தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 நவம்பர், 2024

3ஆம் உலக முத்தமிழ் மாநாடு, 2025 – இலங்கை & தமிழ்நாடு

 


3ஆம் உலக முத்தமிழ் மாநாடு, 2025 – இலங்கை & தமிழ்நாடு

மின்வரி : mutamilconferencewmf2025@gmail.com








புதன், 13 டிசம்பர், 2023

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

 

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3

திலீபன் நினைவுப் பேருரை 3/3 :

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உயர்ஆணையர்கள் அறிக்கையிட்டுள்ளார்கள். அதைச் செய்ய வேண்டும். செய்வதற்கு ஆதரவு தர வேண்டும். இலங்கைக்கு ஆதரவு தரக் கூடாது, நடுநிலைவகிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களின் போராட்டத்தை முறியடிக்கக் கூடாது. இனியாவது இதைச் செய்வார்களா? இந்த அறிவிப்பு உண்மை என்றால், இதைச் செய்ய வேண்டும். செய்யுமாறு நாம் வலியுறுத்த வேண்டும். அது தமிழீழ மக்களுடைய நீதிக்கான போராட்டத்திற்குச் செய்யக் கூடிய ஓர் உதவியாக அமையும் என்று தமிழ்நாட்டிலே தமிழீழ ஆதரவு அமைப்புகள் நம்புகின்றன.

எத்தனையோ அரசியல் வேறுபாடுகளுக்கு இடையில் இந்திய அரசு தன்னை இனவழிப்புக்கு எதிராக மாற்றிக் கொள்ளுமானால், அதை வரவேற்க நாம் அணியமாக இருக்கிறோம். அந்த மாற்றத்தின் அடையாளமாகும் ஐ. நா. மனிதஉரிமைப் பேரவையில் அடுத்தடுத்து வரக் கூடிய விவாதங்களிலும், தீர்மானங்களிலும் தமிழீழ மக்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இதில் நமக்குப் பெரிய மயக்கம் ஏதும் இல்லை. நடந்தால் நன்று! நடக்கா விட்டாலும் நம்முடைய போராட்டம் தொடரும். நான் அடிக்கடி சொல்வதுண்டு. தந்தை செல்வா அவர்களும், தலைவர் பிரபாகரன் அவர்களும் இந்தியாவை நம்பியோ ஐநாவை நம்பியோ, வேறு உலக நாடுகளை நம்பியோ இந்தப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் தமிழீழ மக்களை நம்பித்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். அவர்கள் பக்கம் இருக்கின்ற வரலாற்று நியாயத்தை நம்பியே இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். இந்த வரலாற்று ஏரணம் இன்றைக்கும மறைந்து விடவில்லை.

தீலீபனின் பெயரால் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திலீபன் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வைத்தார். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று முழங்கித்தான் தன்னுடைய இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார். இன்றைக்கும் அந்த மக்கள் புரட்சியிலே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நீங்களும் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வையுங்கள்! தாயகத்திலே, தமிழீழ மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும். அதற்கு ஆதரவாக நாமும் போராட வேண்டும். இன்று இதுதான் இன்றியமையாத் தேவை.

ஒன்றுக்கும் உதவாத வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட பதின்மூன்றாம் திருத்தம் என்ற பம்மாத்து வேலையை இந்திய அரசும சிங்களஅரசும் செய்கின்றன. இதற்கு ஒருபோதும் தமிழீழ மக்கள் மயங்கி விடக் கூடாது.

அன்றைக்கு 1987-88இல் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றை இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? இந்திய அரசுக்கு நேர்மை இருக்குமானால், அஃது இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்னாயிற்று? என்று கேள்வி எழுப்ப வேண்டும். அதுதான் பன்னாட்டு உடன்படிக்கை. நமக்கு அதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அதன் வழியாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மாட்டார்கள். இந்திய இலங்கைஒப்பந்தத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள். தமிழீழத் தாயத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். பதின்மூன்று, பதின்மூன்று என்று கிளிப்பிள்ளை போலப் பேசிக் கொண்டேஇருப்பார்கள்.

தமிழீழ மக்கள் இந்த நாசகாரத் திட்டத்தை முறியடிக்க வேண்டும். பதின்மூன்றாம் திருத்தம் என்ற ஒரு திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில் இது ஒரு கேலிக்கூத்து என்று என்று இராசீவு காந்திக்குக் கடிதம் எழுதிய மூன்றுபேரில் ஒருவர்தான் ஐயா சம்பந்தன் அவர்கள். சிவசிதம்பரமும், அமிர்தலிங்கமும் மற்ற இருவர். இராசீவு காந்தி இல்லாமல் போய் விட்டார். ஆனால் அந்தக் கடிதம் இருக்கிறது. கேலிக் கூத்து மாறி விட்டதா? அப்படி நிலைமையில் என்ன மாற்றம் வந்து விட்டது? இந்தியா சொல்வதை நாம் ஏன் கேட்டு நடக்க வேண்டும்?

எனவே நாம் நம்முடைய மக்களை நம்பி நம்முடைய நிலத்தில் போராட வேண்டும். அதற்காகத் தமிழகத்திலே போராட வேண்டும். உலகெங்கும் போராட வேண்டும். நம்முடைய கோரிக்கைகளில் மாற்றம் இல்லை. ஏனென்றால் தமிழர்கள் இன்றைக்கு நாதியற்றவர்கள் ஆகி விட்டார்கள், வலிமை இழந்து விட்டார்கள் என்ற கருத்து தாயகத்திலும் வெளியிலும் நிலவுகிறது. நமக்கென்று என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒரு வகையில் நியாயமாகத் தோன்றக் கூடிய கேள்விதான்.

விடுதலைப் போராட்டத்தினுடைய தலைமைப் படை நசுக்கப்பட்டு விட்டது. கட்டளைத் தலைமை அழிக்கப்பட்டு விட்டது. நாம் நம் படைகளை இழந்தோம். படை வீரர்களை இழந்தோம். போராடி மீட்ட நிலத்தை இழந்தோம். இறைமை இழந்தோம். ஆனால் இத்தனையும் இழந்தாலும் நாம் புதிதாக ஒரு வலிமையை ஈட்டி இருக்கிறோம். அதுதான் நம்முடைய அற வலிமை. Moral Strength. இந்த அறவலிமை முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் ஈகத்தினால், இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஈகத்தினால் நமக்குக் கிடைத்திருப்பதாகும்.

இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட போதும் தங்களுக்கு ஒரு நாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு, அவர்களுக்கு இந்த அறவலிமை உதவியது. இந்த நாடு எங்கே பெறப்பட்டது என்பது வேறு செய்தி. ஆனால் இங்கே தமிழீழ மக்கள் தம்முடைய மரபுவழித் தாயகத்தில் தங்கள் இறைமையை மீட்டுக் கொள்வதற்கு இந்த அறவலிமை அவர்களுக்குத் துணைநிற்கும். யுகொசுலாவியாவில் செருபியாவுக்கு அடங்கிக் கிடந்த பல்வேறு தேசங்கள் – கொசோவோ வரைக்கும் – இந்த அற வலிமையைக் கொண்டுதான் தங்கள் இறைமையை மீட்டுக் கொண்டன. கிழக்குத் தைமோரில் இதுதான் நடந்தது. பாலத்தீனத்தில், குருதிசு மண்ணில் இந்த அற வலிமைதான் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

நாமும் அற வலிமையோடு இருக்கிறோம். இந்த அற வலிமையை அரசியல் வலிமையாக மாற்றுவதன் மூலமாக நம்முடைய கோரிக்கைகளில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையோடு நம் போராட்டத்தைத் தொடர்வோம். திலீபன் நினைவைச் சொல்லுகிற போது. இதைத்தான் ஒரு செய்தியாக நான் கொடுக்க நினைக்கிறேன்.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான சதுரங்கப் பலகையாக இலங்கை மாற்றப்படுவது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், இதற்கான தீர்வு இந்தியாவிற்கு எதிராகச் சீனத்தையோ சீனத்திற்கு எதிராக இந்தியத்தையோ ஆதரிப்பது அல்ல. இரண்டு வல்லரசுகளுக்கு இடையே நடைபெறுகின்ற அரசியல் சூதாட்டத்திற்கு நடுவில் நாம் நீதியின் பக்கம், நம் மக்களின் தேவையின் பக்கம் நின்று நம்முடைய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம். நம்மைப் பொறுத்த வரைக்கும் எதிர்கால இந்தியா மட்டும் இல்லை, இன்றைக்கு இருக்கிற இந்தியாவே எதைப் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறதோ, அந்தப் பாதுகாப்புக்கு ஈழத்தினால் ஒருபோதும் எந்தத் ஊறும் ஏற்பட்டது இல்லை. எதிர்காலத்தில் ஏற்படப் போவதுமில்லை. ஆனால் ஈழத்தின் பாதுகாப்புக்குத்தான் இந்தியா மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்கவில்லை.

எனவே எச்சரிக்கையோடு நாம் விழிப்போடு இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்மால் இந்தியாவிற்கு ஆபத்து என்ற ஒரு பொய்ப் பரப்புரையைச் செய்வார்களானால், வரலாறு அதை மறுத்து நிற்கிறது. இன்றைய உண்மைகள் அதை மறுத்து நிற்கின்றன. இந்தியப் படைகளால் தமிழ்மண்ணில் கொலையுண்ட தமிழ்மக்கள் என்ற ஒரு ஒரு கணக்கு உண்டு. தமிழ்ப் படைகளால் இந்திய மக்கள் யாரும் எங்கும் கொல்லப்படவில்லை.

தமிழ் மக்கள் என்றென்றைக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்கள் மண்ணில் போராடி இருக்கிறார்கள். இந்தியப் படை செய்தது போல் வேறு மண்ணிலே போய் ஆக்கிரமித்தது இல்லை. எனவே நமக்கு நாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க வேண்டா. நம் நியாயமான கோரிக்கைகளை எதிர்த்து நம் தமிழ் மக்களையே திரட்டுகின்ற முயற்சிகளை மறுதலிக்க வேண்டும். நாம் எச்சரிக்கையோடு நம்முடைய கோரிக்கைகளை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தால் மகிழ்ந்து வரவேற்போம். ஆனால் இதன் பொருள் இந்தியா அரசியல் சதுரங்கத்தில் நம்மைப் பகடைகளாக உருட்ட முடியும் என்பது இல்லை. நாம் அதை அனுமதியோம்.

திலீபன் நமக்கு ஒரு வரலாற்று உண்மையை உணர்த்துவதற்காகப் பன்னிரண்டு நாள் பட்டினிப் போர் புரிந்தார். அவர் உணவுண்ணாமல் பட்டினியை உண்டார். அவர் பசி இன்னும் தீரவில்லை. ஈகத்தின் மறுபெயராக விளங்கினார். உலகம் உள்ள வரை தமிழ் கூறும் மக்கள் உள்ள வரை தீலீபனின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். தீலீபனின் பெயரால் நாம் அவரது அந்த உரையை நினைவுபடுத்திக் கொள்வோம்.

“ஒரு காலத்திலே இந்தக் கோட்டையிலே ஒல்லாந்தர் கொடி பறந்தது, பிறகு பிரித்தானியர் கொடி பறந்தது. இன்று சிங்களர் கொடி பறக்கிறது. தமிழீழக் கொடி பறக்கும் நாளே உண்மையான விடுதலை நாள்.”

திலீபனின் ஈகத்திலிருந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கூட ஊக்கமும் உரமும் பெற்றிருக்கிறோம்.

தமிழ் மண்ணில் புதையுண்ட வீர விதைகளுக்கு… அறிவை நீராக்கி, உணர்வை உரமாக்கி, அமைப்பை வயலாக்கித் தமிழ்த் தேசங்களில் புதிய விளைச்சல் காண்போம். நன்றி! வணக்கம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324

திங்கள், 11 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி)

திலீபன் நினைவுப் பேருரை:


தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு


கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன்.

என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் எண்ணித், தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவுப் போராட்டத்தில் தீக்குளித்து மாண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் தொடங்கி இந்தப் போராட்டத்தில் ஈகம் செய்து கொண்ட அத்தனைப் பேரையும் எண்ணி, இன்றைக்கு இருக்கின்ற உலகச் சூழலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டம், நீதிக்கான போராட்டம், இதற்கும் இந்தியப் பாதுகாப்புக்குமான தொடர்பு, இவற்றில் தமிழகம், தமிழக அரசு வகிக்க வேண்டிய பங்கு ஆகியவைபற்றிச் சுருக்கமாக என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக, திலீபனின் உயிரீகம் எந்த வகையில் மகத்தானது? தமிழீழ மக்கள் தங்களுக்கு நண்பன் என்று கருதி வரவேற்க அணியமாக இருந்த இந்தியப் படைகள், உண்மையில் அவர்கள் செய்த கொடுமைகளால் தமிழீழ மக்களுக்குப் பகை என்று தெரிந்த போது அந்தப் பகையைத் தோலுரித்துக் காட்டுவதற்கு தீலீபனின் ஈகம் பயன்பட்டது. இந்தப் போரில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இன்றைக்கு அவருடைய பெயரால் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், தமிழகத்தினுடைய வகிபாகம் குறித்தும் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம். திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்துதான் நாங்கள் தமிழ்நாட்டிலே திலீபன் மன்றம் தொடங்கி ஈழத்தமிழர் துயர் துடைப்பதற்காக இயக்கம் நடத்தினோம்.

இன்றைக்கு இருக்கின்ற சூழல் என்பது விடுதலைப் போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டமாக உருக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனவழிப்பினால் தமிழீழத்திற்கான தேவையோ, தமிழகத்திற்கான போராட்டத்திற்குரிய தேவையோ மறைந்து விடவில்லை. அவை பன்மடங்கு பெருகித்தான் உள்ளன என்று 2010ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் – முன்னும் பின்னும் என்ற ஒரு குறுநூலில் நான் எழுதினேன். இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் இந்தியாவுடன் நமக்கு இருக்கின்ற உறவு குறித்தும தமிழீழ மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

எனக்கு நீங்கள் அளித்திருக்கின்ற தலைப்பில், இந்தியாவின் – அதுவும் எதிர்கால இந்தியாவின் – பாதுகாப்பு என்று குறிக்கபப்ட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தியா என்றுதான் இதைச் சொல்கிறேன். இதில் நமக்கு ஒருதெளிவு இருக்க வேண்டும். இலங்கை அல்லது சிறிலங்கா என்று சொல்வது ஈழத் தமிழர்கள், சிங்களவர்கள் என்று இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு தீவுநாடு என்று நாம் வரையறுத்துப் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த இரண்டு தேசங்களின் சுயநிர்ணய உரிமை எனப்படும் தன்தீர்வுரிமை, அவற்றிற்கிடையிலான நிகர்மை, தமிழீழத் தேசத்தினுடைய இறைமை ஆகியவற்றை எல்லாம் தந்தை செல்வா அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் பட்டுக்கோட்டை தீர்மானம் இயற்றுவதற்குக் காரணமாக இருந்தார்கள்,

தமிழீழப் போராட்டத்திற்கான வரலாற்று நியாயத்தை அந்தப் பார்வை வழங்கியது. இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இடம் குறித்து அறிந்திருக்கிற நாம் இந்தியாவில் தமிழ்நாட்டிற்குரிய இடம் குறித்து அறிந்திருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்று சொல்கிறோமே, அது ஒரு தேசமா? என்ன மொழி பேசுகிற தேசம்? என்ன பண்பாடு கொண்ட தேசம்? என்ன வரலாறு கொண்ட தேசம்? என்ற கேள்விகளை எல்லாம் இந்தியாவிலே இன்றைக்கு எல்லாத் தரப்பினரும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்றொரு தேசம் உண்டா?

இந்தியா என்கிற பாரதம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதில் இந்தியா என்ற பெயரையே நீக்கி பாரதம் என்று மட்டும் மாற்றி விடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஆளுகிற தரப்பு எழுப்பிக் கொண்டிருக்க, அதற்குக் கடும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியா என்ற பெயரில் ஒரு எதிர்கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, அதற்காகத்தான் இந்த பாரதச் சிக்கல் எழுப்பப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. சம்பு தீபம், ஆரிய வருத்தம், பாரத வருசம் என்பதெல்லாம் புராணக் கதைகளில் வரும் பெயர்கள். ஒரு மொழியின் பெயரோ ஒரு நிலப்பரப்பின் பெயரோ அல்ல. அப்படிப்பட்ட ஒரு பெயரை ஏற்றுக் கொள்வது வரலாற்றைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் என்று நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

சரி, அப்படியானால் இந்தியா என்பது என்ன? இந்தியா என்ற பெயர் எல்லாருக்கும் ஒரு நடுநிலையான பெயராகக் கருதப்பட்டாலும் அதற்குரிய பொருள் வரலாற்றில் புவியியல் பாடத்தில் என்ன? இந்தியா என்பது துணைக் கண்டம் என்று படிக்கிறோம். துணைக்கண்டம் என்றால் விரிந்த நிலப்பரப்பு என்பதைக் குறிக்கும். அதற்குமேல் வேறு பொருள் இல்லை. உண்மையில் அது என்னவென்றால் பிரித்தானியர் தம்முடைய சுரண்டலின் தேவைக்காகவும், குடியேற்ற(காலனிய) ஆட்சியின் தேவைக்காகவும் தனித்தனியாக இருந்த பல்வேறு தேசங்களையும் அரசுகளையும் ஒன்று படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். அந்தக் கட்டமைப்புதான் இந்தியா எனப்படுகிறது. இந்தியா என்கிற இந்த அரசுக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது இந்தியக் கட்டமைப்புக்குள் ஒடுக்குண்டு கிடக்கின்ற பல்வேறு தேசியஇனங்கள், பல்வேறு பழங்குடிகள் காப்பாற்றப்பட வேண்டுமா? இவற்றில் எது இந்தியப் பாதுகாப்பு என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதிலும் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பு என்று சொல்லும் போது இந்தியா என்கிற இந்தக் கட்டமைப்பு இப்படியே நீடிக்கப் போகிறது, இதனுடைய எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தில் அடங்கி இருக்கிற பல்வேறு தேசிய இனங்களுக்கும், பழங்குடிகளுக்கும் எதிர்காலம் இல்லை என்பதைக் குறிப்பதாகும். இந்தப் பொருளில் இந்தியப் பாதுகாப்பு என்பது தமிழீழத்தின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு எதிர்காலம் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் இன்றைய கட்டமைப்புக்கு எதிர்காலம் இருக்குமானால், இது பற்பல தேசங்களுக்கும் கட்டமைப்பியல் இனவழிப்பை ஏற்படுத்துவதாகும். இந்தக் கட்டமைப்பியல் தேசிய ஒடுக்குமுறை என்பது தமிழகத்தின் வருங்காலத்திற்குத் தீங்கு செய்யும். இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கைக்கும் ஊறு செய்யும்.

அண்மையில் நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இனவழிப்பு என்ற சொல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் பல கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு குசராத்தில் இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். பிபிசி வெளியிட்ட மோதி வினா ஆவணப் படம் இதைத்தான் சித்திரிக்கிறது.

அடுத்து, மிக அண்மையில் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளை நீங்கள் கவனித்து வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். நடுநிலையாளர்கள் கூட, சமூகவியலர்கள் கூட சுட்டிக்காட்டுகின்றார்கள். மணிப்பூரில் நடப்பது இனக்கொலைதான் என்று. குக்கி இன மக்கள் இனக்கொலை செய்யப்படுகிறார்கள். யாரால் இனக்கொலை செய்வது யார்? இந்துத்துவ இந்திய அரசும், அதற்கடங்கிய மணிப்பூர் மாநில அரசும சேர்ந்து இந்த இனவழிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன. இப்படி நிறைய உதாரணங்களை நாம் எடுத்துக்காட்டலாம். இசுலாமியர் இனவழிப்பு, மணிப்பூரில் குக்கிகள் இனவழிப்பு, நாகர் இனவழிப்பு, தண்டகாரண்யப் பகுதியில் பல்வேறு பழங்குடிகள் இனவழிப்பு என்று இந்தியா பரவலாகப் பல இனவழிப்புகளின் களமாகிக் கொண்டிருக்கிறது. காசுமீரம், பசுதார், சட்டிசுகார் என்று பல்வேறு பகுதிகளிலும் இந்தியப் படை மண்ணின் மக்கள் மீது நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

ஆகவே நாம் இந்தியா என்பதை இந்திய மக்கள் என்று கூட சொல்ல இயலாது. ஏனென்றால் இந்தியா என்பது ஒரே மக்களைக் கொண்ட தேசமன்று. அது பல்வேறு மக்களினங்களைக் கொண்ட நாடு. இலங்கை எப்படி இரண்டு மக்கள் சமூகங்களைக் கொண்டதோ. அதுபோல் இந்தியா என்பது குறைந்தது இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சமூகங்களைக் கொண்டது. இந்தியாவின் மக்கள் (Peoples of India) உண்டே தவிர இந்திய மக்கள்(Indian people) கிடையாது. இந்தியத் தேசம் என்பது சமூக அறிவியலுக்கு மாறானது. இந்தியா ஒரு சிறைக் கூடம், தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று எமதியக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு என்பது சிறைச் சட்டம். இது தேசிய ஒடுக்குமுறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்குமான ஆவணம்.

இது குடியேற்ற(காலனிய)க் காலத்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடர்ச்சி. இதை நான் இங்கு ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நீங்கள் இந்தியப் பாதுகாப்பு என்று மேலெழுந்த வாரியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாக்கித்தானிடம் இருந்து பாதுகாப்பு, சீனாவிடமிருந்து பாதுகாப்பு, எல்லையிலே பாதுகாப்பு என்று புரிந்துகொண்டிருப்பீர்களானால் அது ஆழமான புரிதல் ஆகாது. ஏதோ ஒருகுறுகிய நிலப்பரப்பைப் பாதுகாப்பது அவ்வளவுதான் நாட்டுப் பாதுகாப்பா? சில காணிகள் எதற்கும் உதவாத நிலங்கள், பனி மலைகள். இதற்காக நடக்கிற சண்டையைத்தான் நாடு காக்கும் போர் என்று வண்ணித்து தேச பக்த வெறி ஊட்டுகின்றார்த்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324

புதன், 7 ஆகஸ்ட், 2019

காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்! -இலக்குவனார் திருவள்ளுவன்


காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்!

பெரிய மாநிலங்களைப் பிரித்து மாநிலங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டிருந்தது மத்திய அரசு. இப்பொழுது மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துள்ளது. அதே நேரம், ஒன்றியப் பகுதிப் பட்டியலில் இரண்டைச் சேர்த்துள்ளது. 
மாநிலங்களைப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் அது பிரிக்கப்படும் மாநிலங்களின் கருத்திற்கேற்ப அமைய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கேற்ப இருக்க வேண்டும். இப்பொழுது (ஆடி 20, 2050 / 05.08.2019) காசுமீர், இலடாக்கு என ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது அவ்வாறல்ல. காசுமீர்ப் பிரிப்பு ஆணையில் சம்மு காசுமீர் அரசின் உடனிசைவுடன் (with the concurrence of the Government of State of Jammu and Kashmir) அறிவிக்கப்படுவதாக உள்ளது. பொய்யை முதலீட்டாகக் கொண்ட பா.ச.க.  ஆணையிலும் பொய்யைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.
இந்திய அரசியல் யாப்பு விதி 3இன் கீழ் மாநிலப் பிரிவின் அதிகாரம் இந்தியப் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. இருக்கின்ற மாநிலத்தைப் பிரித்துப் புதிய மாநிலம் அமைத்தல், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்துப் பெரிய மாநிலமாக உருவாக்கல், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளை இணைத்துப் புதிய மாநிலமாக ஆக்குதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அதிகாரம் இருந்தாலும் அதை முறைப்படி செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாத பொழுது அரசை நடத்தும் ஆளுநருக்கும் தெரியாமல் பிரிவினைச் சட்டம் இயற்றியது தவறு என்றே அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து எதிர்த்த ஆந்திர அரசு ஆந்திரப் பிரிவினைக்காள சட்ட வரைவையும் சட்டமன்றத்தில் எதிர்த்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசு தெலுங்கானாவைப் பிரித்தது. எனினும் ஆணையில்  நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரின் ஒப்புகையைப் பெற்று (received the assent of the President) ஆணை பிறப்பிப்பதாகக் குறிப்பிட்டதே   தவிர, ஆந்திர அரசின் ஒப்புதலைப் பெற்றதாகத் தவறான தகவலைத் தரவில்லை.
பாசகவின் நோக்கம் எப்படி இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லமை மிக்கது. காசுமீர்ப் பிரிவினையைக் கமுக்கமாக வைத்திருந்தது பாராட்டிற்குரியது. ஆனால், சட்டப்படித் தெரியவேண்டிய தொடர்புடையவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இருப்பதாகக் காட்டி ஆணை பிறப்பித்தது தவறு. அரசின் ஒப்புதல் என்றால் இன்றைய சூழலில் ஆளுநர் ஒப்புதல் என்றாகிறது. ஆனால், அவரோ அவருக்குத் தெரியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார்.
காசுமீர் மாநிலத்தில் படையணிகள் குவிக்கப்பட்டதும் பாக்கித்தானுடன் போர் என்றோ பாக்கித்தான், சீனாவின் பிடியில் உள்ள காசுமீரை மீட்பதற்கான போர் என்றோ மக்கள் எண்ணவில்லை. கமுக்கமான செய்தியாக இருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு காசுமீர், சம்மு, இலடாக்கு என மூன்றாகப் பிரிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வந்தன.
காசுமீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் இந்திய அரசியல் யாப்புப்பிரிவு 370 ஐ நீக்கப் போவதாகவும் காசுமீரைப் பிரிக்கப்போவதாகவும் எதிர்க்கட்சி பரப்புவது தவறு என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல காசுமீர்ப் பிரிவினைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள முறை தவறு என்பதை அக்கட்சியின் ஊதுகுழலாகவும் தான்தான் தமிழ்நாட்டில அக்கட்சியின் எல்லாமும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் எழுதியதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.  
“‘காசுமீரில் என்ன நடக்கிறது?’: ….. இந்தக் கடுமையான நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போன எதிர்க்கட்சிகள், காசுமீருக்கு விசேட அந்தத்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 370, பாகித்தானிலிருந்து காசுமீருக்கு வந்த 1.5 இலட்சம் இந்து அகதிகளுக்குக் குடியுரிமை கிடையாது என்று கூறும் 35- ஆகிய இரண்டையும் இரத்து செய்யவும், காசுமீரை மூன்றாகப் பிரிக்கவும் சதி நடக்கிறது என்று கிளப்பிய பெரும் புரளியை காசுமீர் ஆளுநர் மறுத்திருக்கிறார்.
அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசு ஆணை மூலமாக 1954 இல் பிரிவு 35- அரசியல் சாசனத்தில் முறையற்று நுழைக்கப்பட்டது. அதை நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. காசுமீரை மூன்றாகப் பிரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. எனவே, அரசியல் கட்சிகள் அந்தப் பிரச்சினைகளை எழுப்புவது முறையல்ல. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசியலைக் கலக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். காசுமீர்  போன்ற சிக்கலான பிரச்சினைகளில், அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடனும், பொறுமையுடனும் இருப்பது நாட்டுக்கு நல்லது.” (துக்ளக்கு நாள் 4.8.2019).
சட்டப்படி நிறைவேற்ற இயலாது என்றால் நிறைவேற்றியது சட்ட மீறல்தானே! எதிர்க்கட்சிகள் கூறியபடி மூன்றாகப் பிரிக்கவில்லை என்றாலும் இரண்டாகப் பிரித்துள்ளதுதானே! அதுவும் ஒன்றியப் பகுதிகள் மாநிலத் தகுதியைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது காசுமீரீன் மாநிலத் தகுதியைப் பறித்தது ஏன்?
மாறாக மத்திய அரசு, சட்டமன்றத்தேர்தலில் காசுமீர்ப் பிரிவினையைத் தேர்தல் முழக்கமாகக் கொண்டு மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப முடிவெடுத்திருக்கலாம்.
நாடெங்கும் தாமரை மலரப் பிற மாநிலங்களையும் பிரிக்கட்டும்!தென்தமிழகம் எனத் தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினால் அதிமுக சிக்கலும் தீரும். அல்லது இதுவும் பெரிய பகுதி, தாமரை மலராது என எண்ணினால், பாண்டியநாடு, சோழநாடு, கொங்கு நாடு, பல்லவ நாடு எனத் தமிழ்நாட்டைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பா.ச.க.விற்கு இடம் கொடுக்காத கேரளாவையும், திருவனந்தபுரம் முதலான தமிழ் மக்கள் மிகுதியாக உள்ள பகுதிகளை இணைத்துச் சேர நாடு அமைக்கலாம். கருநாடகாவிலும் மைசூர், பெங்களூரு, கோலார் முதலான தமிழ்பேசுவோர் பெரும்பான்மையர் இருந்த பகுதிகளை இணைத்து வடதமிழ்நாடு என ஒன்றியப் பகுதியை உருவாக்கலாம்.
அல்லது வட கருநாடகம், துளு நாடு ஆகியவற்றுக்கான மக்களின் கோரிக்கைகளை ஏற்று அவற்றை உருவாக்கலாம். அசாமில் இருந்து கமதாபூர், திரிபுராவில் இருந்து திப்பரலாந்து, மேற்கு வங்கம் தார்சிலிங்கு பகுதியில் கூர்க்காலாந்து, மணிப்பூரில் இருந்து குகிலாந்து, வடக்கு வங்கத்தைப் பிரித்துக் காமத்பூர், மகாராட்டிராவைப் பிரித்து விதர்பா, குசராத்தைப் பிரித்து செளராட்டிரா  என்று தனி மாநிலக் கோரிக்கைகளை ஏற்று அவற்றை ஒன்றியப் பகுதிகளாக அமைக்கலாம். இவ்வாறு 50 புது மாநிலங்கள் உருவாவதுடன் அரசே பெரிதாக இருக்கும் தன் கட்சிச் செல்வாக்கு இல்லா மாநிலப் பகுதிகளைப் பிரித்து 100 ஒன்றியங்களை உருவாக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்னும் பா.ச.க.வின் இலக்கு எளிதில் நிறைவேறும்.
மாநிலப்பகுதிகளின் வளர்ச்சிகளைக் காரணங்காட்டித் தங்கள் வளர்ச்சிக்காகவும் பா.ச.க. இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் வியப்பதற்கில்லைதானே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

வெள்ளி, 18 அக்டோபர், 2013

பொதுநல மாநாட்டில் தலைமையர் பங்கேற்பது ஐயம்.

பொதுநல மாநாட்டில் தலைமையர் பங்கேற்பது ஐயம்.

Comment (1)   ·   print   ·   T+  
பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் எதிர்ப்பின் எதிரொலியாக, மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
இதனிடையே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ் மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமருக்கு இன்று (வியாழக்கிழமை) எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், மாணவர்களும் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை சாத்தியம் உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் இந்து, 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

திருப்பதி, காளஅத்தியை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பதி, காளஹஸ்தியை
தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம்


திருப்பதி, காளஅத்தியை தமிழ்நாட்டுடன் 
இணைக்க க்  கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக. 11-

திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், சத்தியவேடு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி தமிழர் நில மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது. தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார்.

துணை பொதுச் செயலாளர் எழிலன், தியாகு, தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜோசுவா, வில்லிவாக்கம் தேவராஜ், இளைஞரணி அப்துல் மற்றும்  அருகோ, பாவேந்தன், கண்ணன், அருணபாரதி, தெய்வமணி உள்பட பல்வேறு தமிழ் அமைப்பை சார்ந்த பிரமுகர்கள் ஆர்ப்பாட்டதில் பங்கேற்றனர்.

இதில் பொதுச் செயலாளர் வேலுமணி பேசியதாவது:-

ஆந்திராவில் தெலுங்கானா புதிய மாநிலம் அமையும் நேரத்தில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர், நெல்லூர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க அங்குள்ள மக்கள் விரும்புவதால் மத்திய அரசு இந்த பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இந்தியாவில் மொழி வாரியாக மாநிலம் பிரியும் போது இந்த பகுதிகள் விருப்பம் இன்றி ஆந்திரா-கேரளாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இங்குள்ளவர்களில் அதிகம் பேர் தமிழ்மொழி பேசும், தமிழ் கலாச்சாரத்தை கொண்டவர்களாக உள்ளனர். எனவே மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் போது, ஆந்திரா, கேரளாவில் தமிழ்பேசும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 15 ஜூலை, 2013

சித்த மருத்துவம் படிக்க வந்த சீனத்' துறவிகள்

சித்த மருத்துவம் படிக்க வந்த 'சாவோலின்' துறவிகள்

சீனாவின் ஃகனான் மாநிலத்தில் உள்ள சுங்சான் ஊரில், ஷாவோஷீ மலையடிவாரத்தில் உள்ளது 'ஷாவோலின்' ஆலயம். கி.பி., 467ம் ஆண்டு, 'பாத்வோ' அல்லது புத்தபத்ரா என்பவர் அந்த ஆலயத்தைஉருவாக்கினார் என, வரலாறு கூறுகிறது.அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இந்த ஆலயத்து பவுத்த துறவிகளால் உருவாக்கப்பட்டது தான், 'குங் பூ' என்ற தற்காப்பு கலை. அதை சீனர்கள், நோயாளி களின் மனதை படித்து அதற்கேற்ற வகையில் அளிக்கப்படும் மருத்துவம் என்கின்றனர்.

இரண்டு துறவிகள்:

'ஷாவோலின்' ஆலயத்தில் இருந்து, கடந்த, 1500 ஆண்டுகளில் தமிழகத்திற்கு இதுவரை ஒரு பவுத்ததுறவி கூட, வந்ததில்லை என,கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த ஆலயத்தை சேர்ந்த பவுத்த துறவிகள், ஷீயான்லை, ஷீயான்பேர் இரண்டு பேர் சென்னைவந்துள்ளனர்.சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனம் நடத்தும் பழங்கால மருத்துவம் தொடர்பாக ஒலைச்சுவடிகள் குறித்த பயிலரங்கத்தில் கலந்து கொள்வது, காஞ்சிபுரத்தில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ள போதிதர்மர் நினைவகத்தை பார்வையிடுவது தான் அவர்கள் வருகையின் நோக்கம்.

மன கட்டுப்பாட்டு பயிற்சி:

'ஷாவோலின்' ஆலயம் குறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள், சீனாவின் மரபு வழி மருத்துவமான டி.சி.எம்., படித்துள்ளோம். போயை எனப்படும் அந்த புத்த மருத்துவ படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அது முடித்த பிறகு 'ஷாவோலின்' ஆலயத்தில் பயற்சி பெற விரும்பினோம். அங்கு சேர விரும்புவோர் 19 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம். அந்த ஆலயத்தில் சேர, அங்கு மனக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும். அதில், வெற்றி பெறுவோர் மட்டுமே பயிற்சி பெற அனுமதிப்பர்.'ஷாவோலின்' ஆலயத்தில் மருத்துவம், தற்காப்பு, தியானம் ஆகியவையே பிரதானமாக பவுத்த துறவிகளுக்கு கற்று கொடுக்கப்படுகிறது. ஜென் புத்த மத போதனைகளும் உபதேசிக்கப்படுகிறது. அங்கு, 300க்கும் மேற்பட்ட துறவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெண் துறவிகளும் உள்ளனர்.ஆலயத்தின் உள்ளேயே பிரமாண்ட பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகளுக்குஇலவச மருத்துவம் அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில் மருத்துவத்துடன் மருந்துகள் தயாரிப்பதும் கற்று தரப்படுகிறது. 'குங் பூ' தற்காப்பு கலை, மூன்று வயது முதல் கற்று தரப்படுகிறது.

தமிழக மருத்துவம்:

அந்த கலையின் அடிப்படையை கற்று கொள்ள ஆறு ஆண்டுகள் ஆகும். முழுமையாக கற்று கொள்ள 10 ஆண்டுகள் ஆகும்.பயிற்சி முடித்தோர் விருப்பப்பட்டால், அங்கேயே இருந்து பணிவிடைகள் செய்யலாம். இல்லாவிட்டால் வெளியேறி குடும்பத்துடன் இணையவும் அனுமதி உண்டு. ஆனால், பயிற்சிக்காகவோ, துறவியாவதற்காகவோ உள்ளே நுழைந்து விட்டால், குடும்பத்தை துறக்க வேண்டும். 'ஷாவோலின்' ஆலயத்தை உருவாக்கியதே ஒரு இந்தியர் தான். 76 நாடுகளில், ஆலயத்தின்கிளைகள் செயல்படுகின்றன.ஆலயத்தின் மருத்துவமே, சீன மற்றும் தமிழகத்தினை அடிப்படையாககொண்டது என்பதால், இங்கு நடக்கும் பழங்காலத்து ஓலைச்சுவடி மருத்துவம் மூலம் மேலும் பல்வேறு விஷயங்களை கற்று கொள்ளவும், 'பாத்வோ'வின் சொந்த ஊரான காஞ்?சிபுரத்தையும், அவருக்கு நினைவகம் கட்டும் இடத்தையும் பார்வையிடும் ஆவலில் வந்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போயை எனப்படும் அந்த புத்த மருத்துவ படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அது முடித்த பிறகு 'ஷாவோலின்' ஆலயத்தில் பயற்சி பெற விரும்பினோம். அங்கு சேர விரும்புவோர் 19 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம்

செவ்வாய், 9 ஜூலை, 2013

சொந்த நாட்டிலேயே தமிழ் தெரியா அவல நிலை !


 சொந்த நாட்டிலேயே  தமிழ் தெரியா
 அவல நிலை !

ஒருவர்  காசுமீர் சென்றாராம் ;  சுற்றுலா சென்றவர்கள், அங்குள்ள அனைவரிடமும் இந்தியில் பேச முடியாமல் ஊமையைப் போல சைகையிலேயே பேசித் திரும்பினார்களாம் ; சொந்த நாட்டிலேயே பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெரியாத நிலைமையாம்!  பிதற்றி இருந்தார். விரிவாக மறுப்பு தெரிவிக்க பின்னூட்டத்தில் வாய்ப்பில்னமையால், பின்வரும் கருத்தினைப் பதிந்துள்ளேன்: -

சுற்றுலா என்பது திடீரென்று போவது அல்ல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்ல திட்டமிடும் பொழுதே பார்க்க வேண்டிய இடங்களை அறிந்து கொண்டு அப்பகுதி மொழியில் சில அடிப்படை உரையாடல்களை அறிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.  அண்மையில் உருசியா சென்று வந்த  நடிகை ஒருவர், உருசிய மொழி  மட்டுமே  அங்கு பேசப்பட்டதால் ஆங்கிலத்தினால் பயனின்மையைத் தெரிவித்தார். அதுபோல் செருமனி, பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ் பயன்  தரும் அளவிற்கு ஆங்கிலத்தால் பயனில்லை. சப்பான் போன்ற பிற நாடுகளிலும் இந்நிலைதான். இந்தியாவில் வட மேற்கு மாநிலங்களுக்குச் சென்றால் இது போன்ற  மொழிச்சிக்கல்தான். தமிழ் நாட்டில் அயல் மொழியினர் தமிழே  தெரியாமல் வாழும்  பொழுது சுற்றுலா செல்வதற்காக இந்தி படிக்க வேண்டும் என்பது அறியாமை. தனிப்பட்ட தேவை அடிப்படையில் இந்தி முதலான எந்த மொழியையும் படிக்கலாம். ஆனால், ஒரே மொழி, ஒரே நாடு என்ற சதி வலை அடிப்படையில்  இந்தித் திணிப்பை எதிர்த்து வருவதே சரியானதாகும். 
 (செயற்கையால் வந்த) சொந்த நாட்டிலேயே  (30 %   மக்கள் பேசும்) இந்தி தெரியாதது குறித்து வருந்துவதாகக் கூறுபவர்,  இயற்கையாய் அமைந்த சொந்த நாட்டிலேயே  தமிழ் தெரியா அவல நிலை குறித்து வருந்தினால் நன்று.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஞாயிறு, 30 ஜூன், 2013

தமிழ்நாடு என்பது தமிழர் நாடா அல்லது அயலவர் நாடா - இலக்குவனார் திருவள்ளுவன் வினா : தமிழக அரசியல்



குமரியில் திருப்பதியின் கிளை!


கிளம்பும் எதிர்ப்பு
ஆரா & இக்னேசியசு
[நன்றி : தமிழக அரசியல் : நாள்: 03.07.2013 ;பக்கம் : 10-11]

[இதன் ஒரு பகுதி :]

இந்த சர்ச்சை பற்றித் தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவர் திருவள்ளுன் இலக்குவனார் வேறு கோணத்தில் கருத்து தெரிவிக்கின்றார்.

"எந்தக் கோயிலுக்கும் சென்று எக்கடவுளையும் வழிபடும் உரிமை  எவருக்கும் உண்டு.  அவரவர்கள் வாய்ப்பையும் வசதியையும் பொறுத்து விரும்பும் கோயிலுக்குச் செல்லலாம். ஆனால், அதற்காக  வணிக நிறுவனங்களின் கிளைபோல் பிற மாநிலக் கோயில்களுக்குக் கிளை அமைப்பது முற்றிலும் வணிகமேயன்றி வேறில்லை.

திருப்பதியில் வேண்டுமென்றே செயற்கையான நெரிசலை உருவாக்கி வருவோர் எண்ணிக்கையையும் தவறாகக் காட்டி, இறையன்பர்களை ஏமாற்றி வருகின்றனர். திருப்பதிக்கு வருவோர்களை ஆங்காங்கே கூண்டிற்குள் தேவையின்றி அடைத்து வைப்பதற்கு மாறாகச் சீரான ஒழுங்கில் வரிசையாக அனுப்பி வைத்தால் விரைவாகவும் அமைதியாகவும் அனைவரும் வழிபட இயலும்.  அவ்வாறில்லாமல்,  தமிழ்நாட்டிலுள்ள மக்கள் வழிபட வசதியாக இங்கே குமரியில் திருப்பதி கோயிலைக் கட்டுவது என்பது வணிகத்திற்காகத் தொடங்கப்படும் கிளைக்கடைதான் என்பதில் ஐயமில்லை.

முதலில் தமிழர்க்கு உரிமையான திருப்பதியை ஆந்திரர்கள் மத்திய அரசின் உதவியால் பறித்தனர். இப்பொழுது  தமிழர்களின் செல்வத்தைப் பறிக்கப் பார்க்கின்றனர். திருப்பதி கோயில் தமிழர்க்கு உரியதே என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவர்.

ஏற்கெனவே நாம் தமிழ்நாட்டின் எல்லையாகிய திருப்பதியை ஆந்திரத்திடம் பறிகொடுத்துள்ளோம். இதனால் தமிழரால் கட்டடப்பெற்றுத் தமிழ் மக்களால் நிறைந்த கருவூலமும் ஆந்திராவிற்குச் சென்று விட்டது. இப்பொழுது தமிழ்நாட்டில் திருப்பதி கோயிலைக் கட்டுவது என்பது தமிழ் மக்களின் பணத்தைத் தமிழ்நாட்டிலேயே சுரண்டலாம் என்ற எண்ணம்தான். இதற்கு இறையன்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசும்இதை உடனே தடை செய்ய வேண்டும்.

கோயில் கட்டுவதற்கு விவேகானந்தர் நிலையம் நன்கொடையாக நிலம் தருகின்றது. இந்த நிலம் எந்த நோக்கத்திற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டதோ அதை மீறி நன்கொடையாக வேறு நோக்கத்திற்குக் கொடுப்பதும் தவறாகும்.  தமிழ்நாட்டிலுள்ள அயல் மாநிலத்தவர் அமைப்புகளின் வருவாயில்  முக்கால் பங்கைத் தமிழக அரசிற்குத் தமிழ் மக்களின் நலத்திட்டத்திற்காகப் பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
கன்னியாகுமரியிலுள்ள குமரி அம்மன் கோயிலைப் பகவதி அம்மன் என விளம்பரப்படுத்தி மலையாளக் கோயில் போல் காட்டி வரும் போக்கு இப்போது நிலவுகிறது. இதோடு ஆந்திரமக்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலுக்கான கிளையை இங்கே தொடங்குவது என்பது தமிழ்நாடு என்பது தமிழர் நாடா அல்லது அயலவர் நாடா என்ற ஐயப்பாட்டை எழுப்புகின்றது" என்கிறார் திருவள்ளுவன் இலக்குவனார்.

விரிவிற்குக் காண்க :