சித்த மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்த மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூலை, 2013

சித்த மருத்துவம் படிக்க வந்த சீனத்' துறவிகள்

சித்த மருத்துவம் படிக்க வந்த 'சாவோலின்' துறவிகள்

சீனாவின் ஃகனான் மாநிலத்தில் உள்ள சுங்சான் ஊரில், ஷாவோஷீ மலையடிவாரத்தில் உள்ளது 'ஷாவோலின்' ஆலயம். கி.பி., 467ம் ஆண்டு, 'பாத்வோ' அல்லது புத்தபத்ரா என்பவர் அந்த ஆலயத்தைஉருவாக்கினார் என, வரலாறு கூறுகிறது.அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இந்த ஆலயத்து பவுத்த துறவிகளால் உருவாக்கப்பட்டது தான், 'குங் பூ' என்ற தற்காப்பு கலை. அதை சீனர்கள், நோயாளி களின் மனதை படித்து அதற்கேற்ற வகையில் அளிக்கப்படும் மருத்துவம் என்கின்றனர்.

இரண்டு துறவிகள்:

'ஷாவோலின்' ஆலயத்தில் இருந்து, கடந்த, 1500 ஆண்டுகளில் தமிழகத்திற்கு இதுவரை ஒரு பவுத்ததுறவி கூட, வந்ததில்லை என,கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த ஆலயத்தை சேர்ந்த பவுத்த துறவிகள், ஷீயான்லை, ஷீயான்பேர் இரண்டு பேர் சென்னைவந்துள்ளனர்.சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனம் நடத்தும் பழங்கால மருத்துவம் தொடர்பாக ஒலைச்சுவடிகள் குறித்த பயிலரங்கத்தில் கலந்து கொள்வது, காஞ்சிபுரத்தில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ள போதிதர்மர் நினைவகத்தை பார்வையிடுவது தான் அவர்கள் வருகையின் நோக்கம்.

மன கட்டுப்பாட்டு பயிற்சி:

'ஷாவோலின்' ஆலயம் குறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள், சீனாவின் மரபு வழி மருத்துவமான டி.சி.எம்., படித்துள்ளோம். போயை எனப்படும் அந்த புத்த மருத்துவ படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அது முடித்த பிறகு 'ஷாவோலின்' ஆலயத்தில் பயற்சி பெற விரும்பினோம். அங்கு சேர விரும்புவோர் 19 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம். அந்த ஆலயத்தில் சேர, அங்கு மனக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும். அதில், வெற்றி பெறுவோர் மட்டுமே பயிற்சி பெற அனுமதிப்பர்.'ஷாவோலின்' ஆலயத்தில் மருத்துவம், தற்காப்பு, தியானம் ஆகியவையே பிரதானமாக பவுத்த துறவிகளுக்கு கற்று கொடுக்கப்படுகிறது. ஜென் புத்த மத போதனைகளும் உபதேசிக்கப்படுகிறது. அங்கு, 300க்கும் மேற்பட்ட துறவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெண் துறவிகளும் உள்ளனர்.ஆலயத்தின் உள்ளேயே பிரமாண்ட பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகளுக்குஇலவச மருத்துவம் அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில் மருத்துவத்துடன் மருந்துகள் தயாரிப்பதும் கற்று தரப்படுகிறது. 'குங் பூ' தற்காப்பு கலை, மூன்று வயது முதல் கற்று தரப்படுகிறது.

தமிழக மருத்துவம்:

அந்த கலையின் அடிப்படையை கற்று கொள்ள ஆறு ஆண்டுகள் ஆகும். முழுமையாக கற்று கொள்ள 10 ஆண்டுகள் ஆகும்.பயிற்சி முடித்தோர் விருப்பப்பட்டால், அங்கேயே இருந்து பணிவிடைகள் செய்யலாம். இல்லாவிட்டால் வெளியேறி குடும்பத்துடன் இணையவும் அனுமதி உண்டு. ஆனால், பயிற்சிக்காகவோ, துறவியாவதற்காகவோ உள்ளே நுழைந்து விட்டால், குடும்பத்தை துறக்க வேண்டும். 'ஷாவோலின்' ஆலயத்தை உருவாக்கியதே ஒரு இந்தியர் தான். 76 நாடுகளில், ஆலயத்தின்கிளைகள் செயல்படுகின்றன.ஆலயத்தின் மருத்துவமே, சீன மற்றும் தமிழகத்தினை அடிப்படையாககொண்டது என்பதால், இங்கு நடக்கும் பழங்காலத்து ஓலைச்சுவடி மருத்துவம் மூலம் மேலும் பல்வேறு விஷயங்களை கற்று கொள்ளவும், 'பாத்வோ'வின் சொந்த ஊரான காஞ்?சிபுரத்தையும், அவருக்கு நினைவகம் கட்டும் இடத்தையும் பார்வையிடும் ஆவலில் வந்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போயை எனப்படும் அந்த புத்த மருத்துவ படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அது முடித்த பிறகு 'ஷாவோலின்' ஆலயத்தில் பயற்சி பெற விரும்பினோம். அங்கு சேர விரும்புவோர் 19 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம்

சனி, 22 டிசம்பர், 2012

சித்த மருத்துவத்தை நாடும் நோயாளிகள்


காரைக்குடி:அலோபதி டாக்டர்களே, சித்த மருத்துவத்தை பரிந்துரைப்பதால், சித்த மருத்துவப்பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சித்த மருத்துவ டாக்டர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 60 க்கும் குறைவான நோயாளிகளே வந்தனர். டெங்குவுக்கு சித்த மருத்துவத்தில், உள்ள நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளதால், அதை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 120 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு மட்டுமல்லாமல், அனைத்து நோய்க்கும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சித்த மருத்துவ துறையும், நிலவேம்பை, சிறப்பு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர். எந்த மருந்துக்கும் இந்த ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்றார்.

செவ்வாய், 23 ஜூன், 2009

ஜூன் 23,2009,00:00 IST





இலக்கியம், கலை, சித்த மருத்துவம், வானவியல் சாஸ்திரம் உள்ளிட்ட பலவற்றை ஓலைச்சுவடிகளாக நமது முன்னோர்கள், சித்தர்கள், நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். ஓலைச் சுவடிகளில் உள்ள பல்வேறு அறிவியல் சார்ந்த விஷயங்கள், வியப்பை அளிப்பதாக இருக்கின்றன. அந்த பொக்கிஷங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஆர்வம் மிகுந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சித்த மருத்துவ குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அதில் உள்ள தகவல்களை புத்தகமாக்கி அதை அழியாமல் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை ஓசையின்றி செய்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1964ம் ஆண்டு தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஒரு பகுதியில், மத்திய அரசின் சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி பிரிவு துவங்கப்பட்டது.
இதன் மற்றொரு ஆராய்ச்சி பிரிவு கடந்த 1971ம் ஆண்டு பாளையங்கோட்டையில் துவங்கப்பட்டது. அதன்பின் இவ்விரண்டு ஆராய்ச்சி பிரிவுகளையும் சேர்த்து, சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மத்திய அரசு சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை துவக்கப் பட்டது. அன்றில் இருந்து இன்று வரை அதே இடத்தில் சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை இயங்கி வருகிறது. இங்கு அகத்தியர், புலிப்பாணி, போகர், தட்சணாமூர்த்தி, மச்சமுனி, ராமத்தேவர்(யாகோபு), கொங்கனார், சங்கமுனி, திருமூலர்(திருமந்திரம் எழுதியவர் அல்ல), போன்ற பல்வேறு சித்தர்களால் எழுதப்பட்ட மற்றும் பரம்பரை சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட அனுபவ குறிப்புகள் உள்ளடங்கிய 1,200க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவையாக உள்ளன. பழங்கால தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஓலைச்சுவடிகளை படியெடுத்து (கேலி கிராப்பி), பின் அதற்கு பொழிப்புரை எழுதும் பணியை இங்குள்ள ஊழியர்கள் செய்கின்றனர்.
இதுவரை வெளிவராத தகவல்கள் கொண்ட ஓலைச்சுவடிகளை மட்டும் கண்டறிந்து அவற்றை படியெடுக்கின்றனர். பின், அதை தற்போதைய தமிழ் மொழி வடிவத்திற்கு மாற்றி புத்தகமாக வெளியிடும் பணியை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு படியெடுக்கப் பட்ட, அரிய சித்த மருத்துவ தகவல்கள் அடங்கிய 25 புத்தகங்களை மத்திய சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத்துறை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு அரிய தகவல்களை வாரி வழங்கும் பொக்கிஷங்களாக அமைந் துள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படிக்க வசதியாக தமிழில் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலத்திலும் இந்த புத்தகங்கள் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகங்கள் இடம் பெற்றுள்ள நூலகமும் இயங்கி வருகிறது. இங்கு நுழைவு கட்டணம் செலுத்தி ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து, மத்திய அரசு சித்தமருத்துவ இலக்கிய ஆராய்ச்சி ஆவணத் துறையைச் சேர்ந்த ஜெகஜோதி பாண்டியன் கூறியதாவது: ஆராய்ச்சி நிலையத்தில் பாதுகாக்கும் 1,200 ஓலைச்சுவடிகளில் 3,000க்கு மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு அரிய மருத்துவ குறிப்புகள் உள்ளன. இதில் கோபுர வடிவிலான "திருவாசகம்' மற்றும் சித்திர வடிவிலான மந்திர ஓலைச்சுவடிகள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த ஓலைச்சுவடிகளை தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று சேகரித்துள்ளோம்.
சமீபத்தில் கிடைத்த ஒரு சுவடியில், தேள் கடியால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து விஷத்தை முறிக்க அவரது கண்களில் உப்புக் கரைசல் தண்ணீரை இரு துளிகள் விட்டால் போதும் என்ற குறிப்பு இருந்தது.
அதை பயன்படுத்தி பார்த்ததில் குறிப்பு மிகச்சரியானது என தெரிந்தது. இவ்வாறு பல அரிய மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் மட்டுமின்றி, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள மியூசியங்களில் தூங்குகிறது. அவற்றை படியெடுத்து புத்தகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால், அதில் உள்ள மருத்துவ குறிப்புகள் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். இவ்வாறு ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.



செல்லரித்த சுவடிகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு : ஆரம்பகாலத்தில் ஓலைச்சுவடிகளை செல்லரிக்காமல் பாதுகாக்க, மஞ்சள் மற்றும் வசம்பு ஆகியவை தடவப்பட்டு வந்தன. பின் எலுமிச்சை நிறத்தில் உள்ள புல்லில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மூலம் (சிட்ரோனில்லா) சுவடிகள் பாதுகாக்கப் பட்டன. பின் "லேமினேட்' செய்தும், "டிஜிடலைஸ்' செய்தும் "சிடி' வடிவில் மாற்றியும் ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்கள் பாதுகாக்கப்பட்டன. தற்போது "பியூமிகேஷன்' என்ற முறையில் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்முறையில், தனிப்பெட்டியில் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட சுவடிகள் வைக்கப் பட்டு அதற்கு அருகில் கிண்ணத்தில் "பாரா-டை-குளோரோ பென்சின்', லிக்குட் அமோனியா உள்ளிட்ட பல்வேறு வகை மருந்துகள் வைக்கப்படுகின்றன. பின்னர் மின்விளக்கு ஒளி மூலம் வெப்பம் அந்த பெட்டிக்குள் செலுத்தப்படுகிறது. அந்த வெப்பத்தின் மூலம் மருந்து கரைந்து அதன் மூலம் சுவடிகளை அரிக்கும் செல்களும், சிறிய பூச்சிகளும் இறந்து விடுகின்றன.இதன் மூலம் சுவடிகள் நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கப்படுகின்றன.