முதல்வர் கருணாநிதியின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை (12 தொகுதிகளை) குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட முதல் பிரதியை பெறுகிறார்
சென்னை, மே 31: முதல்வர் கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா, தென்பாண்டிச் சிங்கம் உள்பட 12 படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 12 நூல்களையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளிட, முதல் பிரதிகளை மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பெற்றுக் கொண்டார்.விழாவுக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகித்தார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, பன்னாட்டுத் தமிழ் இணையக் கழகத்தின் தலைவர் வா.செ. குழந்தைசாமி, கவிஞர் வைரமுத்து, மொழிபெயர்ப்பு குழுவின் தலைவரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான க. திருவாசகம், நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. சுவாமிநாதன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.மொழிபெயர்ப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மு.க. அழகிரியின் மகள் கயல்விழி வெங்கடேஸ், பி. மருதநாயகம், ஆர். கணபதி, வி. முருகன், சுஜாதா விஜயராகவன், தமிழச்சி தங்கபாண்டியன், திருவாசகம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி சால்வை அணிவித்து கௌரவித்தார்.வெளிடப்பட்ட நூல்கள்:தொல்காப்பியப் பூங்கா, காலப் பேழையும் கவிதைச் சாவியும், கவிதை மழை -தொகுதி 1, கவிதை மழை - தொகுதி 2, கவிதை மழை-தொகுதி 3, தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், முத்துக்குளியல், பராசக்தி மற்றும் மனோகரா, பூம்புகார் மற்றும் ஓரங்க நாடகங்கள், கலைஞரின் சிறு கதைகள் என 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் 1,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. நூல்களின் மொத்தப் பக்கங்கள் 2,336.
கருத்துக்கள்
நல்ல முயற்சி. பாராட்டுகள. இவை போல் தந்தை பெரியாரின் படைப்புகளும் பேரறஞர்அண்ணாவின் படைப்புகளும்ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகம் ஒவ்வொரு மொழியில் பெயர்க்கும் பணியை மேற்கொள்ளலாம்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மதி கார்ட்டூன்ஸ்' புத்தக வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) அருள்தந்தை எல். ஜான் லூர்து, பேராசிரியர
சமூக வேதனையின் வடிகால்தான் எனது கார்ட்டூன்கள் என தினமணி நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் மதி தெரிவித்தார்.விழாவில் அவர் பேசியது:பள்ளியில் படிக்கும்போது கார்ட்டூனிஸ்ட்டாக ஆவேன் என்று நினைத்ததுகூட கிடையாது. பள்ளிப் பருவத்தில் விளையாட்டின் மீதே எனக்கு ஆர்வம் இருந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் எம்.எஸ்சி. படிக்கும்போது மாற்றம் ஏற்பட்டது. அக் கல்லூரியில் படிக்கும்போது, இந்திய கப்பல் படையில் கேப்டனாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஒருமுறை கல்லூரியில், பல்கலைக்கழகத்தின் மண்டல அளவில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கார்ட்டூன் வரையும் போட்டியில் என் பெயரை, என்னை கேட்காமலேயே எனக்குப் பாடம் எடுத்த பேராசிரியர் முனீஸ்வரன் பதிவு செய்தார். இதனால் வேறு வழியில்லாமல் அந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் அந்த கார்ட்டூன் போட்டியில், எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் பின்னர் பல்கலைக்கழக, மாநில அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றேன். இச் சம்பவமே என்னை கார்ட்டூனிஸ்ட்டாக மாற்றியது. நீங்கள் கார்ட்டூன் போடுவதால் நாடு திருந்திவிடுமா என கேட்கிறார்கள். இப்போது நம் நாட்டில் காளான் போன்று தினமும் ஒரு கட்சி முளைக்கிறது. ஆனால், அவை பிற கட்சிகளைப் போலவே, மக்களுக்கு நம்பிக்கை துரோகம், மக்களை சுரண்டுதல் என அகங்காரத்துடன் செயல்படுகின்றன. இவற்றைப் பார்க்கும்போது எனக்கும் கோபமும் வெறுப்பும் வருகிறது. அவையே கார்ட்டூனாக வடிவம் பெறுகிறது. நாட்டில் இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா எனக் கேட்டால், சிரிப்பதே புத்திசாலித்தனம் என்பேன். அதைத்தான் எனது கார்ட்டூன்கள் செய்கின்றன. நான் எவ்வளவு கோபமாக கார்ட்டூன் வரைகின்றேனோ அதே அளவுக்கு அக் கார்ட்டூன் நகைச்சுவையோடு வரும். இது என்னை அறியாமல் நடைபெறும் விஷயம். இவ்வளவு அழகாக கார்ட்டூன் வரையும் நீங்கள் ஆங்கில இதழ்களுக்குச் சென்றுவிடலாமே என சிலர் கேட்பது உண்டு. 700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதுதான் ஆங்கிலம். ஆனால் நம் தாய் மொழியான தமிழ், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. கலை, இசை, இலக்கியம் என அனைத்து வளமும் தமிழில் நிறைந்து உள்ளது. தாய்மொழியான தமிழில் கார்ட்டூன் வரையும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைத்துவிடாது என்றார் மதி. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமை வகித்து புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தமிழகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வாசகர்கள் பெற்றுக் கொண்டனர். தினமணி திருநெல்வேலி பதிப்பின் தலைமைச் செய்தியாளர் ப. இசக்கி வரவேற்றார். கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி நன்றி கூறினார்.
கருத்துக்கள்
மன்பதை உணர்வும் தமிழுணர்வும் கொண்ட மதிக்குப் பாராட்டுகள். அவரது தொண்டு தொடரட்டும்! அவரது புகட்டோவியங்கள் சிலருக்கு வழுக்கு நிலத்தில் பயன்படும் ஊன்றுகோலாக அமையும்; சிலருக்கு வழிகாட்டியாக அமையும்;சிலருக்குத் தன்னைப்பற்றிய மதிப்பீடாக உணர்ந்து திருத்திக் கொள்ள உதவும்;சிலருக்கு மன்பதையின் நிலையைப் புரிந்து கொள்ள உதவும்; பலருக்குத் தம் உள்ளக் கிடக்கை வெளிப்பட்டதில் மனநிறைவாய் அமையும்; பன்முகப் பயனுடைய படைப்பாக அவை விளங்குகின்றன. நல்வாய்ப்பளிக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஈரோடு, மே 30: கட்சியினரின் உணர்வுகளை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். வேறு கட்சியில் இணைவது குறித்து சில தினங்களில் அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: "1972-ல் எம்ஜிஆர், அதிமுக-வைத் துவக்கியதிலிருந்து கட்சியில் உள்ளவர்கள்தான், இப்போது கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்த சூழலில், கட்சியை இணைத்து, மீண்டும் இரட்டை இலை சின்னத்தைப் பெற ஜெயலலிதா முயற்சித்தாலும், நாங்களும் அதற்கு பணியாற்றி இருக்கிறோம். ஜானகி அணியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தொடர்ந்து எங்களைப் புறக்கணித்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளோம். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைப் பற்றி வருந்தாமல், அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாகப் உழைத்தேன். எந்தப் பணியிலும் நான் சுணக்கம் காட்டியதில்லை. ஆனால் கட்சியில் உரிய மரியாதை எனக்கு அளிக்கப்படவில்லை. சுமார் 15 ஆண்டுகாலம் ஓரம் கட்டப்பட்டபோதிலும், வேறு கட்சிக்குச் செல்லாமல், கட்சி வளர்ச்சிக்காகப் போராடினேன். ஆனால் ஜெயலலிதா ஈரோட்டுக்கு வந்தபோதும், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது, மிகுந்த மன வேதனையை அளித்தது. எனக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ஆனால் செயற்குழுவில் பலரும் என்னைத் திட்டியதை, ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. இனிமேல் அதிமுக-வில் இருப்பது மரியாதையாக இருக்காது என்பதால், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த பின்னர்தான், பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தேன். தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக் கணக்கானோர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அனைவரிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர், வேறு கட்சிக்குச் செல்வதா அல்லது தனிக்கட்சி அமைப்பதா என்று முடிவு செய்வேன். எனினும் போட்டி அதிமுக-வை உருவாக்கும் எண்ணம் எதுவுமில்லை. எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வேலையில் ஒருபோதும் ஈடுபட மாட்டோம். எனது தந்தை இறந்தபோது, குக்கிராமத்திற்கு நேரில் வந்த எம்ஜிஆர், சடலத்தை தோள் கொடுத்துத் தூக்கினார். ஆனால் எனது தாயார் இறந்தபோது, ஜெயலலிதா அனுதாபச் செய்தி கூட அனுப்பவில்லை. பலமுறை கட்சி வளர்ச்சிக்காக நான் கூறிய யோசனைகளை உதாசீனப்படுத்திய ஜெயலலிதா, என்மீது தேவையற்ற குற்றம் சுமத்தவும் தயங்கவில்லை. அதிமுக தொண்டர்கள் மிகவும் நல்லவர்கள். கட்சியினரின் உணர்வுகளை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். யாருடைய கட்டுப்பாட்டிலும் ஜெயலலிதா இருக்கக் கூடாது. யார் மீதாவது புகார்கள் வந்தால், இரு தரப்பினரையும் ஒன்றாக அழைத்துப் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து பலர் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது. தற்போது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, மக்கள் எண்ணங்களை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதால்தான், திமுக-வால் தொடர்ந்து ஜெயிக்க முடிகிறது. பல்வேறு திட்டங்களாலும் திமுக-வுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது' என்றார் சு.முத்துசாமி.
கருத்துக்கள்
துரத்தப்பட்டடவரின் புலம்பல் என எண்ணாமல் செயலலிலதா அவர்கள் இக் கருத்திற்குச் செவி மடுத்தால் கட்சி வளரும்; இல்லையேல் தளரும். காட்சிக்கு எளியராய் விளங்கினால் தொண்டர் வலிமை உயரும்; கட்சி பொலிவுறும்; இல்லையேல் அழிவுறும்.தெரியாத தொண்டரிடமும் தெரிந்தவர்போல் அன்பு காட்டுவது வளர்ச்சிக்கு வழி; தெரிந்தவரிடமும் பாராமுகம் காட்டுதல் வீழ்ச்சிக்கு வழி. வரலாறு காட்டும் உண்மை இதுதான்.
சென்னை, மே 30: நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி, ச. தங்கவேலு,கே.பி. ராமலிங்கம் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவதாக முதல்வர் அறிவித்தார்.தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் திமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் ஒரு இடம் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது.2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகுதான் பா.ம.க.வுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மூன்று இடங்களுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.வேட்பாளர்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்குப் பின் கட்சியின் தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், ச. தங்கவேலு, டி.எம். செல்வகணபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.பா.ம.க. ஆலோசனைகூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வது என்றும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி 2011-க்குப் பிறகு பாமகவுக்குத் தரப்படும் என்றும் திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பா.ம.க. தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சென்னையில் அன்புமணியின் வீட்டில் பாமக முக்கிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடி இந்த முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கருத்துக்கள்
மூவருக்கும் வாழ்த்துகள். காங்கிரசு சார்பின்றித் தமிழ் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டுகோள். வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஆறுதல்.
சென்னை, மே 30: பாட்டாளி மக்கள் கட்சியுடன் (பா.ம.க.) மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது என திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) நடைபெற்றது. கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாமக-வுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து கருணாநிதி கூறியது:பாமக நிறுவனர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், 14-5-2010 தேதியிட்டும் இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தார். அதில் 2011-ல் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம், இப்போது நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திமுக, பாமக ஆகிய கட்சிகளிடையே உறவு முறிவு ஏற்பட வேண்டிய நிலை ஏன் உருவானது, அதற்கு திமுக காரணம் அல்ல என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.அண்மையில் பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்தும், திமுக-தான் முதல் எதிரி என்று பாமக நிறுவனரின் பிரகடனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இருந்தபோதும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் மீண்டும் இரு கட்சிகளும் உறவைப் புதுப்பித்துக் கொண்டு அடுத்து வரவிருக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலிலும், விரைவில் வரவிருக்கின்ற சட்டப்பேரவை மேலவைத் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் உடன்பாடு கொண்டு போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும், 2011-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்து நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு ஒரு இடம் வழங்குவதென்றும் உறுதிபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை பாமக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்ட முடிவு, அதில் ராஜதந்திரம் எதுவும் இல்லை.கூட்டணியில் பாமக தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அவர்கள் ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.இலங்கைத் தமிழருக்கு உதவி:இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 500 கோடியை முறையாக பயன்படுத்திட தக்க திட்ட வரைவுகளை செய்திட இலங்கை அரசு இன்னமும் முன்வரவில்லை. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களும் சரிவர விநியோகம் செய்ப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்திட இலங்கை அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் முகாம்களில் உள்ள 73,572 இலங்கைத் தமிழர்களை இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மறு குடியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானித்து, ஏற்கெனவே கேட்டுக் கொண்டது. இதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசை இக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.மலேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 75 இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கருணை உள்ளத்தோடு முன் வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விலை உயர்வு பிரச்னை:அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிறுதாவூர் நிலம்: நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணைக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு ஏழை மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இக் கோரிக்கை தொடர்பாக திமுக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துக்கள்
திமுகவைப் பொறுத்தவரை சரியான முடிவு. ஆனால், பாவம் பாமக. எனினும் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காகக் காங்கிரசை அண்டிப் பிழைக்காமல் அதன் கொலைவெறியை மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் தன் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறலாம். போதிய ஆதாயம் இன்றியும் தமிழ் நலனுக்காகத் தமிழ் ஓசை நாளிதழையும் மக்கள் தொலைக்காட்சியையும் நடத்தும் பாமுக பதவி வழி ஆதாயத்திற்காகக் கொள்கையை அடகு வைக்க வேண்டா; சாதி வெறியிலும் இறங்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 5/31/2010 5:32:00 AM
இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது : ஜனாதிபதி [ ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2010, 05:22.40 AM GMT +05:30 ] இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒவ் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவருகிறது). ஆயுத கொள்வனவு என்பது இராணுவ தீர்மானமாகும். இந்தநிலையில் சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவித்ததாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிடம் இருந்து அனுகூலமான அனைத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதேவேளை எவர்
By MANISANKAR 5/31/2010 4:08:00 AM
Hey, Is that one of MuKa's batli (keep) in the photo?
சென்னை, மே 30: கூட்டணி தொடர்பாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடம் தருவது தொடர்பாகவும் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பா.ம.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.÷2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களில் எதிலுமே பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே மாநிலங்களவையில் உறுப்பினர் என்ற முறையில் அன்புமணி மட்டுமே நாடாளுமன்றத்தில் பா.ம.க.வின் பிரதிநிதியாக இருந்தார்.÷இப்போது நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணிக்கு இடம் கிடைக்காமல் போனால், நாடாளுமன்றத்தில் பா.ம.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.÷கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் கட்சி என்ற வகையில் இந்த பிரதிநிதித்துவம் தேவை என்று கட்சியின் உயர் தலைவர்கள் கருதுகின்றனர்.÷சாதிவாரி மக்கள் தொகை வேண்டும் என்று கோரியது, மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் செய்ய வைத்தது போன்றவற்றில் பா.ம.க.வின் பங்கு முக்கியமானதாக இருந்தது என்று அந்தத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.÷2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஓர் இடம் என்று திமுகவின் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 2013 ஜூலையில்தான் கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் முடிகிறது. அப்போதுதான் அடுத்த தேர்தல் வரும். அது வரையில் பா.ம.க.வுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்று அந்தத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 1998-ல் முதன்முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைத்த பா.ம.க.வுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்துக்கள்
பதவி போனால் எல்லாம் போகும் என அஞ்சிய பாமக ஈழப்போர் உச்சத்தில் இருந்த பொழுது அன்புமணியைப் பதவி விலக வைத்திருந்தால் இன்றைக்கு ஈழத்திலும் விடிவு ஏற்பட்டிருக்கும். பாமகவிற்கும் முழு வெற்றி கிடைத்திருக்கும். நல்ல கொள்கையைப் பரப்புரை செய்தாலும் எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனும் மனஉறுதியின்றிக் கொலைகாரக் கூட்டணியில் சேரத் துடித்ததற்குச் சரியான தண்டனை. தேர்தல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேர வரும் பாமகவிற்குக்கிடுக்கிப் பிடி போடாமல் பதவியைத் தாரைவார்க்க திமுகவோ அதன் தலைவர்களோ அறிவிலிகள் அல்லர். இனியேனும் திருந்தட்டும் பாமக! தமிழ்நலக் கொள்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்! மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடிக்கட்டும்! சாதி வெறியைச் சாக்கடையில் எறியட்டும்! சங்கத்தமிழ் மன்பதையை மீண்டும் உருவாக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 5/31/2010 5:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ++++++++++++++++++++++++++++++++++++++
நடுநிலையுடன் எழுதும் கருத்துகளை வீர வன்னியன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சாதிக்கட்சி என்னும் நிலையிலிருந்து மாறித் தமிழ் நலக்கட்சியாகவும் போதை முதலான நலக்கேட்டுப் பொருள்களை ஒதுக்கும் உணர்வை உருவாக்கும் கட்சியாகவும் தமிழ் ஈழத்திற்குக் குரல் கொடுக்கும் கட்சியாகவும் காட்சியளிக்கும் பாமக தேர்தலுக்கு முன்பு காங்கிரசின் கொலைவெறிச் செயல்களுக்கு எதிராகப் பதவிவிலகியிருந்தால் ஒரு மாற்றம் வந்திருக்கும் என்பதில் என்ன தவறு? இன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆனதும் கூட்டணியின் தலைமையான காங்கிரசிடம் அமைச்சர் பதவியை எதிர் நோக்கி ஈழத் தமிழர் நலனில் கண்மூடி வாய் பொத்தித் தாழும் நிலை ஏற்படலாம் அல்லவா? இப்படிப்பட்ட ஆசைகளை விட்டு விட்டுத் தேர்தல் தோல்வியால் கையில் எடுத்துள்ள சாதிக் கொடியைத் தூர எறிந்து விட்டுத் தமிழ்ச்சாதிக்காக அக்கட்சி பாடுபடவேண்டும். பாமகவின் பணி வன்னியப் பாடடாளிகளுக்கு என்று குறுகாமல், தமிழ்ப்பட்டாளிகளுக்காகச் சிறக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 5/31/2010 1:14:00 PM
Dianamani editor vaidyanathan naradhar game started
By saravanan 5/31/2010 1:12:00 PM
The PMK party founder Dr.Ramadoss's intention is to uplift his son and family members as doing by some political leaders. if they contest in the election they will certainly lose deposits.Hence Dr.Ramadoss has made a plan to bring his son thro' indirect way,as he is not a candidate in the election.
By v.thatchanamoorthy 5/31/2010 12:52:00 PM
99.99999999999999999% tamilians will be very very very very very ..happy to hear this news.
By prasath.T 5/31/2010 12:17:00 PM
சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த தமிழக அரசுகளில் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியே பொற்காலமாக இன்னமும் மக்களின் மனதில் உள்ளது. தனக்கென்று சொத்து ஏதும் செர்காதவர், பிரதமர் பதவியையே வேண்டாமென்று விட்டுக் கொடுத்தவர், தன் தாயாரின் வீட்டுக்கு சென்ற தண்ணீர் குழாயை நிறுத்தச் சொல்லி அவரை மற்ற மக்கலோடோ போய் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சொன்னவர். அந்த மாதிரி நல்ல உள்ளம் படைத்த தலைவனுக்கு ஜாதி என்ற கரியைப் பூசி கேவலபடுத்துவது குரூர புத்தியுள்ளவன் செய்யும் செயல். அவரை தோற்கடித்துவிட்டு இன்று நடக்கும் ஆட்சியின் லட்சனத்தைப் பாருங்கள். எல்லோரையும் ஒரு ரூபாய் அரிசியில் வாழும் பிச்சைக் காரனாக மாற்றி, குடிகாரனாக்கி வைத்துள்ளான். பெருகி ஓடும் சாராய சாம்ராஜ்யம், இதைச் செய்பவன் மஞ்சள் துண்டு போட்ட, மதுவே வேண்டாமென்று ஒழிக்கச் சொன்ன பெரியாரின் தொண்டன் என்று சொல்லிக்கொள்பவன். தூ..
By இடி அமீன், உகாண்டா. 5/31/2010 11:37:00 AM
மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள். திமுக வின் எதிர்கால நன்மைக்கு வேண்டி வடக்கு மாவட்டங்களில் வலுவுள்ள ஒரு கட்சி அவர்களுக்கு தேவை கலைஞருக்கும் பிறகு நடக்கும் நடவடிக்கைகளை பற்றி ஆராயமுடியுமானால் புரியும் அதன் தற்ப்போதைய இந்த கூட்டனி. அது இதுதான் ஸ்டாலின் முதல்வராகவேண்டுமானால் அதற்க்கு பா.ம.க வின் ஆதரவு நிச்சயம் தேவை பொறுத்திருந்து பாருங்கள்.
By வீர வன்னியன், ஆத்தூர் 5/31/2010 10:53:00 AM
திமுக சார்பில் எம்பி பதவி கிடைத்துள்ள மூவரும் மிகவும் சிறப்பாக கட்சி பணியாற்றுபவர்கள். வாழ்த்துகள். பாமக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் எம்பி சீட் கிடைத்திருக்கும். கடுமையாக திட்டுவதும் தினமும் அறிக்கை விட்டு குடைச்சல் கொடுத்ததும் காடு வெட்டி பேசிய பேச்சும் கூட்டணிக்கு மதிப்பு கொடுக்காத பாமக தற்போது எம்பி சீட் எதிர்பார்ப்பதற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. தற்போதும் திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் பேரம் பேசுவதாக பத்திரிக்கையில் செய்திகள் கசிகின்றன. இப்படி ஒரு மானங்கெட்ட அரசியல் பதவி தேவையா? இனிமேலாவது எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறீர்களோ அந்த கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்காமல் இருக்கப் பாருங்கள்..தற்போது திமுகதான் வெற்றிக்குதிரை. நல்ல உறவு தொடர்ந்தால் எதிர்காலத்தில் அன்புமணி மத்தியஅமைச்சர் ஆவர்....
By veera Ganapathy 5/31/2010 10:41:00 AM
தி. மு.க. அவசர பட்டு அவர்களை கூட்டணியில் சேர்த்து இருக்க வேண்டியது இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வருவதனால் தி.மு.க. வுக்கு நஷ்டமே தவிர லாபம் ஏதும் இல்லை. தான் ஒரு ஜாதி வெறியர் என்பதை திரு. ராமதாஸ் அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த பென்னாகரம் இடை தேர்தலில் மற்றும் ஒரு முறை நிரூபித்து காட்டி இருக்கிறார். இவருடைய அரசியல் நடவடிக்கைகள் எதுவுமே ஒரு தலைவனுக்கு உள்ள ஒரு தகுதி இவருக்கு உண்டா என்பதை கேள்விகுறி ஆக்கி இருகிறதே தவிர இவர் இன்னும் தன தகுதியை வரரது கொள்ள வேண்டிய இடத்தில தான் இருக்கிறார்.
By Tamilan 5/31/2010 10:33:00 AM
"thithum nanrum pirar thara vara". Tani manitha muyarchi miga mukkiam
By Sha 5/31/2010 10:26:00 AM
மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள்.
By வீர வன்னியன், ஆத்தூர் 5/31/2010 10:25:00 AM
Mr. M.K took correct action. Weldon!! M.K.
By Tamilan 5/31/2010 10:14:00 AM
Ilakuvanar Thiruvalluvan.I am not able to understand you.why you want Anbumani to resign at that time.The main culprit is your leader Karuna and congress.Otherwise very big loss in Srilanka could hand been averted. Note: I do not know tamil typing.Other wise I can give fitting reply in tamil.
By legal fan 5/31/2010 8:22:00 AM
இலக்குவனார் திருவள்ளுவனின் கருத்தே என்னுடையதும்.சாதிகள் என்ற பெயரைச் சொல்லியோ, ஆட்சிக்கு வந்தபின் தங்கள் சாதிகளை ஈடேற்றும் வேலையையோ செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் நம் இந்தியத் திருநாட்டில் இனியும் இருக்கக் கூடாது. சில ஆண்டுகளே ஆட்சியில் இருந்த காமராசர் தன் சாதியை வாணிபத்துறையில் மேலோங்கச் செய்துவிட்டு கர்மவீரர் என்ற பட்டப் பெயரை அந்தச் சாதிமக்களிடத்தில் பெற்றுவிட்டுச் சென்றார். இப்படிப்பட்ட ஓர் அவலநிலை தமிழகத்திற்கோ இந்தியத் திருநாட்டிற்கோ இனித் தேவையில்லை. ஆகவே தொடர்ந்து சாதிகளற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் திமுகவும் மத்தியில் சோனியா அவர்களின் ஆட்சியும்தான் தொடர்ந்து நம் நாட்டிற்குத் தேவை. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மறந்து இதனை முயன்றால் வேறு ஒரு பெரியார் பிறந்து வந்தாலும் சாதிக் கொடுமைகளை அகற்ற முடியாது. இனி ஒரு பாரதி பிறந்துவந்து சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினால் ’வேலையைப் பார்த்துக்கொண்டு போப்பா’ என்று எதிர்பாட்டுப் பாடத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே கலைஞர் அவர்கள் தன்னுடைய அறிப்பகலவன்களாக நினைக்கும் தந்தை பெரியார்,
சென்னை, மே 29: பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகளின் செயல்கள் மனித நேயத்துக்கு முற்றிலும் விரோதமானவை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்கள் அமைக்கும் திட்டத் தொடக்க விழா தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு, நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:"மாவோயிஸ்டுகள் சமீபகாலமாக பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?மாவோயிஸ்டுகளின் லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம்.ஆனால், அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகிற முறைகள் மனித நேயத்துக்கு முற்றிலும் விரோதமானவைகளாக இருக்கின்றன. ரயில் விபத்தில் இறந்துபோன ஒரு குழந்தையின் உடலை பயணிகள் தூக்கிச் செல்லும் காட்சி பத்திரிகைகளில் வந்துள்ளது.அந்தக் குழந்தைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் என்ன மாறுபாடான கருத்து இருக்க முடியும்?பொதுமக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தங்களது நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுகிற நிலை வளர்வது நல்லதல்ல.அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் எனக்கு மாறுபாடுஇல்லை. ஆனால், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக போராடும் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகிற கருத்து இது.என்னுடைய கருத்துக்கு மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்கள் மதிப்பளித்து மனித நேயத்தைக் காப்பாற்றுவதற்குப் பக்க பலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.பா.ம.க. கூட்டணி?எங்கள் கட்சியின் (திமுக) உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை' என்றார் முதல்வர் கருணாநிதி.இணைப்புப் பாலமாக இருக்கிறார் ஸ்டாலின்அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இணைப்புப் பாலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்று மே 29-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவரது ஓராண்டு கால செயல்பாடு குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் சனிக்கிழமை கேட்டனர்.அதற்கு அவர் அளித்த பதில்:"துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் பணி திருப்தி அளிக்காவிட்டாலும், திருப்தி அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது.அவர் அரசுக்கு பலமாகவும், எதிர்க்கட்சிகளோடு இணைப்புக்கு பாலமாகவும் செயல்படுகிறார்' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்
கொள்கையும் அவற்றை நிறைவேற்றுதலும் மக்களுக்காகத்தான். அவ்வாறிருக்க அம்மக்களை அழித்து யாருக்காக அக் கொள்கைகளை நிறைவேற்றப் போகிறார்கள்? எனவே,முதல்வர் கூறுவதுபோல் யாராக இருந்தாலும் மக்களைப் பலியிடக் கூடாது. ஈழத்தில் மக்களைக் கொன்றொழித்த இந்தியமும் சிங்களமும் போன்று யாரும் நடக்கக் கூடாது. இதனை வலியுறுத்தும் முதல்வருக்குப் பாராட்டுகள். அதே நேரம் அரசின் அங்கமான துணை முதல்வர் பதவியில் இருப்பவரை அரசிற்குப் பாலமாக இருப்பதாக மீண்டும் முதல்வர் தெரிவிக்கிறார். அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்வது கேலிக் கூத்தாகும். அரசிற்கு அப்பாற்பட்டவரை அவ்வாறு சொல்லலாம். எனவே, அரசு வேறு அமைச்சுப் பதவி வேறு என்ற நகைச்சுவையை நிறுத்த வேண்டும்.