assault. massaacre லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
assault. massaacre லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஏப்ரல், 2012

இந்தியக் குழுவினர் முன்னிலையில் திக்குமுக்காடிய சிங்கள அரசு!

இந்தியக் குழுவினர் முன்னிலையில் திக்குமுக்காடிய  சிங்கள அரசு!

http://thaaitamil.com/?p=16083#comment-467


கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து  சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு.ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன் இலங்கை அரசின் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தையும் அக்குவேறு ஆணி வேராகப் புட்டுப்புட்டு வைத்தன. இதனால் அரச தரப்பு பெரும் சங்கடத்துக்குள்ளானது.
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியது. இதன்போதே மேற்கண்ட சங்கடத்தை அரசு சந்திக்க நேரிட்டது.மேலும், இனப் பிரச்சினைக்கு இலங்கை அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அது முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று வலியுறுத்திக் கூறியுள்ளது.
அத்துடன், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் இந்தியக் குழு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுக்கள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் அந்தக் குழுமுழுமையாக ஆதரித்துள்ளது.
இதேவேளை, இலங்கை அரசியல் தொடர்பில் இந்தியக் குழு தொடர்ச்சியாக பல்வேறு கோணங்களில் கேள்விக்கணைகளைத் தொடுத்தது. அடுத்தடுத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் திக்குமுக்காடிப்போயினர்.
இதற்கிடையே, கொழும்பு வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழு நேற்றுக்காலை முதற்கட்டமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துப்  பேச்சு நடத்தியது.இதன்பின்னர், இந்தியக் குழு இலங்கை நாடாளுமன்றுக்கு சென்றது. அங்கு சென்ற குழுவை சபை முதல்வர் நிமல் சிறிபாலடி உரிய மரியாதைகளுடன் வரவேற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்காக தீர்வு விடயம்,  நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காரசாரமான கருத்துப் பறிமாற்றல்களும்  இடம்பெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பின்போது, முதற்கட்டமாக, இலங்கை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெளிவுபடுத்திக் கொண்டிருக்கையில், “இலங்கை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து உங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எங்களுக்கு புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துங்கள்” என இந்திய குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் அமைச்சரிடம் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளோம்.இதற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறிக்கொண்டு செல்கையில், இடைநடுவில் குறுக்கிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., அரச தரப்பின் கபடத்தனங்களை புட்டுவைத்தார். இதனால் அரச தரப்பினர் வாயடைத்துப் போயினர்.
“நாங்கள் இலங்கை அரசுடன் 2011 ஆம் ஆண்டு முதல் பேச்சு நடத்துகின்றோம்.ஆனால் இதுவரையில் கண்டப் பயனேதுமில்லை. இன்னும் இவர்கள் புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.நாம் எமது தீர்வுத்திட்ட வரைவை அரச தரப்பிடம் கையளித்துள்ளோம். ஆனால் அரசு தமது தீர்வு என்னவென்பது குறித்து இன்னும் தெளிவுப்படுத்தாமல் காலம் கடத்துகின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுகள் மூலமாகவே தீர்வுக்காணப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம். இதற்கு ஒத்துழையாத அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கையாளப்போகும் விவகாரம் எமக்கு சந்தேகமாகவே உள்ளது.
பேச்சில் முதலில் இணக்கம் அதன்பின்னரே தெரிவுக்குழு விடயம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்” என்று சம்பந்தன் எம்.பி. இந்தியக் குழுவினருக்கு விரிவான விளக்கமொன்றை அளித்தார்.
சம்பந்தன் எம்.பியின் விளக்கமளிப்பையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா ஜோன் அமரதுங்க எம்.பி., “அரசு கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சில் முதலில் ஒரு இணக்கத்தை எட்டவேண்டும். கூட்டமைப்பு இல்லாமல் தெரிவுக்குழுவுக்கு செல்ல முடியாது.கூட்டமைப்பு சென்றால் தாமும் செல்வோம் எனக் திட்டவட்டமாக இடித்துரைத்தார்.
இலங்கை அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களை மிகவும் நிதானமான முறையில் செவிமடுத்த இந்தியக் குழு, மீண்டும் இலங்கை அரச தரப்பினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தது.
“ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுக்களின் மூலம் தீர்வுக்காணப்ட வேண்மென்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இதனை அரசு ஏற்க மறுப்பது ஏன்?” என்று இந்தியக் குழு கேட்டது. இந்தக் கேள்விக்கு அமைச்சர் நிமல் மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசால் காலவரையறையொன்றை வழங்கமுடியுமா என இந்திய எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்தால் முடியும் என இலங்கை அமைச்சர் நிமல் பதிலளித்துள்ளார்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள் இந்தியக் குழு, தமிழர்களுக்கு இலங்கை அரசு நீதியை வழங்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
13 பிளஸ் குறித்து அரசு பேசுகின்றது. ஆனால் அந்த பிளஸ் என்னவென்று தெரியவில்லை.13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

யெனீவாவில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்த புலம்பெயர் கனடியத் தமி்ழ்ப் பெண்


Video
யெனீவாவில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்த புலம்பெயர் கனடியத் தமி்ழ்ப் பெண்
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 05:45.46 PM GMT ]
 
பல தடைகளுக்கும் இடையூறுகளுக்குமிடையில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன் முறையாக சிறிலங்காவுக்கு எதிராகப் பல நாடுகள் வாக்களித்தமைக்குப் பின்னணியில் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த செயற்பாட்டாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் கரி ஆனந்தசங்கரி அவர்களும் செல்வி வாணி செல்வராசா அவர்களும் சட்டவல்லுனர் உரிமை பேணும் கனடா அமைப்பினூடாகக் கலந்து கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துருவாக்கல் மற்றும் பரப்புரைச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
திரு. சாருயன் கணபதிப்பிள்ளையுடனான தனிப்பட்ட நேர்காணலில் தனது ஐ.நா. செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் சிறி லங்காவின் தற்போதய அரசியல், ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் பற்றி விளக்குகிறார் செல்வி வாணி செல்வராசா.
தற்போது ஓர் சட்டப் பயிற்சி மாணவரான வாணி எதிர்வரும் யூன் 2012இல் ஒன்ராறியோ பார் கூட்டமைப்பில் இணைந்து கொள்வார். கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர் சபையிலும் அங்கம் வகிக்கிறார். அண்மையில் 'சிறி லங்கா கண்காணிக்கப்படுகிறது; இங்கிருந்து நாம் பயணிப்பது எங்கே' என்ற தலைப்பில் இவர் எழுதிய கருத்துக் கட்டுரை ரொறன்ரோ இசுரார் பத்திரிகையில் வெளியானது.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

The arrival of the Indian Parliamentary Group will be in favour of Sri Lanka - Minister Samarasinghe! : இந்திய ப் பாராளுமன்ற க் குழுவின் வருகை இலங்கை அரசுக்குச் சாதகமாக அமையும்- அமைச்சர் சமரசிங்க!


http://www.yarl.com/forum3/index.php?showtopic=100887

இந்திய ப் பாராளுமன்ற க் குழுவின் வருகை  இலங்கை அரசுக்குச் சாதகமாக அமையும்- அமைச்சர் சமரசிங்க!

                                                                                               - Perampalam Kanapathippillai

இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தற்போதைய காலகட்டத்தில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அந்நாட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்களின் ஒரு பிரிவினர் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பரப்பி வரும் பிரசாரத்தை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் மூலம் முறியடிக்க முடியும் என்றும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கமே இருப்பார்கள் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்தவகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் பின் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

ராஜபச்சவின் போர்குற்றங்களை விசாரணை செய் டெல்லியில் பேரணி! (படங்கள்)


டெல்லியைத் மையமாக கொண்டு இயங்கி வரும் Human Rights Defense International எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பாதுகாப்பு அமைப்பு , தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்களை விசாரிக்க கோரி பேராட்டமொன்றினை இன்று வியாழக்கிழமை நடத்தியுள்ளனர்.  டெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் நோக்கி பேரணியாக சென்று இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதரக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்துள்ளனர்.
டெல்லித் தமிழ் சங்கத்தலைவர் எம்.என்.கிருஸ்ணமணி மற்றும் Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், ராஜபச்சவின் போர்குற்றங்களை விசாரணை செய் – சிறிலங்காவைப் புறக்கணி – சிறிலங்காவில் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற வாசகங்களைத் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் ஓய்ந்துள்ள நிலையில், தமிழர்களுக்கான நியாயமான தீ;ர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா, தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு நிறுத்தப்படவேண்டுமென கோரினார்.  இதேவேளை சிறிலங்கா தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டுமெனவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிபுரிய, அரச சார்பற்ற நிறுவனங்களை சுதந்திரமாக பணியாற்ற சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் இப்போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தூதரகம் நோக்கி பேரணியாக போரட்டம் முன்னெடுகப்பட்டிருந்த நிலையில், டெல்லிக் காவல்துறையினரால் பேரணி இடையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  பின்னர், Human Rights Defense International அமைப்பின் செயலர் ராஜேஸ் கொக்னா அவர்கள், சிறிலங்காவின் தூதரகக்கு சென்று, தங்களது கோரிக்கை மனுவினைக் கையளித்து திரும்பியுள்ளார்.

Related posts:

வியாழன், 22 மார்ச், 2012

America resolution in human rights council

அமெரிக்கத் தீர்மானம் மனித உரிமை அவையில் வென்றது.

திரு
பதிவு செய்த நாள் : 22/03/2012

அமெரிக்கா கொண்டு வந்த   தீர்மானம்
இலங்கைக்கு எதிராக
மனித உரிமை அவையில்
வெற்றி பெற்றது:

      மொத்த நாடுகள் – 47

      ஆதரவு – 24

                   (இந்தியாவும் ஒன்று)

      எதிராக – 15
     பங்கெடுக்காதவர்கள் – 8

திங்கள், 19 மார்ச், 2012

P.M.divert the enquiry of war crimes - seeman


போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசை

 திருப்புகிறார் பிரதமர் – சீமான் அறிக்கை


ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பதில், போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்புவதாகவே உள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாகும். அதனால்தான் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்தனர். ஆனால் இன்று நாடாளுமன்ற மக்களவையில் அதற்கு பதில் அளித்து பிரதமர் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா இல்லையே என்பது தொடர்பான உறுதியான நிலை தெளிவுபடுத்தப்படவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும், கெளரவமான வாழ்க்கையும், நீதியும், சுய-மரியாதையும் உறுதிபடுத்தப்பட்ட எதிர்காலமே இந்திய அரசின் இலக்கு என்றும், அதனை உறுதிப்படுத்துவதாக அமெரிக்கத் தீர்மானம் இருக்குமானால் அதனை இந்தியா ஆதரிக்கும் சாத்தியமுள்ளது என்றுதான் பிரதமர் தனது பதிலில் கூறியுள்ளார். இது பிரச்சனையை திட்டமிட்டு திசை திருப்பும் வார்த்தைகளாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை ராஜபக்ச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. தமிழினத்தை கொன்ற ராஜபக்ச அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதுதான் தமிழர்களின் கோரிக்கை. அதற்கான வாய்ப்பு உருவாக வேண்டுமெனில், அங்கு நடந்த போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். அமெரிக்கத் தீர்மானத்தில் விசாரணை நடத்துவதற்கான கோரிக்கை உள்ளது. எனவேதான் அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றியும், இணக்கப்பாடு பற்றியும் பிரதமர் பேசுவதும், அது பற்றி அமெரிக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டால் மட்டுமே அத்தீர்மானத்தை ஆதரிப்போம் என்று கூறுவதும் ஏமாற்றுச் செயலாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்ட இந்த இனப் படுகொலையை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்து அதற்குக் காரணமாக இருந்த இலங்கை அரசையும், அதற்கு உதவிய நாடுகளையும் குற்றவாளியாக்க வேண்டும் என்பதே தமிழினத்தின் கோரிக்கையாகும். அதைப்பற்றிப் பேசாமல் தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறார் மன்மோகன் சிங். தமிழர்களின் வாழ்விலும் எதிர்காலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை தமிழர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பிரதமர் கூறிய வார்த்தைகளில் உள்ள உண்மையை புரிந்துகொள்ளாமல், அவர் அளித்த பதிலை ஒரு வெற்றியாக கொண்டாடுகிறது தி.மு.க. ஆங்கில வார்த்தைகளால் தன் குற்றத்தையும் மறைத்து, இலங்கையின் குற்றத்தையும் மறைக்கவே மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதனைப் புரிந்துகொள்ள வக்கற்ற தி.மு.க. தலைமை பிரதமர் அளித்த பதிலில் புளங்காகிதம் அடைந்து பெருமை பாராட்டிக்கொள்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும், கெளரவமும், சுய மரியாதையுடன் கூடிய எதிர்காலமும் கிடைக்க வேண்டுமென்றால் அது தனித் தமிழ் ஈழம் அமைந்தால்தான் உறுதியாகுமே தவிர, பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதுபோல், தமிழினத்தைக் கொன்று குவித்த இனவெறியாளன் ராஜபக்சவின் ஆட்சியில் நடக்காது. புள்ளி விவரங்களைக் கூறி பொருளாதார வளர்ச்சி இருப்பதாக ஏமாற்றும் பிரதமர் மன்மோகன் சிங், தமிழர் பிரச்சனையில் எதிர்காலத்தைப் பற்றிப் பேசி ஏமாற்றப் பார்க்கிறார். இதில் தமிழர்கள் எச்சரிக்கயாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

--

award to phonomania namal rajapakshe: கொலைகார இராசபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

கொலைகார இராசபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 18, 2012, 9:51 [IST] Save This Page Print This Page Comment on This Article A A A Indian magazine to award Rajapaksa son Namal
டெல்லி: தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம். இந்த விழா பற்றிய விவரங்கள் வெளியானதிலிருந்து மிகுந்த மனக்கொதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் தமிழர்கள். போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனுக்கு இந்திய அரசின் ஆதரவோடு சிறந்த சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை குரூரமான சிந்தனை என தமிழுணர்வாளர்கள் கொதிப்புக்குள்ளாகியுள்ளனர். அடுத்த வாரம் டெல்லிக்கு வரும் நமல் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

SL ‘special agents’ ransack human rights activist's apartment in Colombo


SL ‘special agents’ ransack human rights activist's apartment in Colombo

[TamilNet, Friday, 30 December 2011, 02:25 GMT]
Sri Lankan investigation officers claiming to be from the ‘Special Unit’ on Wednesday evening ransacked an apartment where a Tamil human rights activist from the East was residing in Colombo. The agents clad in civil and uniform entered the room of the human rights activist around 10:00 p.m. and took away documents and files without mentioning the intention of the action and without providing any list of what they have taken from the apartment, informed sources said. The Human Rights activist, who was formerly a progamme officer of a Belgium-based international organisation, was living in the apartment with his Sinhala room mate. The Sinhala friend was taken away by the investigating officers, detained for almost 20 hours and harrassed, informed NGO sources in Colombo told TamilNet Thursday.

The ‘Special Units’ attached to Sri Lankan Defence Ministry think that data on human rights abuses in the island is being collected through current or former personnel attached to the international organisations, a Sinhala Human Rights activist in Colombo told TamilNet.

The ‘Special Units’ of Rajapaksa administration deploy various techniques to limit the access of certain international NGOs, while the employees from the island, are harrassed by ransack actions and other forms of intimidations, the activist said, while alerting the journalists and diplomats attached to various missions in Colombo on the recent incident.

The released Sinhalese room-mate has declined to talk to media.

SLA assaults, threatens activists who protest against sand mining in Batticaloa

SLA assaults, threatens activists who protest against sand mining in Batticaloa

[TamilNet, Thursday, 29 December 2011, 10:55 GMT]
The occupying Sri Lanka Army (SLA) soldiers at Mu'rakkoddaagn-cheanai camp in Batticaloa district have summoned civil activists from Chantha'na-madu river basin to their camp, intimidating them and issuing death threats to some of the activists for having protested against illegal sand mining carried out by TMVP paramilitary operated by the SLA. The villagers, intimidated by the soldiers not to protest against the sand mining, revealed that two activists, 30-year-old Muthupillai Nadesan, the second ‘vanniyanaar’ (temple administrator) of Chiththaa'ndi Murukan temple and 28-year-old Velautham Ruban, were severely assaulted by the SLA soldiers and were issued death threats on December 18.

Mr. Nadesan and Mr. Ruban were former members of the LTTE.

Nadesan had left the LTTE earlier and Ruban was released recently from Sri Lanka Army custody.

The SLA has warned Nadesan and Ruban that since they were former LTTE members they risk meeting end of their lives if they involved in any civil protest against the sand mining of their village situated in Chantha'na-madu river bank in Ea'raavoorpattu Chengkaladi DS division of the Batticaloa district.

Nadesan and Ruban have also been threatened not to make any complaint anywhere regarding their ordeal they underwent in the SLA camp. However, they represented their grievances at the Civil Defense Committee (CDF) meeting. But the CDF had failed to take any action, the villagers say.

Despite warning by the Batticaloa District Environmental Authority and Mineral Sands Centre that sand mining along the bank of Chantha'na-madu River would affect the villages, Colombo government had given permission to a group led by EPC Chief Minister Sivanesathurai Chandrakanthan alias Pillayan to continue sand mining with the assistance of Sri Lankan military.

The river water could enter the village by 1 km in the near future if the sand mining is allowed to continue, concerned civil officials said.

Local government officials are also helpless to enforce rules and regulations as they are instructed by the paramilitary outfit not to involve into the matter of sand mining in Chantha'na-madu.

The SLA soldiers from the Mu'rakkoddaangn-cheanai camp and the Sri Lankan Police had jointly thwarted the protest held on December 04 by the villagers.

The protestors, led by Chiththaa'ndi Murukan Koayil Vanniyanaar, had demanded the paramilitary and its civic administration to cease the sand mining.

A similar protest in Kudaththanai in North last year had claimed the life of environmentalist Ketheeswaran Thevarajah on 31 December 2010, just a few days after EPDP paramilitary leader Douglas Devananda had threatened the villagers not to protest against the scooping of sand by politically sponsored contractors run by his paramilitary in Jaffna.

Ketheeswaran, a native of Kudaththanai East, had been living in Vanni and resettled in his village after the end of Vanni war. He was slain by a killer squad after he had released photographs through social media depicting the destruction of his village.

Chronology: