ஞாயிறு, 28 ஜூன், 2009

சென்னை, ஜூன் 27: இலங்கைத் தமிழர்களுக்காக எந்த தியாகத்துக்கும் தயாராக இருங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க. மகளிரணி சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை முடித்துவைத்து ராமதாஸ் பேசியது: இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் அகதிகளாக வெளியேறட்டும் என்ற எண்ணத்தில் அந் நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. எந்த வகையில் ஒற்றுமையில்லை? இலங்கைப் பிரச்னையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் எதிரெதிராகப் போட்டியிட்டோம். அதையெல்லாம் மறந்து இலங்கைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு எழுதியக் கடிதத்தை முதல்வருக்கும் அனுப்பினேன். இலங்கைப் போரில் திட்டமிட்ட சதி நடைபெற்றுள்ளது என்றும், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரியிருந்தேன். கருணாநிதியும் இந்த சதியை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அதில் வேண்டுகோளும் விடுத்திருந்தேன். இலங்கைத் தமிழர் பிரச்னையில் நாங்கள் எந்த வகையில் ஒற்றுமையை வெளிப்படுத்தவில்லை? முகாம்களில் உள்ள 3.5 லட்சம் தமிழர்களுக்கு சரியான உணவு, மருந்து அளிக்காமல் அவர்களை பூண்டோடு அழிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஆனால், நமக்குள் ஒற்றுமையில்லை. இலங்கைத் தமிழர்கள் நலமுடன் வாழ எந்த தியாகத்துக்கும் தயாராக இருங்கள்!: ராமதாஸ்



கருத்து
அதிகாரச்சுவையைத் தூக்கி எறியாத நாம் வேறு எதைத் தூக்கி எறியப் போகிறோம்? --- இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/28/2009 2:24:00 AM அதிகாரச்சுவையைத் தூக்கி எறியாத நாம் வேறு எதைத்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக