வெள்ளி, 26 ஜூன், 2009

இன உணர்வு ஒற்றுமை வேண்டும்:
கருணாநிதி வேண்டுகோள்
தினமணி



கருத்துகள்

(1/2) தமிழ் நாட்டில் உள்ளவர்களிடம் இனஉணர்வு உள்ளது. ஆனால், தமிழரல்லாதவரிடம் இருக்கின்ற இன உணர்வு அளவிற்குத் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தால் தீண்டத்தகாததாகவும் அதே நேரம் தேவைக்கேற்பப் பயன்படுத்தும் ஆடையாகவும் இன உணர்வு உள்ளது. ஆனால்,அவர்களே எதிர்க்கட்சியாக இருந்தால் தம்மை வாழ்விக்கும் வாளாக இன உணர்வைப் பயன்படுத்துகின்றனர். கட்சியினர் தலைமையின் கொத்தடிமைகளாக உள்ளமையால் இன உணர்வு பற்றிச் சிந்திப்பதில்லை. எனவே, இனியேனும் அனைவரும் தமிழ் இன உணர்வு கொள்க! 'வணங்காமண்' கப்பலைப் பொறுத்தவரை ஏதோ நாடகம் அரங்கேறுகின்றதோ என்ற ஐயப்பாடு பலரிடமும் உள்ளது. தமிழர்களுக்கான மறுவாழ்வுக் குழுவில் 19 சிங்களவர்களையும் ஒரே ஓர் இசுலாமியரையும் நியமித்துள்ள சிங்கள அரசு எந்த வகையில் உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. (2/2) தொடர்ச்சி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:06:00 AM
(2/2) (1/2இன் தொடர்ச்சி) சிங்களக் கொலைகாரத் தலைவர்கள் தமிழர் பகுதிகளில் நடத்த உள்ள பொம்மைத் தேர்தல் தொடர்பாகத்தான் இந்தியா வந்து சென்றதாகத் தெரிய வருகின்றது. அந்த நாடகத்தின் ஒரு பகுதியே இக்காட்சியும் என்கின்றனர். ஆனால், உளளபடியே புலம பெயர் தமிழர்கள் திரட்டிய உணவும் மருந்தும் பயன் அழியும் முன்னரே ஈழத் தமிழர்களுக்குப் பயன்பட்டால் நன்றியுடன் பாராட்டுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:07:00 AM

இன உணர்வு, ஒற்றுமை பற்றி பேசும் தலைவர்கள் முதலில் இனப் பண்பாடு, பண்பாட்டு ஒற்றுமை என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இனியாவது தமிழினம் தமிழ்ப் பண்பாடு என்ற உண்மையான நிலைக்கு மாறவேண்டும். ஆரியம் போலவே திராவிடமும் தமிழுக்குக் கேடான ஒரு பீடை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆணவத்துக்கும் பாவத்துக்கும் உரிய தண்டனை வரும்படி 39000 ஆண்டு களுக்கு முன்பே தூய தமிழ்ப் பண்பாட்டுத் திருமறை நூல் மறைந்து விட்டது. உலகில் யாரையும் எதையும் குறை சொல்வது மடத்தனம். நாம் மனம் திருந்தி தூய தமிழ்ப் பண்பாட்டுக்கு மாற வேண்டும். மாறாவிட்டால் ஈழத்தின் நிலையைவிட இன்னும் மோசமான நிலைக்கு உலகில் அனைத்து தமிழர்களும் பலியாவார்கள்.கெடுவழி காட்டிய தலைவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் முதல் பலி ஆவார்கள். நிறைஅருள் தமிழ்ப் பண்பாட்டின் எச்சரிக்கை ! திரு முருகாற்றுப் படை ! நிறைஅருள் செவ்வேல்முருக அரசாங்கம் ! thamilurimay@gmail.com

By sevvelar,Thiruppur
6/26/2009 12:35:00 AM

First of all Tamil INA UNARVU required.Do you and INA MAANA THALAIVAR Anbazhagan having that concept

By abbayi
6/25/2009 11:37:00 PM

சரி! உண்மையில் இனப்பற்று வந்து விட்டால், கன்னட நாயக்கரான ராமசாமியையும், தெலுங்குகாரர் அண்ணாவையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். தமிழ் நாட்டில் 30 சதவிகிதத்திற்கு மேல் தெலுங்கு பேசும் சகோதரர்களும், குறிப்பிட்ட சதவிகிதம் மற்ற மொழி பேசுபவர்களும் உள்ளனர். இன உணர்வு என்று ஒரு முதல்வர் பேசுவது சுத்த அயோக்கியத்தனம்! தேச விரோதம்! மொழிப்பற்று என்று எங்களை ஏமாற்றியது கனி மொழிப்பற்று என்று இப்போது தான் தெரிகிறது. தமிழர்களை வைத்து காமெடி கீமடி பண்ணலையே! நண்பர் பூபதி, ராஜா ராம் அவர்களே! அய்யாவை அப்படியே புரிந்து வைத்துள்ளீர்கள். நன்றி!

By ravikumar
6/25/2009 11:23:00 PM

அய்யா கருணாநிதியாரே, இன உணர்வு ஒற்றுமை பற்றி பேச தங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. ஈழ தமிழர்கள் மீது குண்டு போட்டு அவர்களை லட்சகணக்கில் சாகடிக்கும் போது இல்லாத இன உணர்வு இப்போது உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எந்த ஒரு மனசாட்சியுமில்லாமல் தமிழக முதல்வர் (?!) பதவியில் அமர்த்துள்ள உங்களிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு தங்களின் மகளை மதிய அமைச்சராக்க வேண்டும் அல்லது இன்னமும் மத்திய அரசிடமிருந்து சில துறைகளை மிரட்டி பெற வேண்டும். அனால் தமிழர் வாழ்வு, அவர்களின் வளம் எல்லாம் அந்தோனியா மைனோ காந்தியிடம் அடகு வைத்து விட்டு சட்ட சபையில் இப்படி பொய்யுரைக்கும் உங்களை என்னவென்று சொல்வது? தங்களுக்கு தான் வெட்கமில்லை. சட்டசபையில் உள்ள தி. மு. க. உறுப்பினர்களுக்குமா இல்லாமல் போய்விட்டது? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

By Rajaraman V Raman
6/25/2009 10:21:00 PM

இன்று சிங்கள கயவர்கள் ஈழ தமிழ் மக்களை கொல்லலாம். அதனை கண்டும் காணாதது போல தனது சுயநல அரசியலை, குடும்ப அரசியலை நடத்தலாம். ஆனால் நாளை ஈழ தமிழர்கள், புதியதாக வரும் தமிழக மற்றும் மதிய அரசின் மூலமாக இந்திய ராணுவ உதவியுடன் சுதந்திரம் பெரும் நாள் வெகு தொலைவயுல் இல்லை. தங்களின் துரோக சரித்திரம் கடல் கடந்து உலக நாடுகளில் பேசப்படும் படிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழர் வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ராஜாராமன் வெ ராமன் ஹைதராபாத்

By Rajaraman V Raman
6/25/2009 10:20:00 PM

அய்யா கருனநிதியாரே, இன உணர்வு ஒற்றுமை பற்றி பேச தங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. ஈழ தமிழர்கள் மீது குண்டு போட்டு அவர்களை லட்சகணக்கில் சாகடிக்கும் போது இல்லாத இன உணர்வு இப்போது உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எந்த ஒரு மனசாட்சியுமில்லாமல் தமிழக முதல்வர் (?!) பதவியில் அமர்த்துள்ள உங்களிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு தங்களின் மகளை மதிய அமைச்சராக்க வேண்டும் அல்லது இன்னமும் மத்திய அரசிடமிருந்து சில துறைகளை மிரட்டி பெற வேண்டும். அனால் தமிழர் வாழ்வு, அவர்களின் வளம் எல்லாம் அந்தோனியா மைனோ காந்தியிடம் அடகு வைத்து விட்டு சட்ட சபையில் இப்படி பொய்யுரைக்கும் உங்களை என்னவென்று சொல்வது? தங்களுக்கு தான் வெட்கமில்லை. சட்டசபையில் உள்ள தி. மு. க. உறுப்பினர்களுக்குமா இல்லாமல் போய்விட்டது? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இன்று சிங்கள கயவர்கள் ஈழ தமிழ் மக்களை கொல்லலாம். அதனை கண்டும் காணாதது போல தனது சுயநல அரசியலை, குடும்ப அரசியலை நடத்தலாம். ஆனால் நாளை ஈழ தமிழர்கள், புதியதாக வரும் தமிழக மற்றும் மதிய அரசின் மூலமாக இந்திய ராணுவ உதவியுடன் சுதந்திரம் பெரும் நாள் வெகு தொலை

By Rajaraman V Raman
6/25/2009 10:18:00 PM

வணங்காமண் கப்பல் அனுமதிக்கப் படும் என்று சிலநாட்களுக்கு முன்பே தெரியும். இல்லாவிட்டால் இந்தியக் கடல் எல்லைக்குள் அனுமதித்திருக்கவே மாட்டார்கள். தமிழக அரசின்(தி.மு.க என்று பொருள் கொள்க) விளைவாகவே இந்திய அரசின் முன்னெடுப்பு . இந்திய அரசின் முன்னெடுப்பின் காரணமாகவே அனுமதி என்ற தொடர் நாடகத்தின் காட்சிகள் தமிழ் சினிமா போலவே எல்லோருக்கும் தெரிந்த்ததே.இருந்தாலும் உண்ணாவிரத நாடகம் போல் வராது. அப்பனைக் கொலை செய்துவிட்டு பிள்ளைக்கு டப்பா பால் கொடுப்பதைப் போன்ற முயற்சிதான் இது.

By M.S.Boobathi
6/25/2009 7:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக