர் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில், கடந்த அரசிலும், அதற்கு முன் இருந்த அரசிலும் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கணிசமானோருக்கு, பொறியியல் கல்லூரிகள் சொந்தமாக இருக்கின்றன. இவை அமைச்சர்களாலும், செல்வந்தர்களாலும், வணிகர்களாலும் நடத்தப்படுவதற்கு அடிப்படை காரணம், பணம் காய்ச்சி மரங்களாக இக்கல்லூரிகள் இருப்பது தான். இந்தக் கல்வி ஆண்டில் தான், பொறியியல் கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்களின் பெருகிய எண்ணிக்கை குறைந்திருக்கிறது.பல நிறுவனங்கள், பெறும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை. பல கல்வி நிறுவனங்கள், காசோலையாகவோ, டி.டி.,யாகவோ கட்டணத்தைப் பெறுவதில்லை. "ரொக்கமாக கொடுக்க வேண்டும்' என, நிபந்தனை போடுகின்றன. கணக்குக் காட்டுவதிலிருந்து தப்புவதற்கு இந்த ஏற்பாடு.சரி, தமிழகத்தில், பொறியியல் கல்வி பெருகினால் நல்லது தானே என்று நினைக்கலாம். பெரும்பான்மையான பாடத் திட்டங்களும், அமெரிக்க வேலைவாய்ப்பை நம்பியே அமைக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்கே கல்வி உற்பத்தி நடக்கிறது.சரியான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அந்த மண்ணுக்குரிய, அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இங்குள்ள ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?

தமிழகத்தை ஒட்டி, பொறியியல் கல்வி செய்ய வேண்டிய பணிகள், கண்டுபிடிப்புகள், சவால்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம்.

1. உணவின் ஒரு பகுதியாக இருப்பது தண்ணீர். வேளாண் தொழிலுக்கு வேண்டிய தண்ணீர், பருகுவதற்கு வேண்டிய தண்ணீர். நம் நாடு, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளைப் போல, ஆண்டு முழுவதும் மழை பொழியும் நாடு அல்ல. குளம், குட்டை, கிணறு, ஏரி முதலானவற்றில் தண்ணீர் தேக்கி வைப்பதைப் பற்றி, விரிவாக சிந்திக்க வேண்டும். இவற்றை தூர்வாருதலுக்கு எளிய வழிகளையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இவற்றில் தேங்கியிருக்கும் நீர், வெயிலில் எளிதாக ஆவியாகாதவாறு, ஏதேனும் யுக்திகள் இருக்கின்றனவா என்று ஆராயப்பட வேண்டும்.
இன்னொரு வகையில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கடல் நீர் ஒரு பெரும் பேறாகும். கன்னியாகுமரியில் இருந்து, தமிழக வட எல்லை வரை, வங்காள விரிகுடா விரிந்து கிடக்கிறது. இந்த தண்ணீரை, குடிநீராக வேதியியல் மாற்றம் செய்வது பற்றி, வேதியியல் பொறியியல் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா, செயல்படுத்த வேண்டாமா? தமிழக ஆறுகளில் தண்ணீர் இல்லாத காலங்களில், பனிரெண்டு மாதமும் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா முதலான ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றி திட்டங்கள் தீட்ட வேண்டாமா?

2. தமிழகத்தில் வாழக்கூடிய ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களில், எல்லாருக்கும் போதிய உடை கிடைத்தபாடில்லை. அத்தனை பேருக்கும் உடை கிடைக்கும் வண்ணம், குறைந்த செலவில், எந்தெந்த மூலப்பொருளை வைத்து சட்டை, வேட்டி, பேன்ட், சேலை முதலானவற்றை நெய்யலாம் என்பது பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டியவர்கள் பொறியியலாளர்கள் தானே?

3. நம் சுகாதாரக்கேட்டின் உச்சம், கிராமங்களிலும், நகர சேரிப்பகுதிகளிலும், போதிய கழிப்பறைகள் இல்லாததுதான். பல நோய்கள், தொற்று நோய்களாக பெருகுவதற்கு, இது பெரும் காரணம். மலிவு கழிப்பறை பற்றி இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

4. கணினி, இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. கணினியை, இன்னும் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பற்றி ஆராய வேண்டாமா?

5. சிவில் இன்ஜினியர்கள், வீடு கட்டுவதற்கு உரிய புதிய மூலப்பொருட்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.செங்கல் தொழிலும் தற்போது அறைகூவலாகி விட்டது. மாற்றாக, சிமென்ட் கற்கள் வந்துள்ளன. தக்கைக் கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் பற்றி சிந்திக்கவேண்டும்.

6. தமிழகத்தில் மிகப்பெரிய அறைகூவலாக இருப்பது மின்சக்தி. சோவியத் புரட்சியைச் சாதித்த மாவீரர் லெனின் புரட்சி நடந்து முடிந்து, தான் தலைமை ஏற்ற உடனே செய்த முதல் வேலை, சோவியத் ஒன்றியம் முழுவதும் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றது தான். மின் விளக்குகள், ரஷ்ய மொழியில், "விளாதிமிர் லெனின்' என்றே அழைக்கப்படுகின்றன. மின்சக்தி அனைவருக்கும் கிடைத்தல் அத்தனை முதன்மையானது என்பதை அவர் கண்டுகொண்டிருந்தார். 21ம் நூற்றாண்டு வந்த பிறகும், நாம் இன்னும் மின்சக்தியை முழுமையான தேவைக்கு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு உள்ள வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியவர்கள் பொறியாளர்கள் தானே?ஆக, நம் நாட்டுத் தேவைகள் நூற்றுக்கணக்கில் நமக்கு முன்னே மண்டிக்கிடக்க, வெறும் பேப்பர் பட்டங்களைப் பெற்று வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞர்களை உருவாக்குவதுதான் நம் பொறியியல் கல்வியின் நோக்கமா? அதற்காக எவ்வளவு பணம், எத்தனை இளைஞர்களின் உழைப்பு? நியாயமா...? சிந்தித்துப் பார்ப்போம்!

புதன், 23 பிப்ரவரி, 2011

Refused loan to tamil med.eng.student: தமிழைத் தேர்வு செய்ததால் வங்கிக் கடன் மறுப்பு: படிப்பிற்கு முழுக்கு போடபொறி.மாணவர் முடிவு

இப்படிப் பாலமுருகன்கள் பலர் இருக்க வேண்டும். இச் செய்தியை வெளியிட்ட தினமலருக்குப் பாராட்டுகள். அரசு உடனே தலையிட்டு உரிய கடன் உதவி அளிக்கவும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும். தமிழ் வழிப் பயில்வோர் வேலைக்கு உறுதி அளிக்க வேண்டும்.  தமிழ் வழி மாணவர்க்கான கட்டணைத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
<  தமிழே விழி! தமிழா விழி! >
 
ராமநாதபுரம் : "தமிழைத் தேர்வு செய்த இன்ஜினியரிங் மாணவருக்கு, வங்கிக் கடன் வழங்க முடியாது' என, அதிகாரிகள் கைவிரித்து விட்டதால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலையில் மாணவர் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
 

வாசகர் கருத்து (18)
Kavee - Jeddah,சவுதி அரேபியா
2011-02-22 11:01:38 IST Report Abuse
மேடைக்கு மேடை, டிவி க்கு டிவி, கல்யாணம், கருமாதின்னு கூட பாக்காமல் வாய் கிழிய தமிழ் தமிழ்னு கத்தி தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களே அரசியல்வாதிகளே இந்த செய்தி படிச்சீங்களா? ராமநாதபுரம் தமிழ் நாட்டுலே தானே இருக்கு வங்கி அலுவலர்களின் வார்த்தை கேட்டீர்களா!!! இவரை போல எத்தனை எத்தனை படித்த / படிக்க ஆசை படும் இளைன்ஞர்கள் தமிழ் நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்காததால் படும் வேதனை ........ சொல்லி மாளாது மாணவ மணிகளே இந்த வீணர்களின் பேச்சை நம்பி எதி காலத்தை கோட்டை விட்டு விடாதீர்கள் .... அவனவன் அவன் குடும்பம் நலனுக்குத்தான் ...நாமும் நம் வளத்துக்கு மட்டும்... இனி யாரை நம்பியும் பயன் இல்லை ..... நமக்கு நாமே
  • Rate it:
  • 4
  •  
  • 2
Share this comment
Raja Durairaj - Singapore,சிங்கப்பூர்
2011-02-22 10:59:20 IST Report Abuse
அட கொடுமையே ! தமிழுக்கு இது சாப கேடு
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Johnson Ashok - ooty,இந்தியா
2011-02-22 10:46:07 IST Report Abuse
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்த பாலமுருகன்(18) என்பவருக்கு வங்கி கடன் கிடைக்காமல் போனதற்கு வருந்துகிறேன். தமிழ் தமிழ் என்று பறைசாற்றுவது வெறும் பெயரளவில் இருகின்றதே தவிர, அதை முழுமையாக செயல்படுத்தவதில் பலர் முன் வருவதில்லை. தமிழ் என்றால் வேலையே இல்லை என்று சொல்லி உதவி செய்யாமல் விட்டு விடுவது மிகவும் வருத்ததிற்குரியது.
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Michael - Singapore,சிங்கப்பூர்
2011-02-22 10:44:25 IST Report Abuse
நான் ஒரு தாய்மொழி ஆர்வலன். மக்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியை தாயைப் போல கருத வேண்டும் என்று நினைக்கிறவன். ஆனாலும் கூட, தற்போதைய சூழ்நிலையில் தமிழில் பொறியியல் கல்வி கற்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முதலாவதாக, விரும்புகிறோமோ இல்லையோ, உலகத்தோடு ஒன்றிணைய ஆங்கிலம் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கணக்கற்ற எண்ணிக்கையில், ஆங்கிலத்தில், உலகின் ஒவ்வொரு மூலையிலிமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவற்றை தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்ய நமக்கு வளங்கள் இல்லை, குறிப்பாக நேரமில்லை. இந்தி வேண்டாம் என்று நம் உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான நிலைப்பாடு வெற்றி பெற வேண்டுமென்றால், நம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் உச்ச தேர்ச்சி அடைந்தேயாக வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இந்த தமிழ் வழி பொறியியல் படிப்பு இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த மாணவன், இப்படி ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. வங்கி, இப்படி ஒரு காரணத்தை கூறி இருப்பது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பது நமது அரசாங்கத்தின் தெளிவற்ற நிலையையே எடுத்துக் காட்டுகிறது. என் நிலைப்பாடு இதுதான்: தாய் மொழி தமிழை உணர்வுப்பூர்வமாக கற்றுத் தேருங்கள். ஆங்கிலத்தை, உலகுடன் ஒன்றுவதற்கு, அறிவுபூர்வமாக கற்றுத் தேருங்கள். உணர்வுடனும் அறிவுடனும் வாழும் தமிழ் மாந்தருக்கு, தமிழும் ஆங்கிலமும் இரு கண்கள்.
  • Rate it:
  • 8
  •  
  • 2
Share this comment
Pamaran A - chennai,இந்தியா
2011-02-22 10:41:38 IST Report Abuse
உண்மை சுடுகிறதோ ...?
  • Rate it:
  • 0
  •  
  • 3
Share this comment
Balasubramanian - chennai,இந்தியா
2011-02-22 09:48:20 IST Report Abuse
பாலமுருகனுக்கு மட்டும் இது போன்று நடக்கவில்லை நண்பர்களே, வங்கிகள் கடன் கொடுக்க மாட்டோம் என்பதற்கு காரணங்களைத் தேடுகிறார்கள். தம்பி பாலமுருகா ஆர் பி ஐ இல் புகார் செய்யுங்கள். உங்களுக்கு வங்கிக் கடன் உறுதியாக கிடைக்கும். வழிகாட்டு உதவி தேவை எனில் www.ssda2009.blogspot.com.இந்த வலைத்தளம் உதவும். இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் email - ssadbookbank@yahoo.in
  • Rate it:
  • 5
  •  
  • 0
Share this comment
Mansoor - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-22 09:41:02 IST Report Abuse
இதுக்கு நம்ம தமிழ் காவலர் என்ன சொல்றார்? - " இதை வங்கியிடம் போய் கேளுங்கள்" - என்று பதில் அளித்துவிடுவார்
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
gomshankar vetrivel - singapore,சிங்கப்பூர்
2011-02-22 09:18:22 IST Report Abuse
தயவு செய்து பாலமுருகனுக்கு உதவி செய்ய முன் வரலாமே! நடப்பவைகளுக்கு நாமும் நம்மை சுற்றி இருக்கும் தமிழ் சமூகம் ஒரு காரணம் தான். எந்த வித ஒருங்கிணைந்த எதிர்ப்போ கருத்தோ ஒற்றுமையோ இல்லை. என்ன நடந்தாலும் தமிழகமே வீழ்ந்தாலும் விமர்சனம் செய்ய தவறுவதில்லை, மாறாக இனிமேல் நடக்காமிருக்க என்ன செய்யலாம் என்று யோசிப்போம் செய்வோம்.
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
PR Makudeswaran - madras,இந்தியா
2011-02-22 09:09:04 IST Report Abuse
தமிழ் பற்று வேண்டியதுதான்!! ஆனால் வாழ்க்கை பயணத்திற்கு தமிழ் அறிவு மட்டும் கை கொடுக்காது ?அரசியல்வாதிகள் மொழி பற்றி பேசுவார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு எல்லா மொழி அறிவும் கிடைக்க வழி வகை செய்வார்கள். நாம் அவர்களை பின்பற்றினால் நம் கதி அதோ கதிதான்.வங்கி பொருளாதாரம் என்பது நாட்டின்,நம் மக்களின் பொருளாதாரம். அதை காக்க வேண்டும்.கடன் கொடுத்தால் அதை திருப்பி செலுத்த வேண்டும்.அப்பொழுதான் அடுத்த நபருக்கு கடன் வாய்ப்பு கிடைக்கும். வங்கி பணத்தை கொள்ளை அடிக்கும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அடியோடு களை எடுத்தே ஆக வேண்டும் .
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
°ღ• ŚÁŤℋℐŶÁ ÁℛÚПÁČℋÁĹÁ� - tirunelveli ,இந்தியா
2011-02-22 08:51:18 IST Report Abuse
யாரோ ஒரு சில குள்ள நரிகளின் தந்திர வாழ்விற்கு இலக்கு இளைய சமுதாயம். இதை உணர தாமதமாகும் போது காலம் வெகு தூரம் கடந்திருக்கும். இளைஞனே இனியாவது விழித்திரு. கயவர் யார்? கள்வன் யார்? காரியவாதி யார்? என அலசி உன் வாழ்வுக்கும் சமுதாய வாழ்வுக்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கு. உன் ஒட்டு குள்ள நரி கூட்டத்திற்கு வைக்கும் வேட்டு.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
par ban - london,யுனைடெட் கிங்டம்
2011-02-22 07:10:43 IST Report Abuse
எல்லாம் கலைஞர் செயல், கலைஞர் இருக்க பயம் ஏன்?
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
sathya / ilangai - colombo,இலங்கை
2011-02-22 07:09:50 IST Report Abuse
மஞ்ச துண்டு "செந்தமிழ்" மாநாட்டு செலவு செய்த பணத்த இங்க குடுத்தா அட்லீட்ஸ் ஒரு குடும்பமாவது பொழைக்கும்.."election " சமயத்துல இந்த நியூஸ் வந்தது நல்லதா போச்சு...டவுசர் தாஸ் லருந்து, தா.பாண்டியன் வரைக்கும் queue ல நின்னு இவருக்கு பணம் குடுப்பாங்க, அந்த வங்கி அதிகாரிக்கு ஆப்புதான்...இதுதான் அரசியல்...சரி நான் வர்றேன் விஜயகந்த் கூவறாரு
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
2011-02-22 05:12:45 IST Report Abuse
வங்கி அதிகாரிகள் மக்கள் பணத்தில் விளையும் காளான்கள். ஆனால், ஏழைகள் மீது இளக்காரம்.
  • Rate it:
  • 20
  •  
  • 3
Share this comment
Srinivasan N - chennai ,இந்தியா
2011-02-22 05:01:51 IST Report Abuse
மஞ்ச துண்டை போல் தமிழில் படியுங்கள் வாழலாம் என்ற தவறான உபதேசத்தை தராத அதிகாரிகளை பாராட்டுகிறேன்...மாணவரின் கல்வி பாதிக்காத வகையில் வேறு உதவிகளை செய்திருக்கலாம்..
  • Rate it:
  • 18
  •  
  • 7
Share this comment
Govind - Delhi,இந்தியா
2011-02-22 04:19:20 IST Report Abuse
இந்த அளவுக்கு மாணவனின் மனதை நோகடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .. என்னுடைய நண்பர்கள் ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமிழ் நாட்டின் மிக சிறந்த கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டபடிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் சில வருடம் காத்திருந்ததை நானே பார்த்திருக்கிறேன் ..அப்படி இருக்கும் போது இந்த அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாது
  • Rate it:
  • 26
  •  
  • 4
Share this comment
AMMIYA - DENHEDLER,நெதர்லாந்து
2011-02-22 03:54:00 IST Report Abuse
இது நல்ல அழகான வேடிக்கையா இருக்கிறது......பாலமுருகன் சொன்னதுபோல செம்மொழி தமிழாம் என்று கோடிக்கணக்கில் செலவுசெய்து நடாத்தினார்கள்???????..ஆனால்,தமிழ் காத்தில பறந்து விட்டது.....வெறும் வாய்ச சவால் தானா?...பாலமுருகனுக்குக் கலைகுடும்பம் பதில் சொல்லுமா?அல்லது பே..பே.. தானா??????
  • Rate it:
  • 28
  •  
  • 2
Share this comment
KADAYANALLUR SHAHUL HAMEED - LONDON,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
2011-02-22 01:33:39 IST Report Abuse
TAMIL COULD BE BETTER THAN MOST LANGUAGES IN THE WORLD IN MANY WAYS. BUT PRACTICALLY OUR POLITICIANS DID NOT RAISE ANY CAREER PROSPECTS FOR THE TAMIL ASPIRANTS. WE ALL TAMILS SHOULD UNDERSTAND THAT WE MUST NEVER EVER TRUST POLITICIANS REGARDING TAMIL. IF THEY SHOUT ABOUT TAMIL, IT MEANS VOTES. TAMIL CONFERENCES ARE JUST FOOLING AROUND THE PEOPLE. I KNOW KARUN USING ENGLISH WORDS DURING PRESS INTERVIEWS TEN YEARS BACK. LEARN AS MANY LANGUAGES AS YOU CAN. OR PREPARE YOURSELF FOR THE WORST CONSEQUENCES




திங்கள், 12 ஜூலை, 2010



தமிழ்வழி பொறியியல் படிப்பில் ஏராளமானோர் சேருவர்: மாணவர்கள் மீது கருணாநிதி நம்பிக்கை



காங்கிரசு ஆட்சியில் ஒப்புக்குச் சப்பாணியாக ஒரே ஒரு கல்லூரியில் மட்டும் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்திய பொழுது அத்திட்டம் எவ்வாறு பயன்தரவில்லையோ அவ்வாறுதான் இப்பொழுதும் அமையும். முதல்வரின் நம்பிக்கையால் பயன் இல்லை. படிக்க வருவோருக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கைதான் தேவை. அதற்கான முன்னுரிமை ஆணையை உடனே அரசு பிறப்பித்தால் ஏராளமான மாணவர்கள் தமிழ்வழியில் பயில முன் வருவர். இதற்கு மாறான பொய்யான நம்பிக்கை வாழ்வளிக்காது. அதேநேரம் தமிழ் வழியில் உயர்கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எதிராக நேயர் ஒருவர் கருத்து பதிந்துள்ளதும் தவறாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2010 3:42:00 AM

வெள்ளி, 9 ஜூலை, 2010

தமிழ் வழி பி.இ. விரிவுபடுத்தப்படும்: க. பொன்முடி



சென்னை, ஜூலை 8: தமிழ் வழி பி.இ. படிப்புகள் அடுத்த ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார்.  பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.  கலந்தாய்வுக்கு வியாழக்கிழமை வரை 8,391 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,279 பேர் வரவில்லை. கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்களில் 25 பேர் பி.இ. இடம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மேலும், ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை 7,086 இடங்கள் நிரம்பியுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 2,474 இடங்கள் நிரம்பின.  முன்னதாக, உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வைப் பார்வையிட்டார்.  அப்போது அவர் கூறியது:  இதுவரை நடைபெற்ற கலந்தாய்வு முலம் 7,086 மாணவர்கள் பி.இ. இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களில் 2,332 பேர் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள். அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் உள்ள தமிழ் வழி பி.இ. படிப்புகளில் இதுவரை 15 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  தற்போது சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமே தமிழ் வழியில் உள்ளன. தமிழ் வழி பி.இ. படிப்புக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள்
 
பாராட்டுகள். அடுத்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் தமிழ்வழிப் பொறியியல் வரும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றுக. தமிழ் வழி பயின்றவர்களுக்குப் பணி முன்னுரிமை என விரைவில் ஆணை பிறப்பித்தால் தமிழ் வழி படிப்போர் பெருகுவர்; நாடு நலம பெறும்.ஆவன ச‌ெய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 7 ஜூலை, 2010

தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை இல்லை



திருநெல்வேலி, ஜூலை 6: பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், தமிழ் வழி கல்விக்கும் மாணவர்கள் சேர்க்கப்படாததால் 300 மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழில் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களிலும் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு முதல் தமிழ் வழி பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது, சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு அவற்றில் மொத்தம் 1,800 மாணவ, மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பொறியியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதல் கட்ட கலந்தாய்வில், சென்னை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும், அவற்றின் கல்லூரிகளுக்கும் தமிழ் வழி பாடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, கோவை அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் கல்லூரிகளுக்கு மட்டுமே தமிழ் வழி பாடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழக துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தலா 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் இப்போது தமிழ் வழிக் கல்வியை விரும்பும் 240 மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது. கோவை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்கள் 2007-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டன. இவற்றில் கோவை மற்றும் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களுடன் அந்தந்த இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் இதுவரையில் இணைக்கப்படவில்லை. இணைப்புக்கு அரசு பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த திட்டம் காலதாமதமாகி வருகிறது. எனினும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை இங்குள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி பாடப் பிரிவுகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி அங்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, திருநெல்வேலியிலும் உள்கட்டமைப்பு வசதி இல்லை எனக் கூறி மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இங்கு வாடகை கட்டடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழக துறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. எனினும், மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருப்பது மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.மாணவர் சேர்க்கை இல்லை: இதுமட்டுமன்றி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த பல்கலைக்கழக துறைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். அதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதல் அந்த 3 பாடப் பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு மூலம் 180 மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதன்படி, பல்கலைக்கழக துறைகளையும் பொது கலந்தாய்வு பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்படி திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தொழில்நுட்ப கல்வித் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலந்தாய்வில் இப்பல்கலைக்கழக துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி, நாகர்கோவில் பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, இனிமேல் நேரடியாக மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டால் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கிடைப்பது அரிது. ஆதலால், பல்கலைக்கழக கல்வித் தரம் குறைய நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆக மொத்தத்தில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பயன்பெற வேண்டிய 300 மாணவர்களின் வாய்ப்பு பறிபோயுள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள்


தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்துவது என்பது அதனை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல. வேலைவாய்ப்பிலும் தொழில் வாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பது. சட்டக்கல்லூரியில் 90 விழுக்காட்டினர் ஆங்கிலவழியில் சேர்ந்து தமிழ்வழியாகக் கற்றாலும் தமிழ்வழியில் நேரடியாகச் சேராததன் காரணம் உரிய அறிந்தேற்பின்மைதான். 1960 இலேயே பட்டவகுப்புகளி்ல் தமிழ் வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆய்வுநிலை வரை தமிழ்வழி அறிமுகப்படுத்தாமையாலும் தமிழ் வழிக்கு முன்னுரிமை அளிக்காமையாலும் கண்துடைப்பு திட்டமாகத்தான் இருக்கின்றது. அதுபோல்தான் தமிழ்வழிப் பொறியியலும் ஆகும். எனவே, உடனடியாகப் படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காகக் கட்டணச் சலுகையும் வேலைக்காப்பு உறுதியும் வழங்க வேண்டும். தாய்மொழியைக் கொண்டாடி வரும் நாம் தாய்த்தமிழை மதித்தால்தானே தமிழன்னை மகி்ழ்வாள்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *