வெள்ளி, 26 ஜூன், 2009

வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்
தினமணி


வேலூர், ஜூன் 25: வன்னியர் சமுதாயத்தினருக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.வேலூர் அருகே வியாழக்கிழமை, திருமண விழா ஒன்றில் அவர் பேசியது:1987-ம் ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, வன்னியர் சமுதாயம் உள்பட 107 சமுதாயங்களைச் சேர்த்து, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதில் 10 சதவீதம் கூட வன்னியர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

திரு இராமதாசு அவர்களே! உங்களின் பல நல்ல எண்ணங்கள் நீங்கள் சாதிச்சாக்கடையில் உழல்வதால் மதிப்பிழந்து போகின்றன. நல்ல மனிதனாக எண்ணிச் செயல்பட்டு அனைவரையும் மக்களாகவே எண்ண வழிகாட்டுங்கள். அல்லது பா.ம.கட்சியைக் கலைத்து விட்டு, வன்னியருக்கான சாதி அமைப்பை மட்டும் நடத்துங்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் வன்னியர் செல்வாக்கு பெறுவதால் ஏற்படும் கசப்புணர்வே இந்தத் தேர்தலில் தோல்வியைத் தந்தது மட்டுமல்லாமல் தோல்வி கண்டு அனைவரையும் மகிழ்ச்சி யடையச் செய்தது. உங்கள் பின்னால் உலகத் தமிழர்கள் அணி வகுத்துவர ஆயத்தமாக இருக்கும் பொழுது வன்னியருக்கு மட்டும் குரல் கொடுப்பானேன்? உங்கள் 'தமிழ் ஓசை' இதழை வன்னியர்கள் வாங்கியிருந்தால் அதன் பக்கங்கள் குறையவும் விற்பனை சுருங்கவும் ஆன நிலைமை ஏற்பட்டிருக்குமா? தமிழ் அன்பர்கள்தாமே வாங்கி 'ஆதரவு' தருகின்றனர். அவர்களை இழக்காதீர்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:40:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக