மூவருக்கும் வாழ்த்துகள். காங்கிரசு சார்பின்றித் தமிழ் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டுகோள். வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஆறுதல்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/31/2010 5:37:00 AM
மூவருக்கும் வாழ்த்துகள். காங்கிரசு சார்பின்றித் தமிழ் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டுகோள். வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஆறுதல்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பாவம் அதிமுகவின் தோழமைக் கட்சிகள்! குறிப்பாக மதிமுக! தொடர்ந்து தேர்தல் தொகுதிகளை விட்டுக் கொடுத்தது. மாநிலங்களவையில் வைக்கோ இடம் பெற்றால் தமிழர்க்கு நல்லது; அதிமுகவிற்கும் வலிமைவாய்ந்த சொற்பொழிவாளரை அனுப்பிய வகையில் மிக நல்லது. ஆனால், பேராசை பிடித்த அதிமுக எல்லாவற்றையும் தானே கபளீகரம் செய்யும் பிசாசு போல் நடந்து கொள்கிறது. என்ன செய்வது? உலகத்தமிழர் நலனுக்கு எதிரான திமுகவிலும் இணைய முடியவில்லை. தனித்து நிற்கும் துணிவும் இல்லை. அதிமுகவின் கொத்தடிமையாக இருக்கின்றனர். மத்திய மாநில அரசுகளை வீழ்த்த அதிமுகவால்தான் முடியும்; தங்களால் முடியாது என இக்கட்சியினர் கருதினால் இவர்களுக்கு எதற்குத் தனித் தனிக் கட்சிகள்? கட்சிகளைக் கலைத்துவிட வேண்டியதுதானே! ஏதோ, புரட்சித்தலைவியைச் சந்தித்த நற்பேறு கிடைத்த மகிழ்ச்சியில் வாய்மூடிக் கிடப்பார்கள் போலும்! தமிழர்களின் அடிமைத்தனத்தைப் போக்க எண்ணுபவர்கள் முதலில் தங்கள் அடிமைத்தனத்தைப் போக்க முயலட்டும்!
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்