புதன், 30 டிசம்பர், 2009

பாலியல் புகார்​ ​திவா​ரியை களங்​கப்​ப​டுத்த சதி: மத்திய அமைச்சர்



பதேபூர், ​​ டிச.29: ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் அவரை களங்கப்படுத்துவதற்காக தீட்டப்பட்ட சதி என்று மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தினால் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து வெளியில் தெரியவரும் என்றார் அவர்.​ ​பதேபூரில் கட்சி விழாவில் ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இதைத் தெரிவித்தார்.
கருத்துக்கள்

தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களின் ஆளுநர் மாளிகைளிலும் உசாவல் மேற்கொண்டால் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்குத் த்ரப்படும் பதவிகளின் மூலம் செய்த ஒழுக்கக் கேடுகள் வெளிவரும். சென்னாரெட்டி மீது புகார் சொன்னததை அரசியலாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆனால், ஆளுநர் மாளிகைகளின் ஊழியர்களும் காவல் பணி பார்க்கின்றவர்களுக்கும் உண்மைகள் தெரியும். எனவே, ஏற்கெனவே ஒரு பெண் தன் தந்தையாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன வழக்கை மீள் உசாவல் மேற்கொள்வதுடன் நடு நிலையுடன் இதுவரை ஆளுநர்களாக இருந்தவர்கள் மீதும் இப்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மீதும் உசாவல்கள் மேற்கொள்ள வேண்டும்.தோழியர் புடை சூழ இருந்த இருக்கும் ஆளுநர்கள் பற்றிய உசாவல்கள் ஆளுநர் மாளிகைகளில் ஒழுக்கமும் ஒழுங்கும் இருக்கத் துணை புரியும்.இதை விடுத்து திவாரிக்கு உறுதுணையாக இருப்பது நாட்டிற்கே நல்லதல்ல.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/30/2009 5:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தலையங்கம்: ஒளிப் பிறழ்வுகள்



ஒரு பக்கச் சார்புடன் அணுகப்படும் எதுவும் நடுநிலை பிறழ்ந்தே வெளிப்படும் என்பதற்கு இவ்வாசிரிய உரை சான்று. நடுநிலையாளர்போல நடித்து மக்களை ஏய்க்கும் துக்ளக் பாதையில் தினமணியும் செல்ல வேண்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக