muuvar mani mandapam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
muuvar mani mandapam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2011

3 பேரின் தூக்குத் தண்டனைவழக்கு: நவ.29-க்கு ஒத்திவைப்பு

தற்போதைய செய்திகள்
3 பேரின் தூக்குத் தண்டனை விவகாரம்: நவ.29-க்கு விசாரணை ஒத்திவைப்பு

First Published : 28 Oct 2011 11:12:46 AM IST

Last Updated : 28 Oct 2011 12:05:20 PM IST

சென்னை , அக்.28: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதுவரை 3 பேரின் தூக்குத் தண்டனைக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்களுக்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ப.சிதம்பரத்தை வெறுப்பேற்றிய தமிழக அரசு அதிகாரிகள்!

இதில் எந்தத் தவறும் இல்லை. மாநில அரசிடமிருந்த மிகுதியான பணத்தைச்சுருட்டிக் கொண்டு குறைவான பணத்தைத் தரும் மத்திய அரசு இதுபோன்ற கூட்டம் நடத்துவது மாநில உரிமைக்கு எதிரானது. தேவையெனில் மாநில அரசிடம் அறிக்கை கேட்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். நேரடியாக அதிகாரத்தைச் செலுத்துவது தவறு. வேணும் கட்டைக்கு வேணும்! வெங்கலக்கட்டைக்கு வேணும் என்று பழமொழி ஒன்ற உண்டு. மூவர் விடுதலையை விதிமுறைக்கும் மனித நேயத்திற்கும் மாறாக மறுத்த அடிமை அமைச்சருக்கு இது தேவையான ஒன்றுதான். குறுக்கு வழியில் அமைச்சராகலாம். மக்கள் உள்ளத்தை  ஆள முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ப.சிதம்பரத்தை வெறுப்பேற்றிய தமிழக அரசு அதிகாரிகள்!

First Published : 12 Sep 2011 05:35:46 PM IST


புதுக்கோட்டை, செப். 12: மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள் அன்று நடைபெறும் என உறுதி செய்யப்பட்டது.இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இல்லாததால் கூட்டத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர், வெறுத்துப் போய் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். இதனால் காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாநில அரசின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யும் நோக்கில் சில மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டமாக நடைபெறுவது வழக்கம்.இதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டம் திங்கள் அன்று நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த மாதம் தேதி கேட்டார். அதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.இந்நிலையில், திங்கள் அன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்குக்கு வந்தார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அரங்கு வெறிச்சோடியிருந்தது. கூட்டத்துக்கு ஆட்கள்தான் வரவில்லை என்று பார்த்தால், தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியரே அங்கு இல்லை! அடுத்த நிலை அதிகாரிகளிடம் விசாரித்தால், ஆட்சியர் திடீர் பயணமாக சென்னை சென்றுவிட்டார் என்றனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் ப.சிதம்பரம். தொடர்ந்து இது முக்கியக் கூட்டம், ஆட்சியர் இல்லாமல் நடத்த முடியாது என கடுமையாகக் கூறிவிட்டு வெறுப்புடன் வெளியேறினார் ப.சிதம்பரம்.இதனால், அங்கே திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் செயலைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக குமுறலுடன் தெரிவித்தனர்.
கருத்துகள்


he is worst ever hm of india.
By kamal
9/12/2011 10:35:00 PM

தேர்தலில் தோல்வி அடைந்தவர் உள்துறை அமைச்சர். வெட்கம். இது வேறு எங்காவது நடக்குமா? கேவலம். மரியாதையாக பதவி விலக வேண்டும் சிதம்பரம்.
By velmurugan
9/12/2011 8:41:00 PM


ப சி அரசு செலவில் இங்கு வர ,போக இந்த கூட்டங்கள் செயல் படுகின்றன.ஆகவே கூட்டம் நடக்கவிட்டால் அடுத்த கூட்டத்திற்கு வர மீண்டும் ஒரு சான்ஸ்.இதில் குறை என்ன?
By Tamilian
9/12/2011 7:11:00 PM

By அகிலன்
9/12/2011 6:28:00 PM
மாவட்ட ஆட்சியரின் இம்மாதிரியான நடவடிக்கைகல் ஏற்புடையதல்ல.
By maruthaiahpillai

இந்த சிதம்பரம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க மக்கள் கறுவிக்கொண்டு உள்ளனர்.
By ராமஸ்வாமி.ச.
9/12/2011 6:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 12 செப்டம்பர், 2011

congressmen type two: நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரசுகாரர்கள்…?

நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க…?

இன்று சென்னை ஊடகவியலாளர்கள் மத்தியில், இரண்டு காங்கிரச்கார்ர்கள் ஏற்பாட்டில், ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட இரண்டு காங்கிரஸ்காரர்களின் “பிள்ளைகளை” கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்களும் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று சொல்லிக்கொடுத்த வாய்ப்பாட்டை ” கிளிப்பிள்ளை” போல உச்சரித்தனர். நமது ஊடகவியலாளர்கள் அத்துடன் “திருப்தி” அடையவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை “தனியாக” கேட்டபோது, “பல விசயங்கள்” வெட்டவெளிச்சமாகி உள்ளன.
அதாவது இத்தனை நாள் அல்லது இத்தனை ஆண்டுகள் “எங்கே போயிருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு, “பத்தொன்பது” ஆண்டுகளாக “காங்கிரஸ்” தலைமையிடம் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று முறையிட்டு வ்ந்தோம்.என்கிறார்கள். அந்த “பலியான” குடும்பங்களுக்கு ” இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை ஒரு அரசு வேலை கூட போட்டுக் கொடுக்கவில்லை” என்ற குமுறலை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்தவர் “குடும்பத்திற்கு” அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை கொடுத்து, “ஆற்றுப்படுத்தல்”‘ செய்வார்களே? ஏன் இவர்கள் விசயத்தில் செய்யவில்லை?
ராஜீவ் காந்தி கொலையால் “லாபம்” பெற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவ்வாறு “நன்றி” அறிவிக்கும் செயலை செய்ய விரும்பவில்லையா? ராஜீவ் கொலைக்கு காரணமான, அமெரிக்காவும், அவர்களது அடிவருடியான “சுப்பிரமணிய சாமியும், சந்திராசாமியும்” தியாகியாக ஆகிவிட்ட “தமிழ்நாட்டு” காங்கிரச்காரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை தருவதை “தடை”செய்தார்களா?” அல்லது ராஜீவ் கொலைக்கு பின்னாலிருந்து ஏற்பாடு செய்த “காங்கிரஸ் பணிக்’ குழு” வின் அலுவலக செயலாளராக அந்த நேரத்தில் இருந்த ஆந்திராவை சேர்ந்த “கல்யாண ராவ்” என்பவர் ” உடன் சென்ற காங்கிரஸ்காரர்கள் “தியாகிகள்” ஆனதை “பதிவு” செய்ய விரும்பாததால்,அவர்களதுகுடும்பங்களை ”அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டார்களா?
அல்லது “தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்” யாரும் ராஜீவ் உடன் “கொல்லப்படவோ” அல்லது “காயம்படவோ” இல்லையே என்ற “கருத்து”‘ மக்கள் மத்தியில் “அம்பலமாகிவிடக்கூடாதே” என்பதற்காக உண்மையில் இறந்த “”’தியாகிகள் பற்றிய செய்தியை “மறக்கடிக்க” அவர்களது “”வாரிசுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இறந்த “காங்கி’ர’ஸ்காரர்கள்” குடும்பத்தில் உள்ள வாரிசுகள், ”கோபத்தில்”‘ தலைவர்களைப் பார்த்து, ” நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்?’ என்று கேட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த ” வாரிசுகளை” இத்தினை ஆண்டுகளும் ” கண்டுகொள்ளாமல்” விட்டார்களா? அல்லது அதில் சில ” வாரிசுகள்” அந்த நேரத்திலேயே அப்படி கேள்விகளை கேட்டுவிட்டதால், அவர்களை ” நடுத்தெருவில்” விட்டார்களா?
அப்படியானால் தெருவில் இறங்கி ” மூன்று தமிழர் உயிர்காப்பு ” என்று போராடும் தமிழர்கள், ” ராஜீவ் கொலையில் செத்துப்போனவர் எல்லாம் போலீஸ்காரன். எங்கே போனான் காங்கிரஸ்காரன்?” என்று கேள்வி முழக்கம் எழுப்புகிறார்களே? அதில் உள்ள “சூட்சுமம்” இப்போதுதானே புரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் “இரண்டுரகம்” இருக்கிறார்கள். ஒன்று “உயிர் தியாகம் செய்து நடுத்தெருவில் ” நிற்பவர்கள். இரண்டாவது ” சதி செயல் தெரிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள” ஓட்டம் பிடித்தவர்கள்.
இதில் இரண்டாவது ரகம்காரர்கள், முதல் ரகம்காரர்களின் ”வாரிசுகளுக்கு” பட்டை நாமம் போட்டுவிட்டு, இப்போது அவர்களை ”தங்கள் துருப்பு சீட்டுகளாக” பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாமே “அரசியல் காரணங்களுகாக” மூன்று பேர் தூக்கை ”துரிதப்படுததும்” சிதம்பரத்தின் ” சித்து விளையாட்டுகள்”.
– TSS.MANI
Short URL: http://meenakam.com/?p=34816
Share/Bookmark

ஞாயிறு, 24 ஜனவரி, 2010




ஒண்டிவீரன் பகடைக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

First Published : 23 Jan 2010 03:37:00 AM IST


Last Updated : 23 Jan 2010 10:05:08 AM ISTகோவில்பட்டி,ஜன. ​ 22: ​ அருந்ததியர் சமூகத்தின் முதல் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஒண்டி வீரன் பகடைக்கு மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் (படம்) கேட்டுக்கொண்டுள்ளார்.​ ​​ கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:​ அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.​ அதே போல மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு,​​ பொதுத் துறை நிறுவனங்களிலும் அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு சிபாரிசு செய்யவேண்டும்.​ ​​ தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,​​ வன்கொடுமை புகார் தருபவர் மீதே வழக்குப் பதிவு செய்வதை நிறுத்த காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.​ அனைத்து சமுதாய சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கும் ​ மணி மண்டபம் மற்றும் உருவச் சிலை அமைத்துக் கொடுத்தது போல் அருந்ததியர் சமூகத்தின் முதல் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் நெற்கட்டான் செவல் பாளையத் தலைவர் மாவீரர் ஒண்டி வீரன் பகடைக்கும் மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும்.​ ​​ கேரள அரசு போல தமிழக அரசும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும்.​ ​ ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் தலித் மக்களுக்கென மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை,​​ இம் மக்களின் கல்வி,​​ வேலை வாய்ப்பு,​​ பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை மேம்பாட்டிற்கு முழுமையாக செலவிட வேண்டும் என்றார் அவர்.​ ​
கருத்துக்கள்

ஆதித்தமிழர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பெரும்பாலும் தெலுங்கர்தாம் உள்ளனர். அவர்கள்தாம் பயன்பெறுகின்றனர். இதுபோல் பிற மாநிலங்களில் தமிழர பயன்பெறும் வாய்ப்பு உள்ளதா என யாரேனும் விவரம் தெரிவிக்க வேண்டுகின்றேன். நன்றியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/24/2010 4:19:00 AM

Uruppadum namma oooru! pongada ,........................!

By Jagan
1/23/2010 10:42:00 PM

எங்க ஊரு குண்டி வீரனுக்கும் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும். வாழ்க குண்டி வீரன்!

By குண்டிவீரன் பாசறை
1/23/2010 12:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 2 நவம்பர், 2009

தமிழிசை மூவர் மணிமண்டபம் 9 மாதத்தில் கட்டப்படும்: பரிதி இளம்வழுதி



சென்னை, நவ. 1: நாகை மாவட்டம் சீர்காழியில் அமைக்கப்படவுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் 9 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் சீர்காழியில் தமிழிசை மூவர்களான அருணாசல கவிராயர், மாரிமுத்து பிள்ளை, முத்து தாண்டவர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் மற்றும் வரைபடத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ""மணிமண்டபம் 419 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 6 முதல் 9 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். எனவே, மணிமண்டபம் கட்டுவதற்கு திருத்திய மதிப்பீட்டினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
கருத்துக்கள்

கலைஞர் கடந்த முறை ஆட்சியில் இருந்தபொழுது அறிவித்த திட்டம். அவர் ஆட்சியும் முடிந்து அடுத்தவர் ஆட்சியும் வந்து சென்று மீண்டும் ஆட்சிக்கு வந்து பாதிக்காலத்திற்கு மேல் போனபின்னும் காலத்தாழ்ச்சி இருக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:09:00 AM

நான் படையிலே போகும்போதும் பதவியோடு போகவேண்டும் உடன்பிறப்பே. காவேரி காய்ந்தால் எனக்கு என்ன? பெரியாறு போனால் எனக்கு என்ன? தமிழக மீனவன் மடிந்தால் எனக்கென்ன? இலங்கைத்தமிழன் இறந்தால் எனகென்ன? தமிழன் எக்கேடு கேட்டல் எனக்கென்ன? என் மக்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன்) நன்றாக ச்விச்ஸ் வங்கி கணக்கோடு சுபிட்சமாக இருந்தால் அதுபோதும் எனக்கு. தேர்தல் என்று வந்தி விட்டால், அடித்த பணத்தை அள்ளிவீசி வெற்றிவாகை சூடிவா உடன்பிறப்பே. என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே உடன்பிறப்பே. நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும். தமிழன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும் உடன்பிறப்பே

By tamizhargal
11/2/2009 12:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *