வணங்காமண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணங்காமண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூலை, 2009

நிவாரணப் பொருள்களுடன் சென்ற கப்பலை
நடுக்கடலில் நிறுத்தியது இலங்கை ராணுவம்:
திட்டமிட்டபடி விநியோகம் நடைபெறுமா?
தினமணி


திருவொற்றியூர், ஜூலை 8: நிவாரணப் பொருள்களுடன் சென்ற "கேப் கொலரடோ' கப்பலை இலங்கை ராணுவம் புதன்கிழமை நடுக்கடலில் நிறுத்தியது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஏற்பட்ட நெருக்குதலை அடுத்து கப்பலை அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சுமார் 884 டன் நிவாரண பொருள்களை லண்டனைச் சேர்ந்த மெர்சி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பியது. பொருள்களை ஏற்றிவந்த "வணங்காமண்' என பெயரிடப்பட்ட "கேப்டன் அலி' என்ற கப்பலை இலங்கை ராணுவம் அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து ஜூன் 7-ல் கப்பலை நடுக்கடலிலேயே திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இக்கப்பல் ஜூன் 14-ல் இந்தியப் பகுதிக்கு வந்தடைந்தது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இக்கப்பலை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வேறு கப்பலில் நிவாரண பொருள்கள்... இதனை அடுத்து நிவாரண பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க இலங்கை ஒப்புக் கொண்டது. இதனை அடுத்து "வணங்காமண்' கப்பல் கடந்த வியாழக்கிழமை சென்னை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. அதில் இருந்த நிவாரண பொருள்கள் கொழும்பு செல்லும் "கேப் கொலரடோ' கப்பலில் ஏற்றப்பட்டன. திங்கள்கிழமை இரவு புறப்பட்ட இக்கப்பல் புதன்கிழமை இலங்கை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. நடுக்கடலில் நிறுத்திய ராணுவம்: இந்நிலையில் 'கேப் கொலரடோ' கப்பலை இலங்கை கடல் எல்லையில் அந்நாட்டு ராணுவம் தடுத்து நிறுத்தியது. ஆனால் பல்வேறு தரப்பினரின் நெருக்குதலை அடுத்து கப்பல் நுழைய அனுமதி கிடைத்தது. இது குறித்து கப்பல் ஏஜென்சியான 'சீ கன்சார்டியம்' நிறுவன மேலாளர் சுப்பிரமணியம் கூறியது, கேப் கொலரடோ கப்பல் 891 கண்டெய்னர்களுடன் கொழும்பு புறப்பட்டது. இதில் 27 கண்டெய்னர்கள் மட்டுமே நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்டவை ஆகும். இந்நிலையில் புதன்கிழமை காலை கப்பலை அனுமதிக்க இலங்கை ராணுவம் மறுத்துவிட்டது என தகவல் கிடைத்தது. காரணம் குறித்து கேட்டபோது, ஏற்கனவே திருப்பி அனுப்பிய பொருள்களை மீண்டும் இலங்கைக்குள் அனுமதிக்க ராணுவம் ஒப்புதல் தரவில்லை என கூறப்பட்டது. கப்பலில் உள்ள 891 கண்டெய்னர்களில் 27 கண்டெய்னர்கள் பிரச்னைக்கு உரியவை. அப்படியெனில் மீதம் உள்ள கண்டெய்னர்களை நிறுத்துவது சர்வதேச துறைமுக விதிமுறைகளுக்கு எதிரானது. மேலும் இது அவற்றில் பெரும்பாலான கண்டெய்னர்கள் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வேறு பெரிய கப்பல்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவேண்டியவை. எனவே கப்பல் நுழைவதில் தாமதம் ஏற்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதற்கு பொறுப்பேற்பது யார் என நாங்கள் இலங்கை அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டதை அடுத்து புதன்கிழை மாலை 6 மணி அளவில் அனுமதி கிடைத்தது என்றார் சுப்பிரமணியம். அலட்சியப்படுத்தும் இலங்கை: நிவாரண பொருள்களை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த இலங்கை தற்போது அதே மனநிலையில்தான் உள்ளதாகத் தெரிகிறது. எனவே கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நுழைந்தாலும் நிவாரண பொருள்கள் இலங்கை ஏற்குமா? அப்படி ஏற்றுக் கொண்டாலும் அவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க செஞ்சிலுவைச் சங்கத்தை சுதந்திரமாக அனுமதிக்குமா? என்பது சந்தேகமே என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

அது எப்படி? ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி உடனே செயல்படுத்தப்படாத பொழுது சிங்கள அரசு எப்படி இந்தக் கப்பல் நுழைய இடம் தரும்? பேசிக் கொண்ட படி காட்டுப்பகுதிகளில் அவற்றை அழிக்கும் எரி குண்டுகளை எப்பொழுது இந்தியா தரும்? காட்டுப் பகுதியை அழித்த போர்வையில் அங்குள்ள தமிழர்களையும் புலிகளையும் எப்பொழுது அழித்தொழிக்கும்? அந்த உறுதி கிடைத்தவுடன்தான் இந்த நாடகம் அரங்கேறும்.

-- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 4:00:00 AM

ஞாயிறு, 28 ஜூன், 2009

கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை
இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை:
ஜி.கே. வாசன்
தினமணி


சென்னை, ஜூன் 27: "வணங்கா மண்' என்ற கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது; இதுகுறித்து விரைவில் சாதகமான முடிவு வரும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------
உதவ வந்தவர்கள் உதவியின்றி 50 நாள்களுக்கும் மேலாக அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றனரே! அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டாவா? தமிழ் ஈழத்தில் உள்ள காட்டுப் பகுதிகளை அழித்து அங்குள்ள விடுதலைப் படையினரையும் மக்களையும் கூட்டம் கூட்டமாக அழித்து மற்றொரு பேரவலத்தை நடத்த இந்தியாவின் ஒத்துழைப்பிற்குத்தான் சிங்கள ஓநாய்கள் வந்தனர் என்றும் அதை மறைப்பதற்காக வணங்கா மண் கப்பலில் உள்ள பொருள்களைத் தமிழ் மக்களுக்கு வழங்க ஒப்புக் கொண்ட நாடகம் நிறைவேறியது என்றும் இணையச் செய்திகள் கூறுகின்றனவே! அதற்கேற்றாற் போல் வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றதே! பேரினப் படுகொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் கருவாயும் உருவாயும் இருந்த காங். அரசும் மலையாள ஆரிய அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்னும் என்னவெல்லாம் சொல்லி நம்மை ஏமாற்றப் போகிறார்கள்?

நல்ல தீர்வை வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/28/2009 2:15:00 AM



வெள்ளி, 26 ஜூன், 2009

இன உணர்வு ஒற்றுமை வேண்டும்:
கருணாநிதி வேண்டுகோள்
தினமணி



கருத்துகள்

(1/2) தமிழ் நாட்டில் உள்ளவர்களிடம் இனஉணர்வு உள்ளது. ஆனால், தமிழரல்லாதவரிடம் இருக்கின்ற இன உணர்வு அளவிற்குத் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தால் தீண்டத்தகாததாகவும் அதே நேரம் தேவைக்கேற்பப் பயன்படுத்தும் ஆடையாகவும் இன உணர்வு உள்ளது. ஆனால்,அவர்களே எதிர்க்கட்சியாக இருந்தால் தம்மை வாழ்விக்கும் வாளாக இன உணர்வைப் பயன்படுத்துகின்றனர். கட்சியினர் தலைமையின் கொத்தடிமைகளாக உள்ளமையால் இன உணர்வு பற்றிச் சிந்திப்பதில்லை. எனவே, இனியேனும் அனைவரும் தமிழ் இன உணர்வு கொள்க! 'வணங்காமண்' கப்பலைப் பொறுத்தவரை ஏதோ நாடகம் அரங்கேறுகின்றதோ என்ற ஐயப்பாடு பலரிடமும் உள்ளது. தமிழர்களுக்கான மறுவாழ்வுக் குழுவில் 19 சிங்களவர்களையும் ஒரே ஓர் இசுலாமியரையும் நியமித்துள்ள சிங்கள அரசு எந்த வகையில் உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. (2/2) தொடர்ச்சி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:06:00 AM
(2/2) (1/2இன் தொடர்ச்சி) சிங்களக் கொலைகாரத் தலைவர்கள் தமிழர் பகுதிகளில் நடத்த உள்ள பொம்மைத் தேர்தல் தொடர்பாகத்தான் இந்தியா வந்து சென்றதாகத் தெரிய வருகின்றது. அந்த நாடகத்தின் ஒரு பகுதியே இக்காட்சியும் என்கின்றனர். ஆனால், உளளபடியே புலம பெயர் தமிழர்கள் திரட்டிய உணவும் மருந்தும் பயன் அழியும் முன்னரே ஈழத் தமிழர்களுக்குப் பயன்பட்டால் நன்றியுடன் பாராட்டுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:07:00 AM

இன உணர்வு, ஒற்றுமை பற்றி பேசும் தலைவர்கள் முதலில் இனப் பண்பாடு, பண்பாட்டு ஒற்றுமை என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இனியாவது தமிழினம் தமிழ்ப் பண்பாடு என்ற உண்மையான நிலைக்கு மாறவேண்டும். ஆரியம் போலவே திராவிடமும் தமிழுக்குக் கேடான ஒரு பீடை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆணவத்துக்கும் பாவத்துக்கும் உரிய தண்டனை வரும்படி 39000 ஆண்டு களுக்கு முன்பே தூய தமிழ்ப் பண்பாட்டுத் திருமறை நூல் மறைந்து விட்டது. உலகில் யாரையும் எதையும் குறை சொல்வது மடத்தனம். நாம் மனம் திருந்தி தூய தமிழ்ப் பண்பாட்டுக்கு மாற வேண்டும். மாறாவிட்டால் ஈழத்தின் நிலையைவிட இன்னும் மோசமான நிலைக்கு உலகில் அனைத்து தமிழர்களும் பலியாவார்கள்.கெடுவழி காட்டிய தலைவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் முதல் பலி ஆவார்கள். நிறைஅருள் தமிழ்ப் பண்பாட்டின் எச்சரிக்கை ! திரு முருகாற்றுப் படை ! நிறைஅருள் செவ்வேல்முருக அரசாங்கம் ! thamilurimay@gmail.com

By sevvelar,Thiruppur
6/26/2009 12:35:00 AM

First of all Tamil INA UNARVU required.Do you and INA MAANA THALAIVAR Anbazhagan having that concept

By abbayi
6/25/2009 11:37:00 PM

சரி! உண்மையில் இனப்பற்று வந்து விட்டால், கன்னட நாயக்கரான ராமசாமியையும், தெலுங்குகாரர் அண்ணாவையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். தமிழ் நாட்டில் 30 சதவிகிதத்திற்கு மேல் தெலுங்கு பேசும் சகோதரர்களும், குறிப்பிட்ட சதவிகிதம் மற்ற மொழி பேசுபவர்களும் உள்ளனர். இன உணர்வு என்று ஒரு முதல்வர் பேசுவது சுத்த அயோக்கியத்தனம்! தேச விரோதம்! மொழிப்பற்று என்று எங்களை ஏமாற்றியது கனி மொழிப்பற்று என்று இப்போது தான் தெரிகிறது. தமிழர்களை வைத்து காமெடி கீமடி பண்ணலையே! நண்பர் பூபதி, ராஜா ராம் அவர்களே! அய்யாவை அப்படியே புரிந்து வைத்துள்ளீர்கள். நன்றி!

By ravikumar
6/25/2009 11:23:00 PM

அய்யா கருணாநிதியாரே, இன உணர்வு ஒற்றுமை பற்றி பேச தங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. ஈழ தமிழர்கள் மீது குண்டு போட்டு அவர்களை லட்சகணக்கில் சாகடிக்கும் போது இல்லாத இன உணர்வு இப்போது உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எந்த ஒரு மனசாட்சியுமில்லாமல் தமிழக முதல்வர் (?!) பதவியில் அமர்த்துள்ள உங்களிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு தங்களின் மகளை மதிய அமைச்சராக்க வேண்டும் அல்லது இன்னமும் மத்திய அரசிடமிருந்து சில துறைகளை மிரட்டி பெற வேண்டும். அனால் தமிழர் வாழ்வு, அவர்களின் வளம் எல்லாம் அந்தோனியா மைனோ காந்தியிடம் அடகு வைத்து விட்டு சட்ட சபையில் இப்படி பொய்யுரைக்கும் உங்களை என்னவென்று சொல்வது? தங்களுக்கு தான் வெட்கமில்லை. சட்டசபையில் உள்ள தி. மு. க. உறுப்பினர்களுக்குமா இல்லாமல் போய்விட்டது? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

By Rajaraman V Raman
6/25/2009 10:21:00 PM

இன்று சிங்கள கயவர்கள் ஈழ தமிழ் மக்களை கொல்லலாம். அதனை கண்டும் காணாதது போல தனது சுயநல அரசியலை, குடும்ப அரசியலை நடத்தலாம். ஆனால் நாளை ஈழ தமிழர்கள், புதியதாக வரும் தமிழக மற்றும் மதிய அரசின் மூலமாக இந்திய ராணுவ உதவியுடன் சுதந்திரம் பெரும் நாள் வெகு தொலைவயுல் இல்லை. தங்களின் துரோக சரித்திரம் கடல் கடந்து உலக நாடுகளில் பேசப்படும் படிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழர் வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ராஜாராமன் வெ ராமன் ஹைதராபாத்

By Rajaraman V Raman
6/25/2009 10:20:00 PM

அய்யா கருனநிதியாரே, இன உணர்வு ஒற்றுமை பற்றி பேச தங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. ஈழ தமிழர்கள் மீது குண்டு போட்டு அவர்களை லட்சகணக்கில் சாகடிக்கும் போது இல்லாத இன உணர்வு இப்போது உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எந்த ஒரு மனசாட்சியுமில்லாமல் தமிழக முதல்வர் (?!) பதவியில் அமர்த்துள்ள உங்களிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு தங்களின் மகளை மதிய அமைச்சராக்க வேண்டும் அல்லது இன்னமும் மத்திய அரசிடமிருந்து சில துறைகளை மிரட்டி பெற வேண்டும். அனால் தமிழர் வாழ்வு, அவர்களின் வளம் எல்லாம் அந்தோனியா மைனோ காந்தியிடம் அடகு வைத்து விட்டு சட்ட சபையில் இப்படி பொய்யுரைக்கும் உங்களை என்னவென்று சொல்வது? தங்களுக்கு தான் வெட்கமில்லை. சட்டசபையில் உள்ள தி. மு. க. உறுப்பினர்களுக்குமா இல்லாமல் போய்விட்டது? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இன்று சிங்கள கயவர்கள் ஈழ தமிழ் மக்களை கொல்லலாம். அதனை கண்டும் காணாதது போல தனது சுயநல அரசியலை, குடும்ப அரசியலை நடத்தலாம். ஆனால் நாளை ஈழ தமிழர்கள், புதியதாக வரும் தமிழக மற்றும் மதிய அரசின் மூலமாக இந்திய ராணுவ உதவியுடன் சுதந்திரம் பெரும் நாள் வெகு தொலை

By Rajaraman V Raman
6/25/2009 10:18:00 PM

வணங்காமண் கப்பல் அனுமதிக்கப் படும் என்று சிலநாட்களுக்கு முன்பே தெரியும். இல்லாவிட்டால் இந்தியக் கடல் எல்லைக்குள் அனுமதித்திருக்கவே மாட்டார்கள். தமிழக அரசின்(தி.மு.க என்று பொருள் கொள்க) விளைவாகவே இந்திய அரசின் முன்னெடுப்பு . இந்திய அரசின் முன்னெடுப்பின் காரணமாகவே அனுமதி என்ற தொடர் நாடகத்தின் காட்சிகள் தமிழ் சினிமா போலவே எல்லோருக்கும் தெரிந்த்ததே.இருந்தாலும் உண்ணாவிரத நாடகம் போல் வராது. அப்பனைக் கொலை செய்துவிட்டு பிள்ளைக்கு டப்பா பால் கொடுப்பதைப் போன்ற முயற்சிதான் இது.

By M.S.Boobathi
6/25/2009 7:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 25 ஜூன், 2009

நிவாரணக் கப்பலை அனுமதிக்க இலங்கை ஒப்புதல்: எஸ்.எம். கிருஷ்ணா
தினமணி




பாராட்டத்தக்க செயல்பாடு. ஆனால், 'வணங்காமண்' கப்பலிலுள்ள பொருள்கள் ஈழத் தமிழர்களைச் சென்று அடைய வேண்டுமே தவிர சிங்கள அரசால் சூறையாடும் நிலை ஏற்படக் கூடாது. அதற்கும் ஆவன செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/25/2009 1:58:00 AM

நிவாரணக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க கருணாநிதி தொடர் முயற்சி: ஆர்க்காடு வீராசாமி
தினமணி
First Published : 25 Jun 2009 01:31:22 AM IST

கருத்துகள்

'வணங்காமண்' கப்பலை ஆய்வு செய்த சிங்களப் படைத்துறை ஆயுதம் எதுவும் இல்லை என்று சொனன பிறகும் சிங்கள அரசு பொய்யான காரணம் கூறி உணவு மருந்துப் பொருள்களை இறக்க இசைவு தராமல் கப்பலைத் திருப்பி யனுப்பியது. ஆனால், இந்தியாவோ 'ஆபத்தானது' என்றும் 'எல்லாப் பொருள்களையும் ஆய்ந்து அறிய முடியாது' என்றும் சொல்லியுள்ளது. இதன்பின் சிங்கள அரசு இதே கருத்தைத்தானே கூறும். எனவே, வேறு முனைப்பான நடவடிக்கை எடுத்தாலன்றி உரிய பயன் விளையாது. 'தமிழருக்கு வழங்க வேண்டியவை; என்னவானால் என்ன?' என்ற மனப் போக்கு இருக்கும் வரை எம் முயற்சியும பயன் அளிக்காது. ஆதலின் விரைந்து தக்கன ஆற்றுக!

அன்புடன் ‌வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/25/2009 1:52:00 AM

ஞாயிறு, 21 ஜூன், 2009

நிவாரணக் கப்பலை இலங்கை அனுமதிக்க தலையிட வேண்டும்: கருணாநிதி
தினமணி


இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கிய "கேப்டன் அலி' கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

முன்பு தமிழக மக்கள் திரட்டித் தந்த பொருள்களையே ஈழத் தமிழர்களிடம் ஒப்படைக்காத அரசுகள் அயல்நாட்டவர் திரட்டித் தந்த பொருள்களையா ஒப்படைப்பார்கள்? புதிய நாடகத்தின் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:58:00 AM

CAN SOMEONE SEND THIS LIVING "CORPSE" KARUNANIDHI TO KILPAK MENTAL HOSPITAL?.THIS WILL BE A GREAT TO THE TAMIL RACE.AFTER RESPONSIBLE FOR KILLING OVER 50,000 SL TAMILS THIS JOKER TALK ABOUT MEDICINE HA HA HA DO YOU THINK SL TAMILS ALSO VOTE FOR RS;500-AND BURIYANI PACKET?

By DANDY
6/20/2009 9:18:00 PM

MK resign your post if the central Govt is not asking srilanka to accept the important things like medicines etc. No use is getting Minister posts only for earning for your stomach.

By ram
6/20/2009 6:16:00 AM

சனி, 20 ஜூன், 2009

இலங்கைத் தமிழருக்கான நிவாரணப் பொருட்கள்: நெடுமாறன் புதிய கோரிக்கை
தினமணி


சென்னை, ஜூன் 20: இலங்கை அரசு திருப்பிய அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"வணங்காமண்' என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருள்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.

அந்தப் பொருள்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கை அதிபர் ராஜபக்சே அதை இறக்க முன்வர மாட்டார்.

கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருள்கள் வீணாகிக் கெட்டுப் போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள்

'கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்' செய்து என்ன பயன்? திரு நெடுமாறன் கூறுவது போல் பரிவுடனும் உணர்வுடனும் புலம் பெயர் தமிழர்கள் அனுப்பிய பொருள்களை வீணடித்து அவர்களின் உணர்வுகளைச் சாகடிக்காமல் ஏதேனும் பயன் விளைந்த மன நிறைவையாவது அவர்களுக்குத் தரலாமே!

அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2009 7:13:00 பம்


கருத்துகள் தொடர்ச்சி
மக்கள் நேசனாக இல்லாமல் சிவ நேசன் என்ற பெயரைப் பயன்படுத்துபவரும் சிங்களவனாக இருந்து கொண்டு இந்தியன் என்னும் பெயரைப் பயன்படுத்துபவரும் தெரிவிக்கும கருத்தும் 'நாசமாகப் போகுமாறு' சபிப்பதுமே இத்தகையோர் எக்கருத்தும் தெரிவிக்க உரிமை இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்கின்றது. சிங்கள அரசிற்கு அனுப்பப்படும் எந்த உதவியும் துன்பத்தில் நலியும் தமிழர்களுக்குக் கிடைக்காத பொழுது நேரடியாகத் தமிழ் மக்கள் பகுதிக்கு உதவி அனுப்பியதில் என்ன தவறு? அதை ஆய்வு செய்த சிங்களப் படைகள் எதில் எவ்வகை ஆயுதமும் மருந்துக்குக் கூட இல்லை எனச் சான்றளித்த பின்பும் அவற்றைத் தடை செய்வதன் நோக்கம் என்ன? அதிகாரம் மிக்க சிங்கள அரசே அதனைப் பெற்று உரிய தமிழ் மக்களுக்கு அளிப்பதில் என்ன இடையூறு உள்ளது? இவற்றை யெல்லாம் புரிந்து கொண்டே மனித நேயமின்றி எழுதுவோரே! உங்கள் தலைமுறையினரைக் கடவுள் காப்பாற்றுவாராக!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:26:00 AM

I support Mr.Srinivasan opinion. If they want tosend thegoods it shouldbe through redcross to Srilanka Govet. Why unnecessary drag India in between.These people will do all illeagal things and always in the name of humanity they exploit normal people.Why Nedumaran &co with boats try to disload the ship. Seeman Vaiko,&othere were ready to give their lives for their terror brothers. This shipwas sent during war so SL govet Suspect is nnormal. Donot curse Sonia YOu srilangan refugee will be ruined (Nasamaapovinga)

By Indian
6/21/2009 2:39:00 AM

nasama pooka soniaa kudumpam!!!!!!!!!!!!!!!!!!!!!!!

By R .Thanilaachi
6/21/2009 12:48:00 AM

How cruel these shingalese are! Even not allowing the aids given by their brothers . Allah! please punsh this Rajapkse and his cruel clooegues.

By Shahabudeen
6/20/2009 10:53:00 PM

The medical and basic aids must to be sent to Eelam Tamils in Srilanka, thru IRed Cross. They are those who are suffering the extreme conditions, as witnessed by UN secretory and SL Chief Judge, SriSri Ravishankar. 'Sivanesan' are you human? TN and India should also send more of their own. SL has no rights to stop aids, when it created all tragedy to them. It is tragic to see India and Srilanka playing on lives of people, directly and indirectly to kill them. Shame to humanity due to corrupt, inhumane govts.

By karnan
6/20/2009 10:09:00 PM

If SL Tamils want to donate humanatarian aid, they shoul give it to SL government. If you accuse government and send the goods on your own to terror group and expect the government to accept it in the absence of terror group is a joke. No civilan goverment will accept aid from the gropus which accuse them on committing genocide.

By B Sivanesan
6/20/2009 9:33:00 PM

nalla karuthu..cm must take steps according to points of nedumaran

By venky
6/20/2009 7:48:00 PM




">


இன்று: சனிக் கிழமை, ஜுன் 20, 2009

வணங்கா மண் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்தில் தரித்து நிற்கிறது
பிரசுரித்த திகதி : 18 Jun 2009

வணங்கா மண் கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்தில் அனுமதிக்காக தரித்து நிற்பதாக அறியப்படுகிறது. இன்று சென்னைத் துறைமுகத்திற்குள் உள் நுளைந்த வணங்கா மண் கப்பலானது உணவுப் பொருட்களை இறக்க இந்திய அரசிடம் அனுமதிகோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இறக்கப்படும் உணவுப் பொருட்களும் மருந்து வகைகளும் இந்திய அரசின் உதவியுடன், வன்னி மக்களுக்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்கள் இரவு பகலாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில தமிழ் இணையத் தளங்களில் வணங்கா மண் கப்பலில் உள்ள உணவுப் பொருட்கள் கடலில் கொட்டப்பட்டதாகவும், மற்றும் கப்பலை இரும்பு உடைக்கும் நிலையத்திற்கு விற்றுவிட்டதாகவும் பொய்யான பல கட்டுக் கதைகள் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன. மதிநுட்ப காய் நகர்த்தல் காரணமாக இக்கப்பலின் நடவடிக்கைகள் சில நாட்களாக வெளியிடாமல் இருந்த வேளையை சில விசமிகள் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்தி, புலம் பெயர் தமிழ் மக்களையும், இக் கப்பலுக்கு நன்கொடை வழங்கி உதவிசெய்தவர்களையும் குழப்பும் நோக்கில் இவ்வாறான புரழிகளைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

வணங்கா மண் தாமதமானாலும் தனது இலக்கை அடையும். புலம் பெயர் தமிழ் மக்களால் நம்பிக்கை வைத்து அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பல் நிச்சயம் வெற்றியடையும். விசமிகளின் கட்டுக்கதைகளை நம்பாது, புலம் பெயர் தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவது நல்லது. தமிழர்களுக்கு தவறான செய்திகளைப் பரப்பும் இணையங்களை இனியாவது நாம் புறக்கணிப்போம்.