வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இனி தி.மு.க. நெருக்குதல் கொடுக்குமாம்? ஆட்சியில் முடியாதது இப்பொழுது முடியுமாம்



பின்வருவனவற்றை டி.ஆர்.பாலுவும் அவரை இயக்குபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

1. என்னதான் நாடகமாடினாலும், மக்கள், இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்த தி.மு.க.வை மன்னிக்க விரும்பவில்லை.
2. மாணவர்கள் போராட்டங்களும் மக்கள் எழுச்சியும் அடியோடு தோல்வியைத் தரும் என அஞ்சிப் பிரிவது போல் பிரிந்து தேர்தலுக்குப்பிறகு காங்.உடன் கூட்டணி சேரும் தி.மு.க. என மக்கள் நம்புகின்றனர்.
3. ஒருவேளை  பா.ச.க.வை ஆதிக்க வேண்டி வந்தாலும் இனப்படுகொலையாளர்களைத் தண்டிக்க மதவாதத்துடன் கூட்டு வைப்பதில் தவறு இல்லை என்றுதான் தி.மு.க. பேசும் என்பதும் மக்கள் நம்பிக்கை.
4.  முதல்வராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது என்பவர்கள் ஆட்சி இருந்தும் தம் வீட்டு மக்களைமட்டும் வளர்த்தவர்கள், இப் பொழுது  மட்டும் நெருக்குதல் கொடுக்கும் என்று சொல்வது எப்படி நடக்கும்?  இந்த நெருக்குதலை ஆட்சியில் இருந்த பொழுது கொடுத்திருந்தால் என்ன?

தொடர்ச்சி காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

(முன் தொடர்ச்சி)
5. இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர் என்றும் ஈழம் என்று சொல்வதை விரும்பாமலும் நிலை தடுமாறி உரைப்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை.
6. மக்கள் மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்றால்
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாகத் தி.மு.க.தலைமைக்குத் தெரிந்தவற்றைக் கூறி  வெளிப்படையாக ஈழத் தமிழர்களிடமும்  பிற உலகத் தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


மத்திய அரசு மீதான திமுகவின் நிலை இனி கடுமையாக இருக்கும்: டி. ஆர். பாலு


""மத்தியில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்துவந்த திமுகவின் நிலை இதுவரை மிகவும் இணக்கமான முறையில் அமைந்திருந்தது. இனிவரும் நாள்களில் அவ்வாறு சும்மா இருக்கப் போவதில்லை. மத்திய அரசு மீதான எங்கள் அணுகுமுறையும் விமர்சனமும் இனி மிகக் கடுமையாக இருக்கும்'' என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கூறினார்.
இது தொடர்பாக தில்லியில் "தினமணி' நிருபரிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு விட்டதால் நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டதாக சிலர் பெருமிதப்படுகின்றனர். அரசிதழில் நடுவர்மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது ஒரு தொடக்கம் மட்டுமே.
தீர்ப்பின்படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.  அப்போதுதான் நீர்ப் பங்கீட்டு நடவடிக்கையை கண்காணிக்கவும் தமிழகத்தின் நீர்ப் பெறும் உரிமையை நிலைநாட்டவும் முடியும்.
இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கும் திமுக நெருக்குதல் கொடுக்கும்.
தமிழக நலன் குறித்து மத்திய அரசிடம் முறையிட்டு, முறையிட்டு ஏமாந்து போனதுதான் மிச்சம்.
மத்திய அரசின் அலட்சியத்தால் ஏராளமான கசப்பான அனுபவங்களை திமுக சந்தித்துள்ளது. அதன் விளைவாகத்தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக திரும்பப் பெற்றது.
இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தையும், திமுகவையும் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும், போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் திமுக வலியுறுத்தியது.
போஸ்னியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டபோது,  முந்திக் கொண்டு இந்தியா குரல் கொடுத்தது. ஆனால், பக்கத்து நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அலட்சியம் காட்டி வருகிறது.
மீனவர்கள் விவகாரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் வருகின்றனர். அதைத் தடுக்கவும் மத்திய அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை.
இது போன்ற அலட்சியப் போக்குக்கு காங்கிரஸ் கட்சி பதில் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாலு கூறினார்.

கருத்துகள்(1)

திரு .பாலு சார் , இலங்கை தமிழ் மக்களை ,காவேரி பிரச்சனயில் வஞ்சித்து விட்டார்கள் என்று சொல்வது எல்லாம் தமிழ் நாட்டு மக்களும் ,தமிழக முதல்வரும் ,மாணவர்களும் சொல்லிகொண்டுதானே இருக்கின்றார்கள் ,இது அறிந்து கொள்ள உங்களுக்கு 9 வருடம் ஆனதா ? உங்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என வேறு அது எங்களுக்கு தெரியாது .தமிழகத்தை புறக்கணிப்பது மட்டுமே தெரிந்த எங்களுக்கு உங்களையும் புறக்கணித்து விட்டது என்பதை கேட்கும் போது நெஞ்சு துடிக்கின்றது ,இதயம் வெடிக்கின்றது .திமுகாவை ஏமாற்றிய கட்சியை இனி ஆட்சியில் நிம்மதியாக அமரவிடகூடாது.புறபடு தலைவா இனி தமிழகத்தை ,இலங்கை தமிழ் மக்களை ,முல்லை ,காவேரி போன்று அணைத்து விசயங்களிலும் சாரி பாலு சார் திமுகவை புறக்கணிக்கும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் .தமிழக மக்கள் இனியும் பொறுத்தால் தாங்காது திமுகவை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சியை எதிர்க்க தவறினால் நாம் சொற்றுபிண்டங்கள் ஆகி விடுவோம் .வீறு கொண்டு எழுவோம் .தமிழா வீறு கொண்டு எழு ....(என்ன கொடுமை சார் உஷார் இது பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம எச்சரிக்கை )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக