rehablitation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rehablitation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நிருபமா ராவ் இன்று இலங்கை பயணம்


சென்னை, ஆக.29: இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் 3 நாள் பயணமாக இலங்கைக்கு திங்கள்கிழமை செல்கிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளுக்கு நிருபமா ராவ் செல்கிறார். தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் இந்திய அரசின் திட்டம் குறித்தும் இந்தப் பயணத்தின் போது அவர் ஆய்வு செய்ய உள்ளார். தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்களை கொழும்பில் புதன்கிழமை (செப்டம்பர் 1) சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த மாத இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை செல்ல உள்ள நிலையில், நிருபமா ராவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு   500 கோடியை வழங்கியது. ஆனால், அங்கு மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை எனவும், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழ்வதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உண்மை நிலையைக் கண்டறிய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை தெரிவித்திருந்தார். அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, இலங்கைக்கு மத்திய அரசின் உயர் அதிகாரி  அனுப்பப்படுவார் என்று மன்மோகன் சிங் அறிவித்தார்.  முன்னதாக, முதல்வர் கருணாநிதியை சென்னையில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி நேரில் சந்தித்து நிருபமா ராவ் இதுதொடர்பாக பேச்சு நடத்தினார். அப்போது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றை சீரமைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
கருத்துக்கள்

சீனாவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள். இந்தியா எஞ்சியுள்ள தமிழர்களை ஒழிப்பதற்கான வன்கொடுமை கொலை ஆயுதங்களையும் வேதியல் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கும். பாக்கிசுதானுடன் தொடர்பு கொள்ள வேண்டா. இந்தியாவே ஈழ ஆதரவுத் தலைவர்களை ஒழித்து விட்டு பன்னாட்டு அவைகளில் சிங்களத்திற்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும். தமிழர்கள் இல்லாத பூமியாக இலங்கையை ஆக்கும் சிங்களத்தின் எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் துணை நிற்போம். அருள் கூர்ந்து சிங்களத்தின் கொத்தடிமையாக இந்தியா இருக்க இசைவு தாருங்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதற்காகத்தான் இநதியா என்னை அனுப்பி வைத்துள்ளது. இந்தியத்தின் பாதுகாவலனே! புறக்கணிக்காதீர் எம்மை! என மண்டியிடச் செல்லும் செயலருக்கு வாழ்த்துகள். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2010 4:35:00 AM
India attempts to camouflage the assistance given to Sri Lankan forces at the final war. [ Sunday, 29 August 2010, 03:29.43 PM GMT +05:30 ] Sri Lanka states, some Indian forces had been alleged for assisting the Sri Lankan forces, at the final stage of war in Sri Lanka, will visit Sri Lanka to learn about war issues. The Indian Military group will visit Sri Lanka next week to learn the methods for the defeats faced by the Liberation tigers were mentioned by Military Commander Jagath Jayasooriya. A Bangladesh Military team will visit Sri Lanka to learn on this situation, hence arrangements are being done to take the team, to the areas where the final war took place to provide training sessions against war was mentioned by Military Commander. Reports states such action is initiated by India to hide the accusations that Indian forces assisted the Sri Lankan forces at the final war in Sri Lanka. But opposes have cropped up in Tamil Nadu and amidst the Central Opposition party sec
By George
8/30/2010 2:15:00 AM
WHAT FOR THIS WOMAN IS GOING THERE? TO PLAN AND KILL THE REMAINING TAMIL POPULATION. STILL 150 000 PEOPLE ARE LIVING IN THE NAZI STYLED CAMPS EVENN AFTER END OF THE BARBARIC TAMIL ETHNIC CLEANSING. EVEN TWO ELECTIONS IN KASHMIR HAS NOT BROUGHT TRUE PEACE. SO HOW COULD THIS STUPID VISITS WITHOUT ANY PLANS COULD BRING PEACE THERE. THE CALM IN THE TAMIL NATION IS NOT A TRUE ONE. IT WILL EXPLODE ONE DAY.
By paris Ejilan
8/30/2010 1:47:00 AM
வீட்டுல சோருவடுச்சு...குழம்பு வச்சு.... ஒரு வா ருசியா சோறு குடுக்கமுடியாத பொம்பள...பட்டணம் போயி பாராளப் போறாளாம் !...இந்தப் பக்கம் சீனக் காரன் குடுக்குற கொடச்சல சமாளிக்க முடியாள ...அந்தப் பக்கம் பாகிஸ்தான் காரண அடக்க முடியாள ..பங்களாதேஷ் தீவிரவாதிய தடுக்க முடியாள...இந்த லட்சணத்துல இந்தப் பொம்பள இலங்கைக்குப் போயி ஒரு மணி நேரத்துல ஒரு இனத்தை மீட்டு...வீடு கட்டிக் கொடுத்துப் புடுவாங்கலாம் ! கருணாநிதி மூளை இப்போ வறண்டு போயி ஒழுங்க வேலை செய்ய மாட்டேங்குது !!! ஆடும் வரை ஆடட்டும் என்று இனி விடமுடியாது !!! @.....
By கொல்லங்குடி கருப்பாயி
8/29/2010 11:21:00 PM
போஸ்னியா...யுகோஸ்லாவகியா..குரோவசிய...போன்ற நாடுகளில் கலவரத்திற்குப் பின் அமைதிநிலை திரும்பியதும் ஐரோப்பிய யூனியன் ..மக்களின் புனர் அமைப்பிற்கு நிதியினை தாராளமாக வழங்கி ...ஒரு தனி அதிகாரியை ..கமிசனர் அதிகாரத்தில் நியமித்து கண்காணித்தது ! இவ்வாறு இருக்கையில் இந்தியா இலங்கைக்கு வெளியுறவு செயலரை அனுப்புவது தமிழர் பிரச்சனையை கையாள்வதற்கு கிடையாது ! தனி அதிகாரி நியமனத்தை...அல்லது தமிழர்கள் பகுதியில் செய்யப்படும் பணிகளை பார்வையிட இலங்கை அனுமதி தராமல் நிராகரித்து விட்ட நிலையில் ....மற்றவர்களை முட்டாள் ஆக்க வெளிவிவகாரத் துறை செயலரை வேறு அலுவல் நிமித்தம் விஷயம் செய்ய அனுமதி பெற்று கண்துடைப்பிற்காக இலங்கைக்கு அனுப்புகிறது !ஒரு தனி அதிகாரி சென்றால் பிரச்சனையின் முக்கியத்துவம் என்பது வேறு ! வெளிவிவகாரச் செயலர் பயணம் என்பதற்கு பொருள் வேறு !! உரிய இடத்தில் கருணாநிதி இருந்து கொண்டு தன்குடும்பத்திற்க்கு ஊழல் செய்து சம்பாதித்துக் கொண்டிருப்பதால் ...SORRY...so....Sorry !!! தமிழர்களே! அவரால் எதுவும் செய்ய முடியாள ....கடவுள் உங்களை காப்பாற்றுவாராக !!! @ rajasji
By rajasji
8/29/2010 10:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++
இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு

வெள்ளி, 13 நவம்பர், 2009

அகதிகளின் மறுவாழ்வுக்கு ரூ. 100 கோடி



சென்னை, நவ. 12: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் துயரங்களை உடனடியாக களைய அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி நிதி ஒதுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:""தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலும் உள்ள 5 ஆயிரத்து 982 குடியிருப்புகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.முகாம்களில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய கழிவறைகள் கட்டப்படும். மேலும், பழைய கழிவறைகள் பழுது பார்க்கப்படும்.புதிய கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைத்து, மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். வீடுகளில் உள்ள மின் இணைப்புகளும் பழுது பார்க்கப்படும். இந்தப் பணிகள் ரூ. 37.33 கோடி செலவில் செய்யப்படும்.காப்பீட்டுத் திட்டம் விரிவு... தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மாதாந்திர பணக் கொடையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.எனவே, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த ரூ. 1 கோடி ஒதுக்கப்படுகிறது.தமிழக மக்களுக்கு வழங்கப்படுவது போல, அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க ரூ. 4.54 கோடி ஒதுக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டம், இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ. 2.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ. 4.1 லட்சம் செலவிடப்படும்.கல்லூரிகளில் பயின்று வரும் முகாம் வாழ் மாணவர்கள் 354 பேருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்காக ரூ. 8 லட்சம் ஒதுக்கப்படும்.முதல் கட்டமாக மொத்தமாக ரூ. 45.40 கோடியில் முகாம்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.மீதமுள்ள ரூ. 54.60 கோடி தொகை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிதாக காங்கிரீட் வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும்.இலவச செயற்கை உடல் உறுப்பு உபகரணங்கள், உதவித் தொகையுடன் கூடிய பள்ளிக் கல்வி, மூன்று சக்கர கையுந்து ஆகியவையும் வழங்கப்படும்.தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய குடும்பங்களில் ஈமச்சடங்குக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ. 2,500, தமிழகத்தில் அகதிகளுக்கும் வழங்கப்படும்.முகாம் வாழ் தமிழர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்ப இயலாத நிலை ஏற்பட்டால் பணக் கொடை வழங்கும் நாளில் அவர்கள் முகாமுக்கு வந்து அதை பெற்றுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்படும். அரசு வழங்கிய தெளிவுரைகளின் படி, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதில், இப்போதுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது.முகாம் பொறுப்பு வட்டாட்சியரின் பரிந்துரை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு ஏற்ப திருத்திய தெளிவுரைகள் வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழக அரசு. இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கிய காங்கிரசு இப்பொழுது ஈழத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்கு இந்த நாடகம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருப்பினும். ஏதோ இத்தனை ஆண்டுகள் கழித்துச் சிறிது கண் திறந்து பார்க்கிறது . எனினும் இலங்கைத் தமிழர்களஅகதிகள் என்று குறிப்பிடாமல் அவர்கள் விரும்பியஇடங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கல்வி , தொழில் , வேலை வாய்ப்புகளைப் பெறவும் தமிழக அரசு உதவினால்தான்உண்மையான உதவியாக அமையும். அவர்கள் தாயகம் திரும்பும் பொழுது ஏதிலிகளாக இல்லாமல் நன்னிலையில் செல்ல வேண்டும். ஆனால் காங்கிரசிற்கு அடிமையான தமிழக அரசு இதனைச் செய்யாது. தமிழினப் படுகொலையில் கருத்து செலுத்தும் காங்கிரசு இதனைச் செய்ய விடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:12:00 AM

Karunanidhi, for aiding the attrocities against Tamils, somebody in your family will pay a price. You are too old to live to go through the penalty. Tamils of SL willl rise from ashes to the top of the world. They have rich history behind them, and have necessary talent to come up. They will certainly rise up with the grace of Lord Murugan. The govt of Tamilnadu alloting Rs. 100 crores for the welfare of SL Tamils is a peanut. Lord Murugan is behind them. They are going through the time of testing their patience by the great Lord. Bright future ahead of them awaits them.

By NRITAMIL
11/13/2009 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்