employment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
employment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜூன், 2012

Colombo exerts political influence on government employments in East

Colombo exerts political influence on government employments in East

Unemployed Tamil graduates in the Batticaloa district are being forced by the Colombo government through its colonial agents in the Eastern Province to join SL President Mahinda Rajapaksa's Sri Lanka Freedom Party (SLFP), the main constituent of the ruling United Peoples Freedom Alliance (UPFA), to get job opportunities in the government sector. 2,800 unemployed graduates attended the interview examinations held at district secretariat last week.

The Colombo government has been holding interviews promising government employment only during election periods, each time, ahead of SL parliamentary, presidential, provincial and civic elections. The latest drive is reported ahead of the elections to Eastern Provincial Council expected to be held in September this year.

The Batticaloa District Government Agent Ms P.M. Charles had earlier said that the unemployed graduates would be prioritized based on the year they passed out when considering appointment.

However the Kalkuda organizer of the SLFP Mr Chandrapala has been telling in pubic meetings that those who joined the SLFP would be appointed as teachers.

Warning legal actions, the Tamil National Alliance parliamentarians in the East have told the SL authorities at the district level to give priority to graduates who have passed out between 2004 and 2009.

செவ்வாய், 5 ஜூலை, 2011

B.E.graduates employment registration through online: பொறியியல் பட்டதாரிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

தலைப்பு , செய்தியைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. அவரவர் இணைய தளங்கள் மூலம் பதிவு செய்ய  இயலாது. சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே பதிவு செய்யும் வாய்ப்பு இப்பொழுது உள்ளது. அவ்வாறில்லாமல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்கள் மூலமாகப் பதிந்து கொள்ளலாம். இதனால் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. பிற வேலை வாய்ப்பு நிலையங்கள் இணையதளம் மூலமாகச் சென்னை அல்லது மதுரையில் பதிவினை மேற்கொள்ளும். எனவே, பொறியியல் பட்டதாரிகள், தத்தம் மாவட்ட வேலைவாய்ப்பு நிலையம் மூலம் இனிமேல் பதிவு செய்யலாம் என இருக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
பொறியியல் பட்டதாரிகள் இணையதளம் மூலம்
வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

First Published : 05 Jul 2011 05:41:00 PM IST
சென்னை, ஜூலை 5- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பொறியியல் பட்டதாரிகள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு முதல்வர் ஆணையிட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு இப்பணி செய்து முடிக்கப்பட்டது. முதல்வரின் ஆணையின்படி, சுமார் 4.80 இலட்சம் மேல் நிலைக்கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு, பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், மேல்நிலைக்கல்வி பயின்ற மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்வதால், போக்குவரத்துச் செலவு, காலவிரயம், அலைச்சல் மற்றும் இன்னல்கள் தவிர்க்கப்பட்டன.தற்போது பி.இ., பி.டெக். பொறியியல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 61,200 பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றது தொடர்பிலான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.பொறியியல் பதிவுகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ளவர்களும், மதுரை, தொழில் மற்றும் செயல் வேiலாய்ப்பு அலுவலகத்தில் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றனர். பொறியியல் பட்டதாரிகள் சென்னை அல்லது மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மட்டுமே பதிவு செய்யச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ஏற்படும் கால விரயம், அலைச்சல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்ப்பதற்காக, பொறியியல் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே இணையதளம் மூலமாக பதிவு செய்வதால் சென்னை மற்றும் மதுரைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இணையதளம் மூலமாக பதிவு செய்யச் செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, 10-வது அல்லது +2 மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.  உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை மேற்கொள்ளலாம் எனவும், பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு அடையாள அட்டை உடனே வழங்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 22 டிசம்பர், 2010

Priority for tamil G.O.in English: தமிழுக்கு முன்னுரிமை: ஆங்கிலத்தில் உத்தரவு

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு, ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க, அரசு சமீபத்தில் உத்தர விட்டுள்ளது. இதன்படி 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, செப்., 30 ல் அரசாணை வெளியிடப் பட்டது.ஆனால், இந்த உத்தரவு ஆங்கிலத்தில் உள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, ஐகோர்ட்டில் தமிழ், தமிழ் வழி பொறியியல் படிப்பு... என, அரசு "எதிலும் தமிழ்' என்ற கொள்கையை புகுத்தி வருகிறது. ஆனால், அரசின் உத்தரவுகளில் இன்னும் ஆங்கில ஆதிக்கமே உள்ளது.

தமிழ் வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்; இதை பலர் பின்பற்றுவதில்லை; இவர்கள் மீது என்ன நடவடிக்கை? என்பது குறித்து, அரசு குறிப்பிடவில்லை. தமிழில் கையெழுத்திட நாங்கள் கூறும் அறிவுரைகளை, மற்ற துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை,'' என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-

திங்கள், 8 நவம்பர், 2010

பேரவைக் கூட்டம் - தமிழ் வழிக் கல்விக்கான சட்டம்

பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்: நான்கு மசோதாக்கள் நிறைவேறுகின்றன


சென்னை, நவ. 7: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. 13-வது சட்டப்பேரவையின் 14-வது கூட்டத்தொடர் இதுவாகும்.ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டமாக கடந்த மார்ச் 19-ம் தேதி நிதிநிலை (2010-2011) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், 40 நாள்களுக்கும் மேலாக கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில், சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது.நான்கு முக்கிய மசோதாக்கள்: சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாள் நடத்துவது? என்னென்ன விஷயங்களை விவாதிப்பது என்பது பரிசீலிக்கப்படும். இதன்பின், பேரவை நடைபெறும் நாட்களை பேரவைத் தலைவர் தெரிவிப்பார்.திங்கள்கிழமை தொடங்கும் பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரின்போது, நான்கு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது; கூட்டுறவுச் சங்க தனி அதிகாரிகளுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு; சொத்துப் பதிவின்போது வசூலிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணம் மீது 50 சதவீதம் மேல்வரி விதிக்கப்படுகிறது.இது, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போன்று பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது பெருந்திட்டத்தில் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவும் பேரவையில் கொண்டு வரப்படுகிறது.பிரச்னைகளைக் கிளப்பும்: குழந்தைகள் கடத்திக் கொலை, அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவைகளைச் சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேரவையில் பிரச்னையைக் கிளப்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு ஏற்படும் எதிர்ப்புகள், இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் தலைவர்களின் கைது உள்ளிட்ட சம்பவங்களை பேரவையில் அந்தக் கட்சியினர் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் அரசு எடுத்து வரும் நிலைப்பாடுகள் பற்றியும் எதிர்க்கட்சிகள் பேரவையில் கடும் விமர்சனத்தை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது.குளிர்கால கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நடைபெறும் என சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
கருத்துகள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஐந்தில் ஓரிடம் என அவர்களை ஒதுக்கி வைக்காமல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனச்சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உண்மையாகவே தமிழ் வழியில் படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தமிழ் வழிக் கல்வியைப் ப்ரவலாக்கி அறிவியல் மேதைகளை உருவாக்க வழி வகுப்பதாகவும் அமையும். ஆனால், அரசிற்கு அது குறித்துக்கவலை இல்லை என்னும் வருந்தத்தக்க நிலைதான் உள்ளது. அனைவரையும் தமிழ் வழியில் படிக்கச் செய்வோம்! தரணியெங்கும் தலைமையுறச் செய்வோம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நாளை முதல் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு

Last Updated : 14 Sep 2010 05:34:47 PM IST

சென்னை, செப். 14: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.inஆன்லைனில் பதிவு செய்யும் முறை1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
கருத்துக்கள்

பாராட்டிற்குரிய அரும்பணி. 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
9/14/2010 5:40:00 PM
This article is very useful. One more suggestion: Give the URL also.
By Selvapandian Arunachalam
9/14/2010 5:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 8 செப்டம்பர், 2010

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசரச் சட்டம்


சென்னை, செப். 7: தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.  இதன்படி தமிழக அரசின் நேரடி பணி நியமனங்களில் 20 சதவீத இடங்கள் தமிழில் படித்தவர்கள் மூலம் நிரப்பப்படும்.
கருத்துக்கள்

காலம் தாழ்த்தியாவது இச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்குப் பாராட்டுகள். 20 விழுக்காடு என்பதன் காரணம் ஒரு வேளை மொத்தக் கல்லூரி மாணாக்கர்களில் தமிழ் வழியாகப் பயில்பவர்கள் 20 விழுக்காட்டினர் எனக் கணக்கிட்டார்களா எனத் தெரியவில்லை. மேனிலைப்பள்ளி வரை தமிழில் பயில்பவர்கள் எண்ணிக்கையே மிகுதி. எனவே, பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சியையும் அதற்குக் குறைவான தேர்ச்சியையும் அடிப்படைக் கல்வித் தகுதியாக உள்ள பணிகளுக்கு 75 % விழுக்காடு முன்னுரிமை தரவேண்டும். பிற பணிகளில் 50 % முன்னுரிமை தர வேண்டும்.முழுமையான ஆணையைப் படித்தபின்புதான் பிற கருத்துகள் குறித்துக் கூற இயலும். 
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/8/2010 4:14:00 AM 


அவசர சட்டம் பிறப்பிப்பு 
 http://www.maalaimalar.com/2010/09/08050103/tamil-nadu-government-emergenc.html
மாலை முரசு : அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசு அவசர சட்டம்

சனி, 2 ஜனவரி, 2010

இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க வேண்டாம்: ஜெயலலிதா அறிக்கை



சென்னை, ஜன.1: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார்கள்.இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு மாறாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் வகையில் ஓர் அரசாணையை வெளியிடச் செய்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இது "ஒப்பந்த முறை அறவே நீக்கப்படும்' என்ற தி.மு.க.வின் வாக்குறுதிக்கு மாறாக உள்ளது.மொத்தத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையே ஒழித்துக் கட்டும் பணியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார்.இந்த அரசாணையின்படி, இப்போது அரசுத் துறைகளில் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு துறைத் தலைவர்களே ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம். தி.மு.க. அரசின் இந்த செயல் இளைய சமுதாயத்தினரின் உரிமையைப் பறிப்பதாகும்.பொது நலன் கருதி, அரசு விரும்பினால், எந்த அரசு ஊழியரின் பணிக் காலத்தையும் நீட்டித்துக் கொள்ளலாம். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஒட்டுமொத்தமாக ஓர் அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல்.இது லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயல். பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் செயல். ஏழைகளை தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வைக்கும் செயல். தி.மு.க. விசுவாசிகளை பணியமர்த்துவதற்கான சதித் திட்டம்.பொதுவாக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பகங்கள் மூலம் இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஆனால் இதுவரை நடைபெறாத வகையில், அனைத்து மட்டங்களிலும் உள்ள காலியாக உள்ள இடங்களை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.இதனால் தி.மு.க.வுக்கு வேண்டியவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படும் நிலை ஏற்படும். இது போன்ற நியமனங்கள் மக்கள் விரோதச் செயலுக்கு வழிவகுக்கும். இதனால் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடும். தி.மு.க. அரசின் இந்த அரசாணை மொத்தத்தில் ஊழலுக்கு வித்திடும் செயல் ஆகும்.மேலும், தி.மு.க.வினர் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை நியமித்து, வரும் 2011 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் முறைகேடுகளை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.இளைய சமுதாயத்தினருக்கு எதிரான, ஊழலுக்கு துணைபோகின்ற, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற இந்த அரசாணையை வெளியிட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள், வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில், இளைஞர்களைக் கொண்டு முறைப்படி நிரப்பப்பட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

சாத்தான் வேதம் ஓதுதல்

என்பதற்கு எடுத்துக் காட்டாக

இந்த அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *